என் மலர்tooltip icon

    இது புதுசு

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
    • புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா வாங்க விரும்புவோர் இதனை ரூ. 25 ஆயிரம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா கார் ஏழு மோனோடோன் மற்றும் இருவித டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இதுதவிர 1.5 MPi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 6MT மற்றும் இண்டெலிஜண்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரண்டு என்ஜின்களும் RDE விதிகளுக்கு உட்பட்டு E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    "இன்று, எங்களின் அடுத்த தலைமுறை பாரம்பரிய செடான்- முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலின் முன்பதிவு துவங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 16 ஆண்டுகளாக, சுமார் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிக மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை வெர்னா மாடல் பெற்று பாரம்பரிய அந்தஸ்துடன் உள்ளது."

    "முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் தலைசிறந்த செயல்திறன் மூலம் அலாதியான டிரைவிங் அனுபவத்தை வழங்க இருக்கிறது. இந்த பிரிவில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை இந்த செடான் மாடல் பூர்த்தி செய்யும்," என ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவன மூத்த நிர்வாக அதிகாரி தருக் கார்க் தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவை சேர்ந்த எஸ்யுவி உற்பத்தியாளரான மஹிந்திரா தனது BE Rall-E எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை ஃபார்முலா E ஐதராபாத் E-ப்ரிக்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XUV.e9 மற்றும் BE.05 EV கான்செப்ட்களையும் இந்திய பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. இரு கார்களின் உற்பத்தியும் இந்த தசாப்தத்திலேயே துவங்கும் என தெரிகிறது.

    மஹிந்திரா BE Rall-E எலெக்ட்ரிக் கான்செப்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பார்ன் எலெக்ட்ரிக் பிரிவின் புதுவரவு மாடல் ஆகும். இந்த கார் பார்ன் எலெக்ட்ரிக் சீரிசை தழுவிய டிசைன் கொண்டிருக்கிறது. எனினும், இது ஆஃப்-ரோட் மாடலாக உருவாகி வருகிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன் உள்ளது.

    இத்துடன் சில்வர் பேஷ் பிளேட், சற்றே தடிமனான வீல்ஆர்ச்கள், ஏரோ வீல்கள், மேக்சிஸ் ஆல்-டெரைன் டையர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ரூஃப் ரேக் ஸ்பேர் வீல் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் மெல்லிய டெயில் லைட்கள், தடிமனான பம்ப்பர் மற்றும் பேஷ் பிளேட் உள்ளது. மற்ற பார்ன் எலெக்ட்ரிக் மாடல்களை போன்றே BE Rall-E கான்செப்ட் மாடலும் IN-GLO ஸ்கேட்போர்டு EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பேட்டரி விவரங்கள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை.

    இத்துடன் மஹிந்திரா நிறுவனம் XUV.e9 எலெக்ட்ரிக் எஸ்யுவியை முதல்முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தியது. கடந்த ஆண்டு லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மஹிந்திராவின் புதிய XUV.e சீரிசில் ஃபிளாக்ஷிப் மாடலாக XUV.e9 இருக்கும்.

    இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-இல் எல்இடி டிஆர்எல்கள் காரின் முன்புறம் முழுக்க படர்ந்து இருக்கின்றன. இதன் ஹெட்லேம்ப்கள் செங்குத்தாக முன்புற பம்ப்பர் மீது பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம், பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் பிளாஸ்டிக் கிளாடிங் காணப்படுகின்றன. இத்துடன் காரை சுற்றி காப்பர் அக்செண்ட்களும் உள்ளன.

