என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய HR V ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் புதிய HR V ஹைப்ரிட் மிட்-சைஸ் கிராஸ்-ஒவர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஹோண்டா நிறுவனத்தின் மேன் மேக்சிமம், மெஷின் மினிமம் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா கார் தற்போது சீன பூர்விக எலெக்ட்ரிக் எஸ்யுவி தோற்றம் பெற்று உள்ளது.

    கூப் எஸ்யுவி போன்ற ஸ்டைலிங், மெல்லிய ஹெட்லேம்ப்கள், பின்புறம் க்ளியர் லென்ஸ் எல்இடி டெயில் லைட், பிளாக் கிளாடிங், பாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. உள்புறம் பிரம்மாண்ட புளோட்டிங் டிஸ்ப்ளே உள்ளது.

    புதிய காரின் என்ஜின் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் சிலிண்டர் அல்லது 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே என்ஜின்கள் புதிய தலைமுறை ஜாஸ் ஹைப்ரிட் மற்றும் சிஆர்-வி ஹைப்ரிட் மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளது.

    ஐஐடி டெல்லி துவங்கி இருக்கும் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.


    ஐஐடி டெல்லியின் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஹோப் எனும் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் துவக்க விலை ரூ. 46,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     கெலியோஸ் ஹோப்

    புதிய ஹோப் ஸ்கூட்டர் பயன்படுத்தினால் கிலோமீட்டருக்கு 20 பைசா மட்டுமே செலவாகும் என கெலியோஸ் மொபிலிட்டி தெரிவித்து உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த ஓட்டுனர் உரிமம் அல்லது பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் 250 வாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லி-அயன் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் இருவித பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதன் குறைந்த திறன் கொண்ட பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை செல்லும், அதிக திறனுள்ள பேட்டரி அதிகபட்சம் 75 கிலோமீட்டர் செல்லும்.

    டிரையம்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பிராஜக்ட் டிஇ-1 கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இது டிரையம்ப், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் மற்றும் மேலும் இரு ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து உருவாகி இருக்கிறது.

    டிரையம்ப் நிறுவனம் சேசிஸ் மற்றும் பாதுகாப்பு முறைகளையும், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் பேட்டரி டிசைன், பேட்டரி பயன்பாட்டு முறை மற்றும் வெஹிகில் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்டவைகளை உருவாக்குகிறது. இதன் இன்டெக்ரல் பவர்டிரெயின் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார், சிலிகான் கார்பைடு இன்வெர்டர் உருவாக்கிறது.

    டிரையம்ப் பிராஜக்ட் டிஇ 1

    பிரேம் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் தவிர இந்த மோட்டார்சைக்கிள் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. இதற்கான சோதனை இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது. 2022 ஆண்டு இறுதியில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம்.

    முன்னதாக டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர், டஸ்டர், டிரைவர் மற்றும் க்விட் என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இவற்றின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக 2021 ஜனவரி மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விலை உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் 2021 டிரைபர் மாடலை டூயல்-டோன் நிறங்களில் அறிமுகம் செய்தது.

    புது காரில் ஸ்டீரிங் வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய டிரைபர் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    லெக்சஸ் நிறுவனம் தனது புதிய கான்செப்ட் கார் விவரங்களை விரைவில் வெளியிடுவதாக தெரிவித்து இருக்கிறது.


    டொயோட்டா நிறுவனத்தின் ஆடம்பர பிரிவான லெக்சஸ் புது கான்செப்ட் மாடல் காரை மார்ச் 30 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இது அடுத்த தலைமுறை லெக்சஸ் வாகனங்களுக்கான குறியீடு என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     லெக்சஸ் கான்செப்ட் கார்

    புதிய லெக்சஸ் கான்செப்ட் கார் முற்றிலும் புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய கான்செப்ட் கார் லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கென லெக்சஸ் வெளியிட்டு இருக்கும் டீசரின்படி புது கான்செப்ட் எஸ்யுவி மாடலாக இருக்கும் என தெரிகிறது.

    இதன் ஹூட் பகுதி நீளமாக இருக்கும் என தெரிகிறது. இதன் ஸ்லோபிங் லைன் சிறு விண்ட்ஸ்கிரீன் உடன் இணைகிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் படங்களை லெக்சஸ் வெளியிட்டு இருந்தது. அந்த படங்களும், தற்போது லெக்சஸ் வெளியிட்டு இருக்கும் படங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி காட்சியளிக்கின்றன. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ. 39 லட்சம் பட்ஜெட்டில் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 39.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த கார் ஆறுவித நிறங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    வெளிப்புறம் புதிய லிமோசின் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. உள்புறம் MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், விண்ட்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

     மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின்

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலில் 1.3 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 161 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் டீசல் என்ஜின் 147 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய ஏ கிளாஸ் ஏ35 ஏஎம்ஜி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 56.24 லட்சம் ஆகும். 
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புது எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் காம்படீஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இந்தியாவுக்கு சிபியு முறையில் இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன.

