என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
- கேடிஎம் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
- இந்திய சந்தையில் கேடிஎம் இந்தியா வாகனங்களின் உற்பத்தியை பஜாஜ் ஆட்டோ மேற்கொண்டு வருகிறது.
ஆஸ்த்ரியாவை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளர் கேடிஎம் இந்தியாவில் வாகனங்கள் உற்பத்தியில் பத்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்டு இருக்கிறது. பத்து லட்சமாவது கேடிஎம் மோட்டார்சைக்கிள் யூனிட் பூனே அருகில் செயல்பட்டு வரும் சக்கன் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
கேடிஎம் உற்பத்தி செய்த பத்து லட்சமாவது யூனிட் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்திய சந்தையில் வாகனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள கேடிஎம் இந்தியா நிறுவனம் பஜாஜ் ஆட்டோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

2014 ஆம் ஆண்டு வாக்கில் கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது ஒரு லட்சமாவது யூனிட்டை வெளியிட்டது. 2020 ஆண்டு வாக்கில் தனது ஐந்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்ட கேடிஎம் இரண்டவாது ஐந்து லட்சம் வாகனங்களை மூன்றே ஆண்டுகளில் உற்பத்தி செய்து அசத்தி இருக்கிறது.
2011 ஆம் ஆண்டு கேடிஎம் இந்தியா முதல் மோட்டார்சைக்கிள் சக்கன் ஆலையில் இருந்து வெளியானது. அப்போது பஜாஜ் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட கேடிஎம் மோட்டார்சைக்கிள்கள் வெளிநாட்டுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை எதுவும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவே இல்லை.
உற்பத்தி துவங்கிய ஒரு வருடம் கழித்து கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கியது. 2012 ஆம் ஆண்டு வாக்கில் டியூக் 200 மாடலை கேடிஎம் அறிமுகம் செய்தது. கேடிஎம் டியூக் 200 வெற்றியை தொடர்ந்து கேடிஎம் நிறுவனம் தனது RC சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை 2014 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் 2020 வாக்கில் அட்வென்ச்சர் சீரிசை அறிமுகம் செய்தது.
இதுதவிர கேடிஎம் நிறுவனம் வெவ்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்தும் வகையில் நான்கு வெவ்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களை அறிமுகம் செய்தது. 125சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜினுடன் 200சிசி, 250சிசி மற்றும் 373சிசி என்ஜின் கொண்ட மாடல்களை கேடிஎம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் பல்வேறு புது கார்களை காட்சிக்கு வைத்து இருந்தது.
- புதிய ஜிம்னி 5-டோர் எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி 5-டோர் எஸ்யுவி மாடல் அனைவரையும் கவர்ந்ததில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. ஜனவரி 12 ஆம் தேதி காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடல் முன்பதிவில் 5 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஜிம்னி ஆஃப் ரோடர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
நீண்ட வீல்பேஸ், இரண்டு கூடுதல் கதவுகள், ரிடிசைன் செய்யப்பட்ட ரியர் குவார்ட்டர் தவிர, ஜிம்னி 5-டோர் வெர்ஷன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ஜிம்னி 3-டோர் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. புது மாடலில் அப்ரைட் பில்லர்கள், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், ஸ்லாட் கிரில், அகலமான டயர்கள், ஃபிலேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அளவீடுகளை பொருத்தவரை புதிய ஜிம்னி மாடல் 3985mm நீளம், 2590mm வீல்பேஸ் கொண்டிருக்கிறத. இதன் உயரம் 1720mm, அகலம் 1645mm ஆக இருக்கிறது. இந்த காரின் உள்புறம் ஆல்-பிளாக் தீம் ரக்கட் டிசைன், ஹை-மவுண்ட் செய்யப்பட்ட 9 இன்ச் டச் ஸ்கிரீன், HVAC கண்ட்ரோல்கள், வட்ட வடிவ டயல்கள், டேஷ்போர்டில் மவுண்ட் செய்யப்பட்ட கிராப் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மாருதி சுசுகி நிறுவனத்தின் மாருதி ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஆஃப் ரோடர் என்பதால் இந்த காரில் 4WD சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் மாடல் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஹூண்டாய் தனது ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரை காட்சிக்கு வைத்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் யூரோ NCAP பாதுகாப்பு பரிசோதனைில் ஐந்து ஸ்டார்களை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த செடான் மாடல் யூரோ NCAP புது பாதுகாப்பு பரிசோதனைகளின் கீழ் டெஸ்டிங் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது கோனா மற்ரும் ஐயோனிக் 5 மாடல்களை தொடர்ந்து அறிமுகமான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.