    இரு கார்களை தொடர்ந்து BE.05 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யையும் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த கார் அளவில் 4370mm நீளம், 1900mm அகலம், 1635mm உயரம் மற்றும் 2775mm வீல்பேஸ் கொண்டுள்ளது. 2025 ஆண்டு இறுதியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரும் IN-GLO பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 60 அல்லது 80 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம். 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய டிசையர் டூர் S மாடல் பாதுகாப்பு அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டது.
    • புதிய டிசையர் டூர் S CNG மாடல் 32.12 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டிசையர் டூர் S மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய காம்பேக்ட் செடான் இந்திய விலை ரூ. 6 லட்சத்து 51 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 36 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எர்டிகா டூர் M மற்றும் வேகன் ஆர் டூர் H3 வரிசையில் புதிய டூர் S மாடல் இணைந்துள்ளது. புதிய மாருதி சுசுகி டிசையர் டூர் S மாடல் அரீனா மற்றும் வர்த்தக விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய டூர் S மாடல் மாருதி சுசுகி 3rd Gen டிசையர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆர்க்டிக் வைட், மிட்நைட் பிளாக் மற்றும் சில்கி சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய டூர் S மாடல் தோற்றத்தில் தற்போதைய டிசையர் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்டீல் வீல்கள், பிளாக் டோர் ஹேண்டில்கள், மிரர் கேப்கள், டெயில்கேட் மீது "Tour S" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. உபகரணங்களை பொருத்தவரை டூர் S மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், மேனுவல் ஏசி மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் டோர் லாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பாதுகாப்பிற்கு எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டூயல் ஏர்பேக், ISOFIX சீட் ஆன்கரேஜ்கள் உள்ளன. புதிய டிசையர் டூர் S மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் பெட்ரோல் மோடில் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    CNG மோடில் இந்த என்ஜின் 77 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மோடில் புதிய டிசையர் டூர் S மாடல் லிட்டருக்கு 23.15 கிலோமீட்டரும், CNG மோடில் இந்த கார் 32.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. இது தற்போதைய மாடலை விட 21 சதவீதம் அதிக மைலேஜ் வழங்குகிறது.

    • ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் விலை ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெஷல் எடிஷன் ஜீப் மெரிடியன் மாடல் லிமிடெட் 4x2 மேனுவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிளப் எடிஷன் மெரிடியன் எஸ்யுவி விலை அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் குறைவு ஆகும். கிளப் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. லிமிடெட் வேரியண்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் புதிய கிளப் எடிஷன் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி டூயல்-டோன் பெயிண்ட், சைடு-ரெயில்-மவுண்ட் செய்யப்பட்ட ரூஃப் ரேக் உள்ளிட்டவை கிளப் எடிஷன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்-பீஸ் சைடு ஸ்டெப், காண்டிராஸ்ட் பிளாக் நிற டீகல்கள், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர காரின் கேபின் பகுதியில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் மெரிடியன் மாடலின் கேபின் பகுதியில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆல்பைன் ஸ்டீரியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மெரிடியன் கிளப் எடிஷனில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

    புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மிகவும் சக்திவாய்ந்த M3 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது M3 காம்படிஷன் மாடலை விட 40ஹெச்பி அதிக திறன் கொண்டுள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த M3 காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் DTM ரேஸ் கார் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரில் விசேஷ சேசிஸ் மாட்கள் மற்றும் லிமிடெட் ப்ரோடக்ஷன் வேரியண்ட் ஆகும்.

    M3 CSL போன்றே புதிய M3 CS மாடலில் உள்ள S58 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஸ்டிரெயிட்-சிக்ஸ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இது M3 காம்படிஷன் மாடலை விட 40 ஹெச்பி அதிகம் ஆகும். இதே என்ஜின் M4 GT3 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், ரேஸ் காரில் ஏராள மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாடல்களில் ரிகிட் கிரான்க்-கேஸ், ஐயன்-கோட் செய்யப்பட்ட சிலிண்டர் போர்கள், ஃபோர்ஜ் செய்யப்பட்ட கிரான்க்ஷாஃப்ட், 3டி ப்ரிண்ட் செய்யப்பட்ட ஹெட்-கோர், மேம்பட்ட கூலண்ட் டக்ட்கள் மற்றும் விசேஷ ஆயில் சப்ளை சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும். இதன் காரணமாக பிஎம்டபிள்யூ M3 CS மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள என்ஜின் அதிகபட்சமாக 640 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய M3 CS மாடல் RWD ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 302 கிலோமீட்டரில் மின்முறையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. விசேஷ என்ஜின் மவுண்டிங் காரணமாக ஸ்ப்ரிங் ரேட் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை 19 இன்ச் முன்புறமும், பின்புறம் 20 இன்ச் அளவு கொண்ட கார்பன் செராமிக் யூனிட்கள் ஆகும்.

    ஃபோர்ஜ் செய்யப்பட்ட M-ஸ்பெக் அலாய் வீல்கள் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் 4S டிராக்-ரெடி ரப்பரில் ராப் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்பன்-ஃபைபர்-ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ M3 CS மொத்த எடை 1855 கிலோ ஆகும். இந்த கார் மொத்தத்தில் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், மார்ச் மாத வாக்கில் இதன் உற்பத்தி துவங்கி, அதன் பின் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

    • டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
    • புதிய டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் பிஎம்டபிள்யூ G310 R மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக தகவல்.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் விரைவில் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளை இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் அபாச்சி RTR 310 பெயரில் அறிமுகமாகும் என்றும் இது பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் G310 R மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 310 விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய RTR 310 மாடலில் அபாச்சி RR 310 பைக்கில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அபாச்சி RR 310 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட G310 RR பைக்கை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது.

