என் மலர்
கார்
ஃபெராரி நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஃபெராரி நிறுவனம் தனது புதிய சூப்பர்காரின் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தசாப்தங்களில் ஃபெராரி சூப்பர்கார் மாடல்கள் செயல்திறன் அடிப்படையில் அதிகளவு மாற்றங்களை பெற்றிருக்கிறது.
அந்த வரிசையில் ஃபெராரி 488 GTB டர்போசார்ஜ் செய்யப்பட்ட முதல் மாடலாக இருந்தது. காரின் வெளிப்புறம் பார்க்க ஃபெராரி 488 பிஸ்தா மற்றும் எஃப்8 ட்ரிபுடோ மாடல்களை தழுவி உருவாகி இருப்பதை உணர்த்துகிறது. டீசர் வீடியோவின் படி புதிய சூப்பர்காரில் ரேசர்-ஷார்ப் ப்ரோஃபைல் காரின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

இதன் ஆங்குலர் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், பின்புறம் குவாட் டெயில்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் எக்சாஸ்ட் பைப்களும், ஸ்பாயிலரும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சூப்பர்கார் 3.9 லிட்டர் பை-டர்போ வி8 மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மோட்டார் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும் என கூறப்படுகிறது. இதில் இரு மோட்டார்கள் முனபு்ற ஆக்சிலிலும், ஒன்று கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் என தெரிகிறது.
ஆல்-வீல் டிரைவ் செட்டப் கொண்டிருக்கும் புதிய சூப்பர்கார் 972 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மணிக்கு மூன்று இலக்க வேகத்தை வெறும் 2.0 நொடிகளில் எட்டும் திறன் என கூறப்படுகிறது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது முதல் வாகனமான ஹெக்டார் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. எம்.ஜி. ஹெக்டார் கார் இந்தியாவில் ஜூன் 2019 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எம்.ஜி. ஹெக்டார் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை மற்றும் கோவா பகுதிகளில் விரைவில் துவங்கப்பட இருக்கும் எம்.ஜி. மோட்டார் விற்பனையாளர்கள் புதிய காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதிய காருக்கான முன்பதிவுகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.51,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை விற்பனையகங்கள் நிறுவப்படாத நிலையில், முதல் விற்பனையகம் டெல்லியில் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.
புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வெர்ஷன் 48வோல்ட் ஹைப்ரிட் செட்டப் உடன் கிடைக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 14.16 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரிண்ட் லிட்டருக்கு 13.94 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற என்ஜின் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் இந்த என்ஜின் லிட்டருக்கு 17.41 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.
காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு ஒரு சர் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் ஆடியோ செட்டப் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 360-டிகிரி கேமரா, குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு எம்.ஜி. ஹெக்டார் காரில் 6 ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி திட்டம், டிராக்ஷன் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய எம்.ஜி. ஹெக்டார் கார் டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மற்றும் ஹூன்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் தனது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் லேண்ட் ரோவர் ஸ்போர்ட் எஸ்.யு.வி. காரை புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த என்ஜின் எஸ். எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. உள்ளிட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ட்ரிம்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 292.6 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடலுக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய என்ஜினுடன் அறிமுகமாகி இருக்கும் 2019 மாடல் மேலும் அதிகளவு வாடிக்கையாளர்களை கவரும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்தார்.

என்ஜின் தவிர இந்த மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த வாகனத்தில் எல்.இ.டி. டி.ஆர்.எல்., முன்புறம் கருப்பு நிற கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கேரக்டர் லைன் பொனெட் முதல் காரின் பின்புறம் வரை வழங்கப்படுகிறது.
இத்துடன் பானரோமிக் சன்-ரூஃப், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் இன்டராக்டிவ் டிரைவர் டிஸ்ப்ளே சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே (ஹெச்.யு.டி.) மற்றும் ஜாகுவாரின் டச் ப்ரோ டுயோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தவிர ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 254.79 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. புதிய கார் விலை இந்தியாவில் ரூ.86.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் காரின் முழு விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் முற்றிலும் உதிரி பாகமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூப்பர் எஸ் மாடலை விட இதன் விலை ரூ.9.2 லட்சம் அதிகமாகும். தற்சமயம் கூப்பர் எஸ் மாடல் விலை ரூ.34.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று கதவுகளைக் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக வெளியாகியுள்ள இந்த கார் 231 ஹெச்.பி. திறனும், 320 என்.எம். டார்க் இழுவிசையும் கொண்டதாகும். இந்த கார் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இதில் 8 ஸ்பீடுகியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

