என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆர்சி சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது புதிய ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி புதிய கேடிஎம் ஆர்சி 390 உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக தெரிகிறது. இந்த மாடல் அசத்தலான டிசைன், மேம்பட்ட குஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேடிஎம் ஆர்சி 390

    2021 கேடிஎம் ஆர்சி 390 மாடலில் புதிய முன்புறம் தோற்றம் பெறுகிறது. டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் தற்போது பெரிய எல்இடி ஹெட்லேம்ப்களாக மாறி டூயல்-ப்ரோஜக்டர்களை கொண்டிருக்கிறது. இதன் பேரிங்கும் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக மாற்றப்பட்டு சற்று கூர்மையாக காட்சியளிக்கிறது.

    புதிய ஆர்சி  390 மாடலில் 373.2 சிசி, சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படுகிறது. இது 44 பிஹெச்பி பவர், 36 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2021 ஆர்சி 200 மாடலில் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 199 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இது 25 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 6 சீரிஸ் ஜிடி பேஸ்லிப்ட் மாடல் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் ஜிடி பேஸ்லிப்ட் மாடல்கள் கடந்த ஆண்டு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    மேம்பட்ட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் முன்பை விட அதிக ஸ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது. முன்புறம் கிட்னி கிரில் மேம்படுத்தப்பட்டு பிஎம்டபிள்யூ லேசர் லைட் தொழில்நுட்பம் கொண்ட ஹெட்லைட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. எனினும், இது எம் ஸ்போர்ட் வேரியண்டில் வழங்கப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி

    உள்புறம் தற்போதைய மாடலை போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் மற்றும் ஐ டிரைவ் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேட் கொண்டிருக்கிறது.

    2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 255 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் மாடலை புதிதாக பியல் புளூ சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் நிறம் டிரம் மற்றும் டிஸ்க் என இரு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. டூயல் டோன் பினிஷ் ஹெட்லைட் கவுல், பியூவல் டேன்க், பக்கவாட்டு மற்றும் பின்புற பேனல்களில் காட்சியளிக்கிறது. 

    புதிய நிறம்  தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் ET-Fi தொழில்நுட்பம், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் யுஎஸ்பி மொபைல் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

    டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109.7சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் விலை ரூ. 65,865 எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் ஹீரோ பேஷன் ப்ரோ, பஜாஜ் பிளாட்டினா 110 மற்றும் ஹோண்டா சிடி 110 டிரீம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பென்ட்லி புது மைல்கல் பற்றிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

    பென்ட்லி நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் உற்பத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 1919 ஆண்டு துவங்கப்பட்ட பென்ட்லி 101 ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரியம் மிக்க கார் மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    அந்த வரிசையில் தற்போது உற்பத்தியில் 2 லட்சம் கார்களை கடந்து இருப்பதாக பென்ட்லி அறிவித்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லி ஆடம்பர கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் புளோயர், அர்னேஜ், மல்சேன், கான்டினென்டல் ஜிடி என பல்வேறு தலைசிறந்த மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    பென்ட்லி கார்

    2 லட்சம் யூனிட்களில் சுமார் 1,55,582 யூனிட்கள் 2003 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். தற்போது பென்ட்லி நிறுவனம் கான்டினென்டல், பிளையிங் ஸ்பர் மற்றும் பென்ட்யகா போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்கள் மற்றும் சப்-வேரியண்ட்கள் இங்கிலாந்தில் உள்ள தலைமையகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

    மோட்டார்சைக்கிள்களில் என்ஜின் கோளாறு காரணமாக ரீகால் செய்யப்படுவதாக டுகாட்டி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிளை அமெரக்காவில் ரீகால் செய்கிறது. வி4 மோட்டாரில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 60 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.


     டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4
    வி4 மோட்டாரின் வால்வ் கைடுகளில் உள்ள சிறு குறைபாடுகள் அதன் செயல்திறனை குறைத்து இறுதியில் செயலற்றதாக மாற்றிவிடும் என டுகாட்டி தெரிவித்து இருக்கிறது. உதிரிபாகங்களை வழங்கிய இரு நிறுவனங்கள் செய்த தவறால் இந்த கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் என்ஜின் மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும். என்ஜின் முழுமையாக மாற்றிக் கொடுக்கும் வரை புதிய மல்டிஸ்டிராடா வி4 விற்பனையை நிறுத்த டுகாட்டி உத்தரவிட்டு இருக்கிறது.
    இந்தியாவில் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.


    இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பலமுறை நீட்டித்து வந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் கால அவகாசம் முடிவடைவதாக இருந்தது.

    தற்போது நாட்டின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையிலும் இந்த கால அவகாசத்தை ஜூன் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததன் பெயரில் மத்திய அரசு தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புது ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய இரண்டு கதவுகள் கொண்ட கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் விவரங்கள் இணையத்தில் லீக் கி இருக்கிறது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் மார்ச் 31, 2021 அன்று அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் கார் எம்ஜி சைபர்ஸ்டெர் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    காரின் முன்புறம் ஏரோடைனமிக் டிசைன், பக்கவாட்டு மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவைகளை பார்க்கும் போது இந்த மாடல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது சர்வதேச சந்தையில் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களை கவரும் வகையிலான தோற்றம் கொண்டுள்ளது.

