என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்று கூறப்படுகிறது.
    • உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    குழந்தையின்மை என்பது, திருமணமான தம்பதியர் தொடர்ந்து ஒரு வருடம் தாம்பத்தியத்தில் இருந்தும் மகப்பேறு அடையாத நிலையாகும். இதை முதன்மை குழந்தைப் பேறின்மை என்றும், ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்றும் கூறப்படுகிறது.

    காரணம்

    உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நாகரிக வாழ்வியல் முறைகள், தவறான உணவுப்பழக்கம், குறைந்த பட்ச உடற்பயிற்சி கூட இல்லாதிருத்தல், மன அழுத்தம், மனக்கவலைகள். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலிருப்பது, பொருளாதார நெருக்கடிகள், கொஞ்ச நாட்கள் இளமையை நன்கு அனுபவித்துவிட்டு அதன் பின்னர் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று கருத்தரித்தலை தள்ளிப்போடுதல், மருத்துவர் ஆலோசனையின்றி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, ஆண், பெண் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகள் உள்பட குழந்தையின்மைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

    ஆண்களுக்கான உடலியல் பிரச்சனை

    அசூஸ்பெர்மியா (விந்தணுக்கள் இல்லாத நிலை), ஏஸ்பெர்மியா (விந்து நீரே வெளியாகாமல் இருப்பது), ஒலிகோஸ்பெர்மியா (விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு), அஸ்தினோஸ்பெர்மியா (விந்தணுக்களின் இயக்க குறைபாடு), டெரடோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அமைப்பில் ஏற்படும் குறைபாடு), ஹைபோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அளவு குறைபாடுகள்), நெக்ரோசூஸ்பெர்மியா (விந்து நீரில் உயிருள்ள விந்தணுக்கள் இல்லாத நிலை), தாம்பத்திய குறைபாடுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு.

    பெண்களுக்கான உடலியல் பிரச்சனை

    சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோமா, சினைப்பாதை அடைப்புகள், புரோஜஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், புரோலாக்டின், ஆன்டி முல்லரின் ஹார்மோன் போன்றவைகளின் சீரற்ற செயல்பாடுகள்.

    சித்த மருத்துவம்

    சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.

    பெண்களுக்கு

    * மாதவிடாய் காலங்களில் அரசமரத் தளிர் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும். இதை உடல் ரீதியான காரணம் இல்லாமல் மகப்பேறு தாமதமடையும் ஏராளமான பெண்களுக்கு அனுபவ ரீதியாக பலன் தந்துள்ளது.

    * மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு அசோகப்பட்டை, முள்முருக்கு பூ, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை மருந்துகள் நற்பலனைத் தரும்.

    * விஸ்ணுகிரந்தி செடியை பொடி செய்து மாதவிலக்கு வந்த முதல் மூன்று நாட்கள் வெந்நீரில் சாப்பிட்டு வர மகப்பேறு உண்டாகும்.

    * புத்திரச் சீவி விதையை பொடி செய்து காலை, இரவு இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.

    ஆண்களுக்கு

    * முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.

    * விறைப்புத்தன்மை குறைபாடுகள் சீராக, நிலப்பனைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, மதனகாமப்பூ, கசகசா, வாலுழுவை போன்ற மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.

    * உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண், பெண் இருவரும் தினமும் ஹெகல் பயிற்சி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதிக கலோரி ஆற்றலைத் தரும் இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * மன அழுத்தம், மன உளைச்சல், மனக்கவலை இன்றி ஒருமித்த உணர்வுடன், பிரார்த்தனைகளுடன் கணவன்-மனைவி சேரும்போது, இல்லத்தில் துள்ளி விளையாட பிள்ளைச் செல்வம் பிறக்கும்.

    • கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும்.
    • கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கிவி பழம் பச்சை நிறத்தில் சதைப்பற்றுள்ள பழம். அதன் தனித்துவமான புளிப்பு மற்றும் இனிப்பு சுவை மகத்தான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது.

