என் மலர்tooltip icon

    பைக்

    கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    கே.டி.எம். இந்தியா நிறுவனம் 2022 250 அட்வென்ச்சர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 2.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய கே.டி.எம். மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு மிக எளிய நிதி சலுகைகள் மற்றும் சிறப்பு மாத தவணை முறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவில் 2022 கே.டி.எம். அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் ஃபேக்டரி ரேசிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் நிறம் தவிர அம்சங்கள் மற்றும் உபகரணங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     2022 கே.டி.எம். 250 அட்வென்ச்சர்

    2022 கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலில் 248சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. திறன், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பவர் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய கே.டி.எம். மோட்டார்சைக்கிளில் டிரெலிஸ் ஃபிரேம், போல்ட்-ஆன் சப்-ஃபிரேம், அப்சைடு டவுன் ஃபோர்க், மோனோ ஷாக், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 200 எம்.எம். கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650 சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பிளாக்‌ஷிப் மாடல்களான இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியது. இரு மாடல்களின் துவக்க விலை தற்போது ரூ. 2,85,970 என மாறி இருக்கிறது. 

    புதிய விலை விவரம்

    காண்டினென்டல் ஜி.டி. 650 பிரிடிஷ் ரேசிங் கிரீன் ரூ. 3,02,780
    காண்டினென்டல் ஜி.டி. 650 ராக்கெட் ரெட் ரூ. 3,02,780
    காண்டினென்டல் ஜி.டி. 650 வெண்ட்யூரா ஸ்டார்ம் ரூ. 3,11,193
    காண்டினென்டல் ஜி.டி. 650 டக்ஸ் டீலக்ஸ் ரூ. 3,11,193
    காண்டினென்டல் ஜி.டி. 650 மிஸ்டர் கிளீன் ரூ. 3,26,887

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    இண்டர்செப்டார் 650 கேன்யான் ரெட் ரூ. 2,85,970
    இண்டர்செப்டார் 650 ஆரஞ்சு கிரஷ் ரூ. 2,85,970
    இண்டர்செப்டார் 650 வெண்ட்யூரா புளூ ரூ. 2,85,970
    இண்டர்செப்டார் 650 பேக்கர் எக்ஸ்பிரஸ் ரூ. 2,94,383
    இண்டர்செப்டார் 650 டவுன்-டவுண் டிராக் ரூ. 2,94,383
    இண்டர்செப்டார் 650 சன்செட் ஸ்ட்ரிப் ரூ. 2,94,383
    இண்டர்செப்டார் 650 மார்க் 2 ரூ. 3,10,001

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இரு மாடல்களிலும் வட்ட வடிவ ஹெட்லைட், ஹாலோஜென் பல்பு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 648சிசி, பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. திறன், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது மற்றொரு புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் 2022 இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தியது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹிமாலயன் அட்வென்ச்சர் மாடல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வின் படி ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல் துவக்க விலை தற்போது ரூ. 2,14,887 என மாறி இருக்கிறது.

     ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    ராயல் என்பீல்டு ஹிமாலயன் புதிய விலை விவரம்

    மிரேஜ் சில்வர் ரூ. 2,14,887
    கிரேவல் கிரே ரூ. 2,14,887
    லேக் புளூ ரூ. 2,18,706
    ராக் ரெட் ரூ. 2,18,706
    கிரானைட் பிளாக் ரூ. 2,22,526
    பைன் கிரீன் ரூ. 2,22,526

    விலை உயர்வு தவிர இந்த மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த மாடலில் 411சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் தவிர முற்றிலும் புது பிளாட்பார்மில் மற்றொரு அட்வென்ச்சர் டூரர் மாடலை ராயல் என்பீல்டு உருவாக்கி வருகிறது.

    யமஹா நிறுவனம் தனது எப்.இசட். எக்ஸ் மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் திடீரென மாற்றி இருக்கிறது.


    யமஹா நிறுவனத்தின் எப்.இசட். எக்ஸ் மாடலின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. அதன்படி யமஹா எப்.இசட். எக்ஸ் துவக்க விலை தற்போது ரூ. 1,26,300, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 2 ஆயிரம் அதிகம் ஆகும். 