     எம்ஜி எலெக்ட்ரிக் கார்

    இது கேமிங் காக்பிட் கொண்ட உலகின் முதல் முழுமையான சூப்பர் கார் ஆகும். எம்ஜி குளோபல் டிசைன் குழுவினர் இந்த காரை வடிவமைத்து இருக்கின்றனர். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும். 

    இந்த கார் முழுமையான எலெக்ட்ரிக் திறன், 5ஜி இணைப்பு வசதி கொண்டிருக்கும் என்றும் இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது.
    மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டா நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இந்த நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்கள் விலையும் ஏப்ரல் 1, 2021 முதல் உயர்கிறது. இந்த ஆண்டில் டொயோட்டா கார் விலை உயர்த்தப்படுவது இரண்டாவது முறை ஆகும்.

     டொயோட்டா கார்

    முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும். உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவேதே வாகனங்கள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன.

    கார் உற்பத்திக்கு தேவைப்படும் ஸ்டீல், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உற்பத்தி பணிகளை அதிக சவால் மிக்கதாக மாற்றி இருக்கிறது.
    கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட இருக்கிறது.


    ஜப்பான் நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. அதன்படி கவாசகி மோட்டார்சைக்கிள் மாடல்கள் புதிய விலை ஏப்ரல் 1, 2021 முதல் அமலாகிறது.

    மார்ச் 31, 2021 அல்லது அதற்கும் முன் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு தற்போதைய விலையே பொருந்தும். அந்த வகையில், ஏப்ரல் 1, 2021 மற்றும் அதன் பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் புதிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

     கவாசகி மோட்டார்சைக்கிள்

    நின்ஜா 300 மற்றும் ZX-10R மாடல்கள் தவிர கவாசகி நிறுவனத்தின் அனைத்து மாடல்கள் விலலையும் உயர்த்தப்படுவதாக கவாசகி தெரிவித்து உள்ளது. மற்ற மாடல்களான KX, KLX மற்றும் Z H2 SE உள்ளிட்டவையும் தற்போதைய விலை உயர்வில் பாதிக்கப்படவில்லை.

    விலை உயர்வுக்கான காரணத்தை கவாசகி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. கவாசகி மட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது முழு எலெக்ட்ரிக் கார் எஸ் கிளாஸ் மாடலை தழுவி உருவாகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது விஷன் EQS கான்செப்டை தழுவி உருவாகி இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் EQS

    புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் ன்றும் இது 108kWh பேட்டரி பேக் மற்றும் 469 பிஹெச்பி வழங்கும் மோட்டார் வழங்கப்படுகிறது. புதிய பென்ஸ் EQS மாடல் தானியங்கி டிரைவர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு முறைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    இந்த கார் உள்புறம் MBUX ஹைப்பர் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது பயனர் அமரும் பகுதியில் சிறிய ஸ்கிரீனை வழங்குகிறது. சர்வதேச சந்தையை தொடர்ந்து புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
    போர்டு நிறுவனத்தின் எதிர்கால கார் மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கும் என்ஜின் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


    போர்டு இந்தியா நிறுவனம் தனது எதிர்கால கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவன என்ஜின்களை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் BX772 குறியீட்டு பெயர் கொண்ட காம்பேக்ட் எஸ்யுவி, BX744 குறியீட்டு பெயரில் உருவாகும் புது சப்-4 மீட்டர் எஸ்யுவிக்களில் மஹிந்திரா என்ஜின் இடம்பெறாது என தெரிகிறது.

     போர்டு கார்

    இரு எஸ்யுவி மாடல்களும் 2022-23 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு மாடல்களிலும் மஹிந்திரா உற்பத்தி செய்த என்ஜின் வழங்கப்பட இருந்தது. எனினும், தற்போதைய தகவல்களின்படி இரு நிறுவனங்களும் என்ஜின் பயன்பாட்டு விவகாரத்தில் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் தனது வாகனங்களில் சொந்த என்ஜின்களை வழங்க போர்டு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. `டிசம்பர் 31, 2020 அன்று  போர்டு மற்றும் மஹிந்திரா இணைந்து முந்தைய கூட்டு வியாபார திட்டத்தை தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளன.' என்று போர்டு இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏழு புதிய ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இ கிளாஸ் பேஸ்லிப்ட், ஏ கிளாஸ் லிமோசின் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் மேலும் சில ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மார்டின் வென்க் தெரிவித்தார்.

     மெர்சிடிஸ் பென்ஸ் கார்

    தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மார்டின் வென்க் கூறும் போது, `இந்த ஆண்டு மட்டும் மொத்தம் ஏழு ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புது மாடல்களை அறிமுகம் செய்ய ஆவலுடன் இருக்கிறோம்' என தெரிவித்தார். 

    இதுதவிர சில ஏஎம்ஜி மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இவை பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப், ஏஎம்ஜி ஏ35 செடான் போன்ற மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.
    ×