என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கீழே உள்ள துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
    கீழே உள்ள துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

    ‘அர்கௌகாபம் கிரீடாந்வித மகரலஸத்
    குண்டலம் தீப்திராஜத்
    கேயூரம் கௌஸ்துபாபாஸ பலருசிரஹாரம்
    ஸபீதாம்பரம் ச
    நாநாரத்நாம்ஸு பிந்நாபரண ஸதயுஜம்
    ஸ்ரீதராஸ்லிஷ்டபார்ஸ்வம்
    வந்தே தோ: ஸக்த சக்ராம்புருஹ தரகதம்
    விஸ்வவந்த்யம் முகுந்தம்.’

    பொதுப்பொருள்: எங்கும் வியாபித்திருக்கும் நாராயணனே, நமஸ்காரம். மகர, குண்டலங்களோடு பீதாம்பரதாரியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பெருமாளே, நமஸ்காரம். சங்கு, சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைக் கையில் ஏந்தி, நீலமேக ஸ்யாமளராக காட்சியளித்து, பக்தர்களைக் காக்கும் சத்யநாராயணப் பெருமாளே, அஷ்டாக்ஷர மந்திர வடிவினரே நமஸ்காரம்.

    கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.
    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றாலோ, கெட்டு இருந்தாலோ லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலோ, அவர் நிற்கின்ற இடத்தைப் பொறுத்து திருமணத்தடை, புத்திர பாக்கியத்தடை, தொழிலில் சிக்கல்கள், வீண் விரயங்கள் போன்றவை ஏற்படும்.

    இவர்கள் கீழ்க்கண்ட நரசிம்மர் மந்திரத்தை ஒன்பது முறை தினசரி சொல்லி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள், இடர்கள், தீங்குகள் நீங்கி நன்மைகள் நிச்சயம் அடைவார்கள்.

    செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் இந்த மந்திரத்தை 28 முறை ஜபித்தால் மிக உத்தமம். இந்த மந்திரம் ஆச்சாரியார் ஸ்ரீவேதாந்த தேசிகர் அவர்களால் இயற்றப்பட்டதாகும்.

    ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
    க்ஷணம் பாணிஜை:
    அவ்யாத் த்ரீணி ஜகநீத்யகுண்ட மஹிமா
    வைகுண்ட கண்டீரவ:
    யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
    யாத்ருச்சிகாத் வேதஸாம்
    யா காசித் ஸஹஸா மஹாஸிர க்ருஹ
    ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்!!

    கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.

    தவிர, பிரதோஷ காலத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு வெல்லம், ஏலக்காய் கலந்த பானகம் நைவேத்யம் செய்து மேற்கண்ட மந்திரத்தைச் சொல்லி வந்தாலும் தடைகள் நீங்கும்.

    பெருமானின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி அன்றும் மேற்கண்ட பானக நைவேத்யம் நற்பலன்களைத் தரும்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி

    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி

    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி

    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி

    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி

    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி

    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி

    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி

    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி! 
    ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படித்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும்.
    தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை விடுக்கும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கிறேன்.

    மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! பக்தர்கள் கேட்கும் வரத்தைக் தருபவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டு பிரார்த்தனை செய்கிறேன்.

    நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைச் தரித்துக் கொண்டவரே! மகாவீரரே! என்னைக் கடன் உபாதைகளில் இருந்து காத்தருள பிரார்த்திக்கிறேன்.

    நினைத்த மாத்திரத்திலேயே பாவங்களை நீக்குபவரே! கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும். அப்பேற்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! கடன் தொல்லைகளில் இருந்து நான் விடுதலை பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சை கிழித்தவரே! மகாவீரரான நரசிம்கரே! என் கடன்களில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்தில் இருக்கும் பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்கரே! கடன் உபாதையில் இருந்து நிவாரணம் பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    வேதம், உபிநிஷத் யக்ஞம் இவைகளின் ஈச்வரனே பிரம்மா, ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே! மகாவீரரான நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படிப்பதற்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும். அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.
    செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.
    உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.

    யாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண
    ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

    அனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
    முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய எளிமையான தமிழ் துதிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    1.“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
    நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
    சங்கத் தமிழ் மூன்றும் தா.’

    2.“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
    விநாயகனே வேட்கை தணிவிப்பான்
    விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
    தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.’

    3.“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்
    வெற்றிமிகுத்து வேழவனைத் தொழ புத்தி மிகுத்துவரும்
    வெள்ளிக்கொம்பின் விநாயகனைத் தொழ
    துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.’

    4.“திருவாக்கும் செய்கருமம் கைகூடட்டும்
    செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை
    காதலால் கூப்புவார்தம் கை.’

    5.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
    மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது
    பூக்கொண்டு துப்பார் திருமேனி
    தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’

    6.“அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம் போம்
    நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்து மேவும்
    கணபதியை கைத்தொழுக் கால்.’

    7.“திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
    கருணை பூக்கவும் தீமையைச் சாய்க்கவும்
    பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
    பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.’

    8.“மண்ணுலகத்தினிற் பிறவி மாசற
    எண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற
    கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
    பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.’

    9.“கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்
    கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபல கற்பகம் எனவினை கடிதேகும்
    மத்தமும் மதியமும் வைத்திடும் அரண்மகன் மற்பொரு திரள்புய மதயானை
    மத்தள வயிற்றனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேளே
    முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
    முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா
    அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இயமாகி
    அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே.’
    துன்பங்களை போக்குபவளான ஸ்ரீதுர்க்கையை போற்றும் மங்கள சண்டிக ஸ்தோத்திரத்தை, ராகு காலத்தில் சொல்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
    ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
    ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே

    விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே ! செவ்வாய்க்கிழமை தோறும் பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.

    தேவீம் ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
    பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்

    விளக்கம்: தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

    ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
    ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்

    விளக்கம்: காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

    ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
    தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே

    விளக்கம்: பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

    மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
    ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

    விளக்கம்: மங்களத்தை தரும் மங்கள நாயகியே ! என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

    பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
    பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

    விளக்கம்: பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !

    மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
    ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி

    விளக்கம்: மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே மாந்தருக்கு மோட்சத்தை அளிப்பவளே !

    ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
    ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே

    விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

    காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவையொட்டி ஆதிநாயகபெருமாள்- தாயாருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர். பின்னர் அங்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு யாகசாலையில் வீரலட்சுமி யாகம், சந்தான கோபால யாகமும், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதா ஸ்துதி பாராயணம், நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெற்றது.

    பின்னர் மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாயாருக்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இதனையடுத்து யாகசாலை திடலில் கவிஞர் ஆர்.வி.ஸ்வாமி தொகுத்த 2017 மஹா புஷ்கர விழா உபன்யாச தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பராசர லட்சுமி நரசிம்ம பட்டர் வெளியிட அதை கோமடம் சடகோபன் பெற்றுக்கொண்டார். பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாருக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு நரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகமும், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு காவிரி தாயாருக்கு பவுர்ணமி ஆரத்தி நடைபெறுகிறது. இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு பெறுகிறது. 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்.
    நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்
    த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
    யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே
    தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே

    நாராயண ஹ்ருதயம்

    பொதுப்பொருள்:

    திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், எல்லா வழிகளிலும் அருளவேண்டும். திருமாலே, நமஸ்காரம்.

    ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.
    இந்த ஸ்லோத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர்.
    மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
    பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
    வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
    ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
    ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

    பொதுப் பொருள்:

    மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

    இந்தத் துதியை தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வர, குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர். 
    பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
    ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ குடமாடு  கூத்தன்  திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ  கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக  பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்
    விஜயதசமியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
    அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
    ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
    யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
    ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா

    பொருள் :

    அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.
    ×