என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. பஞ்சமி திதியான இன்று இந்த 108 போற்றியை சொல்லி வராஹியை வழிபாடு செய்யலாம்.
    அம்மா பஞ்சமியாகிய வாராகி, பைரவி பரதேவதே என் நெஞ்சுக்குள் இருந்து மிகக் கனிவோடு என்னைய் காப்பாயாக! அச்சம் கொடுப்பனவற்றிற்கு இடமில்லாமல் பெருவிருந்தாக நல்ல வழியிலே தமிழ்முதம் தருவாயாக!!!

    ஓம் வாராஹி போற்றி

    ஓம் சக்தியே போற்றி

    ஓம் சத்தியமே போற்றி

    ஓம் ஸாகாமே போற்றி

    ஓம் புத்தியே போற்றி

    ஓம் வித்துருவமே போற்றி

    ஓம் சித்தாந்தி போற்றி

    ஓம் நாதாந்தி போற்றி

    ஓம் வேதாந்தி போற்றி

    ஓம் சின்மயா போற்றி

    ஓம் ஜெகஜோதி போற்றி

    ஓம் ஜெகஜனனி போற்றி

    ஓம் புஷ்பமே போற்றி

    ஓம் மதிவதனீ போற்றி

    ஓம் மனோநாசினி போற்றி

    ஓம் கலை ஞானமே போற்றி

    ஓம் சமத்துவமே போற்றி

    ஓம் சம்பத்கரிணி போற்றி

    ஓம் பனை நீக்கியே போற்றி

    ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி

    ஓம் தேஜஸ் வினி போற்றி

    ஓம் காம நாசீனி போற்றி

    ஓம் யகா தேவி போற்றி

    ஓம் மோட்ச தேவி போற்றி

    ஓம் நானழிப்பாய் போற்றி

    ஓம் ஞானவாரினி போற்றி

    ஓம் தேனானாய் போற்றி

    ஓம் திகட்டா திருப்பாய் போற்றி

    ஓம் தேவ கானமே போற்றி

    ஓம் கோலாகலமே போற்றி

    ஓம் குதிரை வாகனீ போற்றி

    ஓம் பன்றி முகத்தாய் போற்றி

    ஓம் ஆதி வாராஹி போற்றி

    ஓம் அனாத இரட்சகி போற்றி

    ஓம் ஆதாரமாவாய் போற்றி

    ஓம் அகாரழித்தாய் போற்றி

    ஓம் தேவிக்குதவினாய் போற்றி

    ஓம் தேவர்க்கும் தேவி போற்றி

    ஓம் ஜுவாலாமுகி போற்றி

    ஓம் மாணிக்கவீணோ போற்றி

    ஓம் மரகதமணியே போற்றி

    ஓம் மாதங்கி போற்றி

    ஓம் சியாமளி போற்றி

    ஓம் வாக்வாராஹி போற்றி

    ஓம் ஞானக்கேணீ போற்றி

    ஓம் புஷ்ப பாணீ போற்றி

    ஓம் பஞ்சமியே போற்றி

    ஓம் தண்டினியே போற்றி

    ஓம் சிவாயளி போற்றி

    ஓம் சிவந்தரூபி போற்றி

    ஓம் மதனோற்சவமே போற்றி

    ஓம் ஆத்ம வித்யே போற்றி

    ஓம் சமயேஸ்ரபி போற்றி

    ஓம் சங்கீதவாணி போற்றி

    ஓம் குவளை நிறமே போற்றி

    ஓம் உலக்கை தரித்தாய் போற்றி

    ஓம் சர்வ ஜனனீ போற்றி

    ஓம் மிளாட்பு போற்றி

    ஓம் காமாட்சி போற்றி

    ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி

    ஓம் முக்கால ஞானி போற்றி

    ஓம் சர்வ குணாதி போற்றி

    ஓம் ஆத்ம வயமே போற்றி

    ஓம் ஆனந்தானந்தமே போற்றி

    ஓம் நேயமே போற்றி

    ஓம் வேத ஞானமே போற்றி

    ஓம் அகந்தையழிப்பாய் போற்றி

    ஓம் அறிவளிப்பாய் போற்றி

    ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி

    ஓம் கலையுள்ளமே போற்றி

    ஓம் ஆன்ம ஞானமே போற்றி

    ஓம் சாட்சியே போற்றி

    ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி

    ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி

    ஓம் மரணமழிப்பாய் போற்றி

    ஓம் ஹிருதய வாகீனி போற்றி

    ஓம் ஹிமாசல தேவி போற்றி

    ஓம் நாத நாமக்கிரியே போற்றி

    ஓம் உருகும் கோடியே போற்றி

    ஓம் உலுக்கும் மோகினி போற்றி

    ஓம் உயிரின் உயிரே போற்றி

    ஓம் உறவினூற்றே போற்றி

    ஓம் உலகமானாய் போற்றி

    ஓம் வித்யாதேவி போற்றி

    ஓம் சித்த வாகினீ போற்றி

    ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி

    ஓம் இலயமாவாய் போற்றி

    ஓம் கல்யாணி போற்றி

    ஓம் பரஞ்சோதி போற்றி

    ஓம் பரப்பிரஹ்மி போற்றி

    ஓம் பிரகாச ஜோதி போற்றி

    ஓம் யுவன காந்தீ போற்றி

    ஓம் மௌன தவமே போற்றி

    ஓம் மேதினி நடத்துவாய் போற்றி

    ஓம் நவரத்ன மாளிகா போற்றி

    ஓம் துக்க நாசினீ போற்றி

    ஓம் குண்டலினீ போற்றி

    ஓம் குவலய மேனி போற்றி

    ஓம் வீணைஒலி யே போற்றி

    ஓம் வெற்றி முகமே போற்றி

    ஓம் சூதினையழிப்பாய் போற்றி

    ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி

    ஓம் அண்ட பேரண்டமே போற்றி

    ஓம் சகல மறிவாய் போற்றி

    ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி

    ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி

    ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி

    ஓம் வாராஹி பதமே போற்றி!!!
    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் திருக்கருகாவூர் கோவிலுக்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.
    1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

    2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி

    3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி

     4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி

    6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி

    7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி

    8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி

    9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி

    10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி

    11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி

    12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி

    13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி

    14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி

    15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி

    16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி

    17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி

    18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி

    19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி

    20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி

    21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி

    22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி

    23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி

    24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி

    25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி

    26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி

    27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி

    28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி

    29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி

    30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி

    31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி

    32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி

