என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    எந்த நோயாக இருந்தாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வியக்கத்தக்க வகையிலும், உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள்.
    ஓம் நமோ பகவதி |
    மிருதசஞ்சீவினி |
    சாந்தி குரு குரு ஸ்வாஹா||

    அசுரகுரு சுக்ராச்சாரியார் இம்மந்திரத்தை உபயோகித்தே இறந்தவர்களைக்கூட  மீண்டும் உயிர் பெறச்செய்தார்.

    வியக்கத்தக்க வகையிலும்,உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள். நமக்காக ஜெபிப்பதானால் மேற்கண்ட மந்திரத்தை அப்படியே ஜெபிக்கலாம். பிறருக்காக ஜெபிப்பதானால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரின் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    உதாரணமாக:- முருகன் என்பவருக்காக ஜெபிப்பதானால்

    ஓம் நமோ பகவதி |
    மிருதசஞ்சீவினி |
    முருகன் சாந்தி குரு குரு ஸ்வாஹா||

    என ஜெபிக்க வேண்டும்.
    பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்
    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்
    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்
    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.

    ஸ்துதி

    ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ
    ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:
    விஸர்க்க பிந்து மாத்ரேஷ யததிஷ்டான மேவஹா
    ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:
    வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி
    யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே
    கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:
    ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:
    ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி
    ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:
    க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
    ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்
    யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
    ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்
    பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்
    இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே
    (ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்)

    செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேரட்டும்.
    ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும்.
    ஸ்ரீகணேஸாயநம:

     1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
     நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
          ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
     காமதஹம்கருணாகர லிங்கம்I
        ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
     புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
        ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

     எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

     4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
     பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
          தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

     தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    5: குங்குமசந்தனலேபித லிங்கம்
     பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
        ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

     குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

     6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
     பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
        தினகரகோடிப்ரபாகர லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

     7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
     ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
        அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

     8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
     ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
        பராத்பரம் பரமாத்மக லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

    லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
    ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII
    மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன்,
    எவர் படிப்பாரோ... அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.

    அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக...
    வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
    ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

    கருத்து:

    எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

    தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
    ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

    கருத்து:

    பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

    ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
    கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

    கருத்து:

    மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

    தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
    தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

    கருத்து:

    சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

    வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
    தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

    கருத்து:

    வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.

    ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
    சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

    கருத்து:

    பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.
    கடவுள்களில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள்.
    கடவுள்களில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள்.

    1. ஓம் ஆறுமுகனே போற்றி
    2. ஓம் ஆண்டியே போற்றி
    3. ஓம் அரன்மகனே போற்றி
    4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    5. ஓம் அழகா போற்றி

    6. ஓம் அபயா போற்றி
    7. ஓம் ஆதிமூலமே போற்றி
    8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
    9. ஓம் இறைவனே போற்றி
    10. ஓம் இளையவனே போற்றி

    11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
    12. ஓம் இடர் களைவோனே போற்றி
    13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
    14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    15. ஓம் உமையவள் மகனே போற்றி

    16. ஓம் உலக நாயகனே போற்றி
    17. ஓம் ஐயனே போற்றி
    88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
    20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி

    21. ஓம் ஒங்காரனே போற்றி
    22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
    23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
    24. ஓம் கருணாகரரே போற்றி
    25. ஓம் கதிர்வேலவனே போற்றி

    26. ஓம் கந்தனே போற்றி
    27. ஓம் கடம்பனே போற்றி
    28. ஓம் கவசப்பிரியனே போற்றி
    29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    30. ஓம் கிரிராஜனே போற்றி

    31. ஓம் கிருபாநிதியே போற்றி
    32. ஓம் குகனே போற்றி
    33. ஓம் குமரனே போற்றி
    34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
    35. ஓம் குறத்தி நாதனே போற்றி

