என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கல்வியை தாயான சரஸ்வதியை உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் குறையாத கல்வி செல்வம் கிடைக்கும்.
    சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி தாய். 

    கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம். இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிகுரிய  பாடல்கள் பாடியும் வணங்கலாம் .

    புதன் கிழமை காலையில்  கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதி 12 நாமங்களை சொன்னால், கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும்.

    மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம்.

    சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல், வடை, பாயாசம் செய்து வழிப்படலாம். இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு, பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம்.

    படிக்கிற குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அம்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். சகல நலங்கள் பெற சரஸ்வதியை புகழ் பாடி போற்றுவோம்.

    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
    ஓம் அன்பின் வடிவே போற்றி
    ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
    ஓம் அறிவுக்கடலே போற்றி
    ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
    ஓம் அன்ன வாகினியே போற்றி
    ஓம் அகில லோக குருவே போற்றி
    ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
    ஓம் ஆசான் ஆனவளே போற்றி
    ஓம் ஆனந்த வடிவே போற்றி
    ஓம் ஆதாரசக்தியே போற்றி
    ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
    ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
    ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
    ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
    ஓம் உண்மைப் பொருளே போற்றி
    ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
    ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
    ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
    ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
    ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
    ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
    ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
    ஓம் கலை ஞானச் செல்வியே போற்றி
    ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
    ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
    ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
    ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
    ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
    ஓம் குணக் குன்றானவளே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
    ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
    ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
    ஓம் சாந்த சொரூபினியே போற்றி
    ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
    ஓம் சாரதாம்பிகையே போற்றி
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
    ஓம் சித்தியளிப்பவளே போற்றி
    ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
    ஓம் சுத்தஞான வடிவே போற்றி
    ஓம் ஞானக்கடலானாய் போற்றி
    ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
    ஓம் ஞானேஸ்வரியே போற்றி
    ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
    ஓம் ஞான ஆசிரியையே போற்றி
    ஓம் ஞானத்தின் காவலே போற்றி
    ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
    ஓம் தகைமை தருபவளே போற்றி
    ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
    ஓம் தாயான தயாபரியே போற்றி
    ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
    ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
    ஓம் நவமி தேவதையே போற்றி
    ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
    ஓம் நன்னெறி தருபவளே போற்றி
    ஓம் நலம் அளிப்பவளே போற்றி
    ஓம் நாவிற்கு அரசியே போற்றி
    ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
    ஓம் நா நயம் அருள்வாய்போற்றி
    ஓம் நான்மறை நாயகியே போற்றி
    ஓம் நாவில் உறைபவளே போற்றி
    ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
    ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
    ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
    ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
    ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
    ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
    ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
    ஓம் பண்ணின் இசையே போற்றி
    ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
    ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
    ஓம் பிரணவ சொரூபமே போற்றி
    ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
    ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
    ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
    ஓம் பூரண வடிவானவளே போற்றி
    ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
    ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
    ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
    ஓம் மங்கல வடிவானவளே போற்றி
    ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
    ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
    ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
    ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
    ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
    ஓம் மூல மந்திர வடிவினளே போற்றி
    ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
    ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
    ஓம் மேதையாக்குபவளே போற்றி
    ஓம் மேன்மை தருபவளே போற்றி
    ஓம் யாகத்தின் பலனே போற்றி
    ஓம் யோகத்தின் பயனே போற்றி
    ஓம் வழித்துணை வருவாய் போற்றி
    ஓம் வரம் அருள்பவளே போற்றி
    ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
    ஓம் வாக்கின் நாயகியே போற்றி
    ஓம் வித்தக வடிவினளே போற்றி
    ஓம் வித்யா லட்சுமியே போற்றி
    ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
    ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
    ஓம் வெண்தாமரையினாளே போற்றி
    ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
    ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
    ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி 
    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி
    மநோக்ருஹ மந்மத மத
    ஜிஹ்வாபிஸாசீருத்
    ஸாதயோத் ஸாதய
    ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி
    பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி
    சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய
    ஹூம் பட் ஸ்வாஹா
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    1. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே  போற்றி
    2. ஓம் ஸ்ரீஞான அகிலாண்ட நாயகியே  போற்றி
    3. ஓம் ஸ்ரீஞான அருமையின் வரம்பே  போற்றி
    4. ஓம் ஸ்ரீஞான அறம்வளர்க்கும் அம்மையே  போற்றி
    5. ஓம் ஸ்ரீஞான அரசிளங் குமரியே  போற்றி
    6. ஓம் ஸ்ரீஞான அப்பர்ணி மருந்தே  போற்றி
    7. ஓம் ஸ்ரீஞான அமுத நாயகியே போற்றி
    8. ஓம் ஸ்ரீஞான அருந்தவ நாயகியே போற்றி
    9. ஓம் ஸ்ரீஞான அருள்நிறை அம்மையே போற்றி
    10. ஓம்ஸ்ரீஞான ஆலவாய்க்கரசியே  போற்றி - 10
    11. ஓம் ஸ்ரீஞான ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
    12. ஓம் ஸ்ரீஞான ஆதியின் பாதியே போற்றி
    13. ஓம் ஸ்ரீஞான ஆலால சுந்தரியே போற்றி
    14. ஓம் ஸ்ரீஞான ஆனந்த வல்லியே போற்றி
    15. ஓம் ஸ்ரீஞான இளவஞ்சிக் கொடியே போற்றி
    16. ஓம் ஸ்ரீஞான இமயத் தரசியே போற்றி
    17. ஓம் ஸ்ரீஞான இடபத்தோன் துணையே போற்றி
    18. ஓம் ஸ்ரீஞான ஈசுவரியே போற்றி
    19. ஓம் ஸ்ரீஞான உயிர் ஒவியமே போற்றி
    20. ஓம் ஸ்ரீஞான ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி -20
    21. ஓம் ஸ்ரீஞான எண்திசையும் வென்றாய் போற்றி
    22. ஓம் ஸ்ரீஞான ஏகன் துணையே போற்றி
    23. ஓம் ஸ்ரீஞான ஐங்கரன் அன்னையே போற்றி
    24. ஓம் ஸ்ரீஞான ஐயம் தீர்ப்பாய் போற்றி
    25. ஓம் ஸ்ரீஞான ஒப்பில்லா அமுதே போற்றி
    26. ஓம் ஸ்ரீஞான ஓங்காரசுந்தரியே போற்றி
    27. ஓம் ஸ்ரீஞான கற்றோருக்கு இனியோய் போற்றி
    28. ஓம் ஸ்ரீஞான கல்லார்க்கு எளியோய் போற்றி
    29. ஓம் ஸ்ரீஞான கடம்பவன சுந்தரியே போற்றி
    30. ஓம் ஸ்ரீஞான கல்யாண சுந்தரியே போற்றி -30
    31. ஓம் ஸ்ரீஞான கனகமணிக்குன்றே போற்றி
    32. ஓம் ஸ்ரீஞான கற்பின் அரசியே போற்றி
    33. ஓம் ஸ்ரீஞான கருணை யூற்றே போற்றி