    33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி

    34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி

    35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி

    36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி

    37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி

    38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி

    39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி

    40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி

    41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி

    42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி

    43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி

    44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி

    45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி

    46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி

    47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி

    48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி

    49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி

    50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி

    51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி

    52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி

    53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி

    54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி

    55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி

    56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி

    57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி

    58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி

    59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி

    60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி

    61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி

    62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி

    63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி

    64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி

    65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி

    66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி

    67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி

    68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி

    69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி

    70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி

    71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி

    72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி

    73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி

    74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி

    75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி

    76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி

    77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி

    78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி

    79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி

    80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி

    81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி

    82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி

    83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி

    84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி

    85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி

    86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி

    87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி

    88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி

    89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி

    90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி

    91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி

    92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி

    93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி

    94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி

    95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி

    96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி

    97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி

    98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி

    99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி

    100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி

    101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி

    102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி

    103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி

    104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி

    105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி

    106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி

    107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி

    108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
    புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் 1008 அல்லது 108 முறை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்.
    நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை அடைவார். அதே சமயம் புதன் பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்

    புதன் காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தந்நோ புத ப்ரசோதயாத்.
    தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், ஆங்கிலப் புத்தாண்டாக இருந்தாலும் முதல் நாள் வரும் கிழமைக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம், ஆண்டு முழுவதும் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், ஆங்கிலப் புத்தாண்டாக இருந்தாலும் முதல் நாள் வரும் கிழமைக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம், ஆண்டு முழுவதும் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்தப் புத்தாண்டு சனிக்கிழமையன்று பிறப்பதால் விநாயகப்பெருமான், அனுமன், சனீஸ்வர பகவானை அன்றைய தினத்தில் வழிபடுவது நல்லது.

