என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பொட்டுக்கடலை பர்ஃபி எளிமையாக தயாரிக்கக்கூடிய ஒரு இனிப்பாகும். பொட்டுக்கடலை உருண்டை, பொட்டுக்கடலை பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு புரோட்டீன் நிறைந்தது.
    தேவையான பொருட்கள்

    பொட்டுக்கடலை -  200 கிராம்
    நெய் -     150 கிராம்
    தூள் சர்க்கரை -  150 கிராம்
    பாதாம் -  10
    கருப்பு ஏலக்காய் -  1 தேக்கரண்டி
    குங்குமப்பூ  -   1 தேக்கரண்டி

    பொட்டுக்கடலை

    செய்முறை

    பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து பொட்டுக்கடலை போட்டு, இளம் தீயில் வறுக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். கடலை நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை தூள், ஏலக்காய்தூள், குங்குமப்பூ, நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

    அடிக்கடி நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். மாவு கடாயில் ஒட்டாமல் வரும் போது கிளறிய பர்ஃபி மாவை ஒரு நெய் தடவிய தட்டில் பரப்பி, அதில் நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.

    சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு அரை மணிநேரம் கழித்து , தட்டில் உள்ள மாவை சிறு சிறு சதுர வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும்.

    விரும்பினால் இதனை உருண்டையாகவும் உருட்டிக் கொள்ளலாம்.

    சூப்பரான பொட்டுக்கடலை பர்ஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வட மாநிலத்தில் இந்த குஜியா மிகவும் பிரபலம். இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு -   125 கிராம்

    நிரப்புவதற்கு

    நெய் - 30 கிராம்
    சர்க்கரை - 75 கிராம் தூள்
    கொப்பரைத் தேங்காய் - 75 கிராம்
    தேங்காய் -75 கிராம்
    பிஸ்தா - தேவையான அளவு
    பாதாம் - தேவையான அளவு
    சேமியா - 30 கிராம்
    சிரோஞ்சி (Chironji) - தேவையான அளவு
    குங்குமப்பூ - தேவையான அளவு
    பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு

    குஜியா

    செய்முறை

    பாதாமை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பேனில் நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.

    அடுத்து அதில் கொப்பரைத் தேங்காய், துருவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும்.

    ஒரு பவுலில் மைதா மாவு சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக்கோங்க. அப்பறமா இந்த மாவில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைஞ்சுக்கோங்க. மாவு ரெடியானதும் அதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வெச்சிடுங்க.

    வறுத்த சேமியா இருக்கும் கடாயில் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து வறுத்த மாவாவையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க.

    மாவை உருண்டைகளாக உருட்டிக்கொண்டு மெல்லிய சப்பாத்திக்களா திரட்டிக்கோங்க.

    இப்போ அதை குஜியா மேக்கர் மோல்டில் போட்டு சப்பாத்திகளையும் ஃபில்லிங்கையும் வைச்சு மூடுங்க. குஜியாவோட ஓரங்கள் ஈரமா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்பதான் ஃபில்லிங் நல்லா மூடி வெளியே வராம இருக்கும்.

    அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்க அவ்வளவு தாங்க.

    சுவையான குஜியா சாப்பிடுவதற்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், புல்கா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பிச்சி போட்ட சிக்கன் வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - அரை  கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி பூண்டு  விழுது - 2 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    சீரகத்தூள் - அரை ஸ்பூன்
    மல்லித்தூள் - 2 ஸ்பூன்
    மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    நல்லெண்ணெய்  - 4   ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    பிச்சி போட்ட சிக்கன் வறுவல்

    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை உப்பு,  மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன்  தேவையான அளவு  உப்பு  சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

    தண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள்  நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சுவைாயன பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்திய இனிப்பு வகைகளில் ஒன்றான முந்திரி அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபிவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முந்திரி -   1 கப்
     சீனி - 1 கப்
    நெய் -  1/2 கப்
    கோதுமை மாவு - 1/2 கப்
    நீர் -  3 1/2 கப்
    குங்குமப்பூ - தேவையான அளவு
    பாதாம் - தேவையான அளவு
    பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு

    முந்திரி

    செய்முறை

    பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு மிக்சியில் முந்திரிப் பருப்பைச் சேர்த்து அதை நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீரை 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரிலே துளி குங்குமப்பூ சேர்க்கவும்.

    ஒரு நான்ஸ்டிக் கடாயில் அரை கப் நெய் சேர்க்கவும். நெய் உருகியவுடன் கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறவும். கட்டிகள் வராமல் இருக்க  கைவிடாமல் கிளறவும்.

    ஒரு நிமிடம் கழித்து அதில் முந்திரி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். நெய் பிரிய தொடங்கும் வரை இதை குறைந்த தீயில் சமைக்கவும்.

    பின்பு இதில் சர்க்கரை பாகை சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

    கடைசியாக அதில் சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக பீட்ரூட்டை விரும்பாத குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இந்த சுவையான பீட்ரூட் பாயாசத்தை விரும்பி சாப்பிடுவர். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 200 கிராம்
    பால் -    1 கப்
    நெய் - கால் கப்
    சீனி -     3/4 கப்
    பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு
    முந்திரி, திராட்டை, பாதாம் - விருப்பத்திற்கு ஏற்ப

    பீட்ரூட் பாயாசம்

    செய்முறை

    பீட்ரூட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.

    பாதாமை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

    பின்பு அதில், அரைத்த பீட்ரூட் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து அதில் இன்னும் சிறிது நெய்,  ஏலக்காய் தூள் சேர்த்து நடுத்தர தீயில் சமைக்கவும்.

    5 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கப் கிரீமி பால் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து கொள்ளலாம்.