    ஜெர்மனியை சேர்ந்த பிஎம்பிள்யூ நிறுவனத்திற்கு அதிக விற்பனையை ஈட்டித் தரும் மாடலாக RR-310 சார்ந்த பிஎம்பிள்யூ G310 RR உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கும் இந்த மோட்டார்சைக்கிள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடலின் விலை RR 310-ஐ விட ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடலில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை 312சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 34 பிஎஸ் பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படலாம்.

    Photo Courtesy: GaadiWaadi

    • வால்வோ நிறுவனத்தின் புதிய எண்ட்ரி-லெவல் எஸ்யுவி பல்வேறு பேட்டரி மற்றும் ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
    • 2025 வாக்கில் உலகம் முழுக்க ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய வால்வோ திட்டம்.

    உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கணிசமான பங்குகளை பெறும் நோக்கில் வால்வோ கார்ஸ் நிறுவனம் அளவில் சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியா, ASEAN மற்றும் இதர ஆசிய பசிபிக் நாடுகளில் கவனம் செலுத்தும் நோக்கில், இந்த திட்டத்தை வால்வோ கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.

    புதிய சிறிய எலெக்ட்ரிக் வாகனம் 2023 கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்ப எண்ட்ரி லெவல் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என வால்வோ கார்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜிம் ரோவன் தெரிவித்து இருக்கிறார்.

    "முழு பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த பல்வேறு நாடுகள் முன்வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது. சிறிய எஸ்யுவி-யை கொண்டு வருவதன் மூலம், நாங்கள் இந்த நாடுகளில் சிறந்து செயல்பட முடியும். குறைந்த கட்டணத்தில் ஏராளமான பேட்டரி அளவுகளில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகமாகும்."

    "வாடிக்கையாளர்கள் ஏராளமான ரேன்ஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை பட்டியலில் இருந்து வாகனத்தை தேர்வு செய்ய முடியும். புது சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இருவித பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்," என ரோவன் தெரிவித்தார்.

    வால்வோ நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி உருவாகி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2030 வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாறும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்த நிறுவனங்களில் வால்வோ கார்ஸ் ஒன்று ஆகும்.

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ADAS தொழில்நுட்பம் வழங்கப்படும் என தகவல்.
    • கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

    கியா செல்டோஸ் எஸ்யுவி மாடல் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக 2022 ஜூன் மாத வாக்கில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெளியீட்டிற்கு முன் இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி வருகின்றன.

    புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 160 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 140 ஹெச்பி பவர், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்ற வகையில், செல்டோஸ் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற ஹெட்லேம்ப்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைனை எதிர்பார்க்கலாம். காரின் பின்புறம் டெயில் லேம்ப் மற்றும் எல்இடி லைட் பார் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் மத்தியில் கியா பேட்ஜ் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் மாடலை லண்டனில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் யூரோப் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் பிப்ரவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மஹிந்திராவின் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்கள் XUV.e மற்றும் BE பிரிவுகளின் கீழ் வரிசைப்படுத்தப்பட உள்ளன. மஹிந்திரா XUV.e பிரிவின் கீழ் இரண்டு மாடல்களும் BE பிரிவின் கீழ் மூன்று மாடல்களும் இடம்பெற்று இருக்கின்றன. இரு மாடல் பிரிவுகளும் முற்றிலும் பிரத்யேக டிசைன் மொழி மற்றும் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வருகின்றன. XUV.e பிரிவில் உள்ள மாடல்களின் உற்பத்தி டிசம்பர் 2024 வாக்கில் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 2025 வாக்கில் BE பிரிவு மாடல்களின் உற்பத்தி துவங்க இருக்கிறது.

    IC என்ஜின் மாடல்களில் மஹிந்திராவின் XUV பிராண்டு மிகவும் பிரபலம் ஆகும். தற்போது எலெக்ட்ரிக் பிரிவிலும் இதே நிலையை அடைய மஹிந்திரா பணியாற்றி வருகிறது. XUV சீரிசில் உள்ள டுவின் பீக் லோகோ காப்பர் ஃபினிஷ் மஹிந்திரா XUV400 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. XUV.e8 மாடல் ஏற்கனவே மஹிந்திரா விற்பனை செய்து வரும் XUV700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.