    36. ஓம் குணக்கடலே போற்றி
    37. ஓம் குருபரனே போற்றி
    38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
    40. ஓம் சரவணபவனே போற்றி

    41. ஓம் சரணாகதியே போற்றி
    42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
    43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    44. ஓம் சிக்கல்பதியே போற்றி
    45. ஓம் சிங்காரனே போற்றி

    46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
    47. ஓம் சரபூபதியே போற்றி
    48. ஓம் சுந்தரனே போற்றி
    49. ஓம் சுகுமாரனே போற்றி
    50. ஓம் சுவாமிநாதனே போற்றி

    51. ஓம் சுகம் தருபவனே போற்றி
    52. ஓம் சூழ் ஒளியே போற்றி
    53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
    54. ஓம் செல்வனே போற்றி
    55. ஓம் செந்தூர் காவலனே போற்றி

    56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
    57. ஓம் சேவகனே போற்றி
    58. ஓம் சேனாபதியே போற்றி
    59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
    60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி

    61. ஓம் சோலையப்பனே போற்றி
    62. ஓம் ஞானியே போற்றி
    63. ஓம் ஞாயிறே போற்றி
    64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    65. ஓம் ஞான உபதேசியே போற்றி

    66. ஓம் தணிகாசலனே போற்றி
    67. ஓம் தயாபரனே போற்றி
    68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
    69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
    70. ஓம் திருவே போற்றி

    71. ஓம் திங்களே போற்றி
    72. ஓம் திருவருளே போற்றி
    73. ஓம் திருமலை நாதனே போற்றி
    74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
    75. ஓம் துணைவா போற்றி

    76. ஓம் துரந்தரா போற்றி
    77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
    78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
    79. ஓம் தேவாதி தேவனே போற்றி
    80. ஓம் தேவை அருள்வாய் போற்றி

    81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
    82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
    83. ஓம் நாதனே போற்றி
    84. ஓம் நிலமனே போற்றி
    85. ஓம் நீறணிந்தவனே போற்றி

    86. ஓம் பரபிரம்மமே போற்றி
    87. ஓம் பழனியாண்டவனே போற்றி
    88. ஓம் பாலகுமரனே போற்றி
    89. ஓம் பன்னிரு கையனே போற்றி
    90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

    91. ஓம் பிரணவமே போற்றி
    92. ஓம் போகர் நாதனே போற்றி
    93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
    94. ஓம் மறைநாயகனே போற்றி
    95. ஓம் மயில் வாகனனே போற்றி

    96. ஓம் மகா சேனனே போற்றி
    97. ஓம் மருத மலையானே போற்றி
    98. ஓம் மால் மருகனே போற்றி
    99. ஓம் மாவித்தையே போற்றி
    100. ஓம் முருகனே போற்றி

    101. ஓம் யோக சித்தியே போற்றி
    102. ஓம் வயலூரானே போற்றி
    103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
    104. ஓம் விராலிமலையானே போற்றி
    105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி

    106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
    107. வேலவனே போற்றி
    108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி
    ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள தீமைகள் நீங்கி, என்றும் நன்மையே நடக்கும்.
    சிவசக்தியை மனதிலும், கங்கை அன்னையை தலையிலும் சுமந்த ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள தீமைகள் நீங்கி, என்றும் நன்மையே நடக்கும்.

    சிவ ஸித்தேச்வர அஷ்டகம்

    மஹா தீர்த்த ராஜஸ்ய தீரே விபாந்தகம்
    மஹாபூ திரூபம் மஹாத்மைக வேத்யம்
    மஹா ஸித்திபூரா ப்ரதானை கதக்ஷம்
    பஜாமைவ ஸித்தேச்வரம் சித்த: சம்பும்!
    பொருள்

    மஹா தீர்த்தக் கரையில் விளங்குபவரும், சிறந்த விபூதி (ஐஸ்வர்யம்) வடிவானவரும், மஹாத்மாக்களால் மட்டும் அறியப்படுபவரும், பெரிய பெரிய சித்திகளைக் கொடுப்பதில் சமர்த்தரும், எல்லோருக்கும் நன்மையைத் தருபவருமான ஸித்தேச்வரரை மனமே நீ எப்பொழுதும் நினைப்பாயாக!

