என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை போக்கும் அம்மன் ஸ்லோகம்
    X

    குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை போக்கும் அம்மன் ஸ்லோகம்

    அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.
    அழகிய மதுரையில் மீனாட்சி
    அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி
    நான்மாடக் கூடலிலே அருளாட்சி
    தேன்மொழி தேவியின் தேனாட்சி
    சங்கம் முழங்கிடும் நகரிலே
    சங்கரி மீனாளின் கருணையிலே
    மீன்கொடி பறக்கும் மதுரையிலே
    வான்புகழ் கொண்டாள் தாயவளே
    அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்
    ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்
    வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்
    கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்
    முத்து பவளம் மரகத மாணிக்கம்
    பொன் ஆபரணம் பூண்டாள்
    சக்தி மனோகரி சந்தர கலாதரி
    தென் மதுராபுரி ஆண்டாள்
    சித்திரை மாதம் தேவி மீனாட்சி
    சொக்க நாதரை மணந்தாள்
    பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட
    அற்புத லீலைகள் புரிந்தாள்

    மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.
    Next Story
    ×