    வழிபாட்டுப் பாடல்

    இனிய பலன்கள் எவர்க்கும் கிடைக்கச்

    சனியெனும் கிழமையில் ஆண்டு பிறந்தது

    மணியென வாழ்க்கை மலர்ந்திட வேண்டி

    புனிதனாய் மாறப் போற்றுகின் றேன்நான்

    ஆனை முகனும் அனுமனும் சனியும்

    தேனாய் அருளத் தெரிசிக் கின்றேன்

    வாழ்வை இனிநீ வசந்தம் ஆக்கு

    வருங்கா லத்தின் நலனைக் கூட்டு

    சூழும் பகையைத் தூர விரட்டு

    சுற்றம் மகிழ வாழ்வைக் காட்டு

    மேற்கண்ட பாடலை இல்லத்து பூஜையறையில் படித்து வழிபட்டால் நல்ல பலன்களை ஆண்டு முழுவதும் பெற இயலும்.
    பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு.

    வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி
    தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி
    குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி
    உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி
    சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி
    மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி
    பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி
    தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி

    நலன்கள் அனைத்தையும் அருள்பவர் பெருமாள். பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் படிப்பது மிகவும் விசேஷமானதாகும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு. இதனால் உங்களுக்கு மக்கள் வசீகரம் உண்டாகும். நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனத்துயரங்கள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும்.


    அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
    அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்காப்பான்

    - இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

    இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

    முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.

    அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.

    அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை) கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

     ராமபக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.

     ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
    செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
    கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது.

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
    க்லெளம் ஸெளம் நமஹ

    எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.
    தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

    தினமும் கந்தசஷ்டி கவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும் தள்ளிப் போன பதவி உயர்வும் கிடைக்கப்பெறலாம்.
    ஐயப்பனுக்கு உகந்த இந்த 108 சரணத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் உங்கள் துயரங்கள் பறந்தோடும். வேண்டுதல்கள் நிறைவேறும்.
    1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
    3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
    4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
    5.  ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா


    6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
    7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
    8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
    9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
    10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா

    11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
    12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
    13. ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
    14. ஓம் அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
    15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா


    16. ஓம் அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
    17. ஓம் அபாய தாயகனே சரணம் ஐயப்பா
    18. ஓம் அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    19. ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
    20. ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா

    21. ஓம் அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
    22. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
    23. ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
    24. ஓம் ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
    25. ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா

    26. ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
    27. ஓம் இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
    28. ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    29.  ஓம் ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
    30. ஓம் இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா

    31. ஓம் ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    32. ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
    33. ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
    34. ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
    35. ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    36. ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
    37. ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
    38. ஓம் என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
    39. ஓம் என் குரு நாதனே சரணம் ஐயப்பா
    40. ஓம் எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    41. ஓம் எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
    42. ஓம் எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
    43. ஓம் ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
    44. ஓம் ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
    45. ஓம் ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா

    46. ஓம் ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
    47. ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    48. ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
    49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
    50. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

    51. ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
    52. ஓம் கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
    53. ஓம் கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
    54. ஓம் கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
    55. ஓம் சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா


    56. ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
    57. ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
    58. ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
    59. ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
    60. ஓம் ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா

    61. ஓம் சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
    62. ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    63. ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
    64. ஓம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
    65. ஓம் தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா


    66. ஓம் நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
    67. ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
    68. ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
    69. ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
    70. ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா

    71. ஓம் பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
    72. ஓம் பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
    73. ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
    74. ஓம் பம்பா வாசனே சரணம் ஐயப்பா
    75. ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா

    76. ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
    77. ஓம் மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
    78. ஓம் வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
    79. ஓம் கானக வாசனே சரணம் ஐயப்பா
    80. ஓம் குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா

    81. ஓம் குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
    82. ஓம் கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
    83. ஓம் ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
    84. ஓம் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
    85. ஓம் சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா


    86. ஓம் துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
    87. ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
    88. ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    89. ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா

    100. ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா
    101. ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
    102. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
    103. ஓம் சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
    104. ஓம் சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
    105. ஓம் சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா


    106. ஓம் சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
    107. ஓம் சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    108. ஓம் பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா
    திருமந்திர பாடல் ஒவ்வொன்றும், சிவனின் அன்பையும், அவருடைய இருப்பையும், அவரால் கிடைக்கும் பேரின்பத்தையும் பற்றி எடுத்துரைக்கின்றன. அந்த சிறப்புக்குரிய திருமந்திரப் பாடல்களை பார்க்கலாம்.
    பாடல்:-

    உரையற்று உணர்வற்று உயிர்பரமற்று
    திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
    கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
    சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

    விளக்கம்:-

    சிவபெருமான் நம்மை ஆட்கொண்ட நிலையில், பேச்சு இன்றி போனது, உணர்வு அற்று போனது, உயிர் சிவனோடு வேறுபாடு அற்று ஒன்றிப்போனது. கடலும், அலையும் வேறில்லை என்பது போன்ற நிலை உண்டானது. எல்லையற்ற நுண்ணோசை, நினைவோசை, குரல்வளை ஓசை, செவியோசை ஆகிய நான்கு சத்தங்களை கடந்து விளங்கும் சிவனருளில் சேர்ந்து அதனை நுகரப் பெற்றுப் பேசாதநிலை எய்தினோம்.

    பாடல்:-

    பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்
    நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள்
    உச்சிக்கும் கீழது உண்ணாக்கு மேலது
    வைச்ச பதமிது வாய்திறவாதே..

    விளக்கம்:-

    பச்சிம திக்கு எனப்படும் மேற்கு திசை நோக்கி தன்னுடைய மாணவனை அமரச் செய்யும் குருவானவர், அந்த திசையில் இருந்தபடியே நாள்தோறும் சிவனை நினைத்து வரும்படி உத்தரவிடுவதோடு, ஈசனை வழிபடுவதற்கான மந்திரத்தையும் உபதேசம் செய்துவைப்பார். அந்த சிவன் இருக்கும் இடமானது, நம்முடைய வாய் உச்சரிக்கும் ஈசனின் திருநாமத்தில்தான். சிவனை விட்ட நீங்காத நிலை பெற்ற பின்பு, ஒருவருக்கு மீண்டும் பிறப்பு உண்டாகாது.

    பாடல்:-

    அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
    உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
    மகார உகாரம் இரண்டும் அறியில்
    லகார உகாரம் இலிங்கமது ஆமே.

    பொருள்:-

    உலகத்தையும், அதில் வாழும் உயிர்கள் அனைத்தையும் தாங்குபவராக சிவபெருமான் இருக்கிறார். அவர் அகரமாய் நிற்கிறார். அகரமாக இருக்கும் சிவபெருமானின் திருவருட் சக்தியானது, உகாரமாய் நம்மிடம் உயிர்ப்பு வடிவில் நிற்கும். இப்படி சிவம், சக்தி இருவரும் நம்மிடம் அகரமாகவும், உகரமாகவும் இருப்பதை அறிந்துகொண்டோம் என்றால், அந்த இரண்டும் இணைந்த குறியீடே சிவலிங்கம் என்பதை உணர்ந்து தெளிய முடியும்.
    தேய்பிறை அஷ்டமி திதியான இன்று மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் வீட்டில் திருவிளக்கேற்றி இந்த போற்றியை சொல்லி பைரவரை வழிபாடு செய்யலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம்.

