என் மலர்tooltip icon

    இது புதுசு

    • ஹூண்டாய் நிறுவனத்தின் 2023 i20N லைன் கார் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • ஹூண்டாய் நிறுவனம் தற்போது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் CNG வசதியை வழங்கி வருகிறது.

    தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் CNG ஆப்ஷனை வழங்கி வருகிறது. எனினும், மாருதி சுசுகி அளவுக்கு அதிக கார்களில் CNG வசதியை ஹூண்டாய் வழங்கவில்லை. 2023 ஏப்ரல் மாதம் முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

    புது விதிகளின் படி பெரும்பாலான 2.0 லிட்டருக்கும் குறைந்த திறன் கொண்ட என்ஜின்களில் மாற்றம் செய்ய வேண்டும். புதிய புகை விதிகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படவில்லை எனில், அவற்றை கார்களில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இவ்வாறு மாற்றம் செய்யப்படாத 17 வாகனங்கள் விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் i20 N லைன் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஸ்பை வீடியோவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூண்டாய் i20 N லைன் மாடலில் - On Test By ARAI எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சோதனை செய்யப்படும் கார் ஒன்று CNG வேரியண்ட் ஆகவோ அல்லது புது விதிகளுக்கு பொருந்தும் மாற்றங்களுடனோ சோதனை செய்யப்படலாம்.

    தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், CNG தொழில்நுட்பம் பெருமளவு வரவேற்பை பெற துவங்கி இருக்கிறது. எண்ட்ரி-லெவல் கார்களில் துவங்கி பிரீமியம் ஹேச்பேக், பிரீமியம் எம்பிவி மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களிலும் CNG ஆப்ஷனாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பிரீமியம் ஹேச்பேக் பிரிவில் பலேனோ மற்றும் கிளான்சா மாடல்களில் இந்த ஆப்ஷ் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20 போன்ற கார்களும் இதே வழியை பின்பற்றும் என தெரிகிறது. ஹூண்டாய் i20 N லைன் மாடல் விசேஷ உபகரணங்களுடன் சோதனை செய்யப்படுகிறது. இதை அடுத்து இந்த கார் டர்போ என்ஜின் அல்லாத போட்டி நிறுவன கார்களுக்கு போட்டியாக களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்து இருக்கலாம் என தெரிகிறது.

    Photo Courtesy: Cyrus Dhabhar

    • லெக்சஸ் நிறுவனத்தின் புது RX மாடல் அந்நிறுவனத்தின் GA-K பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய லெக்சஸ் RX மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய RX மாடலுக்கான டீசரை மீண்டும் வெளியிட்டுள்ளது. புதிய லெக்சஸ் RX மாடல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐந்தாம் தலைமுறை RX மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகமானது. புது டீசரில் இந்த காரின் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் டிசைன் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய லெக்சஸ் RX மாடலின் எடை 90 கிலோ வரை குறைந்து இருக்கிறது. காரின் முன்புறம் லெக்சஸ் பாரம்பரியம் மிக்க ஸ்பிண்டில் கிரில், ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் டெயில் லைட்களும் மேம்படுத்தப்பட்டு முற்றிலும் பிளாக் எலிமெண்ட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் புது அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2023 லெக்சஸ் RX மாடலின் உள்புறம் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ADAS, டிஜிட்டல் ரியர்வியூ மிரர், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் புது லெக்சஸ் RX மாடல் ஏராளமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இந்திய சந்தையில் புது லெக்சஸ் RX மாடல் 2.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 245 ஹெச்பி பவர், 324 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்தியாவில் ஸ்கார்பியோ N காரின் வேரியண்ட்களில் தொடர்ந்து ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N காரின் புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி தற்போது ஸ்கார்பியோ N 30 வேரியணட்களில் கிடைக்கிறது. ஸ்கார்பியோ N காரின் 30 வேரியண்ட்களில் 19 வேரியண்ட்கள் டீசல் என்ஜினும், மீதமுள்ளவை பெட்ரோல் என்ஜினும் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், டீசல் என்ஜின் கொண்ட மாடல்களில் மட்டுமே ஆப்ஷனல் 4எக்ஸ்ப்ளோர் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புது வேரியண்ட்கள், ஸ்கார்பியோ N - Z2 G MT E, Z2 D MT E, Z4 G MT E, Z4 D MT E, மற்றும் Z4 D MT 4WD E என அழைக்கப்படுகின்றன. புது வேரியண்ட்களை அடுத்து 4 வீல் டிரைவ் வெர்ஷன் தற்போது ரூ. 16 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புது வேரியண்ட்களின் விலை விவரங்கள்:

