search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "narasimha slokas"

    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி நரசிம்மரை வழிபாடு செய்து வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.
    ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகாய விதாயிநே!
    ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரினே!
    ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிதே
    பிங்காக்ஷயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே!!

    என்னும் இந்த சுலோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.
    கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.
    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றாலோ, கெட்டு இருந்தாலோ லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலோ, அவர் நிற்கின்ற இடத்தைப் பொறுத்து திருமணத்தடை, புத்திர பாக்கியத்தடை, தொழிலில் சிக்கல்கள், வீண் விரயங்கள் போன்றவை ஏற்படும்.

    இவர்கள் கீழ்க்கண்ட நரசிம்மர் மந்திரத்தை ஒன்பது முறை தினசரி சொல்லி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள், இடர்கள், தீங்குகள் நீங்கி நன்மைகள் நிச்சயம் அடைவார்கள்.

    செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் இந்த மந்திரத்தை 28 முறை ஜபித்தால் மிக உத்தமம். இந்த மந்திரம் ஆச்சாரியார் ஸ்ரீவேதாந்த தேசிகர் அவர்களால் இயற்றப்பட்டதாகும்.

    ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
    க்ஷணம் பாணிஜை:
    அவ்யாத் த்ரீணி ஜகநீத்யகுண்ட மஹிமா
    வைகுண்ட கண்டீரவ:
    யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
    யாத்ருச்சிகாத் வேதஸாம்
    யா காசித் ஸஹஸா மஹாஸிர க்ருஹ
    ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்!!

    கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.

    தவிர, பிரதோஷ காலத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு வெல்லம், ஏலக்காய் கலந்த பானகம் நைவேத்யம் செய்து மேற்கண்ட மந்திரத்தைச் சொல்லி வந்தாலும் தடைகள் நீங்கும்.

    பெருமானின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி அன்றும் மேற்கண்ட பானக நைவேத்யம் நற்பலன்களைத் தரும்.
    நரசிம்மருக்கு உகந்த ருணமோசனம் என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும்.
    1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
    ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
     ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    2. லஷ்மியாலிங்கித வாமாங்கம்
     பக்தானாம், வரதாயகம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    3. ஆந்த்ர மாலாதரம் சங்க,
     சக்ராப்ஜாயுததாரினம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    4. ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்
     கத்ரூஜ விஷ நாசனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    5. ஸிம்ஹ நாதேன மஹதா
     திக்தந்தி பய நாஸனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்
    தைத்யேஸ்வர விதாரணம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    7. க்ரூரக்ரஹை பீடிதானாம்!
     பக்தானாமப்யப்ரதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
    நமாமி ருண முக்தயே!!
    8. வேத வேதாந்த யக்ஞேஸம்
     ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    9. யஇதம் படதே நித்யம்
     ருணமோசன ஸம்சஞிதம்!
     அந்ருணீஜாயதே ஸத்ய :
     தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

    இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மனமுருகி படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும். அதோடு நியாயமான முறையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால் நினைத்தது எல்லாம் கைகூடும்.
    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை
    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
    இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    இந்த நரசிம்மர் துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால் நினைத்தது எல்லாம் கைகூடும். இந்த துதியை படிப்பதற்கு முன்பு நரசிம்மருக்கு பானம் நைவேத்தியம் படைத்து வழிபட்டுவிட்டு படித்தால் நரசிம்மர் மனம் குளிர்ந்து அருள்வார்.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.

    பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

    யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர்.
    பொருளாதாரப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த நரசிம்ம துதியை பாராயணம் செய்தால் கடன் பிரச்சனைகள் தீரும். இத்துதி நரசிம்ம புராணத்தில் உள்ளது. தினமும் இத்துதியை உளமாறப் படித்தால், அவரருளால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதியான புது வாழ்வு பெறலாம்.

    ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்

    தேவதா கார்யஸித்யர்த்தம் ஸபாஸ்தம்பஸமுத்பவம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    தேவதைகளின் காரிய வெற்றியின் பொருட்டு இரண்யனின் ராஜசபையில் உள்ள தூணில் தோன்றியவரும், மகாவீரரும் ஆன நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    மகாலட்சுமி தேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரே, பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம்
    வாரி வழங்குபவரே, மகா வீரரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    இரண்யனின் நரம்புகளை மாலையாகத் தரித்துக் கொண்டவரே, சங்கம், சக்ரம், தாமரைப்பூ, ஆயுதம் ஆகியவற்றைப் பூண்டவரே, வீரத்துக்கு வித்தானவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஸ்மரணாத் ஸர்வபாபக்னம் கத்ரூஜ விஷநாஸனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    நினைத்த மாத்திரத்திலேயே எல்லா பாவங்களையும் போக்கி அருள்பவரே, பாம்பு போன்ற
    விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாஸனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    மிகுத்து ஒலிக்கும் சிம்ம கர்ஜனையால் எத்திசையிலிருந்தும் வரும் பயத்தை அழித்து ஒழிப்பவரே,
    அநியாய எதிர்ப்புகளை துவம்சம் செய்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    பிரகலாதனுக்கு வரமளித்து, அற்புத தரிசனம் அருளியவரே, லட்சுமியின் நாயகனே, அசுர ராஜனான இரண்யனின் மார்பைப் பிளந்தவரே, நரசிம்ம மூர்த்தியே, நமஸ்காரம்.

    க்ரூரக்ரஹை: பீடிதானாம் பக்தானாமபயப்ரதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    கேடுகள் விளைவிக்கும் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்களைப் பெற்ற
    பக்தர்களுக்கு அத்துன்பங்களை நீக்கி அபயம் அளிப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    வேத வேதாந்த யக்ஞேஸம் ப்ரஹ்ம ருத்ராதி வந்திதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    வேதம், உபநிஷத்து, யக்ஞம், இவற்றுக்கு ஈச்வரனாக விளங்குபவரே, ப்ரம்மா, ருத்ரன் போன்றோரால் வணங்கப்படுபவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ய: இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்க்ஞிதம்
    அந்ருணீ ஜாயதே ஸத்ய: தனம் ஸீக்ரமவாப்னுயாத்.

    யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர். நரசிம்மர் திருவருளால் தனப் பிராப்தி பெருகும் என்பது நிச்சயம். நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், நினைத்தது எளிதில் கைகூடும்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், நினைத்தது எளிதில் கைகூடும். நைவேதியமாக பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் படைப்பது நல்லது. கைமேல் பலன் தரும் இந்த ஸ்லோகத்தை 48 நாட்கள் சொல்வது சிறப்பு.

    மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
    பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
    வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
    ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
    இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
    யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
    ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
    தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

    இந்த ஸ்லோகத்தை சொல்ல முடியாதவர்கள் இதன் பொருளைச் சொன்னாலே பலன் உண்டு.

    பொருள்: நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரனாகவும், தோழனாகவும் இருப்பவனும் அவனே. அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவனேதான். நமக்கு எஜமானனாகவும், எல்லாமுமாகவும் நரசிம்மனே விளங்குகிறான். பூலோகம், விண்ணுலகத்திலும் நரசிம்மனே அருள்புரிந்து கொண்டிருக்கிறான். நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனே வீற்றிருக்கிறான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.
    மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
    ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
    வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
    ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
    இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
    யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,
    நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
    தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே
    ×