    பீட்ரூட் மென்மையாக மாறியதும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் இரண்டு டீஸ்பூன் நெய், வறுத்த முந்திரி, திராட்டை, பாதாம்  சேர்த்து கிளறி இறக்கினால் பீட்ரூட் பாயாசம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதால், நாம் அனைவரும் விருப்பமான உணவுகளை வெளியே சாப்பிட முடியாமல் உள்ளோம். இன்று கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கனை வீட்டிலே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஊறவைக்க:  


    சிக்கன் விங்ஸ் (சுத்தம் செய்தது) - அரை கிலோ
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - அரை கப்
    சிவப்பு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை - விருப்பத்திற்கு ஏற்ப

    கோட் செய்ய:

    மசாலா சிப்ஸ்
    எண்ணெய்

    கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ்

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் விங்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

    அதில் ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து  30 நிமிடங்கள் ஃபிரிஜில் வைக்கவும்.

    இதற்கிடையில், மசாலா சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து, வெறும் கடாயில் வறுக்கவும். சிப்ஸை பொடியாக நசுக்கவும்.

    இப்போது ஃபிரிஜில் இருக்கும் சிக்கனை எடுத்து, ஒவ்வொரு பீஸிலும் இந்த மசாலா சிப்ஸை கோட் செய்யவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் இந்த சிக்கனை போட்டு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

    பிறகு இந்த சிக்கன் பீஸ் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான  கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் இட்லி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் ரசம் இட்லி சாப்பிட்டிருக்கீங்களா...? சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 5

    ரசம் வைக்க :

    தனியா - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகு - 6
    துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - சிறிதளவு
    தக்காளி - 1/2 கப்
    புளி தண்ணீர் - 1/4 கப்
    மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
    பெருங்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
    உப்பு - தே. அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    ரசம் இட்லி

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் நைசாக பொடித்து கொள்ளவும்.

    அடுத்து தக்காளியை கைகளால் நன்றாக மசித்து அதனுடன் புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடி, உப்பு சேர்த்து கலக்குங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  கடுகு போட்டு வெடித்த பின்னர் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.

    அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வையுங்கள். கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். ரசம் தயார்.

    பரிமாறும்போது இட்லி வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி மேலே சிறிது கொத்தமல்லி, காராபூந்தி தூவி கொடுங்கள்.

    அருமையாக இருக்கும் இந்த ரசம் இட்லி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த மாம்பழ சீசனில் சூப்பரான மாம்பழ பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள்

    பால் -  1 லிட்டர்
    சர்க்கரை - தேவையான அளவு
    பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    நன்கு கனிந்த மாம்பழம் - 2

    மாம்பழ பால்

    செய்முறை

    மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்றாக கொதிக்க வைத்து பால் அரை லிட்டராக சுண்டியதும் இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மாம்பழத்தை கலந்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.

    சூப்பரான மாம்பழ பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் கேரட் வைத்து, முட்டை சேர்க்காமல் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா - 3/4 கப்
    கோதுமை மாவு - 1/4 கப்
    துருவிய கேரட் - 1/2 கப்
    தயிர் - 3/4 கப்
    ஆலிவ் ஆயில் - 1/4 கப்
    பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 1/2 கப்
    வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    வால்நட்ஸ் - ஒரு கையளவு

    முட்டை சேர்க்காத கேரட் கேக்

    செய்முறை:

    வால்நட்ஸை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

    முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும்.

    பின் ஒரு பௌலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.

    பின்பு அதில் ஏலக்காய் பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, வால்நட்ஸை பொடியாக வெட்டிப் போட்டு, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.

    பின்னர் மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.

    அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

    அடுத்து கேக் நன்கு வெந்து விட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும் போது, டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக் செய்து இறக்க வேண்டும்.

    இறுதியில் ஓவனில் இருந்து எடுத்த உடனேயே ஒரு ஈரமான துணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனை ஒரு தட்டில் குப்புற தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்து, 1 மணி நேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், முட்டை சேர்க்காத கேரட் கேக் ரெடி !

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெனிலா மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெனிலா எசன்ஸ் - 3 டீஸ்பூன்
    சர்க்கரை - 3/4 கப்
    பால் - 1/2 லிட்டர்
    வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப்
    பாதாம், பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)

    வென்னிலா மில்க் ஷேக்

    செய்முறை:

    முதலில் மிக்ஸி ஜாரில் பால், வெனிலா ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வெனிலா மில்க் ஷேக் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று வெண்டைக்காய் வைத்து சூப்பரான மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 13,
    ஓரளவு புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,
    மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    வெண்டைக்காய் மோர்க்குழம்பு

    செய்முறை:

    வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.

    இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், பூரி, சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் பன்னீர் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 100 கிராம்
    பன்னீர் - 100 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலாத்தூள் - 1 /2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கட்டித்தயிர் - 1 கப்
    முந்திரிப்பருப்பு - 15
    எண்ணெய்-தேவையான அளவு

    அரைக்க

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
    நறுக்கிய தக்காளி - 1 1/2 கப்
    முந்திரிப் பருப்பு - 10

    காளான் பன்னீர் மசாலா

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.   

    காளான்களை நன்கு கழுவி நறுக்கவும்.

    பன்னீரை துண்டுகளாக்கவும்.

    ஒரு பெரிய கடாயில்  சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

    பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.

    தக்காளி குழைய வதங்கியதும இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.

    இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு,  சேர்த்து கலக்கவும்.

    அடுத்து அதில் கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.

    கடைசியாக பன்னீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    காளான் பன்னீர் மசாலா மனக்க மனக்க சுவைக்க ரெடி...

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×