என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
புரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி
Byமாலை மலர்2 Jun 2020 10:21 AM GMT (Updated: 2 Jun 2020 10:21 AM GMT)
பொட்டுக்கடலை பர்ஃபி எளிமையாக தயாரிக்கக்கூடிய ஒரு இனிப்பாகும். பொட்டுக்கடலை உருண்டை, பொட்டுக்கடலை பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு புரோட்டீன் நிறைந்தது.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை - 200 கிராம்
நெய் - 150 கிராம்
தூள் சர்க்கரை - 150 கிராம்
பாதாம் - 10
கருப்பு ஏலக்காய் - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
செய்முறை
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து பொட்டுக்கடலை போட்டு, இளம் தீயில் வறுக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். கடலை நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவும்.
ஒரு அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை தூள், ஏலக்காய்தூள், குங்குமப்பூ, நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
அடிக்கடி நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். மாவு கடாயில் ஒட்டாமல் வரும் போது கிளறிய பர்ஃபி மாவை ஒரு நெய் தடவிய தட்டில் பரப்பி, அதில் நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.
சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு அரை மணிநேரம் கழித்து , தட்டில் உள்ள மாவை சிறு சிறு சதுர வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும்.
விரும்பினால் இதனை உருண்டையாகவும் உருட்டிக் கொள்ளலாம்.
சூப்பரான பொட்டுக்கடலை பர்ஃபி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொட்டுக்கடலை - 200 கிராம்
நெய் - 150 கிராம்
தூள் சர்க்கரை - 150 கிராம்
பாதாம் - 10
கருப்பு ஏலக்காய் - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து பொட்டுக்கடலை போட்டு, இளம் தீயில் வறுக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். கடலை நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவும்.
ஒரு அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை தூள், ஏலக்காய்தூள், குங்குமப்பூ, நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
அடிக்கடி நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். மாவு கடாயில் ஒட்டாமல் வரும் போது கிளறிய பர்ஃபி மாவை ஒரு நெய் தடவிய தட்டில் பரப்பி, அதில் நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.
சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு அரை மணிநேரம் கழித்து , தட்டில் உள்ள மாவை சிறு சிறு சதுர வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும்.
விரும்பினால் இதனை உருண்டையாகவும் உருட்டிக் கொள்ளலாம்.
சூப்பரான பொட்டுக்கடலை பர்ஃபி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X