என் மலர்tooltip icon

    இது புதுசு

    புதிய கார் வெளியீடு திட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனம் திடீர் மாற்றத்தை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலின் இந்திய வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றத்தை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

    புதிய தலைமுறை செலரியோ மாடல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்சமயம் வெளியாகி உள்ள தகவல்களின் படி செலரியோ மாடல் வெளியீடு 2021 ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது.

     மாருதி செலரியோ

    உதிரிபாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதே இதன் வெளியீடு தாமதமாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. செலரியோ மாடல் அதிக மாற்றங்கள் செய்யப்படுவதால், இதன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

    அந்த வகையில், செலரியோ மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட இன்டீரியர்கள் மற்றும் புதிய அம்சம், உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. 

    மாருதியின் வேகன்ஆர் மாடலும் இதே பிளாட்ஃபார்மிலேயே உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 
    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் கியூ2 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் கியூ2 எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய கார் துவக்க விலை ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஆடி கார் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது ஐந்து வித ட்ரிம்களில் இருவித பாடி-லைன்களில் கிடைக்கிறது. ஆடி கியூ2 பானரோமிக் சன்ரூப் மாடல் விலை ரூ. 1.50 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

     ஆடி கியூ2

    இந்த மாடலில் உள்ள என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிபென்டர் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை டிபென்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிபென்டர் மாடல் விலை ரூ. 73.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய டிபென்டர் மாடலின் விநியோகம் ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருந்தது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் விநியோகம் தாமதமாகி இருக்கிறது.

     லேண்ட் ரோவர் டிபென்டர்

    லேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.

    புதிய டிபென்டர் மாடலில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 296 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    கியா செல்டோஸ் ஸ்பெஷன் எடிஷன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. புதிய செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள், புது உபகரணங்கள் மற்றும் நிறங்களை கொண்டிருக்கும் என தெரியலந்துள்ளது.

    புதிய செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் செல்டோஸ் விற்பனையில் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்படுகிறது.

     கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன்

    புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் ட்ரிமில் மட்டும் கிடைக்கும் என்றும் இந்த கார் வெளிப்புளம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. இது நான்குவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    கியா செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க் செயல்திறன், 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹைட்ரஜன் பியூவல் செல் கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் கார் சோதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பியூவல் செல் கொண்டு இயங்கும் கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ப்ரோடோடைப் கார் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பியூவல் செல் ஸ்டேக்குடன் பூனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.

    பியூவல் செல் என்பது குறைந்த வெப்பநிலை அதாவது 65 முதல் 75 டிகிரி சென்டிகிரேடில் இயங்குகிறது. இது வாகன இயக்கத்திற்கு ஏற்றது. ஆய்வுகளில் மஹிந்திரா இ வெரிட்டோ எலெக்ட்ரிக் செடான் மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட பியூவல் செல் பயன்படுத்தப்பட்டது.

     ஹோண்டா கார்

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் (CSIR) மற்றும் கேபிஐடி இணைந்து 10 கிலோவாட் ஆட்டோமோட்டிவ் கிரேடு எல்டி-பிஇஎம்எப்சி பியூவல் செல் ஸ்டேக்கை உருவாக்கி இருக்கின்றன. இந்த பியூவல் செல் ஸ்டேக் தொழில்நுட்பத்தில் குறைந்த எடை கொண்ட மெட்டல் பை-போலார் பிளேட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    பியூவல் செல்களினுள் ஏற்படும் இரசாயண மாற்றம் மின்சக்தியை உற்பத்தி செய்யும். பின் அது எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு சக்தியூட்டும். இவ்வாறே பியூவல் செல் கொண்ட கார்கள் இயக்கப்படுகின்றன.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐந்து என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் அந்நிறுவனத்தின் புதிய எம்எம்ஏ பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இது காம்பேக்ட் மற்றும் மிட்சைஸ் வாகனங்களுக்கான பிரத்யேக பிளாட்பார்ம் ஆகும்.

    இவை ஏ கிளாஸ் ஹேட்ச்பேக், பி கிளாஸ், சி கிளாஸ், சிஎல்ஏ மற்றும் ஏ கிளாஸ் செடான் மாடல்களுக்கு இணையானவை ஆகும். என்ட்ரி லெவல் மட்டுமின்றி பெரிய மாடல்களான இகியூஇ செடான், இகியூஇ எஸ்யுவி, இகியூஎஸ் செடான் மற்றும் இகியூஎஸ் எஸ்யுவி மாடல்களை இவிஏ பிளாட்பார்மில் உருவாக்க மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

     மெர்சிடிஸ் எலெக்ட்ரிக் கார்

    இந்த நான்கு மாடல்களும் இ கிளாஸ், ஜிஎல்இ, எஸ் கிளாஸ் மற்றும் ஜிஎல்எஸ் மாடல்களுக்கு இணையானவை ஆகும். புதிய எம்எம்ஏ பிளாட்பார்மின் தொழில்நுட்ப அம்சங்களை மெர்சிடிஸ் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இது அதிக தூரம் செல்லும் திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
    நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அக்டோபர் 21 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேக்னைட் சப்-காம்பேக்ட் மாடல் நிசான் நிறுவனத்தின் நெக்ஸ்ட் திட்டத்தின் கீழ் அறிமுகமாகிறது.