கூப்பர் எஸ் மாடலில் 7 கியர்கள் மட்டுமே உள்ளன. புதிய மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் பத்து அழகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வித்தியாசமான வண்ணக் கலவைகளைக் கொண்டதாக இது உள்ளது. மேற்கூரை மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒரு நிறத்தில் உள்ளது.
இதற்கு 17 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. மேட்ரிக்ஸ் எல்.இ.டி. விளக்கு, மேற்கூரை ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. தேவைப்பட்டால் 18 அங்குலம் கொண்ட சக்கரங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதன் உள்பகுதி மிகச் சிறப்பாக உள்ளது. முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார் உள்ளது. அத்துடன் ரிவர்ஸ் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் சஸ்பென்ஷன் இருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் வசதியும் உள்ளது.
மூன்று கதவுகளைக் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக வெளியாகியுள்ள இந்த கார் 231 ஹெச்.பி. திறனும், 320 என்.எம். டார்க் இழுவிசையும் கொண்டதாகும். இந்த கார் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இதில் 8 ஸ்பீடுகியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

கூப்பர் எஸ் மாடலில் 7 கியர்கள் மட்டுமே உள்ளன. புதிய மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் பத்து அழகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வித்தியாசமான வண்ணக் கலவைகளைக் கொண்டதாக இது உள்ளது. மேற்கூரை மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒரு நிறத்தில் உள்ளது.
இதற்கு 17 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. மேட்ரிக்ஸ் எல்.இ.டி. விளக்கு, மேற்கூரை ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. தேவைப்பட்டால் 18 அங்குலம் கொண்ட சக்கரங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதன் உள்பகுதி மிகச் சிறப்பாக உள்ளது. முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார் உள்ளது. அத்துடன் ரிவர்ஸ் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் சஸ்பென்ஷன் இருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் வசதியும் உள்ளது.
ஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜப்பான் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஹோன்டா தனது எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இ ப்ரோடோடைப் என்ற பெயர் கொண்டிருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த கார் 2017 ஃபிரான்க்புர்ட் மோட்டார் விழா மற்றும் ஜெனிவா மோட்டார் விழாக்களில் பிரீவியூ செய்யப்பட்டது. இத்துடன் அடுத்த தலைமுறை ஜாஸ் கார் மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் உடன் வெளியாகும் என்றும் ஹோன்டா தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ரெட்ரோ-ஸ்டைல் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை ஹோன்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. முன்னதாக ஜெனிவா மோட்டார் விழாவில் ஹோன்டா தனது இ ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த கார் உற்பத்திக்கு தயாராகி இருப்பதாக ஹோனடா தெரிவித்தது.

ஹோன்டா இ சிறிய காராக உருவாகி வருகிறது. இது 3895 எம்.எம். நீளம், 1750 எம்.எம். அகலம் மற்றும் 1495 எம்.எம். உயரம் கொண்டிருக்கிறது. ஹோன்டா இ கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. ஹோன்டாவின் எலெக்ட்ரிக் இ ஹேட்ச்பேக் காரின் உயரம் சிலருக்கு சவுகரியமற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.
எனினும், இதுவரை ஐரோப்பாவில் மட்டும் ஹோன்டா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் காருக்கு 22,000 பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஹோன்டா அறிவித்துள்ளது. இத்துடன் ஹோன்டா தனது அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹோன்டா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஜாஸ் கார் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்றும் உறுதியாக தெரிவித்திருக்கிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் கார் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது ஸ்பையர் செடான் காரின் புளு எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் செடான் ஆஸ்பையர் காரின் ஸ்பெஷல் புளு எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆஸ்பையர் புளு கார் அழகிய வடிவமைப்பு, சிறப்பான தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஆஸ்பையர் புளு பெட்ரோல் எடிஷன் விலை ரூ.7,50,900 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டீசல் எடிஷன் விலை ரூ.8,30,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆஸ்பையர் புளு: வைட், மூன்டஸ்ட் சில்வர் மற்றும் ஸ்மோக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் 3-சிலிண்டர், 1.2 லிட்டர் TiVCT பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 93 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 20.4 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்பையர் புளு டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் TDCi என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 26.1 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் பிரீமியம் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், 15-இன்ச் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அழகிய புளு தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் லெதர் ராப் செய்யப்பட்டுள்ளது. கேபினில் புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் யு.எஸ்.பி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.), இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7-இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, பின்புற கேமரா, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், தானியங்கி ஏ.சி. மற்றும் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை முதலில் இந்த வேரியண்ட்டில் தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors
இந்திய சந்தையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 4 மீட்டருக்கும் குறைவான கார்களில் டீசல் என்ஜின்களை வழங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றன. மேலும், ஒருசில நிறுவனங்கள் விரைவில் இது சார்ந்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றன.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் காரில் தற்சமயம் நெக்சான் காரில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் என்ஜினின் டி-டியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக அல்ட்ரோஸ் காரின் செயல்திறன் குறையும். டி-டியூன் செய்யப்பட்ட என்ஜின் 91 பி.ஹெச்.பி. பவர், 210 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என்றும் இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும் என தெரிகிறது. நெக்சான் காரில் இருக்கும் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் டாடா அல்ட்ரோஸ் காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் இந்த காரில் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் அலாய் வீல்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமானதும் புதிய டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, ஹூன்டாய் ஐ20 மற்றும் ஹோன்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வேகன் ஆர் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MarutiSuzuki
மாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வரையில் எம்.பி.வி. கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாவதாக கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் ஏழு பேர் அமரக்கூடிய எம்.பி.வி. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் கார் நெக்சா விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேகன் ஆர் கார் பற்றி மாருதி சுசுகி இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.

