search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle safety"

    • இந்தியாவில் பாரத் NCAP திட்டத்திற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    • இந்த திட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கிறது.

    இந்தியாவில் பாரத் NCAP திட்டத்திற்கு அனுமதி கோரும் வரைவு மசோதாவுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி அனுமதி அளித்தார். இந்த திட்டம் ஏபர்ல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. இந்த திடத்தின் கீழ் பாதுகாப்பு சோதனையில் கார் மாடல்கள் பெறும் புள்ளிகள் அட்டபிடையில் அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

    தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய விதிமுறைகள் மற்றும் டிரைவிங் நிலைகளை கருத்தில் அடிப்படையாக கொண்டு தான் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட உள்ள. பாரத் NCAP திட்டம் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.


    பாரத் NCAP பாதுகாப்பு சோதனையானது நுகர்வோர் தளம் போன்று உருவாக்கப்படும். இது வாடிக்கையாளர்கள், பாதுகாப்பான கார்களை அவை பெற்று இருக்கும் ஸ்டார் ரேட்டிங் கொண்டு தேர்வு செய்ய உதவும். மேலும் இது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்.

    பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி இந்திய ஆட்டோமொபைல் மாடல்களின் ஏற்றுமதி தரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தான் இந்திய கார்களுக்கான ஸ்டார் ரேட்டிங் முறை அவசியம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு பரிசோதனை மையங்களில் தங்களின் வாகனங்களை சோதனை செய்ய முடியும்.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்சார்பு கொள்கையை நிலைநாட்ட பாரத் NCAP முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தை உலகளவில் முதலிடத்தை நோக்கி பயணிக்கும். பாரத் NCAP பாதுகாப்பு சோதனை இண்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டும் இன்றி சி.என்.ஜி. மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மேற்கொள்ளப்படும்.

    ×