    34. ஓம் ஸ்ரீஞான கல்விக்கு வித்தே போற்றி
    35. ஓம் ஸ்ரீஞான கனகாம்பிகையே போற்றி
    36. ஓம் ஸ்ரீஞான கதிரொளிச்சுடரே போற்றி
    37. ஓம் ஸ்ரீஞான கற்களை கடந்த கற்பகமே போற்றி
    38. ஓம் ஸ்ரீஞான காட்சிக்கிளியோய் போற்றி
    39. ஓம் ஸ்ரீஞான காலம் வென்ற கற்பகமே போற்றி
    40. ஓம் ஸ்ரீஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி -40
    41. ஓம் ஸ்ரீஞான முத்தாரம்மா அம்பிகையே போற்றி
    42. ஓம் ஸ்ரீஞான கிளியேந்திய கரத்தோய் போற்றி
    43. ஓம் ஸ்ரீஞான குலச்சிறை காத்தோய் போற்றி
    44. ஓம் ஸ்ரீஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    45. ஓம் ஸ்ரீஞான கூடற்கலாப மயிலே போற்றி
    46. ஓம் ஸ்ரீஞான கோலப் பசுங்கிளியே போற்றி
    47. ஓம் ஸ்ரீஞான சம்பந்தன ஞானத்தாயே போற்றி
    48. ஓம் ஸ்ரீஞான சக்திவடிவே போற்றி
    49. ஓம் ஸ்ரீஞான சங்கம் வளர்த்தாய் போற்றி
    50. ஓம் ஸ்ரீஞான சிவகாம சுந்தரியே போற்றி -50
    51. ஓம் ஸ்ரீஞான சித்தம் தெளிவிப்பாய் போற்றி
    52. ஓம் ஸ்ரீஞான சிவயோக நாயகியே போற்றி
    53. ஓம் ஸ்ரீஞான சிவானந்த வல்லியே போற்றி
    54. ஓம் ஸ்ரீஞான சிங்கார வல்லியே போற்றி
    55. ஓம் ஸ்ரீஞான செந்தமிழ் தாயே போற்றி
    56. ஓம் ஸ்ரீஞான செல்வத்துக் கரசியே போற்றி
    57. ஓம் ஸ்ரீஞான சேனைத் தலைவியே போற்றி
    58. ஓம் ஸ்ரீஞான சொக்கர் நாயகியே போற்றி
    59. ஓம் ஸ்ரீஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி
    60. ஓம் ஸ்ரீஞான ஞானாம்பிகையே போற்றி -60
    61. ஓம் ஸ்ரீஞான ஞானப்பூங்கோதையே போற்றி
    62. ஓம் ஸ்ரீஞான தமிழர் குலச்சுடரே போற்றி
    63. ஓம் ஸ்ரீஞான திருவுடையம்மையே போற்றி
    64. ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய் போற்றி
    65. ஓம் ஸ்ரீஞான திரிபுர சுந்தரியே போற்றி
    66. ஓம் ஸ்ரீஞான திருநிலை நாயகியே போற்றி
    67. ஓம் ஸ்ரீஞான தீந்ர்தமிழ்ச் சுவையே போற்றி
    68. ஓம் ஸ்ரீஞான தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    69. ஓம் ஸ்ரீஞான தென்னவன் செல்வியே போற்றி
    70. ஓம் ஸ்ரீஞான தேன்மொழியம்மையே போற்றி -70
    71. ஓம் ஸ்ரீஞான தையல் நாயகியே போற்றி
    72. ஓம் ஸ்ரீஞான நற்கனியின் சுவையே போற்றி
    73. ஓம் ஸ்ரீஞான நற்றவத்தின் கொழுந்தே போற்றி
    74. ஓம் ஸ்ரீஞான நல்ல நாயகியே போற்றி
    75. ஓம் ஸ்ரீஞான நீலாம்பிகையே போற்றி
    76. ஓம் ஸ்ரீஞான நீதிக்கரசியே போற்றி
    77. ஓம் ஸ்ரீஞான பக்தர்தம் திலகமே போற்றி
    78. ஓம் ஸ்ரீஞான பழமறையின் குருந்தே போற்றி
    79. ஓம் ஸ்ரீஞான பரமானந்த பெருக்கே போற்றி
    80. ஓம் ஸ்ரீஞான பண்மைதைந்த பெருக்கே போற்றி -80
    81. ஓம் ஸ்ரீஞான பவளவாய்கிளியே போற்றி
    82. ஓம் ஸ்ரீஞான பசுபதி நாயகியே போற்றி
    83. ஓம் ஸ்ரீஞான பாகம் பிரியா அம்மையே போற்றி
    84. ஓம் ஸ்ரீஞான ஞான பாண்டியா தேவியின் தேவி போற்றி
    85. ஓம் ஸ்ரீஞான பார்வதி அம்மையே போற்றி
    86. ஓம் ஸ்ரீஞான பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    87. ஓம் ஸ்ரீஞான பெரிய நாயகியே போற்றி
    88. ஓம் ஸ்ரீஞான பொன்மயிலம்மையே போற்றி
    89. ஓம் ஸ்ரீஞான பொற்கொடி அன்னையே போற்றி
    90. ஓம் ஸ்ரீஞான மங்கள நாயகியே போற்றி -90
    91. ஓம் ஸ்ரீஞான மழலைக்கிளியே போற்றி
    92. ஓம் ஸ்ரீஞான மனோன்மயித்தாயே போற்றி
    93. ஓம் ஸ்ரீஞான மண்சுமந்தோண் மாணிக்கமே போற்றி
    94. ஓம் ஸ்ரீஞான மாயோன் தங்கையே போற்றி
    95. ஓம் ஸ்ரீஞான மாணிக்க வல்லியே போற்றி
    96. ஓம் ஸ்ரீஞான மீனவர்கோன் மகளே போற்றி
    97. ஓம் ஸ்ரீஞான மீனாட்சியம்மையே போற்றி
    98. ஓம் ஸ்ரீஞான முழுஞானப் பெறுக்கே போற்றி
    99. ஓம் ஸ்ரீஞான முக்கண் சுடர்விருந்தே போற்றி
    100.  ஓம் ஸ்ரீஞான யாழ்மொழி யம்மையே போற்றி -100
    101. ஓம் ஸ்ரீஞான வடிவழ கம்மையே போற்றி
    102. ஓம் ஸ்ரீஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி
    103. ஓம் ஸ்ரீஞான வேதநாயகியே போற்றி
    104. ஓம் ஸ்ரீஞான சவுந்தராம்பிகையே போற்றி
    105. ஓம் ஸ்ரீஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி
    106. ஓம் ஸ்ரீஞான அம்மையே அம்பிகையே போற்றி
    107. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே போற்றி
    108. ஓம் ஸ்ரீஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மனே
     போற்றி! போற்றி!! போற்றி!!!
    எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.
    எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு மனதில் நம்பிக்கையுடன், இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.

    ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய
    பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய
    சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய
    சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய
    சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா 
    வீட்டின் கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.
    வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டால், மனதுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.

    மந்திரம் :

    ஓம் வாஸ்து புருஷாய நம:
    ஓம் ரத்தலோசனாய நம:
    ஓம் க்ருஷ்யாங்காய நம:
    ஓம் மஹா காயாய நம:

    வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பது தெரியவந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூறி வந்தால், வாஸ்து தோஷம் நீங்கி விடும்.

    திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரும்பியவரை திருமணம் செய்யலாம்.
    "வந்தாமஹே கனக மங்கலஸுத்ர சோபா
    ஸந்தீப்த குங்கும வலித்ரய பங்கி ரம்யம்
    மந்த்ராதிக ஸ்வரவிகஸ்வர நாத வித்யா
    ஸந்தரப்ப கர்ப்பம் அகஜே தவ கண்ட்ட நாளம்"

    திருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ சிவாலயத்தில் உள்ள பார்வதி தேவியின் சன்னிதானத்தில் அமர்ந்து இத்துதியை 24 தடவை ஜெபித்து 48 நாட்கள் ப்ரதக்ஷிணம் செய்தால் அவர்கள் எண்ணிய படி திருமணம் நடக்கும்.
    நவராத்திரி நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். இன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    ஸ்ரீ ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மனுக்கு உகந்த ஷோடச நாமாவளியை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஓ ஸிவாய நம
    ஓ மகேஸ்வராய நம
    ஓ வாமதேவாய நம
    ஓ கபர்திநே நம
    ஓ ஸங்கராய நம
    ஓ பக்தவத்ஸவாய நம
    ஓ ஸிவா ப்ரியாய நம
    ஓ ஸர்வஜ்ஞாய நம
    ஓ விஷ்வேஸ்வராய நம
    ஓ ம்ருத்ஹஜயாய நம
    ஓ பாஸவிமோசகயா நம
    ஓ ம்ருடாய நம
    ஓ ஹராய நம
    ஓ அபவர்கப்ரதாய நம
    ஓ ஞானமூர்த்திஸ்வராய நம
    நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