    மனோஜஸ் வதக்ஷ்யக்னி பஸ்மாவசேஷ:
    மதாந்தச்ச தக்ஸோ கதச்சோச்ய பாவம்
    மனோஜாச்ச தக்ஷக்னி தாந்தோ மதாந்தோ
    பஜே நிர்மதத்வாய ஸித்தேச்வரம் த்வாம்!
    பொருள்

    உன்னுடைய நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பல் ஆனான். மிகவும் மதம் பிடித்திருந்த தட்சப்பிரஜாபதி வருந்தத்தக்க நிலையை அடைந்தான். எரிந்துபோன மன்மதனாலே பாமர ஜனங்களும் தவித்து மதம் பிடித்தலைகிறார்கள். ஆகையால் எனக்கு மதம் சற்றும் இல்லாமல் இருப்பதற்காக ஸித்தேச்வரரை பூஜிக்கின்றேன்!

    இயம் சாஸ்பி கங்கா நிபத்தா கபர்த்தே
    மதாட்யா யதஸ்ஸா கணக்ஸீர கல்பம்
    விஸ்ருஷ்டா ஜெகத் பாபநாசாய யேன
    ஸ்வயம் சித்த ஸித்தேச்வரம் சிந்தயைனம்!

     பொருள்

    மதம் பிடித்த கங்கையானவள் உமது ஜடாமுடியில் நீர்த் துளிக்கு ஒப்பாக கட்டுப்பட்டு நிறுத்தப்பட்டாள். ஜெகத்தின் பாபங்களை போக்குவதற்காக எவரால் விடுவிக்கப்பட்டாளோ அப்பேர்பட்ட ஸித்தேச்வரரை ஹே மனமே நீ சிந்தை செய்!

    ந தேஸ்ந்தோ சாதிர் ஹரி:ஸ்ஸோஸ்பி தாதா
    வராஹோ பவன் னூர்த்வ ஹம்ஸீ பவம்ஸ்ச
    ததா தேஹி ஸாக்ஷ்யம் பஜே பாந்தமேவ
    மஹா லிங்க ரூபேண ஸித்தேச்வரம் த்வாம்!
    பொருள்

    விஸ்ணு வராஹமாய் உனது அடியைக் காணவும், பிரம்மாவானவர் அன்னமாகி உமது முடியைக் காண்பதற்கும் இயலாமல் சாட்சி தன்மையை அடைகிறார்கள். அப்பேர்பட்ட ஜோதியாய் விளங்கும் மஹாலிங்கரூபனை அந்த ஸித்தேச்வரரை சேவிக்கின்றேன்.

    சிவோஸ்யம் ப்ரதேசோ மஹான் மத்யதேச:
    சிவா ஜாஹ்னவீ நித்ய ஸித்த ப்ரவாஹா
    சிவ ஸ்த்வம் சிவம் நித்ய ஸித்தம் ததான:
    சிவோ நஸ்ஸதா தேவ! ஸித்தேச்வர ஸ்யா!
    பொருள்

    இந்த மத்ய பிரதேசம் மிகவும் மங்களமானது. இங்கு நித்தியம் கங்கை பிரவாஹமாக மங்கள ரூபமாக பிரவஹிக்கின்றாள். எப்பொழுதும் நம்மிடமுள்ளதான சிவத்தன்மையைக் கொடுப்பவராக எங்களுக்கு மங்களம் அளிப்பவராக ஸித்தேச்வரராக நீங்கள் விளங்க வேண்டும்.

    பதாப்ஜே த்வதீயே ஸ்வ கீயாக்ஸி பத்மம்
    புரா பூஷண த்வேன நாராயணோ த்தாத்
    இதீதம் புராவ் ருத்தமத் த்யாத்ர ஸத்யம்
    பதர்யோ ஹரிஸ்ஸாது ஸித்தேச்வரா அகாத்!
    பொருள்

    உன்னுடைய பாதபதமத்தில் முன்பொரு சமயம் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய தாமரைக் கண்ணை அர்ப்பணித்தார். என்ற பழைய செய்தி இங்கு உண்மையாகின்றது. (பதரியில் உள்ள ஹரியானவர் ஸித்தேச்வரருக்கு தமது நயனங்களுள் ஒன்றை புஷ்பமாக அளித்தார்).

    கபர்தாத் த்வதீயாத் விஸ் ருஷ்டாபி கங்கா
    புன:ஸேவிதும் த்வா மஹோ பத்த வாஞ்சா!
    ஸ்காசே த்வ தீயேதி பாரப்ர வாஹா
    நிஜாம் போஸ் பிஷேகாய ஸித்தேச்வராகாத்!
    பொருள்

    உம்முடைய ஜடையில் இருந்து விடுவிக்கப்பட்ட கங்கயானவள் மறுபடியும் உம்மை சேவிப்பதற்கு ஆசையுள்ளவளாக மிகுந்த பிரவாஹத்துடன் உமக்கு அபிஷேகம் செய்வதற்காக ஸித்தேச்வரரே உம்மிடம் வந்தாள்.

    நமத்தோஸ் ம்யஹம் சேன் நமத்தோஸி பின்ன:
    நமத்தோஸி தஸ்த்வம் நமத் தோஷ தாதா!
    நமத்தேஸ்ஸி பின்ன ஸ்த்வ மித்யைக்ய தோஷம்
    நமத்ப்ய: ப்ரதேஹீஹ சித்தேச்வர த்வம்!
    பொருள்

    நான் மதம் பிடிக்தவனாக இருப்பினும் நீர் என்னைத்தவிர வேறல்லவே! வணங்குபவர்களால் சந்தோஷப்படுத்தப்படும் நீர் உம்மை வணங்குபவர்க்கும் சந்தோஷத்தை அளிக்கிறீர். ‘என்னைத் தவிர நீ வேறில்லை ஒன்றுதான் என்ற மகிழ்ச்சியை/ சந்தோஷத்தை ஸித்தேச்வரரே நீர் வணங்குபவர்களுக்கு கொடுக்கிறீர்கள்.

    இதி ப்ரயாக சித்தேச்வர பக்திப் ருஜ் ஜனதா ஹ்ருதி
    ச்லோ காஷ்டகம் மிதம் நித்யம் வர்த்தய தாம் சுபம்!
    பொருள்

    இப்படியாக ப்ரயாக ஸித்தேச்வரரிடம் பக்தியுள்ள மக்களின் உள்ளங்களில் இந்த அஷ்டக ஸ்லோகம் நித்தியம் சந்தோஷத்தை வளர்க்கட்டும்! சுபம்!

    தினமும் அதிகாலையில் நீராடிய பின், அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று பால் அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வந்தால், நம் வாழ்க்கையில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கும்.
    ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரிய நமஸ்காரம் செய்யும் நாட்களிலும், குறிப்பாக கதிரவனுக்கு விழா எடுக்கும். பொங்கல் திருநாள் அன்றும் நாம் படித்து வழிபட வேண்டிய பாடல்..
    சுகத்தைக் கொடுக்கும் சூரியனே போற்றி!

    செல்வம் வழங்கும் செங்கதிரே போற்றி!

    உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!

    நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!

    குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!

    ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!

    நவக்கிரகங்களின் நாயகா போற்றி!

