என் மலர்
சமையல்
- எப்போதும் போல் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
- வெஜிடபிள் ரவா இட்லிக்கு நடுவில் பட்டாணி மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ரவை -2 கப்
தயிர் - 3 ஸ்பூன்
துருவிய கேரட்- ½ கப்
மெல்லியதாக அரிந்த குடமிளகாய்-1
கொத்தமல்லித் தழை- சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மசாலாவுக்கு:
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பட்டாணி-1 கப்
மிளகாய்த் தூள்- ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ரவை, தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சைப்பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
ஊறிய ரவையில் குடமிளகாய், துருவிய கேரட், கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ரவை கலந்த கலவையை கொஞ்சம் ஊற்றி அதன் மேல் பட்டாணி மசாலா கலவை வைத்து மீண்டும் அதற்கு மேல் ரவை கலவையை ஊற்றவும். எப்போதும் போல் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
வெஜிடபிள் ரவா இட்லிக்கு நடுவில் பட்டாணி மசாலா மிகவும் சுவையாக இருக்கும். நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். சத்துகள் நிறைந்த வெஜிடபிள் மசாலா இட்லியை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தேவைப்பட்டால் பட்டாணி மசாலா கலவையில் துருவிய பன்னீர், காலிபிளவர் போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம்.
- பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.
- இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.
* பால் பாயாசம் சுவையாக இருக்க பாதாம் பருப்பை தோல் நீக்கி அரைத்து சேர்க்க வேண்டும்.
* பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, சமைத்தால் காரத்தன்மை குறையும்.
* அப்பளத்தின் மீது லேசாக நெய் தடவி, சிறிது மிளகுத் தூள் தூவி சுட்டெடுத்தால் சுவை நன்றாக இருக்கும்.
* ஓட்ஸை கஞ்சியாக குடிப்பதை விட இட்லி மாவு, தோசை மாவில் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
* வடை மாவு நீர்த்து விட்டால், அதன் மீது சிறிது பச்சரிசி மாவு, கைப்பிடி ரவை சேர்த்தால் அதிகப்படியான நீரை அது உறிஞ்சி விடும்.
* பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.
* சூடான எண்ணெய்யில் சிறிது மைதா மாவு தூவினால் அந்த எண்ணெய்யில் எதை பொரித்தாலும் சட்டென்று ஒட்டாது.
* தக்காளி கெடாமல் இருக்க காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
* தேங்காயை மேல் நோக்கியவாறு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.
* அரிசி, ரவா, கோதுமை டப்பாவில் பூச்சி வராமல் இருக்க ஒரு சிறு துண்டு வசம்பை துணியில் கட்டி டப்பாவில் போட வேண்டும்.
* இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.
* தயிரில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் எளிதில் புளிக்காது.
* பாகற்காயை உப்பு, மஞ்சள், வெல்லம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்தால் கசக்காது.
- பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும்.
- காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.
* வேகவைத்த கேரட் அல்லது பரங்கிக்காய், பாதி வறுத்த துவரம் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி தயாரித்தால் ருசி அபாரமாக இருக்கும்.
* பழைய சாதத்தை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ரவை, மைதா கலந்து கடுகு, மிளகாய், வெங்காயம் தாளிதம் செய்து வார்க்கும் தோசை புது மாதிரியாக இருக்கும்.
* கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு அரை கப், வறுத்த உளுந்தம்மாவு ஒரு ஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் வெடிக்காது. எண்ணெய்யும் குடிக்காது.
* கத்தரிக்காய். வெண்டைக்காய், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் என எந்த பொரியலுக்கும் சிறிது சீரகப்பொடியை பச்சையாக தூவி இறக்கி விடுங்கள். பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும். தேங்காய் சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
* இஞ்சியை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் இஞ்சி சாற்றை கலந்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கிவிடவும். ஊறுகாய் போல ருசியாக இருப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
* சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன்பு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்புப்போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, சுவையாகவும் இருக்கும்.
