என் மலர்
பைக்
பவுன்ஸ் நிறுவனம் வழங்கும் பேட்டரி சந்தா சேவை மற்ற மின்சார ஸ்கூட்டர்களை விட 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ்வை இன்று முதல் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் இன்ஃபினிட்டி ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ் கிடைக்கிறது.
இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனமாக அறிமுகமாகிய பவுன்ஸ் நிறுவனம் தற்போது மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் நிலையில் புது இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரை பவுன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து இன்று முதல் அந்த ஸ்கூட்டருக்கான டெஸ்ட் டிரைவ் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ரூ.45,000 எக்ஸ் ஷோரும் விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரில் 2kWh பேட்டரியும், 2,2KW மோட்டாரும் இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 65 கி.மீ உட்சபட்ச வேகம் செல்லும் இந்த ஸ்கூட்டர், 85 கி.மீ வேகத்தை கொண்டுள்ளது.
பவுன்ஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கு பேட்டரி சந்தா முறையையும் வழங்குகிறது. இதன்மூலம் பேட்டரி சார்ஜ் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் பேட்டரி மையங்களுக்கு சென்று புதிய பேட்டரிக்களை மாற்றிகொள்ளலாம். இதனால் நிரந்தரமாக பேட்டரி வைத்துக்கொண்டு மெயிண்டைனன்ஸ் குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இதுமட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் முடிந்தவுடன் அதிகம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டும் என அவசியமில்லை. சந்தா முறையில் புதிய பேட்டரிகளை வாங்கிகொள்ளலாம். இதன்மூலம் 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டுக்குள் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்தது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசும் இந்த நிதியாண்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்தது.
இதை தொடர்ந்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம், பிரபல ஆக்டிவா ஸ்கூட்டரை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த நிதியாண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபடும் என்று அதன் தலைவர் அட்சுஷி ஒகடா கூறியுள்ள நிலையில், முதல்வாகனமாக ஹோண்டா ஆக்டிவா அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனத்தில் ஸ்வாப்பபிள் பேட்டரி, விரைவில் சார்ஜாகும் தொழில்நுட்பம், அதிக வேகத்தில் இயங்கு திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வந்தால், தற்போது சந்தையில் உள்ள பஜாஜ் சேடக், டிவிஎஸ் ஐ.க்யூப், ஓலா எஸ் 1 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்கள் மின்சார வாகனத்தை நோக்கி தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இது தவிர இந்த ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் மின் வாகனங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதர் நிறுவனம் தனது அதர் 450 பிளஸ் மற்றும் அதர் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை எளிய முறையில் வாங்கும் வகையில் இ.எம்.ஐ திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி அதர் நிறுவனத்தின் 450 எக்ஸ் மற்றும் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். பிறகு இ.எம்.ஐ கட்டணமாக மாதம் ரூ.4,360-ஐ 36 மாதங்களுக்கு செலுத்தினால் போதும்.
இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.1.31 லட்சம் ஆகும்.
இந்த ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. அதர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் 6000W மோட்டார் உடன் 2.9kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதனால் பேட்டரி வெறும் 35 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும்.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம். அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் அந்நிறுவனம் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகள், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டின் 2-வது அதிக இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற சாதனையை டிவிஎஸ் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அப்பாச்சி பைக்குகளே அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர வெளிநாடுகளுக்கு என உருவாக்கப்பட்டு வரும் எச்எல்எக்ஸ் எனும் மாடலும், டிவிஎஸ் ரைடர் மற்றும் டிவிஎஸ் நியோ ஆகிய பைக்குகளும் சிறப்பான எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களான ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
இதை தொடர்ந்து இந்த வாகன தயாரிப்பு நடவடிக்கையை மேலும் விரிவாக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளன
இதன்பின் டிவிஎஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்ப சலுகைகளுடன் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய பைக், யமஹாவின் ஆர்15 வி4 மாடலுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
150 சிசி கொண்ட இந்த பைக் யமஹா நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஃபேர்ட் பைக்குகளுக்கு போட்டியாக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சி.பி.ஆர்150ஆர் பைக்கின் விலை இந்தியாவில் ரூ.1.71 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹோண்டாவின் போட்டியாக உள்ள யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு (விலை ரூ.1.73 லட்சத்தில் இருந்து தொடக்கம்) போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாகவும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தைவானை சேர்ந்த எஸ்.ஒய்.எம் ஆட்டோமொபைல் நிறுவனம் புதிய 125சிசி மற்றும் 150சிசி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களுக்கு 4மைகா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த 4மைகா ஸ்கூட்டர் பிளவுப்பட்ட சீட்டுகளை கொண்டுள்ளது. பின் சீட்டை நீக்கி கூடுதலாக பொருட்களை வைக்கும் வகையிலும், ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாக பயன்படுத்தும் வகையிலும் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள் கால் வைப்பதற்காக 410மிமீ அளவில் இட வசதி தரப்பட்டுள்ளது. இங்கேயும் பயணிகள் பொருட்களை வைத்து செல்லலாம்.
