என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது. #SuzukiIgnis
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் கார் இந்தியாவில் 2017 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் மாடலாக இக்னிஸ் கார் இருக்கிறது. அந்த வகையில் இக்னிஸ் கார் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக மாருதி அறிவித்துள்ளது.
சமீபத்தில் மாருதி நிறுவனம் இக்னிஸ் காரை அப்டேட் செய்து புதிதாக பாதுகாப்பு அம்சங்களை வழங்கியது. அந்த வகையில் இக்னிஸ் காரில் பெல்ட் அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் போது எச்சரிக்கை செய்யும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இக்னிஸ் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பகலில் எரியும் லைட்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் கீ-லெஸ் எண்ட்ரி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., டூயல் ஏர்பேக், ஐசோஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி இக்னிஸ் கார் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். மற்றும் 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி இக்னிஸ் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஒரே பேஸ் வேரியண்ட் சிக்மா ட்ரிம் மட்டுமே ஆகும். மற்றபடி டெல்டா, ஆல்ஃபா மற்றும் சீட்டா போன்றவற்றில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரோஸ் கார் இந்தியாவின் பாதுகாப்பான காராக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ரோஸ் காரை சமீபத்தில் நடந்து முடிந்த ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. அல்ட்ரோஸ் கார் டாடா நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக உருவாகியிருக்கிறது.
இத்துடன் புதிய அல்ட்ரோஸ் கார் டாடாவின் ஆல்ஃபா (ALFA) தளத்தில் உருவாகியிருக்கும் முதல் மாடலாக இருக்கிறது. மேலும் புதிய கார் NCAP விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெறலாம் என்றும் டாடா மோட்டார்ஸ் நம்புகிறது. தற்சமயம் வரை டாடா நெக்சான் மட்டுமே ஐந்து நட்சத்திர குறியீடு பெற்ற ஒற்றை டாடா வாகனமாக இருக்கிறது.
அதிநவீன வடிவமைப்பு மற்றும் உறுதியான உற்பத்தி தரம் உள்ளிட்டவை அல்ட்ராஸ் பாதுகாப்பிற்கு பக்கபலமாக இருக்கும் என்றும் இது ஹேட்ச்பேக் பிரிவில் ஐந்து நட்சத்திர குறியீட்டை பெறும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது மாருதி சுசுகி பலேனோ, ஹோன்டா ஜாஸ் மற்றும் ஹூன்டாய் எலைட் i20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
டாடா அல்ட்ரோஸ் வெளிப்புற வடிவமைப்பு டாடா 45X கான்செப்ட் காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஃபுளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதிகளவு கேபின் வசதி கொண்டிருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் காரின் என்ஜின் வேரியண்ட்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை.
எனினும், இதில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் டாடா டியாகோ காரில் இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் யூனிட்களை பொருத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படலாம்.
இத்துடன் புதிய அல்ட்ரோஸ் கார் டாடாவின் ஆல்ஃபா (ALFA) தளத்தில் உருவாகியிருக்கும் முதல் மாடலாக இருக்கிறது. மேலும் புதிய கார் NCAP விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெறலாம் என்றும் டாடா மோட்டார்ஸ் நம்புகிறது. தற்சமயம் வரை டாடா நெக்சான் மட்டுமே ஐந்து நட்சத்திர குறியீடு பெற்ற ஒற்றை டாடா வாகனமாக இருக்கிறது.
அதிநவீன வடிவமைப்பு மற்றும் உறுதியான உற்பத்தி தரம் உள்ளிட்டவை அல்ட்ராஸ் பாதுகாப்பிற்கு பக்கபலமாக இருக்கும் என்றும் இது ஹேட்ச்பேக் பிரிவில் ஐந்து நட்சத்திர குறியீட்டை பெறும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது மாருதி சுசுகி பலேனோ, ஹோன்டா ஜாஸ் மற்றும் ஹூன்டாய் எலைட் i20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
டாடா அல்ட்ரோஸ் வெளிப்புற வடிவமைப்பு டாடா 45X கான்செப்ட் காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஃபுளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதிகளவு கேபின் வசதி கொண்டிருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் காரின் என்ஜின் வேரியண்ட்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை.
