என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடைகளில் கிடைக்கும் ஃப்ரைடு ரைஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான்கள் - 15
    இஞ்சி, பூண்டு - ஒரு தேக்க‌ர‌ண்டி
    வெங்காய‌த்தாள் - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    ப‌ச்சை மிள‌காய் - 3
    சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
    மிள‌குத்தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
    சாத‌ம் - 4 கப் (வ‌டித்து ஆறவைத்தது)
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முத‌லில் பட்டன் காளான்களை எடுத்துக்கொண்டு நீரில் சுத்தப்படுத்தி, நன்கு நறுக்கிக்கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயையும் வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    ஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

    அடுத்து பூண்டு, இஞ்சியை சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை வாணலியில் சேர்க்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும்.

    பின்னர் மிளகுத்தூள், சோயா சாஸ் முதலியவற்றைச் சேர்த்து இறக்கி, அதன் மேல் சில வெங்காயத்தாள்களை தூவி கலந்தால் சூடான அட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஸ்வீட் சோமாஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகள் சேர்த்து சுவையான சோமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 3 கப்,
    ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு  - தேவைக்கேற்ப,
    எண்ணெய்  - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    மசாலா செய்வதற்கு:

    உருளைக்கிழங்கு  - 200 கிராம்,
    கேரட் துருவல்  - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு  - தேவைக்கேற்ப,
    ஊறவைத்த பச்சைப் பட்டாணி  - கால் கப்,
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  - தலா ஒரு சிட்டிகை,
    கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை  - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம்  - ஒன்று,
    பச்சை மிளகாய்  - 2,
    எண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை:

    கோதுமை மாவு, உப்பு, ரவையுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, 20 நிமிடம் ஊறவிடவும்.

    கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவிடவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவலயும் சேர்த்துக் கிளறி, வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

    பிசைந்த கோதுமை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இட்டு... 2 டேபிள்ஸ்பூன் மசாலாவை உள்ளே வைத்து மூடி நன்றாக அழுத்தி, சோமாஸிகளாக செய்யவும்.

    கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்துவைத்த சோமாஸ்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    குறிப்பு: சோமாஸ் மேக்கரில் சிறிய சப்பாத்தியையும், மசாலாவையும் வைத்து மூடி, அழுத்தி ஓரங்களில் வெளியே வருவதை எடுத்துவிட்டு, உள்ளே இருப்பதை எண்ணெயில் பொரித்து எடுத்தால், அழகிய வளைவுகளுடன் ஓரங்கள் கண்கவரும் விதத்தில் இருக்கும். சோமாஸ் பொரிக்கும்போது அடுப்பை 'சிம்’மில் வைத்து ஓரங்கள் பிரிந்து விடாதவாறு பார்த்துப் பொரிக்க வேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குறைந்த நேரத்தில் ருசியான குழம்பு செய்ய வேண்டுமா? அப்படினா பருப்பு உருண்டை குழம்பை செய்யலாம். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 1 கப்
    துவரம்பருப்பு - கால் கப்
    இஞ்சி - 1 துண்டு
    மிளகு, சோம்பு, சீரகம் - சிறிதளவு
    கசகசா - சிறிதளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    தக்காளி, பெ.வெங்காயம் - 3
    புளி - நெல்லிக்காய் அளவு
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    சாம்பார் வெங்காயம் - 10
    கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    மிக்சியில் முதலில் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனுடன் பருப்பு வகைகளை லேசாக அரைத்து, சிறிதளவு வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தக்காளி, கசகசா, மீதமிருக்கும் வெங்காயம், சோம்பு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்த மசாலாக்களை கொட்டி வதக்கவேண்டும்.

    பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

    பச்சை வாசம் நீங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

    அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கொதித்து வந்ததும் வேக வைத்துள்ள உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குட்டீஸ்களுக்கு சாக்லேட் ஸ்மூத்தி ரொம்ப பிடிக்கும். கடைகளில் கிடைக்கும் இந்த சாக்லேட் ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரிக்கும் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    சாக்லேட் -100 கிராம்,
    ஸ்ட்ராபெர்ரி - 3-4 ,
    வாழைப்பழம் - 1 ,
    குளிர்ந்த பால் - 2 கப்,
    தயிர் - 1/4 கப்,
    தேன் - 2 தேக்கரண்டி ,
    இறுதியாக நறுக்கிய கலப்பு கொட்டைகள் (பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா) சில பருவகால பழங்களை அலங்கரிக்க,
    சாக்லேட் சிரப் - 1 தேக்கரண்டி.

