search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ராஜஸ்தானில் மூன்றாவது உற்பத்தி ஆலையில் - ஒகினாவா அதிரடி
    X

    ராஜஸ்தானில் மூன்றாவது உற்பத்தி ஆலையில் - ஒகினாவா அதிரடி

    • ஒகினவா நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் புது உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறது.
    • இதற்காக ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறது. இந்த ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி பகுதியில் அமைந்து இருக்கிறது.

    ஒகினவா நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை 30 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பணியாற்ற முடியும். இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட உற்பத்தி ஆலைகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய எலெக்ட்ரிக் இரு சக்கர உற்பத்தி ஆலையாக இது இருக்கும். இந்த ஆலையை உருவாக்க ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது.


    ஒகினவா புது உற்பத்தி ஆலை 2023 அக்டோபர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் மஇலக்கு நிர்ணயம் செய்ய இருக்கிறது.

    நாட்டில் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தேவையை பூர்த்தி செய்வதில் புது உற்பத்தி ஆலை மிக முக்கிய பங்கு வகிக்கும். உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கான களமாகவும் இந்த ஆலை செயல்ப்ட உள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஒகினவா நிறுவனம் டகிடாவுடன் கூட்டணி அமைக்கிறது.

    Next Story
    ×