    ஓம் பைரவனே போற்றி
    ஓம் பயநாசகனே போற்றி
    ஓம் அஷ்டரூபனே போற்றி
    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    ஓம் அயன் குருவே போற்றி
    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    ஓம் அற்புதனே போற்றி
    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
    ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    ஓம் ஆலயக் காவலனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
    ஓம் உக்ரபைரவனே போற்றி
    ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
    ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
    ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    ஓம் ஊழத்தருள்வோனே போற்றி
    ஓம் எல்லைத்தேவனே போற்றி
    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    ஓம் கபாலதாரியே போற்றி
    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    ஓம் கர்வபங்கனே போற்றி
    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
    ஓம் கருமேக நிறத்தனே போற்றி
    ஓம் கட்வாங்கதாரியே போற்றி
    ஓம் கனவைக்குலைப்போனே போற்றி
    ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    ஓம் கால பைரவனே போற்றி
    ஓம் காபாலிகர்தேவனே போற்றி
    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
    ஓம் காளாஷ்டமி நாதனே போற்றி
    ஓம் காசிநாதனே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி
    ஓம் குரோத பைரவனே போற்றி
    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
    ஓம் சண்டபைரவனே போற்றி
    ஓம் சட்டைநாதனே போற்றி
    ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
    ஓம் சிவத்தோன்றலே போற்றி
    ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
    ஓம் சிக்ஷகனே போற்றி
    ஓம் சீகாழித்தேவனே போற்றி
    ஓம் சுடர்சடையனே போற்றி
    ஓம் சுதந்திர பைரவனே போற்றி
    ஓம் சிவ அம்சனே போற்றி
    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    ஓம் சூலதாரியே போற்றி
    ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
    ஓம் செம்மேனியனே போற்றி
    ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    ஓம் தனிச்சந்நிதியுளானே போற்றி
    ஓம் தலங்களின் காவலனே போற்றி
    ஓம் தீதழிப்பவனே போற்றி
    ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி
    ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    ஓம் நவரஸரூபனே போற்றி
    ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    ஓம் நாய் வாகனனே போற்றி
    ஓம் நாடியருள்வோனே போற்றி
    ஓம் நிமலனே போற்றி
    ஓம் நிர்வாணனே போற்றி
    ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    ஓம் நின்றருள்வோனே போற்றி
    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    ஓம் பகையழிப்பவனே போற்றி
    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
    ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
    ஓம் பாபசக்ஷ்யனே போற்றி
    ஓம் பாசக்குலைப்போனே போற்றி
    ஓம் பால பைரவனே போற்றி
    ஓம் பாம்பணியனே போற்றி
    ஓம் பிரளயகாலனே போற்றி
    ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
    ஓம் பூஷண பைரவனே போற்றி
    ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பைராகியர் நாதனே போற்றி
    ஓம் மல நாசகனே போற்றி
    ஓம் மஹா பைரவனே போற்றி
    ஓம் மணி ஞானனே போற்றி
    ஓம் மகர குண்டலனே போற்றி
    ஓம் மகோதரனே போற்றி
    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    ஓம் முக்கண்ணனே போற்றி
    ஓம் முக்தியருள்வோனே போற்றி
    ஓம் முனீஸ்வரனே போற்றி
    ஓம் மூலமூர்த்தியே போற்றி
    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    ஓம் ருத்ரனே போற்றி
    ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
    ஓம் வடுக பைரவனே போற்றி
    ஓம் வடுகூர் நாதனே போற்றி
    ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
    ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
    ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
    ஓம் விபீஷண பைரவனே போற்றி
    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி
    சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜெபித்து வாருங்கள். இதோ அந்த மந்திரம்.

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

    சச்சரவின்றி சாகா நெறியில்

    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!  

    சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் இந்த மந்திரத்தை ஜெபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.

    மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய வாழ்க்கை துணை கிடைக்கும்.
    அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
    அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
    தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
    தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

    பொருள் : ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம் என்பதே இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

    இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வரலாம் எனினும் ஆண்டாளுக்குரிய மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள். திருமணமான தம்பதிகளின் மனஸ்தாபங்கள், கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நோன்யம் பெருகும். தங்களின் பிள்ளைகள் சார்பாக அவர்களின் பெற்றோர்களும் ஆண்டாளை வணங்கி இம்மந்திரத்தை துதிக்கலாம்.
    ×