    ஒரு கிவி பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

    மருத்துவர்கள் தினமும் ஒரு கிவி சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவுகிறது.

    தினமும் ஒரு கிவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

    கிவி பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்று கோளாறு மற்றும் வலி போன்ற செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இரண்டு சிறிய கிவி பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. தோலுடன் கிவியை சாப்பிட்டால் அதிக நார்ச்சத்து பெறலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. கரையக்கூடிய நார்ச்சத்து ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்கி செரிமானத்தை மெதுவாக்குகிறது.

    கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும்.

    கிவி பழங்களில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. இது கண்புரை உருவாகும் அபாயத்தைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் உதவியாக இருக்கும்.

    கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மகரந்த ஒவ்வாமை மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன.
    • மண் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது.

    கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா?

    அப்படி குடிக்கிறபோது எந்தவித செயற்கை செயல்பாடும் இன்றி இயற்கையாக மண் பானையில் உள்ள நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது என்ற கேள்வி எழுந்திருக்கிறதா? வாருங்கள் அதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை அறிந்து கொள்வோம்.

    மண் பானையில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் இயற்கையான வடிவமைப்பு ஆகும். மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன. அதனால் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது. இந்த ஆவியாக்க செயல்முறையினால் பானையின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாகிறது. இது 'ஆவியாக்கக் குளிர்ச்சி' என அழைக்கப்படுகிறது.

    மண்பானை ஒரு இயற்கை குளிரூட்டி. இது மின் சக்தி இல்லாமலே குளிர்ந்த தண்ணீரை வழங்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியமானது.

    பிளாஸ்டிக் அல்லது உலோக பானைகளுடன் ஒப்பிடுகையில், மண் பானையில் தண்ணீர் எப்போதும் புதியதாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மண் பானையில் தண்ணீர் குடிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!

    • நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.
    • கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது.

    நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தியன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது.

    நன்னாரி வேர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இது வெளிநாட்டினருக்கு தெரிந்தும் அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இதனை பலரும் பயன்படுத்துவது இல்லை. அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மூலிகையில் இது மிக முக்கியமான ஒன்று.

    கொடி வகையை சேர்ந்த நன்னாரியின் வேரானது சித்தா ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமியோபதி மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுகிறது. நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். குடிப்பதற்கு இதமாகவும், சிறுநீர் போக்கை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்த நச்சுக்களை அகற்றி ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.

    கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. இது உடலின் உள் வெப்பத்தை தணிக்கிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடிய சில சத்தூட்டங்கள் நன்னாரி வேரில் காணப்படுகின்றன. இதனால், வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கின்றனர். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் அதீத வெப்பம் தணிந்து உடலுக்கு புத்துணர்வு கிடைக்க நன்னாரி உதவுகிறது.

    • சர்க்கரை நோய்க்கான அறிகுறியில் பெரும்பாலும் உடல் சோர்வு இல்லையென்று நினைத்து விட்டுவிடுகிறோம்.
    • உடல் சோர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் ரத்தசோகை பரிசோதனை செய்வது அவசியம்.

    காலையில் எழும் போதே உடல் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். அதிக வேலை, இடைவிடாமல் பணி செய்வது, தீவிரமான காய்ச்சலுக்கு பிறகு உண்டாகும் உடல் சோர்வானது இயல்பு. ஆனால் இதற்கு மாறாக காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வாக இருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை உற்றுநோக்குவது என்பது இன்றியமையாதது. ஏனெனில் முதலில் காலை நேரத்தில் உண்டாகும் உடல்சோர்வு நாளடைவில் நாள் முழுக்க உடலை பலவீனப்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க உடல் சோர்வு ஏற்பட என்ன காரணம் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    உறக்கமின்மை

    ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் குறட்டை விட்டு தூங்கினாலே நல்ல தூக்கம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இது ஆழ்ந்த தூக்கம் கிடையாது. நாம் தூங்கும் இடத்தில் போதுமான அளவு காற்று இல்லையென்றாலும், தூங்கும் நேரத்தில் மாற்றம், போதிய நேரம் தூங்க முடியவில்லை என்றாலும் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும். எனவே, தூங்கி எழுந்தவுடன் உடல் சோர்வாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்களின் இரவு நேர தூக்கம் பற்றி யோசிப்பது அவசியம்.