மாருதியின் புதிய வேகன் ஆர் கார் விற்பனை முந்தைய மாடல்களை விட குறைந்திருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக இதன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய மாடல்களை போன்று புதிய வேகன் ஆர் கார்கள் விற்பனையாகவில்லை.
எனினும், ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய வேகன் ஆர் விற்பனை அதிகரிக்கும் என மாருதி சுசுகி நம்புகிறது. இந்தியாவில் மாருதி வேகன் ஆர் எம்.பி.வி. கார் புதிய நேம்பிளேட் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் அறிமுகமாகும் முன், வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. கார் சோலியோ என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது.
புதிய வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே என்ஜின் புதிய மாருதி வேகன் ஆர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் AGS டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். #Mahindra
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு துவங்கிய முதல் மாதத்திலேயே இந்த காரை வாங்க சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
முன்பதிவு துவங்கிய இரண்டறை மாதங்களில் காரை வாங்க 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதுதவிர காரை முன்பதிவு செய்தவர்களில் 70 சதவிதகிதம் பேர் டாப்-எண்ட் மாடலையே முன்பதிவு செய்திருக்கின்றனர் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. எஸ்.யு.வி. காரின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் என்ஜின் மாடல்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.

பிப்ரவரி முதல் மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்பதிவு செய்தவர்களில் 40 சதவிகிதம் பேர் பெட்ரோல் என்ஜின் மாடலை தேர்வு செய்துள்ளனர். எக்ஸ்.யு.வி.300 கார் நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
அதன்படி 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதுவரை எக்ஸ்.யு.வி.300 காரில் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படவில்லை. எனினும், விரைவில் AMT வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் முதல் ஆல்டோ 800 காரை விநியோகம் செய்தது. #MarutiSuzuki
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆல்டோ 800 காரை பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அறிமுகம் செய்தது. பி.எஸ். VI என்ஜின் கொண்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது வாகனமாக ஆல்டோ 800 இருக்கிறது. தற்சமயம் மாருதி நிறுவனம் பி.எஸ். VI என்ஜின் கொண்ட முதல் ஆல்டோ 800 காரை விநியோகம் செய்துள்ளது.
புத்தம் புதிய ஆல்டோ 800 கார் இந்தியாவில் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய காரின் வெளிப்புறத்தில் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் முன்புறம் மெஷ் கிரில், புதிய பம்ப்பர்கள் மற்றும் ஃபென்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. காரின் பக்கவாட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
காரின் உள்புறம் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற அம்சங்களே இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய ஏ.டி. வென்ட்கள், பாட்டில் வைக்கும் பகுதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. வடிவமைப்பு, லே-அவுட் மற்றும் உள்புற வசதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய 2019 மாருதி சுசுகி ஆல்டோ 800 கார் 796சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 48 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. இது லிட்டருக்கு 22.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி தெரிவித்திருக்கிறது.
2019 ஆல்டோ 800 மாடலில் ஏ.பி.எஸ்., எ.பி.டி. டிரைவர் சைடு ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கீ-லெஸ் என்ட்ரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய 2019 மாருதி ஆல்டோ 800 விலை இந்தியாவில் 2.94 லட்சத்தில் துவங்கி 3.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது.
புதிய ஆல்டோ 800 கார்: கிரானைட் கிரே, செருலியன் புளு, மொஜிடோ கிரீன், அப்டவுன் ரெட், சில்கி சில்வர் மற்றும் சுப்பீரியர் வைட் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. #MarutiSuzuki
புத்தம் புதிய ஆல்டோ 800 கார் இந்தியாவில் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய காரின் வெளிப்புறத்தில் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் முன்புறம் மெஷ் கிரில், புதிய பம்ப்பர்கள் மற்றும் ஃபென்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. காரின் பக்கவாட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
காரின் உள்புறம் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற அம்சங்களே இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய ஏ.டி. வென்ட்கள், பாட்டில் வைக்கும் பகுதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. வடிவமைப்பு, லே-அவுட் மற்றும் உள்புற வசதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய 2019 மாருதி சுசுகி ஆல்டோ 800 கார் 796சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 48 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. இது லிட்டருக்கு 22.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி தெரிவித்திருக்கிறது.
2019 ஆல்டோ 800 மாடலில் ஏ.பி.எஸ்., எ.பி.டி. டிரைவர் சைடு ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கீ-லெஸ் என்ட்ரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய 2019 மாருதி ஆல்டோ 800 விலை இந்தியாவில் 2.94 லட்சத்தில் துவங்கி 3.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது.
புதிய ஆல்டோ 800 கார்: கிரானைட் கிரே, செருலியன் புளு, மொஜிடோ கிரீன், அப்டவுன் ரெட், சில்கி சில்வர் மற்றும் சுப்பீரியர் வைட் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. #MarutiSuzuki
மெர்சிடிஸ் பென்ஸ் புத்தம் புதிய ஜி.எல்.எஸ். எஸ்.யு.வி. காரின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz
சொகுசு வாகனங்கள் என்றாலே மெர்சிடஸ் பென்ஸ் பிராண்டு தான் முதலில் நினைவுக்கு வரும். இந்நிறுவனம் ஜி.எல்.எஸ். வரிசையில் புதிய எஸ்.யு.வி. காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
புதிய ஜி.எல்.எஸ். கார் பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றத்துடன் இருக்கிறது. 5,207 மி.மீ. நீளமும், 1,956 மி.மீ. அகலமும் கொண்டது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் நீளம் அகலத்தில் சற்று அதிகமானது. இதில் 12.3 அங்குல தொடு திரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் புதிய ஸ்டீரிங் வீல் டச்பேட் உடன் வந்துள்ளது. புதிய ஜி.எல்.எஸ். காரின் நீளம் சற்று அதிகமாக உள்ளதால் பின்னிருக்கையில் மிகவும் சவுகரியமாக பயணிக்க வழி ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள 7 இருக்கைகளுமே மின்சாரத்தால் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

