search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amman Slokas"

    அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.
    அழகிய மதுரையில் மீனாட்சி
    அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி
    நான்மாடக் கூடலிலே அருளாட்சி
    தேன்மொழி தேவியின் தேனாட்சி
    சங்கம் முழங்கிடும் நகரிலே
    சங்கரி மீனாளின் கருணையிலே
    மீன்கொடி பறக்கும் மதுரையிலே
    வான்புகழ் கொண்டாள் தாயவளே
    அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்
    ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்
    வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்
    கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்
    முத்து பவளம் மரகத மாணிக்கம்
    பொன் ஆபரணம் பூண்டாள்
    சக்தி மனோகரி சந்தர கலாதரி
    தென் மதுராபுரி ஆண்டாள்
    சித்திரை மாதம் தேவி மீனாட்சி
    சொக்க நாதரை மணந்தாள்
    பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட
    அற்புத லீலைகள் புரிந்தாள்

    மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.
    ஸ்ரீ ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மனுக்கு உகந்த ஷோடச நாமாவளியை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஓ ஸிவாய நம
    ஓ மகேஸ்வராய நம
    ஓ வாமதேவாய நம
    ஓ கபர்திநே நம
    ஓ ஸங்கராய நம
    ஓ பக்தவத்ஸவாய நம
    ஓ ஸிவா ப்ரியாய நம
    ஓ ஸர்வஜ்ஞாய நம
    ஓ விஷ்வேஸ்வராய நம
    ஓ ம்ருத்ஹஜயாய நம
    ஓ பாஸவிமோசகயா நம
    ஓ ம்ருடாய நம
    ஓ ஹராய நம
    ஓ அபவர்கப்ரதாய நம
    ஓ ஞானமூர்த்திஸ்வராய நம
    நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

    முத்தாரம்னே சரணம் 
    காளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.
    முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
    முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
    பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
    பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

    காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
    காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
    கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
    காத்தருள்வாயே கற்பக கணபதியே

    அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
    ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
    இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
    ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
    உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
    ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
    எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
    ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
    ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
    ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
    ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
    ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்

    அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
    அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
    கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
    கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
    காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
    கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
    பாரதிபாடிய பரமகல்யாணியே
    வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
    வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
    பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
    பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
    மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
    சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
    சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
    எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
    எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
    குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
    சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
    சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
    வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்
    கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
    விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
    நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
    பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
    மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
    நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
    நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
    தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
    வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
    கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

    பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
    காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
    ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
    தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
    வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
    நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
    பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
    கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்
    காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
    கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
    அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
    நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
    இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
    போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
    போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி
    போற்றி போற்றி அங்கயற்கண்ணியே  போற்றி
    போற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி

    ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
    நற்பவி நற்பவி நற்பவி ஓம்

    கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.
    கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.

    பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
    மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
    ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
    கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:

    பொதுப் பொருள் :

    சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன.

    இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
    திருமணம் ஆன பெண்கள் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மங்களம் உண்டாகும்.
    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

    ''அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.''
    ×