    செய்முறை

    மிக்சிஜாரில் துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழங்கள், துண்டுகளாக்கப்பட்ட சாக்லேட் ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

    இப்போது பால், தயிர், தேன் மற்றும் ஐஸ் கட்டி ஆகியவற்றை தேவையான அளவு கலந்து மீண்டும் கலக்கவும்.

    அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றவும்.

    இப்போது ஸ்ட்ராபெர்ரி, டிரை ப்ரூட்ஸ் போட்டு குளிர்ச்சியாகவும் குளிராகவும் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைக்காயில் சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள

    வாழைக்காய் - 2
    வெங்காயம் -1.
    இஞ்சி - 1 அங்குலம்
    தேங்காய் துருவ - 1 மேஜைக்கரண்டி
    கறிவேப்பிலை - 5
    பச்சைமிளகாய் - 1
    மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கேற்ப

    தாளிக்க:

    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி,
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம்.

    வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும்.

    மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும்.

    தண்ணீர் சேர்க்கவேண்டாம்.

    இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும்.

    அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

    தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதாரண அரிசியை விட கருப்பு அரிசி உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட், புரதசத்து உள்ளடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நெருங்காது. இதயத்திற்கும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி (பிளாக் ரைஸ்) - 1 கப்  
    பச்சை பட்டாணி - 14 கப்
    நறுக்கிய கேரட் - கால் கப்  
    நறுக்கிய பீன்ஸ் - கால் கப்  
    பெ.வெங்காயம் - 1
    சீரகம் - அரை டீஸ்பூன்  
    கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு  
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

    செய்முறை:

    4 கப் தண்ணீரில் அரிசியை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறுங்கள்.

    பின்னர் வெங்காயம், பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    அவை நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    பின்னர் அரிசியையும், அதனை ஊற வைத்த தண்ணீரையும் ஊற்றி வேக வைக்கவும்.

    8 விசில் வரும் வரையோ அல்லது 45 நிமிடங்களோ வேகவைத்து சாப்பிடலாம்.

    சாதாரண அரிசியை விட இந்த கருப்பு அரிசி உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட், புரதசத்து உள்ளடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நெருங்காது. இதயத்திற்கும் நல்லது. கருப்பு அரிசிக்கு ‘ஆன்டி கேன்சர்’ என்ற பெயரும் உண்டு. முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை சாப்பிட்டார்கள். குறிப்பாக, சீனாவில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும் என்ற சட்டமும் இருந்தது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெள்ளரிக்காயில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. அப்படிப்பட்ட வெள்ளரிக்காயில் சுவையாக கூட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    வெள்ளரிக்காய் - 2
    கடலைப்பருப்பு - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 3 பல்
    இஞ்சித்துருவல் - 1 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 1
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    சீரகம் - 1/4 ஸ்பூன்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:  

    முதலில் வெள்ளரிக்காயில் தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம் போன்றவற்றையும் நறுக்கி கொள்ளவும்.

    கடலை பருப்பை ஒரு 45 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

    பிறகு பூண்டு, இஞ்சித்துருவலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    சிறிது நேரம் பிறகு வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து கலக்கவும்.

    வெள்ளரிக்காய், ஊற வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை காத்திருங்கள்.

    கடைசியில் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு தயார்...

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சாப்பிட அருமையா இருக்கும் இந்த கொழுக்கட்டை பாயாசம். பால் கொழுக்கட்டை போல் இருக்கும் இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்
    தூளாக்கிய வெல்லம் - 1 கப்
    தேங்காய் துருவல் - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    காய்ச்சிய பால் - 2 கப்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    உலர் பழங்கள் - சிறிதளவு
    தண்ணீர் - தேவைக்கு

    செய்முறை:

    பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டு அரைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும்.

    பாகு பதத்துக்கு வந்ததும் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    பிறகு கடலைப்பருப்பை சேர்த்து கிளறவும்.

    அதைத்தொடர்ந்து காய்ச்சிய பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    பின்னர் வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதிக்க தொடங்கியதும் அரிசி மாவை கொட்டி கிளறி வேகவிட்டு இறக்கவும்.

    பின்னர் மாவு கலவையை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

    அதனை வெல்லப்பாகு, கடலைப்பருப்பு கலவையில் சேர்த்து கலக்கவும்.

    அதில் உலர் பழங்களை தூவி பாயசமாக பருகலாம்.
    டெல்லியில் மிகவும் பிரபலமான பழைய சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட். இன்று குல்லே கி சாட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கொண்டைக்கடலை - 1 / 4 கப்
    கல் உப்பு - தேவைக்கேற்ப
    பிளாக் சாட் மசாலா - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1
    மாதுளை - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

    செய்முறை

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து இரண்டாக வெட்டி நடுவில் குழி போல் செய்து கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸ் செய்து கொள்ளவும்

    இந்த மசாலாவை உருளைக்கிழங்கின் நடுவில் வைத்து சாப்பிடுங்கள்.

    இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
    தேவையான பொருட்கள்

    பெரிய வெங்காயம் - 2
    நீளமாக நறுக்கிய முட்டைகோஸ்- 1 கப்
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    மிளகாய் துாள்- 1/2 டீ ஸ்பூன்
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    ஓமம் - 1 சிட்டிகை
    சீரகம் - 1 டீ ஸ்பூன்
    சோம்பு - 1 டீ ஸ்பூன்
    கறிவேப்பிலை  -சிறிது
    உப்பு - 1 சிட்டிகை
    சூரிய காந்தி எண்ணெய்  - 200 மிலி.,

    செய்முறை

    வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

    அதோடு, முட்டைகோஸ், சிறிது உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.

    சிறிது நேரம் கழித்து அதில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், ஓமம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, உப்பு மற்றும் சூடான எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து, மிருதுவாக பிசையவும்.

    வெங்காயம், முட்டை கோஸ் கலவையில், ஈரப்பதம் இல்லை என்றால், சிறிது தண்ணீர் விட்டு, கெட்டியாக பிசையவும்.

    வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், சிறிது சிறிதாக கிள்ளி போட்டு, மிதமான தீயில், பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

    தக்காளி சாஸ், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கற்பூரவள்ளி டீ, கற்பூரவள்ளி கசாயம் என குடித்திருப்பீர்கள். ஆனால் இன்று வித்தியாசமான சத்தான சுவையில் கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கற்பூரவள்ளி இலைகள் - 10
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
    மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன்
    பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முழு இலையாக எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து அப்படியே எண்ணெயில் போடவும்.

    நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

    அவ்வளவுதான் பஜ்ஜியை எடுத்துவிடுங்கள்.

    இப்போது சூப்பரான கற்பூரவள்ளி பஜ்ஜி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடைகளில், சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் கடலைப்பருப்பு மசாலா வறுவல் எல்லோருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ். வீட்டிலேயே சுலபமான முறையில் கடலைப் பருப்பு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    முதலில் உங்களுக்கு எந்த அளவிற்கு கடலைப்பருப்பு வேண்டுமோ, அதை எடுத்து, இரண்டு முறை தண்ணீரில் கழுவி, அதன் பின்பு நல்ல தண்ணீர் ஊற்றி நான்கிலிருந்து, ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து விட்டு, ஒரு காட்டன் துணியில் பரவலாக போட்டு, ஃபேன் காற்றில் ஈரத்தன்மை போகும் அளவிற்கு காயவைத்தால் போதும். கடலைப்பருப்பில், சுத்தமாக ஈரப்பதம் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தால் மேலே ஒரு காட்டன் துணியை போட்டு, நன்றாக துடைத்து எடுத்துவிடுங்கள். சீக்கிரமே காய்ந்துவிடும்.

    அதன் பின்பு, கடாயில் எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக கடலைப்பருப்பை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். முதலில் கடலைப்பருப்பை எண்ணெயில் போட்டதும் சடசட வென்று, பொரிய ஆரம்பிக்கும்போது, பபுள்ஸ் வர ஆரம்பிக்கும். அதன்பின்பு கடலைப்பருப்பு சிவக்க, சிவக்க பபுல்ஸ் அடங்கி, சிடசிடப்பு அடங்கும்.

    மொத்தமாக சிடசிடப்பு அடங்கிய பின்பு, கடலைப்பருப்பு மொத்தமும் எண்ணெயின் மேல் மிதக்க ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் கடலைப்பருப்பை எண்ணெயிலிருந்து எடுத்து, ஒரு வடிகட்டியில் போட்டு எண்ணெயை நன்றாக வடிய வைத்து விடவேண்டும். கடலைப்பருப்பை சிவப்பு நிறமாக சிவக்க வைக்க வேண்டாம். எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்த உடனே, எடுத்து விட்டால் நல்ல சுவை கிடைக்கும்.

    இறுதியாக கடலைப்பருப்பை, பொரித்த அதே எண்ணெயில், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். 4 பல் பூண்டை நைத்து, அதே எண்ணெயில் போட்டு, வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    இப்போது வறுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்போடு, வறுத்த கறிவேப்பிலை, வறுத்தெடுத்த பூண்டு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தனி மிளகாய் தூள், சேர்த்து நன்றாக கலக்கி, நன்றாக ஆற வைத்த பின்பு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தீர்கள் என்றால் 5 நாட்கள் வரைக்கும் கூட வைத்து சாப்பிடலாம்.
    ×