*வடித்த சுடு கஞ்சியில் நறுக்கிய வாழைப்பூவை போட்டு விட்டால் வாழைப்பூவில் உள்ள பால் கஞ்சியில் கலந்து விடும். பிறகு பூவை சுத்தமாக அலசி எடுத்துக்கொள்ளலாம்.
* காய்கறிகள் லேசாக வாடிப்போய் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்திடுங்கள். அதில் காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.
* வாழைத்தண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கடுகை இடித்து சேர்த்து புளிக்காத தயிரும் கலந்து சாலட்டாக மாற்றி சுவைக்கலாம்.
* 50 கிராம் புதினாவை காய வைத்து இடித்து தூளாக்கி அதனை 10 கிலோ அரிசியில் தூவி வையுங்கள். வண்டு விழாது. சோற்றுக்கும் நல்ல சுவை கிடைக்கும்.
* தேங்காய் பால் பிழிந்தெடுத்த பின்பு அந்த துருவலை வைத்து துவையல் அரைக்கலாம். காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுந்தம் பருப்பு போன்றவைகளை வறுத்து புளியும் சேர்த்து அரைக்க வேண்டும். உப்பும், கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* புட்டு வேக வைத்த பின்பு, குழாயில் இருந்து அதை எளிதாக எடுக்க வேண்டுமானால் முதலிலே குழாயின் உள்ளே சிறிதளவு நெய்யை சேர்த்து விடுங்கள். புட்டு அதிக ருசியாகவும் இருக்கும்.
* சூடான பானங்களை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரின் அடியில் ஒரு துணியை போடுங்கள். எவ்வளவு சூடான திரவத்தை ஊற்றினாலும் கண்ணாடி டம்ளர் உடையாது.
- முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும்.
- மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.
சமையலறையில் வேலை செய்யும் போது, மனதில் கொள்ள வேண்டிய பல சிறிய குறிப்புகள் உள்ளன. இவை சமையலறை வேலைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கின்றன. உங்களுக்கு பல சமையலறை குறிப்புகளைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த சமையல் குறிப்புகள் உங்கள் சமையலை எளிதாக்கும் மற்றும் சிறந்த சுவையை அளிக்கும்.
* முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும். எனவே நீங்கள் முட்டையை எண்ணெயில் சேர்க்கும் போதெல்லாம், முதலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும், பின்னர் முட்டையைச் சேர்க்கவும். இது முட்டை வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டாமல் தடுக்கும்.
* உருளைக்கிழங்கு அதிகமாக வேகாமல், கொதிக்கும் போது வெடிப்பதைத் தடுக்க விரும்பினால், உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் வினிகரைச் சேர்க்கவும்.
* தக்காளி வதக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, தக்காளியின் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இது அவை வேகமாக வேகவும், வதக்கவும் உதவும்.
* கடாயில் மசாலாப் பொருட்கள் கருகினால், உடனடியாக ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும். அவ்வாறு செய்வதால் மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.
* ஒரு முட்டை புதியதா என்பதைக் கண்டுபிடிக்க, அதை தண்ணீரில் போடுங்கள். மூழ்கினால், அது புதியது. அது மிதந்தால், பழையது.
* பக்கோடாவை மொறுமொறுப்பாக செய்ய விரும்பினால் உருண்டைகள் மிகவும் மொறுமொறுப்பாக இருக்க, சிறிது அரிசி மாவை கடலை மாவுடன் கலக்கவும். இது உருண்டைகளை இன்னும் மொறுமொறுப்பாக மாற்றும்.
* எந்த காய்கறி போட்டு குழம்பு செய்தாலும் கெட்டியாகவில்லை என்றால், ஒரு ஸ்பூன் வறுத்த கடலை மாவைச் சேர்க்கவும். இது குழம்பு கெட்டியாக வைக்க உதவும்.
- சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
- சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.
* குட்டீசுக்கு வாங்கின பிஸ்கட்டுகள் மீந்து நமுத்துவிட்டதா?அவற்றை மிக்சியில் போட்டு பொடித்து, பால், சர்க்கரை, கிரீம், முந்திரி சேர்த்து, பிரிட்ஜில் வைத்து நல்ல ஐஸ்கிரீமாக பரிமாறலாம்.