    தைராய்டு

    உடலின் பல்வேறு செயல்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது சீரான தைராய்டு சுரப்புதான். பலரும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறியை தீவிரமாக உணர்வதில்லை. அறிகுறி தீவிரமாகும் போது உடல் சோர்வும் களைப்பும், உணர்ந்தால் மருத்துவரின் பரிந்துரையோடு ஒரு ஹைப்பர் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்கான சிகிச்சை எடுத்துகொள்ளும் போதே உடல் சோர்வு இருக்காது.

    நீரிழிவு

    சர்க்கரை நோய்க்கான அறிகுறியில் பெரும்பாலும் உடல்சோர்வு இல்லையென்று நினைத்து விட்டுவிடுகிறோம். உண்மையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது பசியும், தாகமும், சிறுநீர் போக்கும் அதிகரிப்பது போல் உடல் சோர்வும் அதிகமாகிறது. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்ற பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம்.

    ரத்த சோகை

    ரத்த சோகைக்கான முதல் அறிகுறி உடல் சோர்வு தான். உடல் சோர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் ரத்தசோகை பரிசோதனை செய்வது அவசியம். ஏனென்றால் ரத்த சோகை இருக்கும் போது உடலில் ரத்தத்தின் அளவு குறையக்கூடும். அப்போது உடல் செய்யக்கூடிய வேலைகளில் அதிகப்படியான தொய்வு உண்டாக கூடும். இது இரும்புச்சத்து குறைபாட்டால் பெருமளவு வரக்கூடும்.



    ரத்த அழுத்தம்

    ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு உடல் சோர்வும் அதீத களைப்பும் இருக்கும். தொடர்ந்து சோர்வோடு காலை எழும் போதே தலைவலியும் இருந்தால் அவை பெரும்பாலும் இந்நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு எழுந்தவுடன் தலை பாரமாக இருக்க கூடும். அவர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் மருத்துவரிடம் சென்று நின்ற நிலையில், உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையின் ரத்த அழுத்தத்தின் அளவை கண்டறிய வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் உண்டாகும் இந்த சோர்வு ரத்த அழுத்தத்தாலும் இருக்கலாம்.

    தொடர்ந்து உங்களுக்கு உடல் சோர்வு இருந்தால் 10 நாட்கள் வரை தொடர்ந்து காலையில் எழும் போதெல்லாம் சோர்வை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

    உடல் சோர்வாக இருக்கும் போது வாழ்க்கை முறையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை:

    உடல் சோர்வுக்கு மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் காரணமாக கண்டறியப்பட்டால் தவிர்க்காமல் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம். அதே நேரம் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை முறையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான். நீங்கள் உண்ணும் உணவில் சத்தான புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, கால்சியம் என அனைத்து சத்துகளும் சரிவிகிதமாக இருக்கும்படி எடுத்துகொள்ள வேண்டும். காலை உணவாக பழத்துண்டுகளாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உடல் சோர்வை போக்க முடியும்.

    • பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
    • எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    கண் பார்வை சிறிது சரியாக இல்லை என்றால் கூட பயம் வந்துவிடும் என்பது உண்மைதான். பார்வை பிரச்சனை இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது நம்பிக்கை இழந்து நடக்கவே பயப்படுவதுண்டு. 50 வயதைத்தாண்டிய பலபேருக்கு இந்தப்பிரச்சனை இருக்கிறது. 40 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வரும் வெள்ளெழுத்து பிரச்சனை என்பது சரிசெய்யக்கூடியது. 50 வயதுக்கு மேல் வரும் பார்வைக் குறைபாடு பெரும்பாலும் கண்புரை நோய் (கேட்டராக்ட்) பிரச்சனையாக இருக்கக்கூடும்.

    இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். சாதாரணமாக நாம் செய்யும் அன்றாடக் காரியங்களில் கூட தடுமாற்றம் காணப்படும். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயமும், வேறு ஏதாவது பொருட்கள் மீது மோதி விடுவோமோ என்ற பயமும் வந்துவிடும்.

    இதனால் உங்கள் அன்றாட செயல்கள் குறைந்துவிடும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயக்கம் ஏற்படும். பயத்தினால் சரிவர நடக்காததினால் தினமும் நடக்க வேண்டிய நடை குறைந்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். பெண்களைப் பொறுத்தவரை அன்றாட வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் தடைபடும். இதனால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்ற அச்சமும் மற்றவர்களை நம்பித்தான் வாழவேண்டுமோ என்ற கவலையும் அதிகமாக வந்துவிடும்.

    இதற்கு தீர்வு: எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர் சொல்லும் பரிசோதனைகளை உடனே செய்ய வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்ளச் சொன்னால் உடனே செய்ய வேண்டும். கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கும் உடனடியாக தயாராக வேண்டும்.

    கண் மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை உடனடியாக செய்தால் தான் மறுபடியும் பார்வை பழைய நிலைக்கு வரும். அப்பொழுதுதான் எந்த வேலையையும் மிகச் சாதாரணமாக செய்து முடிக்கலாம் என்ற துணிவு வரும். பார்வை குறைபாடு தானே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்.

    • உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சனை
    • அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற அதிகமான தண்ணீர் தாகம் மருத்துவ ரீதியாக 'பாலிடிப்சியா' அல்லது 'தாகமிகுமை' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். பாலிடிப்சியாவில் போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் தாகம் குறையாது. இது ஏற்பட முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் ஆகும். இருப்பினும் உங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதால், கீழ்க்கண்ட காரணிகளில் ஏதேனும் ஒன்றால் உங்களுக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்படலாம்.

    1) நீரிழிவு இன்சிபிடஸ்: இதில் அதிகமான அளவு சிறுநீர் வெளியேறி, உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை இழக்க செய்து, தாகத்தை அதிகரிக்கிறது.

    2) முதன்மை தாகமிகுமை (பிரைமரி பாலிடிப்சியா): உடலியல் தூண்டல் இல்லாத நிலையிலும் உண்டாகும் அதிக தாகம் மற்றும் நீர் பருகும் நிலை.

    3) சைக்கோஜெனிக் பாலிடிப்சியா அல்லது உளச்சார்பு தாகமிகுமை: கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களிடம் காணப்படும் அதிகமான நீர் உட்கொள்ளல்.

    4) நீர்ச்சத்து இழப்பு: வாந்தி, வயிற்று போக்கு, அதிகம் வியர்த்தல் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு குறைபாடு.

    5) அதிக உப்பு: அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உப்பு ரத்தத்தில் உறிஞ்சப்படுவதால், திசுக்களில் உள்ள திரவம் இழுக்கப்பட்டு தாகம் அதிகரிக்கிறது.

    6) செரிமானம் தொடர்பான பிரச் சினை: இதில் உணவை ஜீரணிக்க அதிமான அளவு தண்ணீர் தேவைப்படுவதால் தாகம் அதிகரிக்கிறது.

    7) ரத்த சோகை.

    8) உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சனை

    9) கடுமையான உடற்பயிற்சி

    10) உடலில் வேறு எங்கேனும் ஏற்படும் குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு

    11) அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.

    12) மருந்துகளின் பக்கவிளைவுகள் (டையூரிடிக்ஸ், லித்தியம்)

    13) ரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியம் (ஹைபோகலீமியா)

    14) மிகை தைராய்ட் நிலை (ஹைப்பர்தைராய்டிசம்)

    மேற்கூறிய ஏதேனும் காரணங்களால் உங்களுக்கு அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.

    • வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இந்தப் பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

    வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பண்டைய காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம். இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்கின்றனர். வெந்நீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,செரிமானம் மேம்படவும் , உடல் எடையைக் குறைக்கவும், மன அழுத்தம் குறையவும்,சரும பிரச்சனைகள் மற்றும் வலி நிவாரணியாகவும் உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:

    வெந்நீர் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன்மூலம் தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    செரிமானம் மேம்படும்:

    வெதுவெதுப்பான நீர் குடிப்பது செரிமான மண்டலத்தைத் தூண்டி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் மலத்தை மென்மையாக்கி கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் குடிப்பது செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து உணவு எளிதாக ஜீரணிக்கவும், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவி செய்கிறது.



    உடல் எடையைக் குறைக்க உதவுகிறது:

    வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரி வேகமாக எரிக்க உதவுகிறது. மேலும், வெந்நீர் குடிப்பதால் பசி குறைந்து அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

    மன அழுத்தம் குறையும்:

    உடலில் உள்ள கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்தி, மனதை அமைதியாக வைக்கிறது. இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    சரும பிரச்சனைகள் குறையும்:

    சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வெந்நீர் குடித்து வந்தால் அவை குறைய நேரிடும். வெந்நீர் தோலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி தோலை சுத்தமாக வைக்கிறது. மேலும், முகப்பரு, சரும அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.



    வலி நிவாரணி:

    வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும் வெந்நீர் குடிப்பதால் குறையும் என சொல்லப்படுகிறது.

    எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

    • பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம்.
    • நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது.

    மூக்குக் கண்ணாடி தேர்ந்தெடுக்கும்போது அணிந்து பார்த்து, நீண்ட நேர முயற்சிக்குப் பின் நமக்குப் பிடித்ததை அணிவோம். எனினும், அந்த கண்ணாடி நம் முகத்துக்கு ஒத்துப்போகாமல் காட்சியளிக்கும்போது நேரம் மற்றும் முயற்சி வீணாகும். முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

    அளவு

    தலையை நேராக உயர்த்தி, ஒரு ஏ.டி.எம். கார்டின் பக்கவாட்டுப் பகுதியை கண்களுக்குக் கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏ.டி.எம். கார்டு முழுவதுமாக உங்கள் கண்ணுக்குள் மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு 'எல்', கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு 'எம்', கார்டை விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு 'எஸ்' ஆகும்.

    சதுர முக அமைப்பு

    பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம். இவ்வித அமைப்பு உள்ளவர்கள் வட்ட வடிவம் அல்லது 'டி' வடிவ கண்ணாடி பயன்படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும். மேலும், ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாகக் காட்ட 'ஓவல்' வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக் கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.

    வட்ட வடிவ முக அமைப்புக்கு..

    பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இவர்கள், வட்ட வடிவக் கண்ணாடிகளைத் தவிர்ப்பது சிறந்தது. மாறாக, 'கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் வைபெரர்கள்' அல்லது நீள் செவ்வக வடிவ கண்ணாடிகளை முயற்சிக்கலாம். இவை வட்ட முக வடிவத்திற்கு அற்புதமாகப் பொருந்தும்.

    நீள்வட்ட வடிவ முக அமைப்புக்கு...

    நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது. எனவே கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். சதுரம் மற்றும் செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவ முக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால், பெரிய சதுர கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    இதய வடிவ முக அமைப்பினருக்கு..