    ஞாலம் போற்றும் வாழ்வை வழங்க

    வாழும் வாழ்வில் வளங்கள் சேர

    உன்னைத் துதித்துப் போற்றுகின்றேன் நான்

    ஒளிமயமான வாழ்வை வழங்கு.
    வைகுண்ட ஏகாதசி நன்னாளிலும் பெருமாள் கோவில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.
    உலக மக்களை எல்லாம் காத்து ரட்சிக்கும் கடவுளான திருமால், ஆதிசேஷனின் படுக்கையில் திருமகளோடு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார். திருப்பதி போன்ற கோவில்களில் நின்ற கோலத்திலும், திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் சயன கோலத்திலும் காட்சி தந்து அருள்பாலிக்கும் அய்யனை போற்றி பாடுவதன் பயனாக அவர் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒரு சேர பெற்று வாழ்வில் எல்லா வளங்களோடு சிறப்பாக வாழலாம்.

    1. ஓம் ஹரி ஹரி போற்றி
    2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
    3. ஓம் நர ஹரி போற்றி
    4. ஓம் முர ஹரி போற்றி
    5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
    6. ஓம் அம்புஜாஷா போற்றி
    7. ஓம் அச்சுதா போற்றி
    8. ஓம் உச்சிதா போற்றி
    9. ஓம் பஞ்சாயுதா போற்றி
    10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
    11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
    12. ஓம் லீலா விநோதா போற்றி
    13. ஓம் கமல பாதா போற்றி
    14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
    15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
    16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
    17. ஓம் பரமானந்தா போற்றி
    18. ஓம் முகுந்தா போற்றி
    19. ஓம் வைகுந்தா போற்றி
    20. ஓம் கோவிந்தா போற்றி
    21. ஓம் பச்சை வண்ணா போற்றி
    22. ஓம் கார்வண்ணா போற்றி
    23. ஓம் பன்னகசயனா போற்றி
    24. ஓம் கமலக்கண்ணா போற்றி
    25. ஓம் ஜனார்த்தனா போற்றி
    26. ஓம் கருடவாகனா போற்றி
    27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
    28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
    29. ஓம் சேஷசயனா போற்றி
    30. ஓம் நாராயணா போற்றி
    31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
    32. ஓம் வாமனா போற்றி
    33. ஓம் நந்த நந்தனா போற்றி
    34. ஓம் மதுசூதனா போற்றி
    35. ஓம் பரிபூரணா போற்றி
    36. ஓம் சர்வ காரணா போற்றி
    37. ஓம் வெங்கட ரமணா போற்றி
    38. ஓம் சங்கட ஹரனா போற்றி
    39. ஓம் ஸ்ரீதரா போற்றி
    40. ஓம் துளசிதரா போற்றி
    41. ஓம் தாமோதரா போற்றி
    42. ஓம் பீதாம்பரா போற்றி
    43. ஓம் பலபத்ரா போற்றி
    44. ஓம் பரமதயா பரா போற்றி
    45. ஓம் சீதா மனோகரா போற்றி
    46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
    47. ஓம் பரமேஸ்வரா போற்றி
    48. ஓம் சங்கு சக்கரா போற்றி
    49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
    50. ஓம் கருணாகரா போற்றி
    51. ஓம் ராதா மனோகரா போற்றி
    52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
    53. ஓம் ஹரிரங்கா போற்றி
    54. ஓம் பாண்டுரங்கா போற்றி
    55. ஓம் லோகநாயகா போற்றி
    56. ஓம் பத்மநாபா போற்றி
    57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
    58. ஓம் புண்ய புருஷா போற்றி
    59. ஓம் புருஷாத்தமா போற்றி
    60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி
    61. ஓம் ஹரிராமா போற்றி
    62. ஓம் பலராமா போற்றி
    63. ஓம் பரந்தாமா போற்றி
    64. ஓம் நரஸிம்ஹா போற்றி
    65. ஓம் திரிவிக்ரமா போற்றி
    66. ஓம் பரசுராமா போற்றி
    67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
    68. ஓம் பக்தவத்சலா போற்றி
    69. ஓம் பரமதயாளா போற்றி
    70. ஓம் தேவானுகூலா போற்றி
    71. ஓம் ஆதிமூலா போற்றி
    72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
    73. ஓம் வேணுகோபாலா போற்றி
    74. ஓம் மாதவா போற்றி
    75. ஓம் யாதவா போற்றி
    76. ஓம் ராகவா போற்றி
    77. ஓம் கேசவா போற்றி
    78. ஓம் வாசுதேவா போற்றி
    79. ஓம் தேவதேவா போற்றி
    80. ஓம் ஆதிதேவா போற்றி
    81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
    82. ஓம் மகானுபாவா போற்றி
    83. ஓம் வசுதேவ தனயா போற்றி
    84. ஓம் தசரத தனயா போற்றி
    85. ஓம் மாயாவிலாசா போற்றி
    86. ஓம் வைகுண்டவாசா போற்றி
    87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
    88. ஓம் வெங்கடேசா போற்றி
    89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
    90. ஓம் சித்தி விலாசா போற்றி
    91. ஓம் கஜபதி போற்றி
    92. ஓம் ரகுபதி போற்றி
    93. ஓம் சீதாபதி போற்றி
    94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
    95. ஓம் ஆயாமாயா போற்றி
    96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
    97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
    98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
    99. ஓம் நானாஉபாயா போற்றி
    100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
    101. ஓம் சதுர்புஜா போற்றி
    102. ஓம் கருடத்துவஜா போற்றி
    103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
    104. ஓம் புண்டரீகவரதா போற்றி
    105. ஓம் விஷ்ணு போற்றி
    106. ஓம் பகவானே போற்றி
    107. ஓம் பரமதயாளா போற்றி
    108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
    சென்னைக்கு அருகில் உள்ள ரத்தினமங்கலம் என்னும் சிறு கிராமத்தில் வீற்றிருக்கும் அரைகாசு அம்மனை நினைத்து வழிபடுவதன் மூலம், வாழ்வில் உள்ள கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
    ஓம் அரைக்காசு அம்மனே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் அருள்தரும் நாயகியே போற்றி
    ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
    ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
    ஓம் அன்பிற்கினியவளே போற்றி
    ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
    ஓம் அலங்கார நாயகியே போற்ற
    ஓம் அற்புத தாயே போற்றி
    ஓம் அற்பு அழகே போற்றி

    ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
    ஓம் அறிவுடை தேவியே போற்றி
    ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
    ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
    ஓம் வெல்லப்பிரியையே போற்றி
    ஓம் சக்தி சொரூபமே போற்றி
    ஓம் சாந்த சொரூபமே போற்றி
    ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
    ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
    ஓம் சத்திய சொரூபமே போற்றி

    ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
    ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
    ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
    ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
    ஓம் சர்வ஧ஸ்வரியே போற்றி
    ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
    ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
    ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
    ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
    ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி

    ஓம் கேட்டதனை நீக்கிடுவாய் போற்றி
    ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
    ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
    ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
    ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
    ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
    ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
    ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
    ஓம் ஓம்கார சக்தியே போற்றி
    ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி

    ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
    ஓம் தேவி பிரியையே போற்றி
    ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
    ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
    ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
    ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
    ஓம் நவமணி அரசியே போற்றி
    ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
    ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
    ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி

    ஓம் உயர்வை தருவாய் போற்றி
    ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
    ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
    ஓம் உயர்மணியே போற்றி
    ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
    ஓம் உடன் அருள்வாய் போற்றி
    ஓம் சுகம் தருவாய் போற்றி
    ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
    ஓம் வரம்பல தருபவளே போற்றி
    ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி

    ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
    ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
    ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
    ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
    ஓம் யெளவன நாயகியே போற்றி
    ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
    ஓம் ஞான விளக்கே போற்றி
    ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
    ஓம் துயர் துடைப்பாய் போற்றி
    ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி

    ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
    ஓம் இன்பத்தின் இடமே போற்றி
    ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
    ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
    ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
    ஓம் மாங்கல் தாரிணியே போற்றி
    ஓம் கிருபை தருவாய் போற்றி
    ஓம் யோக நாயகியே போற்றி
    ஓம் மோகன நாயகியே போற்றி
    ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி

    ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
    ஓம் மாணிக்க நாயகியே போற்றி
    ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
    ஓம் மந்திர பொருளே போற்றி
    ஓம் மரகத வடிவே போற்றி
    ஓம் மாட்சி பொருளே போற்றி
    ஓம் பொற்புடை நாயகியே போற்றி
    ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
    ஓம் புவன நாயகியே போற்றி
    ஓம் நலந்தரும் நாயகியே போற்றி

    ஓம் சித்திரக் கொடியே போற்றி
    ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
    ஓம் வியப்புடை நாயகியே போற்றி
    ஓம் பக்குவம் தருவாய் போற்றி
    ஓம் பண்பு தருவாய் போற்றி
    ஓம் காக்கும் பொருளே போற்றி
    ஓம் கருணை நிலவே போற்றி
    ஓம் பொற்புடை சரணம் போற்றி
    ஓம் பிறை வடிவே போற்றி
    ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
    ஓம் தயாபரியே போற்றி
    ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
    ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
    ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
    ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
    ஓம் தீபச் சுடரே போற்றி
    ஓம் தீப நாயகியே போற்றி
    ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!

    இந்த வழிபாடு ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் பலனை அடையலாம்.
    அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன்.
    அன்னை அகிலாண்டேஸ்வரி அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும், பின்னரும் கன்னி என மறைபேசும் ஆனந்த வடி மயிலாக விளங்குகின்றாள். கருணை நோக்குடன் கருவறையில் காட்சியளிக்கும் அன்னையின் எதிரில், சங்கராச்சாரிய சுவாமிகள் வைத்த விநாயகர், உள்ளார். அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.

    கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.

    “அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
    விருது கட்டிய பொன் அன்னமே!
    அண்டகோடி புகழ்காவை வாழும்
    அகிலாண்டநாயகி என் அம்மையே”

    என்று அன்னையின் அருள் நிலையைப போற்றுகின்றார். அன்னை அகிலாண்ட நாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்ட மற்றொரு கவிஞன்.

    “அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
    அணிஉருப் பாதியில் வைத்தான்
    தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
    சடைமுடி வைத்தனன் அதனால்
    பிளவியல்மதியம் சூடிய பெருமான்
    பித்தன் என்றொருபெயர் பெற்றான்
    களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்
    கா அகிலாண்ட நாயகியே”

    என்று பாடிப் போற்றுகின்றான். அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன். அன்னையைக் கண்டு வழிபட்ட அக் கவிஞன், அம்மையே! அகிலாண்ட நாயகியே என் போன்ற அடியார்கள் புரியும் எண்ணிறந்த பிழைகளைப் பொருத்தருள் புரியும் அன்னையாகிய உன்னை ஒரு பாகத்தில் வைத்த பரமன் மூன்று பிழைகட்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் சடைமுடியின் மேல் ஏற்றிவைத்தானே! இதனால் அன்றே பித்தன் என்ற ஒரு பெயரையும் பெற்றான் என்று பாடுவதன் வாயிலாக, அகிலாண்ட நாயகியின் அருட்சிறப்பினைப் போற்றுகின்றான்.
    திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவரை வழிபட்ட பின் திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
    விரித்த பல்கதிர்கொள் சூலம்
    வெடிபடு தமருகம்கை
    தரித்ததோர் கோலகால பைரவனாகி
    வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
    ஒண்திருமேனி வாய் விள்ளச்
    சிரித்தருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வனாரே

    திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
    யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.
    தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
    கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

    யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.

    பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:

    ரொம்ப சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் தீரும். ரொம்ப கஷ்டம் என்றால் ஒரே நாளில் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம்
    ×