* காலையில் செய்த ரவை உப்புமாவுடன் கரம் மசாலா சேர்த்து, பிரெட் துண்டுகள் இடையே உப்புமாவை நிரவி, 'டோஸ்ட்' செய்து சாண்ட்விச்சாக சுவைக்கலாம்.
* சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
* கறி வகைகள் மீதமானால் வாணலியில் சீரகம், தக்காளி, வெங்காயம் வதக்கி, உடன் மீந்த காய்கறியையும் சேர்த்து மிக்சியில் அரைத்து துவையலாக்கலாம். சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.
* மீந்த சப்பாத்திகளை ரிப்பன் போல் வெட்டி எண்ணெயில் பொரித்து, சிறிது காரம், உப்பு சேர்த்து ஸ்னாக்ஸ் போல் மாலை வேளையில் தரலாம்.
- வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல.
- இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம்.
இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காக்கும்.
பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும்.
இரவில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய், இஞ்சி ஆகியவற்றை இரவில் தவிர்த்து விடுவது நல்லது. அதையும் மீறி சாப்பிட்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார், செல்வம் தங்காது என்பது ஐதீகம். இரவில் பால் சோறு சாப்பிடலாம். இதனால் செல்வம் பெருகும்.
தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது. நடு ராத்திரியில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.
கிரீன் டீயில் காபி மற்றும் டீயை விட அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும் போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே, கிரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது. ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.
வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்.
இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். அதுமட்டும் அல்ல, இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது. காரமான பொருட்களை சாப்பிடுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் பாதிக்கப்படும். அதேபோல, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பீட்சா, பர்க்கர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகள் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.
- உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன.
- உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சாப்பிடுதல் என்பது வெறும் வழக்கமான சம்பிரதாயம் அல்ல. இன்று உடம்புக்கு இந்த அளவு உணவு தேவை, அதனால் நீங்கள் அவ்வளவு சாப்பிடுகிறீர்கள். நாளை அவ்வளவு தேவைப்படாமல் இருக்கலாம். ஒருவர் சாப்பிட வேண்டும்தான், ஆனால் அந்த உணவு நமக்கு அளிக்கும் ஊட்டத்தில் மகிழ்ந்து நம் உயிருக்கும் உணவுக்குமான தொடர்பை நன்றியுடன் உணர்ந்து சாப்பிட வேண்டும்.
இது சாப்பிடுவதில் இருக்கும் இன்பத்தை குறைப்பதற்காக அல்ல. உணவை உண்பதில் உள்ள உண்மையான ஆனந்தமே, இன்னொரு உயிர் உங்கள் உயிருடன் ஒன்றி கலந்து நீங்களாகவே ஆகிறது என்பதை உணர்ந்து உண்பதுதான் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். யோக கலாச்சாரத்தில் எப்பொழுதும் உங்கள் கால்களை மடக்கி அமரவும், ஒரு சக்தி வடிவம் இருக்கும் திசைநோக்கி கால்களை நீட்டாதிருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. எந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், எந்த உணவை முதலில் பரிமாற வேண்டும், இலையை எவ்வாறு மூட வேண்டும் போன்ற பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும். அவ்வாறு உணவு சாஸ்திர முறைப்படி சாப்பிடும்போது குடும்பத்தில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை தானாகவே ஏற்படும்.
சாப்பட்டினை நமக்கு யாராவது பரிமாற வேண்டும். இலையில் முதலில் காய்கறி, அப்பளம் போன்றவற்றை வைத்துவிட்டே சாதத்தை பரிமாற வேண்டும். எடுத்த உடனேயே சாதத்தை பரிமாறக்கூடாது. அதைப்போல வத்தல், கீரையை முதலில் பரிமாறக் கூடாது.
உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டு உணவு உண்ணும் போது நமக்கு நன்மை பயக்கும். கிழக்கு நோக்கி அமர்ந்து சாபிட்டால், ஆயுள் வளரும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், பொருள் சேரும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், புகழ் வளரும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. நோய்தான் வரும்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்பொழுது நோய் சேரும். சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். வேறு வேலைகள் எதுவும் செய்துக்கொண்டே உணவை உண்ணக்கூடாது. குறிப்பாக செல்போன், டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடக்கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாப்பிடும்பொழுது வீட்டின் கதவு மூடியிருக்க வேண்டும். வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமனத்தின்போதும் சாப்பிடக்கூடாது. இதுபோன்ற உணவு சாஸ்திரத்தை பின்பற்றி நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு பெற்று வாழலாம்.
- வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
- காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.
* வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* சாம்பார் தயாரிக்கும்பொழுது கடைசியில் சிறிது புளி கரைசல் ஊற்றினால் சுவை மிகுதியாக இருக்கும்.
* புதினா சட்னி செய்யும் பொழுது சிறிது வேர்க்கடலை வறுத்து போட்டு செய்தால் ருசி அபாரமாக இருக்கும்.
* கசகசா, முந்திரி சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து குருமாவில் சேர்த்தால் எந்த குருமாவாக இருந்தாலும் ருசியாக இருக்கும்.
* புளி சாதம், எலுமிச்சை சாதம் முதலியவை செய்யும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால் வாசனை தூக்கும்.
* வெறும் வாணலியில் அவலை வறுத்து அரைத்து, அதை தோசை மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
* மோருடன் சிறிது இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.
* ஆப்பம் சுடும் பொழுது அந்த மாவில் சிறிது கோதுமை மாவு சேர்த்துக் கொண்டால் ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாமல் இருக்கும்.
* பிரியாணிக்கு சாதம் வடிக்கும்போது கொதிக்கும் தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு வடித்தால் சாதம் வாசனையாக இருக்கும்.
* வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
* காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.
* கத்திரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் கெட்டி தயிரை கலந்தால் கத்திரிக்காய் கறுப்பாகாமல் இருப்பதுடன் சுவையும் கூடும்.
* பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது கடைசியில் பொட்டு கடலை மாவு தூவி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.
* உளுந்து வடைக்கு மிக்சியில் அரைக்கும் பொழுது மிக்சி ஜாரில் சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு அரைத்தால் மிக்சியை எளிதில் கழுவி விடலாம்.
* பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து பயன்படுத்தினால் அதன் காரம் குறையும்.
* முறுக்கு, தட்டை, சீடை போன்ற பலகாரங்கள் செய்யும் பொழுது அரிசி மாவை முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்பு பலகாரம் செய்தால் மொறுமொறுப்பு கூடுவதுடன் ருசியும் அபாரமாக கிடைக்கும்.
* இட்லி பொடி செய்யும்போது கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு அதனுடன் கொள்ளு பருப்பையும் சிறிது சேர்த்தால் பொடி சுவையாக இருப்பதுடன் கெட்ட கொழுப்பும் குறையும்.
* பாயசம் செய்யும் பொழுது ஜவ்வரிசியை லேசாக வறுத்து விட்டு பின்பு பாயசம் செய்தால் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.
- வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
- பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
* நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், எளிதில் கெடாது.
* இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும்.
* சர்க்கரைப் பாகில் எலுமிச்சை சாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது.
* கண்ணாடி பாட்டிலில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
* பயறு வகைகளை ஊறப்போட 'மறந்துவிட்டால் பயறை 'ஹாட் பேக்'கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, வழக்கம் போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
* கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக் உதிர்ந்து விழாமல் இருக்கும்.
* வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
* புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.
* வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து, பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகு கேக் வெந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின், வடிவமும், சுவையும் மாறிவிடும்.
* பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
* மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்கிறீர்களா? இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் அப்பளம், போட்டு பிறகு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புது சுவையோடு குழம்பு மணக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
* பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
* வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க மொறு மொறுப்பாக இருக்கும். எண்ணெய்த் தேவை குறைவாகும்.
* கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
- இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும்.
- தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைப்பது, நீரில் கொதிக்கவிட்டு வேகவைப்பது இதில் எந்த முறையில் சமைப்பது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த இரு சமையல் முறையும் சுவை, நிறம், ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்த முறையில் சமைப்பது காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவிடும் என்பது குறித்து பார்ப்போம்.
காய்கறிகளை நீரில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
காய்கறிகளை நீரில் கொதிக்கவைத்து சமைப்பது எளிய மற்றும் வழக்கமான சமையல் முறையாகும். தண்ணீரில் காய்கறிகளை மூழ்கவைத்து 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வேகவைப்பது நல்லது. இந்த சமையல் முறை தொந்தரவு இல்லாதது. ஒரே சமயத்தில் வேறு சமையல் வேலைகளிலும் ஈடுபட ஏதுவானது. இருப்பினும் நீரில் கொதிக்க வைக்கும் செயல்முறையின்போது பல ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் இழக்கக்கூடும். அதனால் காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரிக்கலாம். குழம்பில் ஊற்றிவிடலாம். அப்படி செய்யும்போது மட்டுமே ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
நீரில் கொதிக்கவிட்டு வேகவைத்த காய்கறிகள் பெரும்பாலும் மென்மையாக மாறும். கொதிக்க வைக்கும்போது காய்கறிகளின் செல் சுவர்கள் உடைந்து அதன் இயற்கையான சுவை தன்மை வெளியேறக்கூடும். இருப்பினும் உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை நீரில் வேகவைப்பதே சரியானது. அவை ஜீரணிக்க எளிதாகவும் மாறும்.
எந்த முறை அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும்?
இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும். அதே வேளையில், நீராவி முறை அதிக நன்மை தரும். இது செரிமானத்திற்கு உகந்த சேர்மங்களை அப்படியே தக்கவைத்துவிடும். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளை நீராவியில் சமைப்பதே சிறந்தது. அவற்றை தண்ணீரில் வேகவைப்பது சில ஊட்டச்சத்துக்களை குறைத்துவிடும்.
ஆயுர்வேதத்தில் நீராவியில் சமைக்கும் முறையே சிறந்ததாக மதிப்பிடப்படுகிறது. இது உணவில் இருக்கும் உயிர் சக்தியை பாதுகாக்க உதவுகிறது. உணவை இலகுவாகவும், புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
நீராவி-கொதிக்கவைத்தல்: முக்கிய வேறுபாடுகள்
ஊட்டச்சத்து தக்கவைப்பு: நீராவியில் வேகவைக்கும்போது மிக குறைவான வைட்டமின்களே இழக்கப்படுகின்றன. நீரில் கொதிக்க வைக்கும்போது வைட்டமின்கள் தண்ணீரில் கசிந்து விடும். அந்த தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
அமைப்பு: நீராவியில் வேகவைப்பது, காய்கறிகளை உறுதியாகவும், மிருதுவாகவும், வண்ணமயமாகவும் தக்கவைத்துவிடும். அதே நேரத்தில் தண்ணீரில் கொதிக்க விடும்போது, காய்கறிகள் மென்மையாக மாறும்.
சுவை: இயற்கையான மற்றும் இனிப்பு சுவைகளை தக்கவைக்க நீராவி சமையல் உதவும். கொதிக்க வைப்பது, காய்கறிகளை லேசானதாக மாற்றும்.