எனினும், இதில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் டாடா டியாகோ காரில் இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் யூனிட்களை பொருத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது எர்டிகா காரில் புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MarutiErtiga
மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா எம்.பி.வி. காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி எர்டிகா VDi பேஸ் வேரியண்ட் மாடல் விலை ரூ.9.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் ZDi பிளஸ் வேரியண்ட் விலை ரூ.11.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய என்ஜின் மாருதி சுசுகி உற்பத்தி செய்ததாகும். இது 1.3 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. இது மாருதி எர்டிகா VDi, ZDi மற்றும் ZDi பிளஸ் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 225 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. பழைய 1.3 லிட்டர் யூனிட் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய டீல் என்ஜின் 1.3 லிட்டர் ஃபியாட் என்ஜின் ARAI சான்று பெற்று லிட்டருக்கு 24.02 கிலோமீட்டர் செல்லும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது எர்டிகா காரில் புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MarutiErtiga
மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா எம்.பி.வி. காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி எர்டிகா VDi பேஸ் வேரியண்ட் மாடல் விலை ரூ.9.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் ZDi பிளஸ் வேரியண்ட் விலை ரூ.11.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய என்ஜின் மாருதி சுசுகி உற்பத்தி செய்ததாகும். இது 1.3 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. இது மாருதி எர்டிகா VDi, ZDi மற்றும் ZDi பிளஸ் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 225 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது.

இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. பழைய 1.3 லிட்டர் யூனிட் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய டீல் என்ஜின் 1.3 லிட்டர் ஃபியாட் என்ஜின் ARAI சான்று பெற்று லிட்டருக்கு 24.02 கிலோமீட்டர் செல்லும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் கார் புதிதாக பெட்ரோல் வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #MarutiSuzuki
மாருதி சுசுகி எஸ் கிராஸ் கார் 2017 ஆம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் எஸ் கிராஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாகவும், இத்துடன் மாருதி சுசுகி நிறுவனம் பெட்ரோல் வேரியண்ட் ஒன்றையும் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் சுசுகியின் K15B ரகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதே என்ஜின் மேம்படுத்தப்பட்ட சியாஸ் மற்றும் இரண்டாம் தலைமுறை எர்டிகா காரில் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட்டில் ஸ்மார்ட் வெஹிகில் ஹைப்ர்ட் பை சுசுகி சிஸ்டம் (SHVS) மற்றும் இரட்டை பேட்டரி அமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. SHVS தொழில்நுட்பம் எஸ் கிராஸ் மைலேஜை அதிகப்படுத்த முடியும்.
இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. எனினும், இத்துடன் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்குவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மாருதி சுசுகி நிறுவனம் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை உருவாக்கி வருவது பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது.
சர்வதேச சந்தையில் எஸ் கிராஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவற்றில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்ட்கள் கிடைக்கிறது. இந்தியாவில் எஸ் கிராஸ் டீசல் வேரியண்ட் விலை ரூ.8.85 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.11.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கியிருக்கும் மஹி்ந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் கார் விவரங்களை பார்ப்போம். #Mahindra
சாகச பயண வாகனமான தார், இந்தியாவில் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியோடு ஸ்பெஷல் எடிஷன் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களும் விபத்து சோதனை (கிராஷ் டெஸ்ட்) சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. முந்தைய தலைமுறை மாடல்கள் அனைத்துமே இத்தகைய சோதனைக்கு உள்படுத்தப்படாதவை.
இதனால் முந்தைய மாடல்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிஷனையே தொடர்ந்து உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த காரில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுதல் கொண்டதாக ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் சி.ஆர்.டி.இ. என்ஜினை தேர்வு செய்யும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷனில் அலாய் வீல்கள் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கின்றன.
இது முந்தைய மாடலை விட அளவில் பெரியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் இது பி.எஸ். VI புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை 2020-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்தாலும் தனது மாடலில் இந்த வசதியை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்க மஹிந்திரா திட்டமிட்டு அதை செயல்படுத்தியுள்ளது.
இந்த காரில் 140 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 2.0 லிட்டர் என்ஜின் மற்றும் 6 கியர்களைக் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இத்துடன் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் மேம்பட்ட மாருதி ஆல்டோ 800 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #MarutiSuzuki
மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800 கார் விற்பனை மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்படும் வகையில் இந்த காரில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 போன்றே புதிய ஆல்டோ 800 மாடலிலும் ஏ.பி.எஸ்., இ.பி.டி., டிரைவர் சைடு ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரைவர், கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஆட்டோமோடிவ் தரத்தின் 145 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாகும்.
பாதுகாப்பு அப்டேட்கள் தவிர புதிய ஆல்டோ காரில் புதிய பம்ப்பர் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய அப்டேட் மூலம் ஆல்டோ 800 பெயரை நீக்கிவிட்டு புதிய மாடலில் வெறும் ஆல்டோ பேட்ஜ் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.

