என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
எதிர்கால போர்டு கார்களில் அந்த என்ஜின் வழங்கப்படாது என தகவல்
Byமாலை மலர்27 March 2021 10:40 AM GMT (Updated: 27 March 2021 10:40 AM GMT)
போர்டு நிறுவனத்தின் எதிர்கால கார் மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கும் என்ஜின் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
போர்டு இந்தியா நிறுவனம் தனது எதிர்கால கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவன என்ஜின்களை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் BX772 குறியீட்டு பெயர் கொண்ட காம்பேக்ட் எஸ்யுவி, BX744 குறியீட்டு பெயரில் உருவாகும் புது சப்-4 மீட்டர் எஸ்யுவிக்களில் மஹிந்திரா என்ஜின் இடம்பெறாது என தெரிகிறது.
இரு எஸ்யுவி மாடல்களும் 2022-23 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு மாடல்களிலும் மஹிந்திரா உற்பத்தி செய்த என்ஜின் வழங்கப்பட இருந்தது. எனினும், தற்போதைய தகவல்களின்படி இரு நிறுவனங்களும் என்ஜின் பயன்பாட்டு விவகாரத்தில் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் தனது வாகனங்களில் சொந்த என்ஜின்களை வழங்க போர்டு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. `டிசம்பர் 31, 2020 அன்று போர்டு மற்றும் மஹிந்திரா இணைந்து முந்தைய கூட்டு வியாபார திட்டத்தை தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளன.' என்று போர்டு இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X