    நிசான் நிறுவனத்தின் நெக்ஸ்ட் திட்டத்தின் படி அந்நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் 12 புதிய கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை பெரும்பாலும் வளரும் சந்தைகளுக்காக உருவாக்கப்படுவதாக நிசான் தெரிவித்து இருக்கிறது. 

    புதிய காரின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

     நிசான் மேக்னைட்

    இத்துடன் பிளாக்டு-அவுட் பாடி கிளாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பில்ட் டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்ஷனல் ஏஎம்டி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா இ பேஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வெர்னா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா இ மாடல் விலை ரூ. 9.02 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பேஸ் மாடல் விலை முந்தைய வெர்னா ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 36 ஆயிரம் வரை குறைவு ஆகும். புதிய மாடலில் முந்தைய ஸ்டான்டர்டு வெர்னாவில் வழங்கப்பட்ட சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. 

     ஹூண்டாய் வெர்னா இ

    அந்த வகையில் புதிய வெர்னா இ மாடலில் ஷார்க் பின் ஆன்டெனா, சன் கிளாஸ் ஹோல்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இத்துடன் ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படவில்லை.

    ஹூண்டாய் வெர்னா இ மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது 114 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் கியூ8 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி, இந்திய சந்தையில் கியூ8 ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆடி கியூ8 செலபிரேஷன் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 98.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஸ்டான்டர்டி கியூ8 மற்றும் ஆர்எஸ் கியூ8 மாடல்களின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.33 கோடி மற்றும் ரூ. 2.07 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     ஆடி கியூ8 செலபிரேஷன்

    கியூ8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஹெச்டி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், டைனமிக் லைட்டிங், பட்டன் லெஸ் எம்எம்ஐ நேவிகேஷன் சிஸ்டம், ஆடி விர்ச்சுவல் காக்பிட், ஸ்மார்ட்போன் இன்டர்பேஸ், போன் பாக்ஸ் லைட், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

    இந்த மாடலில் 3.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 335 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஜி குளோஸ்டர் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் குளோஸ்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் துவக்க விலை ரூ. 28.98 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் சேவி மாடல் விலை ரூ. 35.38 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு துவங்கிவிட்ட நிலையலில், விரைவில் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது.

     எம்ஜி குளோஸ்டர்

    புதிய ஏழு பேர் அமரக்கூடிய குளோஸ்டர் மாடல் ஆட்டோனோமஸ் லெவல் 1 வசதி கொண்ட இந்தியாவின் முதல் கார் ஆகும். இதில் ஆட்டோமேடிக் பார்க்கிங் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பார்வேர்டு கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேண் டிபாச்சர் வார்னிங் போன்ற வசதிகள் உள்ளன.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் அனைத்து வேரியண்ட்களிலும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு  உள்ளது. எனினும், இவை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப டியூனிங் செய்யப்படுகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் டார்க் எடிஷன் புது வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் டார்க் எடிஷன் மாடலின் புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஹேரியர் டார்க் எடிஷன் தற்சமயம் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 16.50 லட்சம் மற்றும் ரூ. 17.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை ஸ்டான்டர்டு மாடல்களை விட ரூ. 10 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.

     டாடா ஹேரியர்

    புதிய வேரியண்ட்கள் ஹேரியர் டார்க் எடிஷன் மாடலின் பேஸ் வேரியண்ட் ஆகும். தற்சமயம் டாடா ஹேரியர் டார்க் எடிஷன் - எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி மாடல் துவக்க விலை ரூ. 16.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.30 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய பேபியா மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் முதல் தலைமுறை பேபியா மாடலை 2008 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது. தொடர் வெற்றி காரணமாக அந்நிறுவனம் இந்த காருக்கு பல்வேறு அப்டேட்கள் மற்றும் பேஸ்லிப்ட் வெர்ஷன்களை அறிமுகம் செய்தது. 

    சமீப காலங்களில் இதன் விற்பனை சரிய ஆரம்பித்ததும், ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் பேபியா மாடலை திரும்பப் பெற்றது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஸ்கோடா பேபியா நான்காம் தலைமுறை மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

     ஸ்கோடா பேபியா

    பின் இதன் விற்பனை முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் துவங்கி பின் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்கோடா மாடலில் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதேபோன்ற சிஸ்டம் ஆக்டேவியா மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆக்டேவியா மாடலில் 1.0 லிட்டர் டிடிஐ இவோ இ-டெக் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ×