என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • கியா நிறுவனத்தின் 2022 செல்டோஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய செல்டோஸ் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    2022 கியா செல்டோஸ் மாடல் டிஜிட்டல் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புசான் மோட்டார் விழாவில் வெளியாக இருந்த நிலையில், இந்த டிஜிட்டல் அறிமுகம் நடைபெற்று இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய கியா செல்டோஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்தியாவில் கியா செல்டோஸ் சி செக்மண்ட் எஸ்.யு.வி. வெற்றிகர மாடலாக விளங்குகிறது. சமீபத்தில் கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட நிலையில், இதன் அப்டேட் செய்யப்பட்ட வேரியண்ட் தற்போது அறிமுகமாகிறது. இந்த மாடல் மேலும் அதிக வாடிக்கையாளர்கள் புது காரை வாங்க செய்யும்.


    முன்னதாக கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி புதிய மேம்பட்ட மாடலும், பேஸ்லிப்ட் மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. எனினும், 2022 மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், பெரிய முன்புற கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டி.ஆர்.எல்.களின் டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் 18 இன்ல் அளவில் புதிய அலாய் வீல்கள், வீல் ஆர்ச்களை முழுமையாக ஆக்கிரமித்து, காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை எளிதில் எடுத்துக் கொடுக்கிறது. பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப், ஃபுல் விட்த் எஸ்.இ.டி. லைட் பார் உள்ளது. இதன் நடுவே கியா லோகோ உள்ளது. 

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் சிறிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த காரில் டாடா ஆட்டோகாம்ப் நிறுவன பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலின் சோதனையை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய எம்ஜி காம்பேக்ட் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் உலிங் ஏர் EV மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த மாடல் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.


    Photo Courtesy: Autocarindia

    அளவீடுகளின் படி புதிய எம்ஜி காம்பேக்ட் கார் மாருதி ஆல்டோவை விட அளவில் சிறியது ஆகும். இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடலில் 12 இன்ச் ஸ்டீல் வீல் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.

    எம்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடலாக விளங்கும் நெக்சான் EV கொண்டிருந்ததை போன்ற பேட்டரி தான் எம்ஜி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் மினி லிமிடெட் எடிஷன் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • இந்த கார் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் சிட்ரோயன் பிராண்டு அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்திய சந்தையிலும் விரைவில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில், சிட்ரோயன் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் மினி எலெக்ட்ரிக் கார்கள் 18 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தன. இதனை சிட்ரோயன் பிராண்டின் தாய் நிறுவனம் ஸ்டெலாண்டிஸ் தெரிவித்து இருக்கிறது. "சாரி எலான், ஒன்றை பெறுவதற்கு ஒரே வழி எங்களை வாங்குவது மட்டும் தான்," என சிட்ரோயன் நிறுவனம் பாரிஸ் கார் டி எஸ்ட் ரெயில் நிலையத்தின் பில் போர்டில் எழுதி வைத்து இருக்கிறது.


    2020 ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமானது முதல் மொராக்கோ, ஐரோப்பா மற்றும் துருக்கியில் இதுவரை 22 ஆயிரம் சிறிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை சிட்ரோயன் விற்பனை செய்துள்ளது. இந்த கார் மொராக்கோவில் உற்பத்தி செய்யப்பட்டது. இவற்றை ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையில்லை. மேலும் இந்த கார் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    லிமிடெட் எடிஷன் "My Ami Buggy" வெர்ஷனில் ரூஃப் கேன்வாஸ் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை விரும்பிய போது சுருட்டி வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த காரில் கதவுகளுக்கு பதில் டியூப் கேட்கள் உள்ளன. இந்த காரின் விலை 9 ஆயிரத்து 790 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 11 ஆயிரத்து 395 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணி வர்த்தக வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கிறது.
    • பயணிகள் வாகனங்கள் பிரிவிலும் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாட்டின் முன்னணி வர்த்தக வாகன நிறுவனமாக இருக்கிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விலை ஜூலை 1, 2022 முதல் உயர்த்தப்பட இருக்கின்றன. இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி டாடா வர்த்தக வாகனங்கள் விலை 1.5 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.


    விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். வாகன உற்பத்திக்கு ஏற்படும் செலவீனங்களை குறைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏராளமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தொடர் விலை உயர்வு காரணமாக வாகனங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கார், பயன்பாட்டு வாகனம், பிக்-அப் வாகனம், டிரக் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனனங்களை விற்பனை செய்வதில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகன பிரிவில் இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருக்கிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாதங்களாக ஷாட்கன் 650 மாடலை உருவாக்கி வருகிறது.
    • இந்த மாடல் 650 ட்வின்ஸ் பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஷாட்கன் 650 பெயரில் புது மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் பலமுறை சர்வதேச சந்தைகளில் சோதனை செய்யப்பட்டு வந்த ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 அவ்வப்போது இந்திய சந்தையிலும் சோதனை செய்யப்பட்டு வந்தன. இதன் ஸ்பை படங்களும் பல முறை வெளியாகி இருக்கின்றன.

    இந்த நிலையில், கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான நிலையில் ஷாட்கன் 650 மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இந்த மாடல் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ராயல் என்பீல்டு SG650 கான்செப்ட் மாடலை தழுவியே இந்த மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.


    Photo Courtesy: Zigwheels 

    மேலும் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 650 ட்வின்ஸ் பிளாட்பார்மில் புதுவரவு மாடலாக இணைகிறது. 650சிசி பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜி.டி. 650 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    இரு மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ள பிளாட்பார்மில் தான் ஷாட்கன் 650 மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதே பிளாட்பார்மில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலும் எதிர்காலத்தில் இணையும் என கூறப்படுகிறது. இது 650சிசி குரூயிசர் பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஸ்பை படங்களின் படி ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், அலாய் வீல்கள், டியுப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் 648சிசி, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

    • இந்தியாவில் பாரத் NCAP திட்டத்திற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    • இந்த திட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கிறது.

    இந்தியாவில் பாரத் NCAP திட்டத்திற்கு அனுமதி கோரும் வரைவு மசோதாவுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி அனுமதி அளித்தார். இந்த திட்டம் ஏபர்ல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. இந்த திடத்தின் கீழ் பாதுகாப்பு சோதனையில் கார் மாடல்கள் பெறும் புள்ளிகள் அட்டபிடையில் அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

    தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய விதிமுறைகள் மற்றும் டிரைவிங் நிலைகளை கருத்தில் அடிப்படையாக கொண்டு தான் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட உள்ள. பாரத் NCAP திட்டம் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.


    பாரத் NCAP பாதுகாப்பு சோதனையானது நுகர்வோர் தளம் போன்று உருவாக்கப்படும். இது வாடிக்கையாளர்கள், பாதுகாப்பான கார்களை அவை பெற்று இருக்கும் ஸ்டார் ரேட்டிங் கொண்டு தேர்வு செய்ய உதவும். மேலும் இது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்.

    பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி இந்திய ஆட்டோமொபைல் மாடல்களின் ஏற்றுமதி தரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தான் இந்திய கார்களுக்கான ஸ்டார் ரேட்டிங் முறை அவசியம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு பரிசோதனை மையங்களில் தங்களின் வாகனங்களை சோதனை செய்ய முடியும்.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்சார்பு கொள்கையை நிலைநாட்ட பாரத் NCAP முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தை உலகளவில் முதலிடத்தை நோக்கி பயணிக்கும். பாரத் NCAP பாதுகாப்பு சோதனை இண்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டும் இன்றி சி.என்.ஜி. மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மேற்கொள்ளப்படும்.

    • மாருது சுசுகி நிறுவனர் டாக்டர் வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
    • இவர் மாருதி சுசுகி மட்டுமின்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

    மாருதி உத்யோக் - இன்று மாருதி சுசுகி இந்தியா நிறுவன தலைவர் டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன் 26) உயிரிழந்தார். இவருக்கு வயது 97. மாருதி சுசுகி நிறுவன தலைவராக மட்டுமின்றி பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்று இருக்கிறார்.

    அதன்படி பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா போன்ற நிறுவனங்களை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இது மட்டுமின்றி பல்வேறு மிக முக்கிய பொறுப்புகளை வி கிருஷ்ணமூர்த்தி வகித்து இருக்கிறார். இவர் மத்திய தொழில்துறையின் திட்டமிடல் ஆணையத்தின் செயலாளராக பதவி வகித்துள்ளார்.


    1981 ஆம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்திற்கு செல்லும் முன், மாருதி 800 மாடல் இவரின் மேற்பார்வையில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதிக நட்டத்தில் இயங்கிய ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தை சந்தையின் உச்சிக்கு அழைத்துச் சென்றதில் இவரின் பங்கு மிகப் பெரியது.

    இந்திய தொழில்துறையில் இவரின் பங்களிப்புகளை பாராட்டும் வகையில், 1973 ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதும், 1986 ஆண்டு பத்ம பூஷன் அதன்பின் 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.

    "நான் எனது பணியை துவங்கியதில் இருந்து, என் வியாபார காலக்கட்டம் வரை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி எனக்கு தொழில் குருவாக விளங்கினார். டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி உருவானதில் அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் இந்திய தொழில்துறையில் மிகமுக்கியத் துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய வளர்ச்சியில் இவரின் பங்களிப்பு அளவிட முடியாத ஒன்று ஆகும். இந்திய தொழில்துறை மற்றும் நாட்டிற்கு இது மிகப் பெரிய இழப்பு," என டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் தலைவர், வேனு ஸ்ரீனிவாசன் தெரிவித்து இருக்கிறார். 

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏப்ரல் - மே மாதங்களில் மட்டும் ரூ. 500 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது.
    • எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் 50 சதவீத பங்குகளை ஓலா எலெக்ட்ரிக் பிடித்துள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், 2022-2023 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் மற்றும் மே 2022 மாதங்களில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 500 கோடி வரையிலான வருவாய் ஈட்டியதாக அறிவித்து இருக்கிறது.

    தற்போதைய நிலவரப்படி இந்த நிதியாண்டின் இறுதியில் 1 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 7 ஆயிரத்து 824 கோடி வருவாயை எட்டும் நிலையில் இருப்பதாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஓலா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    தற்போது ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 50 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. "வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக காட்சியளிக்கிறது. ஓலா பியுச்சர் பேக்டரியில் வாகன உற்பத்தியை சீராக இயக்க முடிகிறது."

    "இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எக்கச்சக்க முன்பதிவுகள் நடைபெற்று இருப்பதால், உற்பத்தி பணிகளை முடுக்கி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    • இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் டாடா நெக்சான் EV.
    • சமீபத்தில் இந்த மாடல் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    மும்பையில் சில தினங்களுக்கு ஏற்பட்ட எலெக்ட்ரிக் வாகன விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் டாடா நெக்சான் EV மாடல் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்த உத்தரவிடும் முன்பே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    டாடா நெக்சான் EV மாடல் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பங்குதாரர்கள் வலியுறுத்தினர்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், நெக்சான் EV தீப்பிடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இந்திய அறிவியல் கழகம் மற்றும் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சம்பவம் பற்றி முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவு பெற்றதும், தீ விபத்துக்கான காரணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். எங்களின் வாகனங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என தெரிவித்து இருக்கிறது.

    • ஒகினவா நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் புது உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறது.
    • இதற்காக ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறது. இந்த ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி பகுதியில் அமைந்து இருக்கிறது.

    ஒகினவா நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை 30 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பணியாற்ற முடியும். இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட உற்பத்தி ஆலைகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய எலெக்ட்ரிக் இரு சக்கர உற்பத்தி ஆலையாக இது இருக்கும். இந்த ஆலையை உருவாக்க ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது.


    ஒகினவா புது உற்பத்தி ஆலை 2023 அக்டோபர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் மஇலக்கு நிர்ணயம் செய்ய இருக்கிறது.

    நாட்டில் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தேவையை பூர்த்தி செய்வதில் புது உற்பத்தி ஆலை மிக முக்கிய பங்கு வகிக்கும். உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கான களமாகவும் இந்த ஆலை செயல்ப்ட உள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஒகினவா நிறுவனம் டகிடாவுடன் கூட்டணி அமைக்கிறது.

    • சீன எலெக்ட்ரிக் கார் நிறுவனமான BYD சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது.
    • இந்த கார் அதன் பாதுகாப்பு, ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் சைக்கிள் போன்ற அம்சங்களுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்று இருக்கிறது.

    சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி. (BYD) நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் BYD e6 மாடல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. புதிய BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடல் ஆறு நாட்களில் 2 ஆயிரத்து 203 கிலோமீட்டர்களை கடந்துள்ளது.

    இந்த கார் டெல்லியில் துவங்கி மும்பை வரை மொத்தம் ஒன்பது நகரங்களை கடந்து இருக்கிறது. பயணத்தின் போது BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடல் நான்கு மாநிலங்களை கடந்தது. இதுவரை BYD e6 மாடல் 4.7 கோடி கிலோமீட்டர்களை நிறைவு செய்து உள்ளது. இந்த பயணத்தின் மூலம் 4 லட்சத்து 13 கிராம் கார்பன் மாசு ஏற்படுவதை தவிர்த்து இருக்கிறது.


    இந்தியாவில் பிளேடு பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஆடம்பர எம்.யு.வி. என்ற பெருமையை BYD e6 பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம் பேட்டரியின் பாதுகாப்பு, ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் சைக்கிள் போன்ற அம்சங்களுக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று இருக்கிறது.

    பேட்டரியில் லித்தியம் அயன் பாஸ்பேட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதே இத்தகைய பலன்கள் கிடைக்க காரணம் ஆகும். இந்திய சந்தையில் BYD e6 எலெக்ட்ரிக் எம்.யு.வி. மாடலின் விலை ரூ. 29 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் BYD e6 எலெக்ட்ரிக் மாடலை வாடகை வண்டியாக மட்டும் தான் பயன்படுத்த முடியும். இதனை தனி நபர் பயன்பாட்டுக்காக பதிவு செய்ய முடியாது.

    BYD e6 மாடலில் 71.7 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக் உள்ளது. இந்த கார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த காரை முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். BYD e6 மாடல் AC மற்றும் DC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

    • போக்ஸ்வேகன் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • டிகுவான் மாடலின் முழு எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மாடல்கள் புதிதாக துவங்கப்பட்டு இருக்கும் ID துணை பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முற்றிலும் புது எலெக்ட்ரிக் மாடல்களுக்கு முன்னதாகவே போக்ஸ்வேகன் தற்போது விற்பனை செய்து வரும் கார்களின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    உயரம் குறைக்கப்பட்டு, பின்புறம் எக்சாஸ்ட் டிப்கள் நீக்கப்பட்டு, முன்புற கிரில் மூடப்பட்டு இருக்கும் டிகுவான் மாடல் நர்பர்க்ரிங் களத்தில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. இந்த கார் டிகவான் மாடலின் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது போக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட்டாக இருக்கும் என தெரிகிறது. போக்ஸ்வேகன் குழுமத்தின் பல்வேறு எஸ்.யு.வி. மாடல்களுக்கு இந்த பாடி ஷெல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.


    இந்த வகையில் இந்த மாடல் போக்ஸ்வேகன் குழும நிறுவனங்களின் ஏதேனும் ஒரு எலெக்ட்ரிக் காருக்கான பிளாட்பார்மாக இருக்கலாம். தற்போதைய டிகுவான் மாடல் MQB பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்பை படத்தில் உள்ள மாடல் MEB பிளாட்பார்முக்கு ஏற்ப மாற்றப்பட்டு இருக்கலாம். எலெக்ட்ரிக் பவர்டிரெயின் சிங்கில் மோட்டார் அல்லது டூயல் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    எலெக்ட்ரிக் டிகுவான் தோற்றத்தில் இது முதல் முறை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் தான். அந்த வகையில், இன்னும் பலக் கட்ட சோதனைகளுக்கு பின்னரே இந்த மாடல் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் இந்த தசாப்தத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம். 

    ×