    கிளாசிக் 'ஏவியேட்டர்' கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் முக வடிவத்தை இன்னும் மெருகேற்ற 'ரிம்லெஸ்' கண்ணாடிகளையும் அணியலாம். இந்த வகை கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும். அதேசமயம் அழகாகவும் காட்சியளிக்கும். மூக்குப் பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் மெல்லிய பிரேம் கண்ணாடிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பிரேம்கள் உங்கள் முகத்தின் வசீகரத்தை அதிகரிக்கும். எந்த வகை பிரேமாக இருந்தாலும், லென்ஸின் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • படிக்கும்போது நாம் உட்காரும் முறை தான் தூக்கத்தை வரவழைக்கிறது.
    • ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்கிறபோது தசைகளுக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

    குழந்தைகளே... புத்தகத்தை கையில் எடுத்து உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா? இது நமக்கு மட்டும்தான் நடக்குதா? இல்லை எல்லோருக்கும் நடக்குதா? என்று தோன்றுகிறதா?

    இது அனைவருக்கும் நடக்கிற ஒரு செயல் தான். அது ஏன் நடக்கிறது என்கிற காரணத்தை அறிந்து கொள்வோம்!

    படிக்கும்போது நாம் உட்காரும் முறை தான் தூக்கத்தை வரவழைக்கிறது. அசையாமல் அப்படியே ஒரே இடத்தில் அமர்ந்துவிடக்கூடாது. இப்படி ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்கிறபோது தசைகளுக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் தடைபடுகிறது. தேவையான ரத்தம் கிடைக்காததால் ரத்தத்தை கொண்டு வருகிற ஆக்சிஜனும் கிடைக்காமல் போகிறது. அதனால் தசைக்கலங்கள் காற்றில்லாத சுவாசத்தை தொடர்கிறது.

    ஆக்சிஜன் இல்லாத சுவாசத்தின்போது தசைக்கலங்களில் உள்ள சேமிப்பு உணவு அரைகுறையாக எரிக்கப்படுகிறது. அதனால் லாக்டிக் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் ரத்தத்தில் கலந்து அதில் உள்ள ஆக்சிஜனுடன் வினை புரிகிறது. அப்போது மூளைக்குச்செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. அதனால் மூளை களைப்பாகி தூங்கி விடுகிறது. எனவே படிக்கிறபோது ஒரு இடத்தில் இருந்துவிடாமல் அவ்வப்போது எழுந்து நடப்பது, சிறிய இடைவெளி எடுப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

    • அதிக சுவை கொண்ட பழங்களில் மாம்பழம் முதன்மையானது.
    • மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழம் சாப்பிட்டாலே போதும் என்று ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா கூறுகிறார். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் பெரும்பாலும் பழங்களை தவிர்த்து விடுவர். பழங்களைத் தவிர்த்து சாப்பிடும் உணவு முறை மிகவும் மோசமானது என்றும் சீரான உணவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பழங்கள் அவசியம் என்றும் பழங்கள் ஊட்டச்சத்துக்கான முழுமையான அணுகுமுறை, உடல் எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

    ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு மாம்பழம் சிறந்தது என்று கூறும் ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா சில நன்மைகளை எடுத்துரைக்கிறார்.

    சிம்ருன் சோப்ரா சிறப்பித்துக் காட்டும் சில நன்மைகள்:

    1. அளவாக உண்ணுங்கள்

    அதிக சுவை கொண்ட பழங்களில் மாம்பழம் முதன்மையானது. சுவை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அளவில்லாமல் உட்கொள்ள கூடாது. உணவு கட்டுப்பாடு முக்கியம். எந்த உணவையும் அதிகமாக சாப்பிடுவது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுத்து எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    2. ஒட்டுமொத்த கலோரிகளை சமநிலைப்படுத்துங்கள்

    உடல் தானாகவே கொழுப்புகளை அல்லது கலோரிகளை எரிப்பதற்கு முன்னதாகவே நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு முதன்மையாக ஏற்படுகிறது. மாம்பழங்களில் குறைந்த கலோரி அடர்த்தி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இவை இரண்டும் உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்க உதவும் . ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வழிவகை செய்யும்.



     3. நார்ச்சத்தை அதிகம் பயன்படுத்துங்கள்

    மாம்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பசியைத் தணித்து, மனநிறைவை ஊக்குவிக்கிறது. இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவும்.