4மைகா 125 ஸ்கூட்டரில் 124.7சிசி SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 9.5 பிஎஸ் மற்றும் 9.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. 150 சிசி ஸ்கூட்டரில் 11.3 பிஎஸ் மற்றும் 12.25 என்எம் டார்க் திறனை பெறும் ஆற்றல் தரப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்காக முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் தரப்பட்டுள்ளன.

பிரேக் அமைப்பில் முன்பக்கத்தில் டிஸ்க்கும், பின்பக்கத்தில் ட்ரம்மும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் -ம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 10-இன்ச் சக்கரங்களும், 100/90 என்ற அளவுகளில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் எடை கிட்டத்தட்ட 125 கிலோ ஆகும்.
தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் மற்றும் ஹசார்ட் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டர் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இருப்பினும் இது இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் எதுவும் தரப்படவில்லை.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள சில முக்கிய பைக்குகளையும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இப்போது காணலாம்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் ஆட்டோமொபைல் விற்பனை வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு புதிய பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411: ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 411 பைக் இந்த ஆண்டு அறிமுகாகவுள்ளது. ஹிமாலயன் வகை பைக்கான இது வாங்கக்கூடிய விலையில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ராயல் என்ஃபீல்டு வகை பைக்குகளுடைய இன்ஜின் மற்றும் பிளார்ட்பார்மை இது கொண்டிருந்தாலும் லோவர்ட் சஸ்பென்ஷன் கிட் மற்றும் சிறிய முன்பக்க சக்கரங்கள் தரப்பட்டுள்ளன.
மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.70 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம்-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
2022 கே.டி.எம் 390 அட்வென்சர்: இந்த ஆண்டு பஜாஜ் நிறுவனம் நிறைய வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் முக்கியமான ஒன்று கே.டி.எம் 390 அட்வெஞ்சர். இந்த புதிய ஏடிவி வகை பைக் வெளிப்புற ஸ்டைலிங்குடன் வரும் என கூறப்படுகிறது. புதிய டூயல்- டோன் ட்ரிம்மை இந்த பைக் கொண்டுள்ளதாகவும், எப்போதுவேண்டுமானாலும் இந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ராயல் என்பீல்ஃடு ஹண்டர் 350: ஸ்கிராம் 411-ஐ தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வகை பைக்கை அறிமுகம் செய்கிறது. இந்த பைக் மீட்டோர் 350 வகையை சார்ந்தது என்றாலும் அதிகம் ஆஃப் ரோட் செல்லக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜெனரேஷன் கே.டி.எம் ஆர்.சி390: ஆர்.சி 200 ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் கே.டி.எம்-ன் புதிய ஜெனரேஷன் ஆர்.சி 390 வெளியாகவுள்ளது. இதில் முழுதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டல் பேனல் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக் தற்போது உள்ள மாடலை விட சற்று விலை கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பைக் ஹார்லி டேவிட்ஸனின் லைவ் ஒயர் பிராண்டின் கீழ் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் தனது லைவ் ஒயர் பிராண்டின் கீழ் புதிய மின்சார பைக் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய பைக்கிற்கு எஸ்2 டெல் மார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் பைக் மிடில் வெய்ட் பிரிவில் அடங்கும். இந்த மின்சார பைக் ஆரோ ஆர்கிடெக்ட்சர் என்ற அமைப்புடன் வருகிறது. இந்த அமைப்பில் பேட்டரி, இன்வெர்டர், சார்ஜர், ஸ்பீட் கண்ட்ரோலர் மற்றும் மோட்டார் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆரோ ஆர்கிடெக்ட்சர் அமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ள பேட்டரியில் 21,700 விதவிதமான சிலிண்டர் செல்கள் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற அமைப்பை தான் டெஸ்லா, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.