யூரோ NCAP கிராஷ் டெஸ்டில் ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் பெரியவர்கள் பாதுகாப்பிற்கு 97 சதவீத புள்ளிகளையும், சிறியவர்கள் பாதுகாப்பிற்கு 87 சதவீத புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. மேலும் கரடுமுரடான சாலைகளில் 66 சதவீதமும், பாதுகாப்பு சோதனையில் 90 சதவீத புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முன்புற ஏர்பேக், பக்கவாட்டில் ஹெட் ஏர்பேக், செஸ்ட் ஏர்பேக், பெல்விஸ் ஏர்பேக், செண்டர் ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெல்ட் பிரீ-டென்ஷனர், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அசிஸ்டன்ஸ், லேன் அசிஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஐயோனிக் 6 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டது. ஸ்டைலிஷ் ஃபுல் எலெக்ட்ரிக் செடான் மாடலான ஐயோனிக் 6 ஏரோடைனமிக் சில்ஹவுட் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புறம் பிக்சல் ஸ்டைல் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் டக்டெயில் ரியர் ஸ்பாயிலர், வளைந்த ஷோல்டர் லைன் உள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் 53 கிலோவாட் ஹவர் மற்றும் 77 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் சிங்கில் மோட்டார் RWD ஸ்டாண்டர்டு அம்சமாகவும், டாப் வேரியண்ட்களில் டூயல் மோட்டார், AWD ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஐயோனிக் 6 காரில் டூயல் மோட்டார் செட்டப் 320 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
- நெக்சான் EV சீரிஸ் விலை மாற்றப்பட்டு தற்போது துவக்க விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV மேக்ஸ் மற்றும் நெக்சான் EV பிரைம் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் குறைத்து இருக்கிறது. மேலும் நெக்சான் EV பிரைம் மாடலின் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா நெக்சான் EV பிரைம் மாடலின் விலை தற்போது ரூ.14 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இது முந்தைய விலையை விட ரூ. 50 ஆயிரம் குறைவு ஆகும். விலை குறைப்பின் படி டாடா நெக்சான் EV பிரைம் டாப் எண்ட் விலை ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் வேரியண்ட் ரூ. 85 ஆயிரம் விலை குறைப்பு பெற்று இருக்கிறது. இத்துடன் புதிதாக XM வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய நெக்சான் EV மேக்ஸ் XM மாடலுடன் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் சார்ஜர்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலில் எலெக்டிரானிக் பார்கிங் பிரேக், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், இஎஸ்பி, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், கீலெஸ் கோ, கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம், ஆல் வீல் டிஸ்க் பிரேக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய விலை விவரங்கள்:
டாடா நெக்சான் EV பிரைம் XM 30.2 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 50 ஆயிரம் குறைவு)
டாடா நெக்சான் EV பிரைம் XZ+ 30.2 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 31 ஆயிரம் குறைவு)
டாடா நெக்சான் EV பிரைம் XZ+ லக்ஸ் 30.2 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 31 ஆயிரம் குறைவு)
புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் XM 40.5 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம்
டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ 40.5 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)
டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் 40.5 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 18 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)
புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் XM 40.5 கிலோவாட் ஹவர், 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம்
டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ 40.5 கிலோவாட் ஹவர், 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 17 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)
டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் 40.5 கிலோவாட் ஹவர், 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)
- ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
- கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிதாக ஸ்பர் கிரீன் எனும் நிறத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் முன்பதிவு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகிறது.
காரின் வெளிப்புறம் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், புது முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்- போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்பார்க் கிரீன் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது.

உள்புறத்தில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரிகோக்னிஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் CNG யூனிட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் கார் டெஸ்ட் டிரைவ் துவங்கி நடைபெற்று வருகிறது.
