என் மலர்tooltip icon

    இது புதுசு

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது eVX கான்செப்ட் ப்ரோடக்‌ஷன் வாகனம் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.
    • 2030 வாக்கில் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர மாருதி சுசுகி திட்டம்.

    மாருதி சுசுகியின் தாய் நிறுவனமான சுசுகி கார்ப்பரேஷன் அடுத்த சில ஆண்டுகளுக்கான வாகன திட்டமிடல் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதுபற்றி அந்நிறுவனம் சமர்பித்து இருக்கும் ஒழுங்குமுறை விண்ணப்பத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து 2030-க்குள் மேலும் ஐந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்திய சந்தையில் மாருதி சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் 2025 ஆண்டில் தான் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் தனது eVX கான்செப்ட்-ஐ காட்சிக்கு வைத்தது.

    எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டு மாருதி சுசுகி அறிமுகம் செய்த முதல் வாகனம் இது ஆகும். இந்த காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அளவில் 4.3 மீட்டர்கள் நீளமாக இருக்கும் என்றும் இதில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கும் என மாருதி சுசுகி அறிவித்து விட்டது.

    15 சதவீதம் முழு எலெக்ட்ரிக் வாகனங்கள், மாற்று எரிபொருள் அதாவது பயோகியாஸ் மற்றும் எத்தனால் சேர்க்கப்பட்ட எரிபொருள் கொண்ட மாடல்கள் 60 சதவீதம், ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்ட மாடல்கள் 25 சதவீதம் என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் மாருதி சுசுகி தொடர்ந்து கவனம் செலுத்த இருக்கிறது.

    பயோகியாஸ் சார்ந்த எரிபொருளை ஊக்குவிக்கும் வகையில், சுசுகி கார்ப்பரேஷன் நிறுவனம் மத்திய அரசுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக சுசுகி சார்பில் பயோகியாஸ் சோதனை திட்டம் துவங்கப்பட இருக்கிறது. இதற்கான யூனிட் முதற்கட்டமாக குஜராத்தில் கட்டமைக்கப்படுகிறது. இது 2024 வாக்கில் பயன்பாட்டுக்கு வரும்.

    இதுதவிர சுசுகி மற்றும் டொயோட்டா இடையேயான கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவில் மாடல்களை பகிர்ந்து கொள்வதோடு, இரு நிறுவனங்கள் இணைந்து புதுவித ஆட்டோமோடிவ் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன. 

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடல் N10 வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
    • புதிய பொலிரோ நியோ மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் எஸ்யுவி டாப் எண்ட் N10 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் ஸ்கை-ரேக், ஃபாக் லைட்கள், ஹெட்லேம்ப் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டீப் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் கவர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் டூயல் டோன் ஃபௌக்ஸ் லெதர் இருக்கைகள், லம்பர் சப்போர்ட், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, சில்வர் ஆர்ம்-ரெஸ்ட் கொண்ட செண்டர் கன்சோல், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், புளூசென்ஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

    புதிய மஹிந்திரா பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலிலும் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • ஜாவா நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் மொத்தத்தில் 100 யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • லிமிடெட் எடிஷன் ஜாவா பைக் டவங்-இல் நடைபெற்ற டோர்க்யா நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜாவாயெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய ஜாவா 42 டவங் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த லிமிடெட் எடிஷன் பிரத்யேகமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மட்டுமே கிடைக்கும். வடகிழக்கு பகுதிகளின் கலாசாரத்தை பரைசாற்றும் வகையிலும், இயற்கை அழகை கொண்டாடும் வகையிலும் இந்த லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    டவங் பகுதியில் டோர்க்யா நிகழ்வில் ஜாவா 42 டவங் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதே நிகழ்வில் புது மாடல்கள் சில வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. லிமிடெட் எடிஷன் என்ற வகையில் இந்த மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தோற்றத்தில் இந்த மாடல் அதன் ஸ்டாண்டர்டு எடிஷன் போன்றே காட்சியளிக்கிறது.

    எனினும், சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க மற்றும் ஃபெண்டர் பகுதியில் லங்டா மொடிஃப் உள்ளது. இத்துடன் வடகிழக்கு பகுதியை குறிக்கும் விசேஷ குறியீடுகள் மற்றும் ஒவ்வொரு யூனிட்டை தனிமைப்படுத்தும் வகையில் எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை தவிர லிமிடெட் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் புதிய ஜாவா 42 டவங் எடிஷனிலும் 293சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.95 ஹெச்பி பவர், 26.84 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 18-17 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

