என் மலர்
இது புதுசு
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது 2021 ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய மாடலை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இதன் காரணமாக ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மூன்று வேரியண்ட்களும் ஒற்றை பவர் டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இது புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸி ரெட், கேசியம் புளூ, பொராஸ்கோ கிரே, இகர் கிரே, போர்டோபினோ புளூ, பரலொன் பியல் பிளாக் மற்றும் அருபா என மொத்தம் 12 நிறங்களில் கிடைக்கிறது.
ஆடி நிறுவனத்தின் புது மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ2 எஸ்யுவி மாடலுக்கான டீசரை செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட்டது. அந்த வரிசையில், தற்சமயம் புது மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. புதிய கியூ2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பயனர்கள் புதிய கார் முன்பதிவை ஆடி அதிகாரப்பூர்வ விற்பனை மையம் அல்லது வலைதளத்தில் மேற்கொள்ள முடியும். புதிய கியூ2 மாடல் 2020 ஆண்டில் ஆடி வெளியிடும் ஐந்தாவது கார் ஆகும்.

கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.
ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் மேலும் பத்து நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனையை மேலும் பத்து நகரங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. இந்தியாவில் ஆயிரமாவது இசட்எஸ் இவி மாடலை வெளியிட்ட பின் விற்பனை நீட்டிப்பு பற்றி எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்தது.
புதிய அறிவிப்பின் படி நாக்பூர், லக்னோ, ஆக்ரா, டேராடூன், லூதியானா, கொல்கத்தா, ஔரங்காபாத், இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் எம்ஜி இசட்எஸ் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மொத்தம் 21 நகரங்களில் இந்த மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. முன்பதிவு விற்பனை மையங்கள் மற்றும் எம்ஜி மோட்டார் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி இசட் எஸ் மாடலில் 3 பேஸ் நிரந்தர காந்தம் கொண்ட 44.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 141 பிஹெச்பி பவர், 353 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை செல்லும்.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 தார் மாடலை அசத்தல் விலையில் வெளியிட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் 2020 மஹிந்திரா தார் மாடல் வெளியானது. இதன் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய தார் மாடல் ஆறு வித நிறங்கள் மற்றும் இரண்டு ட்ரிம்களில் கிடைக்கிறது. புதிய தார் மாடல் விநியோகம் நம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கைகள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் ஆர்8 மாடல் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி ஆர்8 கிரீன் ஹெல் அறிமுகம் செய்யப்பட்டது. இது லிமிட்டெட்-ரன், ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும். இது உலகம் முழுக்க வெறும் 50 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
புதிய ஆர்8 கிரீன் ஹெல் மாடல் விலை 233949 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 2.01 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது விசேஷ டார்க் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பயனர்கள் கிரே, வைட் அல்லது பிளாக் உள்ளிட்ட நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 620 பிஹெச்பி பவர் திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். இது 3 சீரிசின் கீழ் நிலை நிறுத்தப்பட இருக்கிறது.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் யூனிட் 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இவற்றுடன் 8 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம்.

புதிய பிஎம்டபிள்யூ மாடலில் கிட்னி கிரில், எல்இடி லைட்டிங், டூயல் டோன் அலாய் வீல்கள், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் எம்ஐடி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் இந்திய வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடல் காரை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. முந்தைய தகவல்களின்படி ரெனால்ட் கைகர் இந்த ஆண்டு அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனால்ட் கைகர் வெளியீடு தாமதமாகும் என கூறப்பட்டு உள்ளது. தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட விநியோக இடையூறுகளால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெளியீட்டிற்கு முன் புதிய கைகர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய காரின் வெளிப்புறம் கிளாம்ஷெல் பொனெட், பெரிய வீல் ஆர்ச்கள், குறைந்த உயரம் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டடுக்கு ஹெட்லேம்ப் செட்டப் மற்றும் மூன்று ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.
காரின் உள்புறம் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சில உயர்ரக பொருட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாடல் ஏஎம்டி மற்றும் சிவிடி போன்ற அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி ஸ்டெல்த் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஸ்டெல்த் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஹெட்லேம்ப்கள், 19 இன்ச் வை ஸ்போக் வீல்கள், 20 இன்ச் ரியர் வீல்களில் பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ரோட்ஸ்டர் மாடலில் பிளாக் சாப்ட் டாப், மற்றும் டின்ட் செய்யப்பட்ட கிளாஸ் கொண்ட பிளாக் பைபர் ரூப் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் ஏஎம்ஜி கிரில் டார்க் க்ரோம் பெற்று இருக்கிறது. இதன் உள்புறத்தில் DINAMICA மைக்ரோபைபர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், பிளாக் ஸ்போக் மற்றும் ஷிப்ட் பேடில்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 516 பிஹெச்பி பவர், 670 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இதன் கூப் மாடல் மணிக்கு அதிகபட்சம் 315 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு அதிகபட்சம் 311 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய டோர்-ஸ்டெப் சர்வீஸ் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் டோர்-ஸ்டெப் சர்வீஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வீடு அல்லது அலுவலகத்தில் வாகனத்திற்கு சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
புதிய ஃபோர்டு சேவையை பெற வாடிக்கையாளர்கள் டையல்-ஏ-ஃபோர்டு தொடர்பு கொள்ள வேண்டும். இதுவரை ஃபோர்டு நிறுவன விற்பனை மற்றும் சர்வீஸ் சார்ந்த விவரங்களுக்கும் டையல்-ஏ-ஃபோர்டு சேவையில் தெரிந்து கொள்ள முடியும்.

முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, குர்கிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத், ஜெய்பூர், லக்னோ, பெங்களூரு, கொச்சின், திருவனந்தபுரம், ஐதராபாத், கொல்கத்தா, புவனேஷ்வர், மும்பை, தானே, ஔரங்காபாத் மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் டையல்-ஏ-ஃபோர்டு இலவச தொடர்பு எண்ணில் அழைப்பு மேற்கொண்டு வாகனங்களுக்கு வீட்டிலேயே சர்வீஸ் செய்து கொள்ள முடியும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இகியூசி எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யுவியான இகியூசி மாடலை அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

புதிய இகியூசி இந்தியாவில் வெளியாகும் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். புதிய இகியூசி மாடலின் வடிவமைப்பு ஜிஎல்சி எஸ்யுவியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரின் கிரில் பகுதியில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பேட்ஜிங், புதிய ஹெட்லைட்களில் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள் பூட் லிட் மீது பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாற்றங்களை செய்து கொள்ள கூடுதல் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஏஎம்ஜி மாடல்களில் உள்ளது போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிஷன் மாடலை சீரிஸ் 1 எனும் பெயரில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் 2020, ஜனவரி 28 ஆம் தேதிக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கானது ஆகும்.
அந்த வகையில் ஸ்கூட்டர் பற்றி எந்த விவரமும் தெரியாத நிலையில், இதனை வாங்க முன்பதிவு செய்தவர்கள் இந்த மாடலை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமாக இருந்த நிலையில், இதன் அறிமுக நிகழ்வு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிப்போனது.

புதிய ஏத்தர் இ-ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய கலெக்டர்ஸ் எடிஷன் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. அதன்படி இதில் டின்ட் செய்யப்பட்ட டிரான்ஸ்லூசென்ட் பாடி பேனல்கள் வழங்கப்படுகின்றன.
இவை ஏத்தர் ஸ்கூட்டரின் தனித்துவம் மிக்க அலுமினியம் சேசிஸ் மற்றும் எலெக்ட்ரிக் டிரெலிஸ் பிரேமை வெளியில் இருந்து பார்க்கும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஹை கிளாஸ் மெட்டாலிக் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு உள்ளது.
ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 8 பிஹெச்பி பவர், 26 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் வார்ப் ஆகிய ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் எம் பிரிவில் தனது முதல் மோட்டார்சைக்கிளை எம்1000 ஆர்ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இது ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது.
புதிய மாற்றங்களில் குறைந்த எடை கொண்ட பாகங்கள், மேம்பட்ட எலெக்டிரானிக் மற்றும் ஏரோ பேக்கேஜ் உள்ளிட்டவை அடங்கும். பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் எடை எஸ்1000 ஆர் மாடலை விட குறைவு ஆகும். புதிய எம்1000 ஆர்ஆர் மாடலை ரேசிங் மட்டுமின்றி ஸ்டிரீட்-லீகல் பயன்பாடுகளுக்கும் ஏற்றது என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது.

பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் மாடலில் 999சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 210 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்லிப் அசிஸ்ட் மற்றும் பை-டைரக்ஷனல் குவிக்ஷிஃப்டர் உள்ளிட்டவை கொண்டுள்ளது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 45எம்எம் யுஎஸ்டி போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது. இரு சஸ்பென்ஷன் யூனிட்களும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் கிடைக்கிறது. மேலும் இது பிஎம்டபிள்யூ புல் புளோட்டர் ப்ரோ கைன்மேடிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.