- வரும் வாரங்களில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் கார் விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி, XUV400 மாடலை செப்டம்பர் 2022 வாக்கில் அறிவித்தது. தற்போது இந்த மாடலுக்கான விலை மற்றும் முன்பதிவு விவரங்கள் உள்ளிட்டவை வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான டெஸ்ட் டிரைவ் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
புது XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் XUV300 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பேஸ், EP மற்றும் EL என மூன்று வேரிண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

புதிய மஹிந்திரா XUV400 மாடலில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் 3.3 கிலோவாட்/16A ஹோம் சார்ஜர், 7.2 கிலோவாட்/32A ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா XUV400 காரை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். ஹோம் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய 13 மணி நேரங்கள் ஆகும். இந்த கார் ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் ஏராளமான அம்சங்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV400 மாடலின் விலை ரூ. 17 லட்சத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மற்றும் எம்ஜி ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
- 2021 ஆண்டை விட கடந்த ஆண்டு 44 சதவீதம் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை ஆடி வினியோகம் செய்து இருக்கிறது.
ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 1.61 மில்லியன் வாகனங்களை வினியோகம் செய்து இருக்கிறது. 2021 ஆண்டு ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் இதர முக்கிய சந்தைகளில் விற்றதை விட அதிக வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள்- ஆடி Q4 இ டிரான், ஆடி இ டிரான் GT குவாட்ரோ1 மற்றும் ஆடி இ டிரான் உள்ளிட்டவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைத்தன.
எலெக்ட்ரிக் பிரிவில் ஆடி Q8 இ டிரான மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாடல் 2023 மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்குள் இந்த மாடலை வாங்க பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். 2026 ஆண்டில் இருந்து ஆடி நிறுவனம் சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 196 எலெக்ட்ரிக் வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.3 சதவீதம் அதிகம் ஆகும். இதில் ஆடி A3 (+12.1 சதவீதம்), ஆடி A4 (+8.0 சதவீதம்) மற்றும் ஆடி Q5 (+2.7 சதவீதம்) வளர்ச்சியை பெற்றுள்ளன.
"எலெக்ட்ரிக் மொபிலிட்டி சரியான பாதையில் இருப்பதை உணர்த்தும் வகையில் எங்களின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன. போட்டி மற்றும் புதுமைகள் நிறைந்த சூழலில், எங்களின் சர்வதேச குழு கடந்த ஆண்டு மேலும் ஒரு முறை கடினங்களை எதிர்கொண்டுவிட்டது."
"குழுவினரின் விடா முயற்சி, தலைசிறந்த நிர்வாக திறன் மற்றும் சீரான விற்பனை இலக்கு உள்ளிட்டவைகளுக்கு நன்றி. இதன் காரணமாக கடந்த ஆண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது," என ஆடி நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஹில்டிகார்ட் வொர்ட்மேன் தெரிவித்து இருக்கிறார்.
- டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபியூவல் செல் வாகனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- புதிய ஃபியூவல் செல் வாகனம் 640 கிலோமீட்டர் வரையிலான டிரைவிங் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மிரய் ஹைர்டஜன் ஃபியூவல் செல் வாகனத்தை காட்சித்து வைத்து இருக்கிறது. ஏற்கனவே 2022 மார்ச் மாத வாக்கில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டு இருந்தது.
தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் மிரய் இரண்டாம் தலைமுறை மாடல் ஆகும். முன்னதாக 2020 வாக்கில் இந்த மாடல் சர்வேதச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டொயோட்டா மிரய் GA-L ரியர் வீல் டிரைவ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் டொயோட்டா ஃபியூவல் செல் ஸ்டாக் மற்றும் டிரைவ்டிரெயின் பாகங்களை ரிபேகேஜ் செய்திருக்கிறது. இத்துடன் அதிகபட்சமாக மூன்று ஹைட்ரஜன் டேன்க்-கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

மிரய் மாடல் ஹைட்ரஜன் ஃபியூவல் செல் ஸ்டாக் மூலம் 174 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 640 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. காரின் ஏர் ஃபில்ட்டரில் கேடலிஸ்ட் டைப் ஃபில்ட்டர் இருப்பதால் பயணம் செய்யும் போதே மிரய் காற்றை சுத்தப்படுத்தும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. முந்தைய மாடலை விட வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் மிரய் மாடல் மெல்லிய ஸ்டைலிங், லோ ஸ்லங் ஸ்டான்ஸ் மற்றும் கூப் போன்ற பின்புறம் உள்ளது.