    இதைத் தொடர்ந்து XUV.e9 மாடல் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் ஆகும். இது கூப் போன்ற டிசைன் கொண்ட மஹிந்திரா XUV9 உற்பத்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. மஹிந்திராவின் BE ரக எலெக்ட்ரிக் வாகனம் 2025 வாக்கில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வித்தியாசமான சி வடிவ எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் ஷார்ப் கட் பாடி சர்ஃபேஸ் கொண்டிருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வென்யூ மாடல் சக்திவாய்ந்த டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • சக்திவாய்ந்த என்ஜின் மட்டுமின்றி புது காரில் சில அம்சங்களும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் மேம்பட்ட 2023 வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் வென்யூ மாடலில் சக்திவாய்ந்த டீசல் என்ஜின் மற்றும் அம்சங்கள் பட்டியலில் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 68 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய வென்யூ மாடலில் உள்ள டீசல் என்ஜின் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களை போன்றே 115 பிஎஸ் பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. முன்னதாக இதே என்ஜின் 100 பிஎஸ் பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருந்தது.

    2023 ஹூண்டாய் வென்யூ மாடலில் இந்த என்ஜின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடல் டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரில் உள்ள சக்திவாய்ந்த என்ஜின் போட்டி நிறுவன மாடல்களுக்கு போட்டியை பலப்படுத்தும்.

    இத்துடன் புதிய ஹூண்டாய் வென்யூ மாடலில் ஆட்டோமேடிக் ஹெட்லைட்கள், என்ஜின் இம்மொபைலைசர், பர்க்லர் அலாரம், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரிவர்சிங் கேமரா, டைனமிக் கைடுலைன்கள் உள்ள. காரின் உள்புறம் டீசல் SX வேரியண்டில் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர், ரியர் சீட் ரிக்லைனர் போன்ற வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. இவை தற்போது டாப் எண்ட் SX (O) வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 2023 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது வென்யூ மாடலில் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2023 வென்யூ மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்று இல்லாமல், இது வருடாந்திர அப்டேட் ஆக இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புது ஹூண்டாய் எஸ்யுவி அம்சங்கள் சற்றே மாற்றப்பட்டு இருக்கும்.

    புது மாடல் குறித்து லீக் ஆகி இருக்கும் தகவல்களில் 2023 ஹூண்டாய் வென்யூ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது 113 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புது ஹூண்டாய் வென்யூ மாடல் - S+, SX மற்றும் SX(O) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    2023 அப்டேட்டை தொடர்ந்து முன்னதாக S பேஸ் வேரியண்ட் டீசல் மாடலில் உள்ள சில அம்சங்கள், டாப் எண்ட் SX வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கார்னெரிங் லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பக்கவாட்டு ஏர்பேக் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ரிக்லைனிங் ரியர் சீட்கள், ரியர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை டாப் எண்ட் SX(O) மாடலில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல் வேரியண்ட்களில் பக்கவாட்டு ஏர்பேக் மிட் வேரியண்ட் ஆன S (O)-வில் மட்டுமே வழங்கப்படுகிறது. புது வென்யூ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்கள் வழங்கப்படுகிறது. இவற்றின் செயல்திறன் அளவுகளில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது.

    வரும் வாரங்களில் புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை ஓரளவு அதிகமாகவே இருக்கும்.

    • பியூர் EV நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பைக் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
    • புது பியூர் EV எலெக்ட்ரிக் பைக்கில் 3.0 கிலோவாட் ஹவர் AIS சான்று பெற்ற பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐதராபாத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான பியூர் EV இந்திய சந்தையில் இகோட்ரிஃப்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பியூர் EV இகோட்ரிஃப்ட் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை டெல்லியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு இகோட்ரிஃப்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது பியூர் EV எலெக்ட்ரிக் பைக் வினியோகம் மார்ச் 1 ஆம் தேதி துவங்குகிறது. பியூர் EV இகோட்ரிஃப்ட் மாடலில் 3.0 கிலோவாட் ஹவர் AIS 156 சான்று பெற்ற பேட்டரி உள்ளது.

    இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 130 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும். 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும். புதிய இகோட்ரிஃப்ட்- டிரைவ், கிராஸ் ஒவர் மற்றும் த்ரில் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள டிரைவ் மோட் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும். கிராஸ் ஒவர் மோடில் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலும், த்ரில் மோட் மணிக்கு அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 4.2 ஹெச்பி பவர் பவர் வெளிப்படுத்துகிறது.

    ×