    4. மாம்பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள்

    மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை. இருப்பினும், அவற்றின் நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நன்மையைப் பெற, மாம்பழச் சாற்றைக் குடிப்பதை விட முழு மாம்பழங்களை கடித்து சுவைத்து சாப்பிடுவது நல்லது, ஏனெனில் இது நார்ச்சத்தை நீக்குகிறது.

    5. ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழம்

    மாம்பழங்கள் உட்பட அனைத்து பழங்களும் அவற்றின் வைட்டமின் மற்றும் தாதுப்பொருள் உள்ளடக்கம் காரணமாக ஊட்டச்சத்து நிறைந்தவை. எனினும் மாம்பழம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழங்களை எடுத்துக்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா பரிந்துரைக்கிறார்.

    மேலும், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் விளைபொருட்களில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி உள்ளார்.

    • நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் ஆகியவை நல்ல தேர்வுகள், ஏனெனில் இவை அதிகமாக முதுகை சிரமப்படுத்துவது இல்லை.
    • எண்ணெய் மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம் மேம்படுகிறது.

    முதுகு வலி என்பது பலவித உடல் நலப் பிரச்சனைகளினால் ஏற்படுகிறது. முதுகு வலி எந்த நோயுடன் தொடர்பு உடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுக்க வேண்டும்.

    முதுகு வலிக்கான பொது காரணங்கள்:

    தசைப் பிடிப்புகள், முதுகு எலும்புகளுக்கு இடையில் மெத்தைகளாக செயல்படுகின்ற வட்டுகள் வீங்கி அல்லது விலகி நரம்புகளை அழுத்துவதால் ஏற்படுகிற முதுகு வலி, குமட்டாய்டு (கீல் வாத) நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை (எலும்புகளில் கால்சியம் மற்றும் வைட்டமின்டி குறைவினால் நுண்துளைகள் ஏற்பட்டு உடையக்கூடியதாக மாறினால் முதுகெலும்புகளில் வலி ஏற்படும்), அன்கிலோசிங் ஸ்பான்டை விடிஸ், சயாட்டிகா, சாக்ரோலைடிஸ், குடல் பிரச்னைகள், சிறுநீரக பிரச்சனைகள், கர்ப்பப்பை பிரச்சனைகளிலும் முதுகு வலி ஏற்படும். விபத்துக்கள், அடிபட்ட காயங்கள், இவற்றைத் தொடர்ந்தும் முதுகில் வலி, குத்தல் ஏற்படும்.

    இந்த நோய்க்கான மருத்துவ பரிசோதனைகள்:

    இமேஜிங் (எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஆய்வுகள்)

    முதுகு வலிக்கான தடுப்பு முறைகள்

    உடற்பயிற்சி:

    தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் முதுகில் வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் அதிகரித்து தசைகள் சிறப்பாக செயல்பட உதவும். நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் ஆகியவை நல்ல தேர்வுகள், ஏனெனில் இவை அதிகமாக முதுகை சிரமப்படுத்துவது இல்லை.

    உடல் எடை:

    ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். அதிக எடை இருப்பது முதுகின் தசைகளை சிரமப்படுத்துகிறது.

    எண்ணெய் மசாஜ்: மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம் மேம்படுகிறது. தசை இறுக்கம், சோர்வு, வலி, இவைகளை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.

    சித்த மருத்துவ சிகிச்சைகள்

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்திரில் சாப்பிட வேண்டும்.

    2) வலியுடன் கூடிய வீக்கத்திற்கு சேராங் கொட்டை நெய் 5-10 மி.லி. வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) முதுகு வலி உள்ள இடத்தில், வாதகேசரி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம், கற்பூராதி

    தைலம் இவைகளில் ஒன்றைத் தேய்ந்து நொச்சி பழுத்த எருக்கு இலை, தழுதாழை, வாதநாராயணன் இலைகளை வதக்கி இளஞ்சூட்டில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.

    சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

    ×