    சமீபத்தில் யமஹா தனது எப்.இசட். எஸ் மாடலை அப்டேட் செய்ததை போன்று எப்.இசட். எக்ஸ் மாடல் எக்ஸ்.எஸ்.ஆர். 155 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வடிவமைப்பு ரக்கட் டிசைன், டூயல் பர்பஸ் டையர்கள், போர்க் கெய்டர்கள், என்ஜின் சம்ப் கார்டு மற்றும் ரெட்ரோ-ஸ்டைல் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     யமஹா எப்.இசட். எக்ஸ்

    ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்படும் யமஹா எப்.இசட். எக்ஸ் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மேட் காப்பர், மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் ஸ்போர்ட் அனுபவத்தை வழங்கும் நோக்கில் 01 எனும் கிராபிக்ஸ் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் ஹிமாலன் 450 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. 

    புதிய என்பீல்டு ஹிமாலன் 450 கே1 பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இதில் சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு 450 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 40 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. வழங்கும் திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

     ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    தற்போதைய அட்வென்ச்சர் மாடலில் ராயல் என்பீல்டு 23 பி.ஹெச்.பி. திறன் வழங்கி வருகிறது. அதன்படி புதிய மாடலில் கூடுதலாக 17 பி.ஹெச்.பி. திறன் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஹிமாலயன் 450 கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மற்றும் பெனலி டி.ஆர்.கே. 502 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தனது யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மாடலுக்கான புதிய டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது.


    இந்தியாவில் யெஸ்டி பிராண்டு மோட்டார்சைக்கிள்களை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மாடல் இந்தியவில் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது.

    யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் அட்வென்ச்சர் பைக் மாடலாகவும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், டீசரில் ஸ்கிராம்ப்ளர் மாடல் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. புதிய யெஸ்டி மாடலில் பீக் போன்ற முன்புற ஃபெண்டர், நீண்ட சஸ்பென்ஷன், டையர் ஹக்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒற்றை இருக்கை அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஸ்போக் வீல்கள், குரோம் எக்சாஸ்ட் கேனிஸ்டர் வழங்கப்படுகிறது.



    புதிய யெஸ்டி மாடலில் 334 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. திறன், 32.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் டிசம்பர் 2021 மாதத்தில் 65,197 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. 2020 டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 65,492 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாத விற்பனையில் ராயல் என்பீல்டு சிறிதளவு சரிவை சந்தித்து இருக்கிறது.

    ஆண்டு அடிப்படையில் சரிவை சந்தித்து இருந்தாலும், மாதாந்திர விற்பனையில் ராயல் என்பீல்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2021 நவம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 44,133 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி டிசம்பர் விற்பனையில் ராயல் என்பீல்டு 45 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. மேலும் 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போதும் கடந்த டிசம்பரில் ராயல் என்பீல்டு வளர்ச்சி பெற்று இருக்கிறது.

     ராயல் என்பீல்டு

    உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியிலும் ராயல் என்பீல்டு கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிசம்பர் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது 2021 டிசம்பரில் ராயல் என்பீல்டு நிறுவன வாகனங்கள் ஏற்றுமதி 144.13 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த டிசம்பரில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 8552 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. 2020 டிசம்பரில் மொத்தம் 3503 யூனிட்களை ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்து இருந்தது.

    யமஹா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டி.எல்.எக்ஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 1,15,900 என்றும் டி.எல்.எக்ஸ். மாடல் விலை ரூ. 1,18,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேம்பட்ட புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் விற்பனையகம் வருகின்றன. இரு வேரியண்ட்களிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 149சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.2 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. 

     யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ.

    இந்த மோட்டாரைச்சிக்கிளில் டெலிஸ்கோபிக் போர்க், மோனோ ஷாக் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் எல்.இ.டி. டெயில் லைட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, சிங்கில் சேனல் ஏ.பி.எஸ்., பின்புறம் டிஸ்க் பிரேக், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது.

    யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ. மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் டீப் ரெட் மற்றும் சாலிட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. டி.எல்.எக்ஸ். வேரியண்டில் வித்தியாசமான கிராபிக்ஸ், டூயல்-டோன் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் தமிழகத்தில் ஜனவரி 31, 2022 வரை வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் யமஹா 125சிசி  ஹைப்ரிட் ஸ்கூட்டர், 150சிசி எப்.இசட். மாடல் மற்றும் 155 சிசி ஆர்15 வி3 போன்ற மாடல்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்.

     யமஹா மோட்டார்சைக்கிள்

    1. பசினோ 125 எப்.ஐ. ஹைப்ரிட் | ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் | ரேஇசட்.ஆர். ஸ்ட்ரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட்: ரூ. 5,000/- கேஷ் பேக் சலுகை மற்றும் 0% வட்டி விகிதம்.
    2. யமஹா எப்.இசட். 15: குறைந்த முன்பணம்- ரூ. 9,999/- அல்லது 9.25% வட்டி விகிதம்.
    3. யமஹா ஆர்.15 வி3: குறைந்த முன்பணம் - ரூ 19,999/- அல்லது 10.99% வட்டி விகிதம்.