    Z2 MT E 7s பெட்ரோல் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம்

    Z4 MT E 7s பெட்ரோல் ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம்

    Z2 MT E 7s டீசல் ரூ. 12 லட்சத்து 99 ஆயிரம்

    Z4 MT E 7s டீசல் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம்

    Z4 MT 4WD E 7s ரூ. 16 லட்சத்து 04 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 D MT E வேரியண்ட் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டில்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் ஸ்டீரிங், 2-ம் அடுக்கு இருக்கைகளில் ஏசி வெண்ட்கள், பவர் விண்டோ, யுஎஸ்பி போர்ட்கள், எல்இடி இண்டிகேட்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 வேரியண்ட்களில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பவர்டிரெயின் ஆப்ஷன்களை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்கார்பியோ N டீசல் வேரியண்ட்களில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. டீசல் என்ஜின் கொண்ட பேஸ் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    • இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தனிநபர் பறக்கும் வாகனத்தை உருவாக்கி இருக்கிறது.
    • இந்த தனிநபர் பறக்கும் வாகனம் முழு சார்ஜ் செய்தால் 100 மைல் அதாவது 160 கிமீ வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க செய்யும் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த வாகனம் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளின் மேல் பறந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் இந்த பறக்கும் வாகனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இஸ்ரேல் நாட்டின் AIR எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவவாக்கி இருக்கும் இந்த பறக்கும் வாகனத்தில் ஒரே சமயம் இருவர் பயணம் செய்ய முடியும். இருவரில் ஒருவர் வாகனத்தை இயக்குவார், மற்றொருவர் பயணி ஆவர். முழு சார்ஜ் செய்தால் இந்த பறக்கும் கார் 100 மைல் அதாவது 160 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    உலகில் பல்வேறு நிறுவனங்கள் இதுபோன்ற வாகனத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாகன பயன்பாட்டு முறை காலப்போக்கில் பொதுவான ஒன்றாக மாறும் என ஸ்டார்ட்அப் நிறுவனமான AIR தெரிவித்து இருக்கிறது.

    "இது மிக முக்கிய மைல்கல். நாங்கள் போக்குவரத்து முறையில் முன்னேறி இருக்கிறோம்... இதன் மூலம் AIR ONE மாடலை அதிக உற்பத்தி செய்யும் இலக்கை அடைய நெருங்கி விட்டோம்," என AIR நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராணி பைலட் தெரிவித்து இருக்கிறார்.

    • லெக்சஸ் நிறுவனத்தின் புதிய RX மாடல் இரண்டு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் ஐந்தாம் தலைமுறை RX மாடல் 2022 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய RX எஸ்யுவி மாடலை 2023 ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புது காரின் டீசரை லெக்சஸ் இந்தியா தற்போது வெளியிட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் 2022 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட லெக்சஸ் RX மாடல் இந்தியா வருகிறது. புதிய RX மாடல் ஆட்டோ எக்ஸ்போ வரும் முதல் லெக்சஸ் வாகனம் ஆகும்.

    புதிய எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என லெக்சஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. மேலும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்ட லெக்சஸ் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய RX பெற இருக்கிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய RX மாடலில் உள்ள என்ஜின் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜ் வழங்கும் என லெக்சஸ் அறிவித்து இருக்கிறது.