2019 மாருதி சுசுகி ஆல்டோ உள்புறம் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆல்டோ K10 காரில் வழங்கப்பட்டிருக்கும் அதே டேஷ்போர்டு மற்றும் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ஆல்டோ 800 உள்புறம் டூயல்-டோன் கருப்பு மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த காரின் மியூசிக் சிஸ்டத்தில் யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் (AUX) வசதி சேர்க்கப்படுகிறது. புதிய மாருதி ஆல்டோ காரில் 796சிசி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 48 ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த என்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
புதிய மாருதி ஆல்டோ காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதன் விலை தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட ஆல்டோ கார் இந்தியாவில் டேட்சன் ரெடிகோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை கடந்துள்ளது. #Volkswagen
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து பத்து லட்சமாவது காரை அந்நிறுவனம் வெளியிட்டது. ஃபோக்ஸ்வேகன் இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது.
சிறப்பு மைல்கல் சாதனையுடன் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் ஃபோக்ஸ்வேகன் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து குர்பிரதாப் போபாரி கூறும் போது,
ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலை சர்வதேச அளவில் தரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையான வசதியை பெற்றிருக்கிறது. இதுவே இந்தியாவில் எங்களது வெற்றுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுவினரின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் பலனாக எட்டப்பட்டிருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு எங்களது மொத்த நிர்வாக குழு சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சந்தையில் பத்து லட்சமாவது காரை வெளியிடுவது எங்களது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மைல்கல் மட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை நாட்டுக்கும் பல்வேறு உலக சந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். என அவர் தெரிவித்தார்.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. அசத்தல் அம்சங்கள் நிறைந்த 620டி கிரான் டுரிஸ்மோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #BMW
ஆடம்பர சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதியதாக 620டி கிரான் டுரிஸ்மோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் வரிசையில் இது அறிமுகமாகி இருக்கிறது. ட்வின் டர்போ தொழில்நுட்பத்தை கொண்ட புதிய கார் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.
மிகச் சிறப்பான வடிவமைப்பு, சவுகரியமான இடவசதி, நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு ஏற்படாத தன்மை இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்த மாடல் கார்கள் சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் தயாரானது. சொகுசு ரக செடான் காரில் இது மிக முக்கியமானதாக இடம்பெறும்.
டீசல் என்ஜினைக் கொண்டிருந்தாலும் இது அதிர்வில்லாத சொகுசான பயணத்தை தரும். இந்தியாவில் இதன் விலை ரூ.63.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மினரல் ஒயிட், கிளேசியர் சில்வர், மெடிட்ரேனியன் புளூ, பர்கண்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது.
இதன் உள்புறம் சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காக மென்மையான தோலினால் ஆன இருக்கைகள், மாற்று வண்ணங்களில் இருப்பது இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது. பின்இருக்கையில் பயணிப்பவர்கள் மிகவும் சவுகரியமாக அமரும் வகையிலும், கால்களை நீட்டிக் கொள்ளும் வகையில் இடவசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. உயரமானவர்களும் வசதியாக அமரும் வகையில் தலைப் பகுதி மேற்கூரையில் இடிக்காத வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.

இரு பகுதிகளாக விரிவடையும் மேற்கூரை, பின்னிருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். பயணத்தின்போது படங்களை பார்த்து ரசிக்க ஏதுவாக 10.2 இன்ச் அளவில் இரண்டு திரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள புளூரே பிளேயர், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய ஹெச்.டி.எம்.ஐ. இணைப்பு வசதி, எம்.பி.3 பிளேயர் மற்றும் கேம் கன்சோல் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்துகிறது. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டிவிடும். இதில் 8 ஸ்டெப்ரோடானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிக்கு இதில் 6 ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளன. ஏ.பி.எஸ்., டி.எஸ்.சி. உள்ளிட்டவற்றோடு டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் டெசன்ட் கண்ட்ரோல், பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு, டயர்களில் காற்று முழுவதும் இறங்கினாலும் ஓடக்கூடிய வசதி, விபத்து உணர் சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
டிஸ்பிளே சாவி, காரினுள் நுழையும்போது தரைப்பகுதி விளக்கு, 10 அங்குல தொடுதிரை, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்துடன் ரியர் வியூ கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல், பி.எம்.டபுள்யூ. செயலி மூலம் இணைப்பு ஆகியன இதில் உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ, அமியோ மற்றும் வென்டோ கார்களை பிளாக் மற்றும் வைட் நிற எடிஷனில் அறிமுகம் செய்துள்ளது. #Volkswagen
சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது முன்னணி மாடல்களான போலோ, அமியோ, வென்டோ ஆகிய மூன்று கார்களிலும் கருப்பு, வெள்ளை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய கருப்பு மற்றும் வெள்ளை நிற எடிஷன் கார்களை பயனர்கள் எவ்வித கூடுதல் விலையும் இன்றி அனைத்து முன்னணி டீலர்களிடமும் வாங்க முடியும்.