இதன் உள்புறத்தில் ரிடிசைன் செய்யப்பட்ட அளவில் பெரிய, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்களில் 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹீடெட் ஸ்டீரிங் வீல், ஹீடெட் மற்றும் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஏராளமான ADAS தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மாடலின் புது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ரெட் டார்க் எடிஷன் மாடலில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே மற்றும் iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV, சியெரா EV, பன்ச் i-CNG, அல்ட்ரோஸ் i-CNG, அல்ட்ரோஸ் ரேசர், அவின்யா மற்றும் கர்வ் கான்செப்ட்களை அறிமுகம் செய்தது. இவை தவிர தனது பிரபல எஸ்யுவி மாடல்களான ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும் அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் டார்க் எடிஷன் வடிவில் வெளியாகி இருக்கிறது. புது மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக புது சஃபாரி மாடலில் ADAS சூட், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, புதிய மற்றும் மேம்பட்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்தில், முன்புற தோற்றம் ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. பிளாக்டு அவுட் கிரில் பகுதியில் உள்ள ஹெக்சோகன் ரெட் அக்செண்ட் செய்யப்பட்டு பிரேக் கேலிப்பர்களில் ரெட் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர கார் முழுக்க பிளாக் பெயிண்ட் உள்ளது.
காரின் உள்புறம் ரெட் சீட் மேற்கவர்கள், டோர் கிராப் ஹேண்டில்கள், முன்புறம் செண்டர் ஆர்ம்ரெஸ்ட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட ரூஃப் லைனர் உள்ளது. புதிய சஃபாரி டார்க் எடிஷன் மாடலிலும் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு கார்களை காட்சிக்கு வைத்து இருக்கிறது.
- அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புது கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது மாடல்களை காட்சிக்கு வைத்துருக்கிறது. இவற்றில் ICE (பெட்ரோல்), EV மற்றும் CNG போன்ற மாடல்களும் இடம்பெற்று இருந்தன. இந்த புது மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து டாடா மோட்டார்ஸ் அதிக விவரங்களை வெளியிடவில்லை.
அந்த வகையில் தற்போது நெக்சான் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஹேரியர், சஃபாரி போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 2.0 ஃபியாட் என்ஜின் மேலும் சில காலத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இம்முறை ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் கவர்ந்த மாடல்களில் ஒன்றாக டாடா சியெரா EV கான்செப்ட் இரண்டாவது வெர்ஷன் இருந்தது.
தற்போது இந்த மாடல் நான்கு கதவுகள், கன்வென்ஷனல் கண்ட்ரோல் மற்றும் ஸ்விட்ச்கியர் கொண்ட இண்டீரியர் உள்ளது. அந்த வகையில், இந்த கார் உற்பத்திக்கு பெருமளவு தயாராகி விட்டது என்றே தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜென் 2 ஆர்கிடெக்ச்சர் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்ட ஆல்ஃபா பிளாட்பார்ம் வெர்ஷன் ஆகும்.

இந்த மாடலில் டாடாவின் புதிய தலைமுறை 1.5 லிட்டர் டைரெக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 160 முதல் 180 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது. இந்த என்ஜின் ஹேரியர், சஃபாரி மற்றும் கர்வ் எஸ்யுவி மாடல்களில் வழங்கப்படலாம். இத்துடன் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா அவின்யா மாடல் முதல் முறையாக பொது வெளியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடல் பிஸ்போக் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 2025 வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. அவின்யா மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த காரின் ICE வெர்ஷன் அறிமுகமாகாது.
டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் பிளான்க்டு-ஆஃப் கிரில், ஏரோ-எஃபிஷியண்ட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகமாகும் என தெரிகிறது.

டாடா கர்வ் கான்செப்ட் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் இடம்பெற்று இருக்கிறது. இந்த கார் கிரில், ஃபாக் லேம்ப், வீல், டயர், பாடிவொர்க் மற்றும் இண்டீரியர் போன்ற அம்சங்களுடன் உற்பத்திக்கு தயாரான நிலையிலே காட்சியளிக்கிறது. சியெரா போன்றே இந்த மாடலும் எலெக்ட்ரிக் மற்றும் ICE என இருவித பவர்டிரெயின்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த பெட்ரோல் என்ஜின்கள் 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ, புது தலைமுறை 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ யூனிட் வழங்கப்படலாம்,
டாடா டியாகோ EV காரின் ஸ்போர்ட் வேரியண்ட் ஆக டியாகோ EV ப்ளிட்ஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடலில் கருப்பு நிற அலாய் வீல்கள், வெளிப்புறம் சிறு அப்டேட்கள், EV பேட்ஜ் அருகில் புளூ போல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதிவர இந்த காரின் பவர்டிரெயின் பற்றி எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த கார் 2024 வாக்கில் அறிமுகமாகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா பன்ச் EV மாடல் காட்சிக்கு வைக்கப்படவில்லை. மாறாக பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களில் iCNG வெர்ஷன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தோற்றத்தில் பன்ச் CNG மாடல் எவ்வித மாற்றமும் பெறவில்லை. இரு கார்களிலும் ட்வின் சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றுடன் டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிஷன் மாடல்கள் இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கின்றன.