    லெக்சஸ் RX மாடலின் புதிய அளவீடுகள் கூப் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், மெல்லிய டிசைன் மற்றும் காரை சுற்றி பிஸ்போக் ஸ்டைலிங் வழங்கப்படுகிறது. உள்புறம் 14 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிளஅ கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    புதிய லெக்சஸ் RX மாடல் 350h, 450h+ மற்றும் 500h என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் 450h+ மாடல் மட்டும் ஸ்டிராங் ஹைப்ரிட் வசதி கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் 350h மாடல் 2.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 245 ஹெச்பி பவர், 324 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 6 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 614 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி துவங்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுக்காக தயாராகி வருகிறது. புது டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்வு ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான ஒன்று ஆகும். இதில் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய, கான்செப்ட் மற்றும் தற்போதைய மாடல்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மாடலாக இருக்கும்.

    இதுதவிர ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 6 மாடலும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஐயோனிக் 6 ஹூண்டாய் சமீபத்தில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனமாக ஐயோனிக் 6 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற இரு ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்கள்- கோனா மற்றும் ஐயோனிக் 5 ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.

    ஐயோனிக் 6 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டது. ஸ்டைலிஷ் ஃபுல் எலெக்ட்ரிக் செடான் மாடலான ஐயோனிக் 6 ஏரோடைனமிக் சில்ஹவுட் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புறம் பிக்சல் ஸ்டைல் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் டக்டெயில் ரியர் ஸ்பாயிலர், வளைந்த ஷோல்டர் லைன் உள்ளது.

    எலெக்ட்ரிக் காரின் உள்புறத்தில் ஃபிலாட் செண்டர் கன்சோல், டூயல் 12 இன்ச் டச் ஸ்கிரீன்கள், 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது. அளவீடுகளை பொருத்தவரை ஐயோனிக் 6 மாடல் 4855mm நீளமாகவும், 1880mm அகலமாகவும், 1495mm உயரம் மற்றும் 2950mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. அளவில் இந்த கார் டெஸ்லா மாடல் 3, போல்ஸ்டார் 2 மற்றும் பிஎம்டபிள்யூ i4 மாடல்களுக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் 53 கிலோவாட் ஹவர் மற்றும் 77 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் சிங்கில் மோட்டார் RWD ஸ்டாண்டர்டு அம்சமாகவும், டாப் வேரியண்ட்களில் டூயல் மோட்டார், AWD ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஐயோனிக் 6 காரில் டூயல் மோட்டார் செட்டப் 320 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    தற்போதைய ஐயோனிக் 5 மாடலில் உள்ள RWD செட்டப் 228 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஐயோனிக் 6 மாடலின் RWD 53 கிலோவாட் ஹவர் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 429 கிலோமீட்டர்களும், 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட RWD வெர்ஷன் 614 கிலோமீட்டர்களும், AWD வெர்ஷன் 583 கிலோமீட்டர்கள் செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளன.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிமீ வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவுக்கான ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. புதிய ஐயோனிக் 5 மாடலின் வெளியீடு 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் நடைபெற இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அளவீடுகளை பொருத்தவரை புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 4635mm நீளம், 1890mm அகலம், 1625mm உயரமாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3000mm ஆகும். இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் - மேட் கிராவிட்டி கோல்டு, ஆப்டிக் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் பியல் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த காரில் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 214 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் 350 கிலோவாட் DC சார்ஜர் மூலம் இந்த காரை 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும்.

    பாதுகாப்பிற்கு ஐயோனிக் 5 மாடலில் ஆறு ஏர்பேக், ABS மற்றும் EBD, VESS, EPB, MCB, நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. டிசைனை பொருத்தவரை புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் பாராமெட்ரிக் பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப், முன்புறம், பின்புறம் பம்ப்பர்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்கிட் பிலேட்கள், ஆக்டிவ் ஏர் ஃபிளாப்கள், 20 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஃபிலஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் டார்க் பெபில் கிரே இண்டீரியர் தீம், ஸ்லைடிங் செண்டர் கன்சோல், ஸ்லைடிங் குளோவ் பாக்ஸ், லெவல் 2 ADAS, இரு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், V2L (வெஹிகில் டு லோட்) தொழில்நுட்பம், போஸ் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் மியுசிக் சிஸ்டம், புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பவர்டு டெயில்கேட், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கை மற்றும் லம்பர் சப்போர்ட், மெமரி ஃபன்ஷன் உள்ளது.

    • ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் வகையில் ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் மாருதி சுசுகி நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் வாகன திட்டத்தின் முதல் முயற்சியாக இருக்கும்.

    தற்போது இந்த ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் YY8 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அளவில் இது மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் கான்செப்ட் வடிவம் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் 2025 வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் ஆல் எலெக்ட்ரிக் வாகனம், இந்திய சந்தையில் நெக்சான் EV மேக்ஸ் மற்றும் மஹிந்திரா XUV400 மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் காரை மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. கிராணட் விட்டாரா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்றே, இதே கார் டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகமாகும்.

    புதிய YY8 மாடல் 27PL எலெக்ட்ரிக் ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கார் மாருதி சுசுகி உருவாக்கும் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களுக்கு அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். YY8 மாடல் சர்வதேச சந்தைக்கானதாக இருக்கும் என்ற போதிலும், இதன் உற்பத்தி குஜராத்தில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் நடைபெறும் என்றே கூறப்படுகிறது. 

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் வென்யூ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
    • புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடலில் சன்ரூஃப் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய எஸ்யுவி மாடல் முதல் முறையாக கொரியாவில் ஸ்பை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் புதிய கார் அதன் ப்ரோடோடைப் வடிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வெர்ஷன் இந்தியாவில் உருவாக்கப்பட்டு இங்கிருந்து கொரியாவில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஹேச்பேக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மற்ற ஆட்டோ உற்பத்தியாளர்களை போன்றே ஹூண்டாய் நிறுவனமும் அனைத்து பிரிவுக்கும் ஏற்றவாரு எஸ்யுவி மாடலை உருவாக்கி வருகிறது. இதுவரை பெயரிடப்படாமல் இருக்கும் ஹூண்டாய் எஸ்யுவி மாடல் கிராண்ட் i10 மாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் இது இந்திய சந்தையில் ஹூண்டாயின் மிகச் சிறிய எஸ்யுவி-யாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று தொடங்கும் முன்பு தான் இந்த காரின் உற்பத்தியை துவங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் செய்யப்படும் மாடலை பார்க்கும் போது, கேஸ்பர் மாடலை விட சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றெ தெரிகிறது. இதன் ஸ்டைலிங் முற்றிலும் வித்தியாசமாகவும், அதிக எஸ்யுவி பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.

    இந்த மைக்ரோ எஸ்யுவி மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், வென்யூ போன்ற ஹெட்லேம்ப் அதன் கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. டேடைம் ரன்னிங் லைட்கள் H வடிவம் கொண்டிருக்கின்றன. இதே போன்ற செட்டப் சாண்டா ஃபெ எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்களிலும் காணப்பட்டது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எல்இடி டிஆர்எல் ஆக இருக்கும் என தெரிகிறது.

    பக்கவாட்டு பகுதிகளில் முன்புற ஃபெண்டர்கள் கேஸ்பர் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. பின்புறம் கதவு சற்றே உறுதியானதாகவும், டோப் ஹேண்டில் செவ்வக பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறம் சற்றே ஆங்குலர் டிசைன் கொண்ட டெயில் லேம்ப்கள், பின்புற பம்ப்பர் முற்றிலும் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 மாடல்களை போன்றே இந்த காரிலும் போட்டியை ஏற்படுத்தும் அம்சங்களான சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    Source : Rushlane | 악군TV

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது கார்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிட்ரோயன் நிறுவனத்தின் eC3 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C3 காம்பேக்ட் ஹேச்பேக் மாடலை தழுவி பல்வேறு புது கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு தான் சிட்ரோயன் C3 கார் இந்திய சந்தையில், அந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. C3 கார் மாட்யுலர் CMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட மாடல் ஆகும்.