    முத்தாரம்னே சரணம் 
    இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம்.
    இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். கஷ்டம், இன்பம் எதுவாக இருந்தாலும் கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தால் எந்த பிரச்சனை வந்தாலும் கடவுள் நம் கையைப் பிடித்து ஒரு நல்ல பாதையை
    நோக்கி அழைத்து செல்வார். விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம். மிக எளிய மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.

    ஓம் விஷ்ணுவே நமஹ
    ஓம் நமோ  பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ நாராயணா
    ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம் .

    விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அர்த்தநாரீஸ்வரர் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன்-மனைவியிடையே பிரிவினை என்பதே வராது.
    வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் பார்வதியுமாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தியாகும். கணவன்-மனைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்தத் துதியை தினமும் ஜபம் செய்து வணங்கினால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். வில்வம், தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும் செய்து, திங்கள்கிழமை, பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் இத்துதியை பாராயணம் செய்து வர பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது பல ஆன்மிகர்களின் அனுபவ நம்பிக்கை.
     
    சாம்பேய கௌரார்த சரீரகாயை
    கர்பூர கௌரார்த சரீரகாய
    தம்மில்லகாயை ச ஜ்டாதராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
    சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
    க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
    பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
    ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
    நம:சிவாயை ச நம:சிவாய 
    விசால நீலோத்பல லோசனாயை
    விகாஸி பங்கேருஹ லோசனாய
    ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
    நம:சிவாயை ச நம:சிவாய
    மந்தார மாலா கலிதாலகாயை
    கபால மாலாங்கித கந்தராய
    திவ்யாம்பராயை ச திகம்பராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    அம்போதர ச்யாமல குந்தலாயை
    தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
    நிரீச்வராயை நிகலேச்வராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய
    காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய
    ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
    நம:சிவாயை ச நம:சிவாய
    ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
    ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய
    சிவான்விதாயை ச சிவான்விதாய
    நம:சிவாயை ச நம:சிவாய
    ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம்
    யோ பக்த்யா ஸ மான்யோ
    புவி தீர்கஜீவீ  ப்ராப்னோதி
    ஸெளபாக்ய மனந்தகாலம்.

    மேற்கண்ட அர்த்தநாரீஸ்வர துதி மிகவும் சக்தி மிக்கது. குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடியது. கணவன்-மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், ஒற்றுமையையும் தரக்கூடியது. இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன்-மனைவியிடையே பிரிவினை என்பதே வராது. இருவரிடையே மன ஒற்றுமையை அர்த்தநாரீஸ்வரர் பலமாக உண்டாக்குவார்.
    புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய
    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.
    வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்:

    அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே! தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக் கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான்பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.

    காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.
    ‘வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசப்பாடலை அவர் சன்னிதியில் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.

    குருவே நீபார்த்தால் போதும்

    கோடியாய் நன்மை சேரும்!

    திருவருள் இணைந்தால் நாளும்

    திருமணம் வந்து கூடும்!

    பொருள்வளம் பெருகும் நாளும்

    பொன்னான வாழ்வும் சேரும்!

    அருள்தர வேண்டி உன்னை

    அன்போடு துதிக் கின்றோமே!

    என்று குரு கவசம் எடுத்துரைக்கின்றது.

    மாலை கிடைக்க வேண்டுமானாலும், மழலை பிறக்க வேண்டுமானாலும் குரு பகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும்.
    ×