    பிரேக்கிங்கிற்கு இருபுறமும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை சிங்கில் சேனல் அல்லது டூயல் சேனல் ABS செட்டப் உடன் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டவங் எடிஷன் விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும். அந்த வகையில் ஜாவா 42 டவங் எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 94 ஆயிரத்து 142, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது மாடல்களை காட்சிக்கு வைத்தது.
    • டாடா ஹேரியர் EV மாடல் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அனைவரும் கவர்ந்ததோடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு புது கார் மற்றும் கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. இவற்றில் அனைவரின் கவனத்தை ஈர்த்த மாடல்களாக கர்வ், சியெரா EV மற்றும் ஹேரியர் EV போன்றவை அமைந்தன. கர்வ் கூப் எஸ்யுவி மற்றும் ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ஹேரியர் EV மாடல் 16 ஆவது ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் யாரும் எதிர்பாராத வகையில், ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த 5-சீட்டர் எஸ்யுவி மாடல் OMEGA ஆர்கிடெக்ச்சரில் ஜென் 2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ICE பிளாட்ஃபார்ம் என்ற போதிலும், இதில் ஃபிலாட் ஃபுளோர் மற்றும் ஃபியூவல் டேன்க் பகுதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹேரியர் EV மாடல் டூயல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இத்துடன் முதல் முறையாக 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ட்வின் மோட்டார் செட்டப் கொண்ட முதல் டாடா எலெக்ட்ரிக் கார் எனும் பெருமையை ஹேரியர் மாடல் பெறும் என தெரிகிறது. இதன் காரணமாக இந்த மாடல் V2L மற்றும் V2V அம்சங்கள் கிடைக்கும்.

    காரின் வெளிப்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட முன்பறம், புதிய எல்இடி லைட் பார், புதிய ஷட் ஆஃப் முன்புற கிரில், புதிய முன்புற பம்ப்பர், புதிய ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதன் முன்புற ஃபெண்டர்களில் EV பேட்ஜிங், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ரிவைஸ்டு டெயில் லேம்ப்கள், எல்இடி லைட் பார், மேம்பட்ட ரியர் பம்ப்பர் உள்ளது.

    ஹேரியர் EV மாடல் அதன் பெரும்பாலான அம்சங்கள் IC என்ஜின் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டெட் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய ஹேரியர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. 

    • பெண்ட்லி நிறுவனத்தின் புதிய பெண்ட்யகா EWB மாடல் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது பெண்ட்லி EWB காரின் உற்பத்தி பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.

    பெண்ட்லி நிறுவனம் தனது பெண்ட்யகா EWB வெர்ஷனை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB விலை ரூ. 6 கோடி, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் உற்பத்தி அக்டோபர் மாதம் துவங்கியது.

    புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB (எக்ஸ்டென்டட் வீல் பேஸ்) வெர்ஷன் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட 180mm வரை அதிகரித்து இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2995mm-இல் இருந்து 3175mm-ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது காரின் ஒட்டுமொத்த நீளம் 5322mm ஆகும். இதன் காரணமாக இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைத்திருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில் "ஏர்லைன் சீட்ஸ்" வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆட்டோ கிளைமேட் சென்சிங் சிஸ்டம் உள்ளது. இதில் உள்ள பிஸ்னஸ் சீட் அம்சம் அதன் தனித்துவம் மிக்க நிலைக்கு மாறிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ரிலாக்ஸ் மோட் கொண்டு இருக்கையை 40-டிகிரி அளவுக்கு ரிக்லைன் செய்து கொள்ள முடியும்.

    பெண்ட்யகா EWB மாடலில் பவர் க்ளோசிங் கதவுகள், ஹீடெட் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் டோர், ஆல் வீல் ஸ்டீரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மூன்று வித இருக்கை அமைப்புகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கிடைக்கிறது.

    புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 ஹெச்பி பவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.6 நொடிகளில் எட்டிவிடும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது கார் வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் டாடா நிறுவனம் தனது புதிய CNG கார்களை காட்சிப்படுத்தி இருந்தது.

    ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG வெர்ஷன்களை காட்சிக்கு வைத்து இருந்தது. இரு மாடல்களும் இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டியாகோ, டிகோர் மற்றும் டியாகோ NRG போன்ற கார்களின் CNG வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    இந்த பட்டியலில் அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG வெர்ஷன்கள் இணை இருக்கின்றன. இதன் CNG வேரியண்டில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் பெட்ரோல் மோடில் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் 77 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் CNG மற்றும் பன்ச் CNG மாடல்களை நேரடியாக CNG மோடில் இருந்தே ஸ்டார்ட் செய்ய முடியும். வழக்கமாக கார்களின் பெட்ரோல் வேரியண்ட் உடன் ஒப்பிடும், CNG வெர்ஷனில் பூட் ஸ்பேஸ் குறைவாக இருக்கும்.