    இதே பிளாட்ஃபார்மில் உலகம் முழுக்க ஏராளமான கார் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், E-CMP பிளாட்ஃபார்மில் C3 மாடலை சார்ந்த எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் சிட்ரோயன் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த காருக்கான டீசர், பெயர் விவரங்கள் உள்ளிட்டவைகளை சிட்ரோயன் அறிவித்து விட்டது. இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    சற்றே அளவில் பெரிய C3 மாடலின் ஸ்பை படங்கள் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த கார் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட எஸ்யுவி மாடல் என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த கார் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி 7 சீட்டர் C3 எஸ்யுவி மாடல் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த கார் CC24 எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படுவதாக தெரிகிறது. இதன் டிசைன் C5 ஏர்கிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்யுவி மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் கிளஸ்டர் டிசைன், புதிய செவ்ரான் லோகோ நீக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 4.4 மீட்டர்களாக இருக்கும் என்றும் வீல்பேஸ் 2.62 மீட்டர்களாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய 7 சீட்டர் C3 மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக இந்த கார் பிரேசில் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் உண்மையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் H2 ப்ரோடோடைப் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புது ப்ரோடோடைப் மட்டுமின்றி டொயோட்டா நிறுவனம் IMV0 கான்செப்ட்-யும் அறிமுகம் செய்து இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. தாய்லாந்தில் தனது 60 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் ஹிலக்ஸ் ரெவோ எலெக்ட்ரிக் கான்செப்ட்-ஐ டொயோட்டா அறிமுகம் செய்தது.

    கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் பிக்கப் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் மர்மமாக உள்ளன. ஹிலக்ஸ் பிக்கப் எலெக்ட்ரிக் வெர்ஷனின் வெளிப்புறம் க்ளோஸ்டு கிரில், ஸ்லேடெட் டிசைன், இடது புறத்தில் சார்ஜிங் போர்ட், புதிய அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ஃபாக் லேம்ப் ஹவுசிங், பின்புறத்தில் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள், ஃபிளாட் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    "ஊடகம் நம்மை நம்ப வைக்க முயல்வதை விட, எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரும்பான்மையாக மாற அதிக நேரம் எடுத்துக் கொள்ள போகின்றன. உலகின் சுற்றுச்சூழல் மாசில்லா இலக்கை அடைய எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. தனிப்பட்ட முறையில், நான் எல்லா வாய்ப்புகளையும் பின்பற்ற நினைக்கிறேன். இதில் மாசில்லா சின்தெடிக் ஃபியூவல்கள் மற்றும் ஹைட்ரஜன் உள்ளிட்டவையும் அடங்கும்," என டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் அகியோ டொயோட்டா தெரிவித்து இருக்கிறார்.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
    • புது பென்ஸ் கான்செப்ட் காரின் எல்இடி ஹெட்லைட்கள் மெர்சிடிஸ் பென்ஸ் EQS மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் மூன்றாவது சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியை ஒட்டி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் EQXX கான்செப்ட் காரை இந்திய சந்தையில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX மாடல் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX கான்செப்ட் கார் தோற்றத்தில் அசத்தலாக காட்சியளிக்கிறது. இந்த காரில் ஸ்லோபிங் ரூஃப்லைன், பின்புறம் நீண்டு மெல்லியதாக காட்சியளிக்கிறது. இவைதவிர மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX மாடலின் எல்இடி ஹெட்லைட், மெர்சிடிஸ் பென்ஸ் EQS மாடலில் உள்ளதை போன்றே தெரிகிறது. இத்துடன் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், ஃபுல் விட்த் எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளன.

    மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX கான்செப்ட் கார் தோற்றத்தில் ஃபார்முலா 1 கார் போன்று இல்லை என்ற போதிலும், சில தொழில்நுட்பங்கள் ஃபார்முலா 1 காரில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மெர்சிடிஸ் பென்ஸ் காரை பெரிய பேட்டரி பேக்- குறைக்கப்பட்ட எடை மற்றும் கச்சிதமான அளவீடுகளை பெற உதவி இருக்கிறது. அந்த வகையில் இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்த கான்செப்ட் காரில் 241.65 ஹெச்பி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இத்துடன் இந்த காரின் மேற்கூரையில் உள்ள சூரிய தகடுகள் காரின் ரேன்ஜ்-ஐ 25 கிலோமீட்டர்கள் வரை அதிகப்படுத்தும் என மெகர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது.

    ×