மூன்றாவது வரிசையை தேவைப்படாத சமயத்தில் மடித்து வைத்துக் கொள்ள முடியும். இதனால் இரண்டாம் வரிசை பயணிகளுக்கு மேலும் கூடுதல் இடம் கிடைக்கும். பின்னிருக்கை பயணிகள் வசதிக்காக 11.6 அங்குல டி.வி. திரை உள்ளது. இந்த மாடல் கார் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் கிடைக்கிறது.
இந்த கார் சர்வதேச சந்தையில் 2.9 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டிருக்கும். டீசல் மாடல் 330 ஹெச்.பி. திறன் 700 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியதாகும். பெட்ரோல் மாடலில் 4 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ்டு வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 489 ஹெச்.பி. மற்றும் 700 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. இந்த வரிசையில் உள்ள அனைத்து மாடலுமே 9 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. அதேசமயம் நான்கு சக்கர சுழற்சியைக் கொண்டவை. இந்த மாடல் கார்கள் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. கார் புதிய வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. #Skoda
ஸ்கோடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. கார் கோடியக் 2017 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டு கோடியக் ஸ்கவுட் என்ற பெயரில் அறிமுகமானது. சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்தியாவில் இந்த கார் அறிமுகமாவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் 2019 ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் ஸ்டைல் மற்றும் எல்&கே வேரியண்ட்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது. ஸ்கவுட் எஸ்.யு.வி. தரையில் இருந்து 194 எம்.எம். அளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது. ஸ்டைல் மற்றும் எல்&கே வேரியண்ட்கள் 188 எம்.எம். கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகின்றன.
ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் ஆறுவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும். கூடுதலாக ஸ்கவுட் காரில் ஆஃப்-ரோடு ஸ்விட்ச் வழங்கப்படுகிறது. இதில் மலையேற்றங்களில் சிறப்பாக செயல்பட வைக்கும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர புதிய ஸ்கவுட் காரில் 19-இன்ச் அலாய் வீல்கள், கிரில், ரூஃப் ரெயில்கள், ORVM மற்றும் ஜன்னல் ஓரங்களில் சில்வர் நிற டீடெயில் செய்யப்படுகிறது.

காரின் உள்புறம் முழுமையாக கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் இருக்கைகளில் ஸ்கவுட் என பேட்ஜிங் செய்யப்படுகிறது. இத்துடன் ஸ்டைல் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அதே உபகரணங்கள் ஸ்கவுட் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏர்பேக், கீ-லெஸ் எண்ட்ரி, ஸ்டார்ட் மற்றும் எக்சிட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் காரில் 2.0-லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இந்த என்ஜின் 7-ஸ்பீடு டைரக்ட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர் @ 3500 ஆர்.பி.எம்., 340 என்.எம். டார்க் @ 1750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் திறன் கொண்டதாகும்.






