search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாருதி ஆல்டோ 800"

    மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் மேம்பட்ட மாருதி ஆல்டோ 800 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #MarutiSuzuki



    மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800 கார் விற்பனை மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்படும் வகையில் இந்த காரில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 போன்றே புதிய ஆல்டோ 800 மாடலிலும் ஏ.பி.எஸ்., இ.பி.டி., டிரைவர் சைடு ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரைவர், கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஆட்டோமோடிவ் தரத்தின் 145 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாகும்.

    பாதுகாப்பு அப்டேட்கள் தவிர புதிய ஆல்டோ காரில் புதிய பம்ப்பர் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய அப்டேட் மூலம் ஆல்டோ 800 பெயரை நீக்கிவிட்டு புதிய மாடலில் வெறும் ஆல்டோ பேட்ஜ் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.



    2019 மாருதி சுசுகி ஆல்டோ உள்புறம் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆல்டோ K10 காரில் வழங்கப்பட்டிருக்கும் அதே டேஷ்போர்டு மற்றும் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ஆல்டோ 800 உள்புறம் டூயல்-டோன் கருப்பு மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

    இந்த காரின் மியூசிக் சிஸ்டத்தில் யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் (AUX) வசதி சேர்க்கப்படுகிறது. புதிய மாருதி ஆல்டோ காரில் 796சிசி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 48 ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த என்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    புதிய மாருதி ஆல்டோ காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதன் விலை தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட ஆல்டோ கார் இந்தியாவில் டேட்சன் ரெடிகோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய தயாரிப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 20 லட்சம் கார்களை தயாரித்து புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. 20 லட்சமாவது யூனிட் ஆக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேர் பிரைட் ரெட் மாடல் அமைந்தது.

    1983-ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் முதன்முறையாக தயாரிப்பை துவங்கிய மாருதி சுசுகி புதிய மைல்கல் சாதனையை 34 ஆண்டுகள் ஐந்து மாதங்களில் அடைந்திருக்கிறது. 20 லட்சமாவது யூனிட் ஆன ஸ்விஃப்ட் ரெட் மாடல் குஜராத்-இல் உள்ள சனந்த் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டது.

    ஜப்பானுக்கு அடுத்தபடி இந்தியாவில் மாருதி சுசுகி இந்த மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. எனினும் இந்த சாதனையை படைக்க இந்தியா எடுத்துக் கொண்ட நேரம் ஜப்பானை விட குறைவு ஆகும். ஜப்பானில் இந்த மைல்கல் சாதனையை படைக்க மாருதி சுசுகி 45 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது.



    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் யூனிட்களில் ஆல்டோ அதிகபட்சமாக 31.7 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மாருதி 800 சுமார் 29.1 லட்சம் யூனிட்களும், வேகன் ஆர் மாடல் 21.6 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 1983-ம் ஆண்டு சுசுகி மோட்டார்ஸ் இந்தியாவில் தனது தயாரிப்பை துவங்கியது. முதல் மாடலான மாருதி 800 மாருதி உத்யோக் மூலம் தயாரிக்கப்பட்டது. மாருதி உத்யோக் நிறுவனம் தற்போதைய மாருதி சுசுகியின் முந்தைய நிறுவனம் ஆகும். அன்று முதல் இந்திய சந்தையில் நிலவும் போட்டி மற்றும் அதிகளவு தேவையை பொருத்து தயாரிக்கப்படும் யூனிட்கள் மற்றும் மாடல்கள் அதிகரிக்கப்பட்டன.

    மாருதி சுசுகி நிறுவனம் முதல் முறையாக பத்து லட்சம் யூனிட்களை 1994, மார்ச் மாத வாக்கில் கடந்தது. பின் ஐந்து லட்சம் யூனிட்களை ஏப்ரல் 2005-ம் ஆண்டிலும், பத்து லட்சம் மற்றும் 15 லட்சம் யூனிட்களை முறையே மார்ச் 2001 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கடந்தது. இம்முறை 20 லட்சம் யூனிட்களை கடக்க மாருதி வெறும் மூன்று ஆண்டுகளை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது.
    ×