    எனினும், டாடா நிறுவனம் கண்டறிந்து இருக்கும் டுவின்-சிலிண்டர் முறையில், 60 லிட்டர் கியாஸ் டேன்க் வழங்கப்படுகிறது. அதன்படி காரின் பூட் ஸ்பேஸ் பாதிக்கப்படாது. பூட்லிட் மீது i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் இண்டீரியர் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறது. இரு கார்களில் அல்ட்ரோஸ் மாடல் பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும்.

    இந்திய சந்தையில் அல்ட்ரோஸ் CNG மாடல் பலேனோ CNG மற்றும் கிளான்சா CNG மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடலில் ரியர் ஏசி வெண்ட்கள், முன்புறம் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியுடன் டிரைவர் சீட், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய டாடா பன்ச் CNG மாடலுக்கு போட்டியாக இதுவரை எந்த மாடலும் சந்தையில் கிடைக்கவில்லை. எனினும், ஹூண்டாய் நிறுவனம் இந்த நிலையை மாற்றும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த மாடலில் CNG பவர்டிரெயின் ஆப்ஷன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மிட்சைஸ் எஸ்யுவி மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
    • கிராண்ட் விட்டாரா மாடலின் பெரும்பாலன அம்சங்கள் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யுவி மற்று்ம கிராண்ட் விட்டாரா மிட்சைஸ் எஸ்யுவி மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்ததில் இருந்தே இரு மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவற்றை தொடர்ந்து Fronx காம்பேக்ட் கூப் எஸ்யுவி, 5-டோர் ஜிம்னி லைஃப்ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யுவி உள்ளிட்ட மாடல்களையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், புது கார்கள் மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் மூன்று ரோ வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் Y17 குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கார் டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டார் பிளஸ், மஹிந்திரா XUV700 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் பெரும்பாலன அம்சங்கள் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட K15C மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது.

    • ஹாப் எலெக்ட்ரிக் நிறுவன்தின் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 52 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    • ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அந்நிறுவன வலைதளம், எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் நடைபெற இருக்கிறது.

    ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹை-ஸ்பீடு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹாப் எலெக்ட்ரிக் நிறுவன வழக்கப்படி குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும். முற்றிலும் புதிய ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 52 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 120 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் ஹை ஸ்பீடு வேரியண்ட் எஃப்ளோ தொழில்நுட்பம், 72 வோல்ட் ஆர்கிடெக்ச்சரில் கிடைக்கும். இதில் உள்ள மோட்டார் 2200 வாட் பீக் பவர் மற்றும் 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இது எண்ட்ரி லெவல் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். இதில் உள்ள பிஎல்டிசி ஹப் மோட்டார் எஃப்ஒசி வெக்டார் கண்ட்ரோல் உடன் சேர்ந்து ஸ்கூட்டரை எளிமையாக கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. இதில் உள்ள 2.1 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    இதில் உள்ள பேட்டரியை 850 வாட் ஸ்மார்ட் சார்ஜர் மூலம் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும். இதில் உள்ள மேம்பட்ட லித்தியம் அயன் பேட்டரி, அதிக செயல்திறன் மற்றும் நீண்ட காலம் உழைக்கும். 2.1 கிலோவாட் ஹவர் பேட்டரியில் அதிக மின்சக்தியை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது. இது நீண்ட நேர பயன்பாட்டிற்கு உதவும்.

    ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: இகோ, பவர், ஸ்போர்ட் மற்றும் ரிவர்ஸ் என நான்கு வித ரைடிங் மோட்கள் உள்ளன. இதன் முன்புறம் அப்ரைட் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் லோட் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர் உள்ளது. இத்துடன் டிஸ்க் பிரேக், காம்பி பிரேக் சிஸ்டம், ரிஜெனரேடிவ் பிரேகிங் போன்ற வசதிகள் உள்ளன.