நேரம் - எளிமை: கொதிக்கவைக்கும் முறையுடன் ஒப்பிடும்போது நீராவியில் சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
கொதிக்கும் நீரில் இருந்து வெளிப்படும் நீராவி மூலம் காய்கறிகளை சமைக்கும்போது தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாமல் வேகும். அந்த நீராவி காய்கறிகளின் எல்லா பகுதியிலும் சமமாக பரவி நன்றாக வேக தொடங்கும். காய்கறிகளை மென்மைத்தன்மைக்கு மாற்றுவதோடு சுவையும் குறையாமல் பார்த்துக்கொள்ளும். தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாததால் காய்கறிகளில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படும். குறிப்பாக நீரில் கரையும் வைட்டமின்களான பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்றவை தக்கவைக்கப்படும். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம். உதாரணமாக கேரட் நிறம் பளிச்சென்று மாறும். புரோக்கோலி மொறுமொறுப்பு தன்மையை தக்கவைத்துக்கொள்ளும். மேலும் நீராவியில் வேகவைப்பது காய்கறிகளின் இயற்கையான இனிப்புத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவிடும். நீராவியில் வேகவைக்கும்போது தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது கலோரிகளை கூடுதலாக்காமல் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த துணைபுரியும்.
- சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள்.
- கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும்.
நாம் அன்றாடம் சமையலறையில் சமையலின்போது சில விஷயங்களைப் பின்பற்றினால், குறிப்பிடத்தக்க அளவு எரிவாயுவை (கியாஸ்) மிச்சப்படுத்த முடியும்.
அது பற்றி பார்க்கலாமா...
* அரிசி மற்றும் நவதானியப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். இதனால் எரிவாயு செலவும் மிச்சமாகும்.
* முடிந்த அளவு எல்லாவித சமையல் வேலைகளுக்கும் பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கரில் ஒரே சமயத்தில் பல சமையல் பொருட்களை வேக வைக்கலாம். இதனால் எரிபொருள் செலவு குறைவதோடு, சமையல் வேலையையும் சீக்கிரமாக முடிக்க முடியும்.
* பால், குழம்பு, கூட்டு வகைகளை குளிர்பதன பெட்டியில் இருந்து அப்படியே எடுத்து கியாஸ் அடுப்பில் வைத்து சூடு பண்ணாதீர்கள். இதனால் சூடாக அதிக நேரம் ஆவதுடன், அதிக எரிபொருளும் செலவாகும். எனவே, பிரிட்ஜில் இருந்து எடுக்கும் சமையல் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து, அதன் குளிர் குறைந்து இயல்பான தட்ப வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான் சூடாக்க வேண்டும்.
* சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கியாஸ் அடுப்பு பற்ற வைப்பதற்கு முன்னரே நறுக்கி வைப்பது மிகவும் முக்கியம். அதுபோல் மசாலாக்களை அரைத்து கியாஸ் அடுப்பின் பக்கத்தில் வைத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் தேடி எடுப்பதால் ஆகும் எரிவாயு விரயத்தைக் குறைக்கலாம்.
* உங்கள் வீட்டு சமையலறையில் காற்று அதிகம் வீசுகிறது என்றால் ஜன்னலை அடைத்து விடுங்கள். காற்று அதிகம் அடித்தால் கியாஸ் அடுப்பின் ஜுவாலை படபடக்கும். இதனால் சமைக்க அதிக நேரம் பிடிப்பதோடு, எரிபொருளும் அதிகம் செலவாகும்.
* சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள். ஆவி வரும் வரை காத்திருக்க வேண்டாம். இதனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே சாதம் வெந்து விசில் வந்து விடும். ஐந்து நிமிட கியாஸ் செலவும் மிச்சமாகும்.
* கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும். ஆரஞ்சு நிறத்திலோ, மஞ்சள் நிறத்திலோ எரிந்தால் பர்னர் சுத்தமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதனால் எரிவாயு தேவையில்லாமல் பாழாவதை தவிர்க்கலாம்.
* குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது, சமையல் பொருட்களை அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதால் ஆகும் கியாஸ் செலவை குறைக்கும்.
- வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
- அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 3
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து பிசையவும்.
வெங்காயத்தில் இருந்து தண்ணீர் வரும். மாவிற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும். (அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்)
சிறிது தளர்வாக மாவை பிசைந்து மாவின் நடுவில் பாதியாக வெட்டிய முட்டையை வைத்து உருண்டையாக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் மசாலா முட்டையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை பஜ்ஜி தயார்.