இந்த பைக் குறைந்த விலையில் அனைவராலும் வாங்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் பஜாஜ் சேடாக் விற்பனையில் உள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் சேடாக் இ-ஸ்கூட்டர் தற்போது புது டெல்லி, மும்பை கோவா ஆகிய மூன்று புதிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு 8 முக்கிய நகரங்களில் சேடாக் இ.வி இ ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியது. இதன்பின் இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களிலேயே புதிதாக 12 நகரங்களில் சேடாக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தற்போது இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் சேடாக் இ.வியின் விற்பனையில் உள்ளது.
தற்போது பஜாஜ் சேடாக் இ-ஸ்கூட்டர் பதிவு செய்தவர்களுக்கு 4 முதல் 8 வாரத்திற்குள் ஸ்கூட்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஷோரூமில் அல்லது www.chetak.com என்ற இணையதளத்திலும் இந்த இ ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம்.

மேலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புனேவில் புதிய மின்சார வாகன ஆலையை திறப்பதாக அறிவித்தது. இந்த உற்பத்தி ஆலையில் ரூ.300 கோடி முதலீடு செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்தது.
இந்நிலையில் ஆட்டோமோட்டிவ் பிராண்ட் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக இந்த புதிய ஆலை உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையின் மூலம் ஆண்டுக்கு 5,00,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதம் விற்கப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.
சில ஆண்டுகளாகவே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் 1,43,234 யூனிட்கள் விற்கப்பட்டு ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்கூட்டர்களில் 44.61 சதவீதம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரே ஆகும்.

2-வது இடத்தை டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. 43,476 யூனிட் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் கடந்த மாதம் விற்பனை ஆகியுள்ளது. இதை தொடர்ந்து 3-வது இடத்தில் சுஸுகியின் ஆக்ஸஸ் மாடல் 42,148 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
4-வது இடத்தில் ஹோண்டா டியோ 27,837 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. 5-வது இடத்தில் டிவிஎஸ் எண்டார்க் 21,120 யூனிட்களும், 6-வது ஹீரோ பிளஷர் 13,195 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து 7-வது இடத்தில் 9,504 யூனிட்கள் விற்பனையில் சுஸுகி பர்க்மேனும், 8-வது இடத்தில் 7,030 யூனிட்கள் விற்பனையில் யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களும் உள்ளன.
9வது மற்றும் 10-வது இடங்களில் சுஸுகி அவெனிஸ் 6,314 யூனிட்களும், யமஹா ஃபேஸினோ 6,221 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன.
இந்த பைக் பெரிதும் விற்கப்படாததே இந்த விலை குறைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கை இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அட்வென்ஜர் டூரர் ரக பைக்கான இதற்கு தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
சிபி500எக்ஸ் பைக் அறிமுகமானபோது இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பைக்கின் விலை 1.07 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.5.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

சிபி500எக்ஸ் பைக்கில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தாலும், பெரிதாக விற்பனை இல்லை. இதன் விலை அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில், 471.03 சிசி, நான்கு-ஸ்ட்ரோக், பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 47 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 43.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதன் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 17.7 லிட்டர்களாக உள்ளது.
புதிய பல்சர் என்250 மற்றும் பல்சர் எஃப்250 மாடல்களில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புனேவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை கவர்ச்சிகர விலையில் அறிமுகம் செய்து பின் சத்தமின்றி அவற்றின் விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது பஜாஜ் நிறுவனம் பல்சர் என்250, எஃப்250 பல்சர் மற்றும் டாமினர் 250, 400 பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதன்படி பல்சர் எஃப்250 சீரிஸ் விலை ரூ. 915 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்சர் என்250 விலையும் ரூ. 1180 உயர்த்துள்ளது.
இதையடுத்து புதிய பல்சர் எஃப்250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,40,915-ஆக உயர்ந்துள்ளது. பல்சர் என்250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,39,117-ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று பஜாஜ் டாமினர் 250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.5000 உயர்த்தப்பட்டு ரூ.1.64 லட்சமாக உள்ளது. அதேபோன்று பஜாஜ் டாமினர் 400-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4,500 உயர்த்தப்பட்டு ரூ.2.17 லட்சமாக இருக்கிறது.
புதிய பல்சர் என்250 மற்றும் பல்சர் எஃப்250 மாடல்களில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இத்துடன் வழங்கப்பட்டுள்ளது.