    Photo Courtesy: Rushlane

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2023 X7 கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது.
    • புதிய பிஎம்டபிள்யூ காரின் முன்பதிவு துவங்கிவிட்ட நிலையில், வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய X7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் - X7 xடிரைவ்40i M ஸ்போர்ட் மற்றும் X7 xடிரைவ்40d ஸ்போர்ட் என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 கோடியே 22 லட்சம் மற்றும் ரூ. 1 கோடியே 24 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 பிஎம்டபிள்யூ X7 xடிரைவ்40i M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 376 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய X7 xடிரைவ்40d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இருவித என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ xடிரைவ் ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஸ்கை லாஞ்ச் பானரோமிக் சன்ரூஃப், 14 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைடிங், 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 14.9 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, நான்கு ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 16 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் வெளிப்புறம் பெரிய கிட்னி கிரில், க்ரோம் அக்செண்ட்கள், புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், 3D டெயில் லேம்ப்கள், புதிய இன்னர் கிராஃபிக்ஸ், ஸ்மோக்டு கிளாஸ் உள்ளது. புதிய X7 காரின் இரண்டு வேரியண்ட்களும் பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வினியோகம் மார்ச் 2023 வாக்கில் துவங்க இருக்கிறது.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமகாகிறது.
    • முன்னதாக இந்த எலெக்ட்ரிக் கார் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    சிட்ரோயன் நிறுவனம் தனது பிரபலமான C3 காம்பேக்ட் ஹேச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மாடல் வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சிட்ரோயன் eC3 மாடலின் புது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த கார் டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் eC3 மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. சமீபத்திய டீசர்களில் எலெக்ட்ரிக் ஹேச்பேக் முன்புறம் எப்படி காட்சியளிக்கும் என தெளிவாக தெரியவந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் அதன் IC- என்ஜின் கொண்ட மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் முன்புற ஃபெண்டரில் டெயில்பைப் நீக்கப்பட்டு, சார்ஜிங் போர்ட் வழங்கப்படுவது மட்டுமே புது மாற்றமாக இருக்கும் என தெரிகிறது. இதன் முன்புறம் டபுள் செவ்ரான் கிரில், ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. ஆக்டகோனல் வடிவ ஏர் இண்டேக், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட லைட்டிங் யூனிட் மற்றும் ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    இந்த காரில் 10.2 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீல் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய eC3 மாடலில் லித்தியம் அயன் ஃபாஸ்ஃபேட் செல்களை பயன்படுத்த சிட்ரோயன் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    புதிய சிட்ரோயன் eC3 மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த செட்டப் 84 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.3 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 350 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உயரமான ஸ்டான்ஸ் கொண்டிருக்கிறது.
    • புது ஹோண்டா பைக் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் பிரிவில் விற்பனைக்கு நிலை நிறுத்தப்பட இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் மோட்டார்சைககிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற பென்ச்மார்க்கிங்கின் போது இந்த மாடல் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS போன்ற மாடல்களுடன் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது. அறிமுகமாகும் பட்சத்தில் இந்திய சந்தையில் இது ஹோண்டா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்படலாம். இந்தியாவில் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் பிரிவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த பிரிவில் ஹோண்டா ஏற்கனவே XRE300 மாடலை இந்தியாவில் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.

    டூயல் ஸ்போர்ட் பைக் என்ற வகையில், ஹோண்டா XRE300 மாடல் ரோடு-சார்ந்த மாடல்களான கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். எனினும், இந்த பைக் உயரமான ஸ்டான்ஸ் கொண்டிருக்கிறது. இதன் முன்புற ஃபேரிங் தவிர மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த தோற்றம் மெல்லியதாகவே காட்சியளிக்கிறது.

    புதிய ஹோண்டா XRE300 மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், உரமான ஃபெண்டர் பீக், அசத்தலான ஹெட்லேம்ப் கவுல், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட ஃபியூவல் டேன்க், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அண்டர்சீட் எக்சாஸ்ட் மற்றும் லக்கேஜ் ராக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஏற்கனவே பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் நிலையில், ஹோண்டா XRE300 மாடல் 291.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் ஃபிலெக்ஸ் ஃபியூவல் யூனிட் ஆகும். இது பெட்ரோல் மற்றும் எத்தனால் உள்ளிட்டவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பெட்ரோலில் இயங்கும் போது இந்த யூனிட் 25.4 ஹெச்பி பவர், 27.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. எத்தனாலில் இயங்கும் போது இந்த என்ஜின் 25.6 ஹெச்பி பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: Motorbeam

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சூப்பர் மீடியோர் 650 இந்தியாவில் அந்நிறுவனத்தின் மூன்றாவது 650சிசி மோட்டார்சைக்கிள் ஆகும்.
    • புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் விவரங்கள் ராயல் என்பீல்டு ரைடர் மேனியா நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது சூப்பர் மீடியோர் 650 மாடல் அறிமுக தேதியை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த மாடலின் விலை விவரங்கள் அதே நாளில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    முன்னதாக நவம்பர் மாத வாக்கில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ரைடர் மேனியா 2022 நிகழ்வில் சூப்பர் மீடியோர் 650 அறிவிக்கப்பட்டது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்றாவது மற்றும் அதிக பிரீமியம் மிடில்வெயிட் மாடல் ஆகும். இதில் எல்இடி ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள், ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்ப்லிட் சீட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 648சிசி ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் இண்டர்செப்டார் மற்றும் காண்டினென்டல் ஜிடி 650 போன்ற மாடல்களில் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் பெரிய டயல், ஸ்பீடோமீட்டர், ட்ரிப்மீட்டர், ஒடோமீட்டர், ஃபியூவல் லெவல் ரீட்-அவுட் உள்ளது.

    இதன் சிறிய டயலில் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ரியர் ஷாக் கொண்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஆகும். பிரேக்கிங்கிற்கு முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இந்த மாடலுக்கான முன்பதிவுகளும் துங்க இருக்கிறது.

    ×