டாடா அல்ட்ரோஸ் ரேசர் எடிஷன் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் அல்ட்ரோஸ் i டர்போ காரின் டாப் எண்ட் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அல்ட்ரோஸ் ரேசர் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- கியா இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் எஸ்யுவி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் அறிமுகம்.
- முன்னதாக இந்த கான்செப்ட் கார் 2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது. முற்றிலும் புதிய கியா கார்னிவல் மாடலுடன் இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2024 இறுதியில் கியா EV9 கான்செப்ட் உற்பத்தி பணிகள் துவங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக 2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் கியா EV9 கான்செப்ட் முதன் முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கியா பிராண்டின் E-GMP பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த தோற்றம் பிரமாண்டமாக காட்சியளிக்கும் போதிலும், இதன் டிசைன் ஏரோடைனமிக் அம்சங்களை கொண்டிருக்கிறது.

வெளிப்புறம் இந்த காரில் கிளாம்ஷெல் பொனெட், பிலான்க்டு-ஆஃப் டைகர் நோஸ் கிரில், டாட் பேட்டன் ஹெட்லேம்ப்கள், L வடிவ டிஆர்எல்-கள், காண்டிராஸ்ட் நிற ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பொனெட்டில் ஸ்டிராங் கிரீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் லைன் மிக தெளிவாக காட்சியளிக்கிறது. கான்செப்ட் மாடல் என்பதால், இதன் பக்கவாட்டில் டோர் ஹேண்டில்கள் காணப்படவில்லை.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் தடிமனான வீல் ஆர்ச்கள், ஏரோடைனமிக் டிசைன் கொண்ட பெரிய வீல்கள், வழக்கமான ORVM-களுக்கு மாற்றாக கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் நேரான ரூஃப் லைன் இண்டகிரேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலருடன் இண்டகிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ரியர் குவார்டர் கிளாஸ் மற்றும் விண்ட்ஷீல்டு உள்ளிட்டவை அளவில் பெரியதாக இருக்கிறது.
கியா நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களின் படி EV9 கான்செப்ட் மாடல் ப்ரோடக்ஷன் நிலைக்கு தயாராக இருப்பதாகவே தெரிவித்து இருந்தது. இதில் வழங்கப்படும் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் இதனுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும் என கூறப்படுகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது.
- டாடா டியாகோ EV ஸ்பெஷல் எடிஷன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று புது எலெக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்த இருக்கிறது. டீசர்களில் புது மாடல்களின் விவரங்கள் அதிக தெளிவாக தெரியவில்லை. எனினும், இவை டாடா டியாகோ ஹேச்பேக், ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யுவி மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
இவற்றுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் மற்றும் அவின்யா எலெக்ட்ரிக் கான்செப்ட்களையும் காட்சிப்படுத்தலாம். எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகமாகும் பட்சத்தில் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு வியப்பாக இருக்கும். ஏற்கனவே சில எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், ஹேரியர் மற்றும் சஃபாரி EV மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரிய எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும்.

சமீபத்தில் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், டாடா டியாகோ EV மாடலுக்கான டீசரும் வெளியாகி இருக்கிறது. இந்த காருக்கான வினியோகம் இந்த மாதமே துவங்க இருக்கிறது. அந்த வகையில், தற்போதைய டீசர்களை தொடர்ந்து டாடா டியாகோ EV மாடலின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது NRG EV எடிஷன் அல்லது டார்க் எடிஷனாக இருக்கும் என தெரிகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் மாடலின் CNG வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த காரின் ஸ்பை படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில், டாடா பன்ச் CNG மாடலின் விலை ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிவிக்கப்படலாம். இந்த ஆப்ஷன் டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.