இந்த கருப்பு, வெள்ளை பேக்கேஜில் அனைத்து மாடல்களிலும் மேல் பகுதி கிராஃபிக்ஸ், லெதர் சீட் கவர்கள் பின்புற ஸ்பாயிலர், 16 அங்குல போர்டேகோ அலாய் சக்கரங்கள், மேல்பகுதி கருப்பு வண்ணம் பூசப்பட்டது, கருப்பு நிறத்திலான ஓ.ஆர்.வி.எம்., குரோம் பேட்ஜ் ஆகியன இடம்பெறும். இது தவிர முற்றிலும் கருமையான நிறத்தில் போலோ, வென்டோ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அனைத்து மாடல்களுமே 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் யூனிட்டை கொண்டவை. 90 பி.ஹெச்.பி. திறன் கொண்ட போலோ ஹேட்ச்பேக் மாடலை போன்று இருக்கும் இது 5 மானுவல் கியர் வசதி கொண்டது. அமியோ மற்றும் வென்டோ செடான் மாடலில் 110 பி.ஹெச்.பி. திறனும் 5 கியரும் கொண்டது. இது தவிர 7 ஸ்பீடு இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ள மாடலும் இதில் கிடைக்கும்.

போலோ மற்றும் அமியோ மாடல் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரைக் கொண்டது. இது 76 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 95 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. வென்டோ மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 153 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.
இதில் 5 கியர் வசதி மட்டுமே உண்டு. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலும் போலோ மற்றும் வென்டோவில் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 175 என்.எம். டார்க் இழுவிசை திறனை வெளிப்படுத்துகிறது.
இதில் போலோ மாடல் மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10, போர்டு பிகோ ஆகிய மாடலுக்கு போட்டியாகவும் அமியோ மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹூண்டாய் எக்சென்ட், ஃபோர்டு ஆஸ்பயர் மாடலுக்கு போட்டியாக இருக்கிறது. வென்டோ மாடலானது நடுத்தர ரக செடான் காராகும். இது ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ராபிட் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விளங்குகிறது.
இந்தியாவில் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ரெனால்ட் கேப்டுர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #RenaultCaptur
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனத்தின் ‘கேப்டுர் மாடல்’ பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் புகிய கேப்டுர் காரின் விலை ரூ.9.50 லட்ச என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் கேப்டுர் ஆர்.எக்ஸ்.இ மற்றும் கேப்டுர் பிளாடைன் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. பிளாடைன் டீசல் மாடல் விலை ரூ.12 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் 7 இன்ச் தொடுதிரை மீடியா எவல்யூஷன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இரட்டை ஏர் பேக் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏற்கனவே ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் ரியர் பார்க்கிங் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேபோன்று முன் சீட்டில் அமரும் பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிந்திருப்பதை உணர்த்தும் ரிமைண்டர் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் ஹை ஸ்பீடு அலெர்ட் போன்றவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று, புதிய காரிலும் 106 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 110 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 5 மற்றும் 6 கியர்களுடன் வருகிறது.
முந்தைய பெட்ரோல் மாடலைக் காட்டிலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் விலை ரூ.50 ஆயிரம் குறைவாகும். இந்த கார் நிசான் கிக்ஸ், டாடா ஹாரியர், ஹுண்டாய் கிரெட்டா ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #MarutiSuzuki
மாருதி சுசுகி செலரியோ கார் இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. 2018-19 நிதியாண்டில் மட்டும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் சுமார் 1,03,734 செலரியோ கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பத்து சதவிகிதம் அதிகம் ஆகும்.
2014 ஆம் ஆண்டு முதல் மாருதி நிறுவனம் சுமார் 4.7 லட்சம் மாருதி சுசுகி செலரியோ கார்களை விற்பனை செய்திருக்கிறது. ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாருதி நிறுவனத்தின் முதல் கார் செலரியோ ஆகும். மாருதி நிறுவனம் இதனை ஆட்டோ கியர் ஷிஃப்ட் என அழைக்கிறது.

இதுவரை விற்பனையாகி இருக்கும் செலரியோ யூனிட்களில் சுமார் 31 சதவிகிதம் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்டவையாகும். இதுதவிர டாப் எண்ட் மாடலான ZXI வேரியண்ட் மொத்த விற்பனையில் 52 சதவிகிதமும் செலரியோ சி.என்.ஜி. வேரியண்ட் 20 சதவிகிதமும் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி செலரியோவின் அனைத்து வேரியண்ட்களிலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், பெல்ட் ரிமைண்டர், ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. என்ஜினை பொருத்தவரை செலரியோ மாடலில் 1.0-லிட்டர் K-சீரிஸ், 3-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோ கியர் ஷிஃப்ட் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் வழங்கப்படுகிறது. செலரியோ கார் சி.என்.ஜி. வசதியுடன் கிடைக்கிறது.