    யமஹா நிறுவனம் இந்தியாவில் தற்போது ஆர்.15 வி4 (155சிசி), ஆர்15 வி3 (155சிசி), ஆர்15எஸ் வி3 (155சிசி), எம்.டி.-15 (155 சிசி), எப்.இசட். 25 (249சிசி), எப்.இசட்.எஸ். 25 (249சிசி), எப்.இசட்.எஸ். எப்.ஐ. (149சிசி), எப்.இசட். எப்.ஐ. (149சிசி), எப்.இசட். எக்ஸ். (149சிசி) போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    இத்துடன் ஏ.பி.எஸ். உடன், ஏரோக்ஸ் (155சிசி) ஏ.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. வசதியுடன் பசினோ 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி), ரே இசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி), ஸ்ட்ரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி) போன்ற ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் பற்றிய புது தகவலை தெரிவித்துள்ளது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓலா எஸ்1 சீரிஸ் டிசம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட யூனிட்கள் அனைத்தும் வினியோகம் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தார். 

    'பெரும்பாலான யூனிட்கள் டெலிவரி மையங்களை சென்றடைந்துள்ளன. இவற்றுக்கான ஆர்.டி.ஓ. வழிமுறைகள் நடைபெற்று வருகின்றன. சில யூனிட்கள் வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. வாகன பதிவிற்கான நேரம் ஏற்கனவே திட்டமிட்டதை விட தாமதமாகிவிட்டது,' என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். 

     ஓலா எஸ்1

    மும்பை, பூனே, ஆமதாபாத் மற்றும் விசாகபட்டினம் போன்ற நகரங்களில் அடுத்த வாரம் முதல் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் துவங்குகிறது. இந்தியாவில் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய பெங்களூரு மற்றும் சென்னையில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 1.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்கிராம் 411 உற்பத்தி விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில் சோதனை செய்யப்படுகிறது. ஹிமாலயன் மாடலை தழுவி உருவாகி இருக்கும் புதிய மோட்டார்சைக்கிள் ரோட்-சார்ந்த மாடல் ஆகும். இந்த மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

    ஸ்பை படங்களின் படி புதிய ஸ்கிராம் 411 மாடலில் டூயல் டோன் பியூவல் டேன்க் உள்ளது. இதன் ஹெட்லேம்ப் கவுல் கிரே நிறம் கொண்டிருக்கிறது. முன்புற இண்டிகேட்டர்கள் வேறு இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் டுவின் டையல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ராயல் என்பீல்டு ஸ்கிராம் 411

    மேலும் இந்த மாடலின் சைடு பேனல்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய கிராப் ஹேண்டில், பின்புற மட்கார்டு மாடிபை செய்யப்பட்டு உள்ளது. முன்புறம் 18 இன்ச் அல்லது 19 இன்ச் அளவு சக்கரங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்கிராம் 411 மாடலிலும் ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்றே 411சிசி என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம் 411 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ஹிமாலயன் மாடலை விட சற்றே குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க ஹைப்பர்சார்ஜர்களை நிறுவும் பணிகளை துவங்கி இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களின் வினியோக பணிகளை சமீபத்தில் துவங்கியது. வினியோகம் துவங்கியதை தொடர்ந்து நாடு முழுக்க ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் அமைக்கும் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் தீவிரப்படுத்தி இருக்கிறது. 

    முதற்கட்டமாக நாட்டின் பெரும்பாலான நகரங்கலில், ஹைப்பர்சார்ஜர்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்குள் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் மையங்களை நிறுவ ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. தற்போது நிறுவப்படும் ஹைப்பர்சார்ஜர்கள் 6 முதல் 8 வாரங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

     டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட்

    புதிய சார்ஜிங் மையங்கள் குடியிருப்புகள் மற்றும் பி.பி.சி.எல். பெட்ரோல் பங்க்களில் நிறுவப்படுகிறது. சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பி.பி.சி.எல். நிறுவனத்துடனான கூட்டணியை முறைப்படுத்த இருக்கிறது. முதல் ஆறு மாதங்களுக்கு சார்ஜிங் மையங்கள் இலவசமாக செயல்பட இருக்கிறது. அதன்பின் படிப்படியாக கட்டணங்கள் வசூலிக்கப்பட இருக்கின்றன. 
    ×