    புதிய பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 42 லட்சம், காம்படீஷன் வேரியண்ட் விலை ரூ. 45 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர்

    புதிய எம் 1000 ஆர்ஆர் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் முதல் எம்  சீரிஸ் மாடல் இது ஆகும். இது லைட் வைட், ரேசிங் புளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் ஏரோடைனமிக் அதிகளவு மேம்படுத்தப்பட்டு க்ளியர்-கோட் கார்பன் எம் விங்லெட்கள் மற்றும் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் உள்ள 999சிசி, வாட்டர்-கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் 209 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும். புதிய எம் 1000 ஆர்ஆர் மாடலில் ரெயின், ரோட், டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ போன்ற ரைடிங் மோட்கள் உள்ளன. 
    பழைய வாகனங்களை அழிக்கும் முடிவால் காற்று மாசு குறைந்து சுற்றுச்சூழல் மேம்படும் என சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    வாகனங்கள் அழிப்பு கொள்கை குறித்த விளக்க அறிக்கையை மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி சமீபத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை புழக்கத்திலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான கொள்கை விளக்கத்தை தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தயாரித்தது. இதன்படி தனி நபர் உபயோக வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலிருந்தால் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பழைய வாகனங்களை அழிக்கும் நடவடிக்கையால் ஆட்டோமொபைல் துறையின் ஆண்டு விற்பனை வருமானம் ரூ.4.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயரும்.

    அமைச்சகத்தின் கணக்குப்படி 51 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலானவை. இலகு ரக வாகனங்களில் 34 லட்சம் 15 ஆண்டுகளுக்கு மேலானவை. நடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலானவற்றின் எண்ணிக்கை 17 லட்சமாக உள்ளது. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையால் வழக்கமான புதிய வாகனங்கள் வெளியிடும் புகை அளவைக் காட்டிலும் 10 முதல் 12 மடங்கு அதிகம்.

    பழைய வாகனங்களை அழித்துவிட்டு அதற்கான சான்றை காட்டும் தனி நபர் வாகன உரிமையாளருக்கு புதிய வாகனம் வாங்குதற்கான விலையில் 5 சதவீத சலுகை அளிக்கப்படும். இதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சான்றை காட்டும் வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும்.

    இதனால் வாகன விற்பனை அதிகரிக்கும். எரிபொருள் நுகர்வு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். வாகனங்கள் புதிதாக இருப்பதால் பயணமும் பாதுகாப்பானதாக அமையும்.

    மேலும் வாகனங்களை அழிக்கும் பணியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் முறைசார்ந்த நிறுவன அந்தஸ்தைப் பெறும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் மறு சுழற்சிக்கு உதவியாக இருக்கும். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகம் விரைவில் வெளியிடும்.

    20 ஆண்டுக்கு மேற்பட்ட பழைய தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் 2024  ஜூன் 1க்குள் பிட்னஸ் சான்றிதழ் பெற வேண்டும். அப்படி அந்த வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் பெற தவறினாலோ அல்லது பதிவு புதுப்பிக்கவில்லை என்றாலோ பதிவு ரத்து செய்யப்படும்.

    15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது. புது கார் வெளியீட்டு விவரத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்வீஸ் மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

     ஸ்கோடா கோடியக்

    இந்த எஸ்யுவி மாடல் 2020 ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு பலமுறை தள்ளிப்போனது. வழக்கமான ஸ்கோடா கார்களை போன்றே, இந்த காரும் பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகும் என தெரிகிறது. அந்த வகையில் புது மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஸ்கோடாவின் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் என்ஜின் 148 பிஹெச்பி பவர், 340 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது.
    பென்ட்லி நிறுவனம் அதிக திறன் கொண்ட தனது புதிய ஆடம்பர சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பென்ட்லி நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஆடம்பர சூப்பர்கார் மாடலான, கான்டினென்டல் ஜிடி அறிமுகம் செய்தது. புதிய கார் கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு என அழைக்கப்படுகிறது. இந்த கார் அதிக திறன் கொண்டிருப்பதால், இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    புதிய ஜிடி ஸ்பீடு மாடலில் 6.0 லிட்டர் டபிள்யூ12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 335 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

     பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு

    தோற்றத்தில் புதிய கார் எந்த மாற்றமும் இன்றி பெரிய செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், இரட்டை வட்ட-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் ரேடியேட்டர் கிரில் பகுதி டார்க் டின்ட் கொண்டுள்ளது. காரின் முன்புற பென்டர் குரோம் பினிஷ் செய்யப்பட்டு ஸ்பீடு பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. மேலும் இவற்றை பிரைட் சில்வர், டார்க் டின்ட் அல்லது கிளாஸ் பிளாக் பினிஷ்களில் தேர்வு செய்து கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    முன்னதாக பென்ட்லி நிறுவனம் தனது மேம்பட்ட பென்ட்யகா மாடலை இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த காரின் துவக்க விலை ரூ. 4.10 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 220ஐ ஸ்போர்ட் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் 220ஐ ஸ்போர்ட் வேரியண்டை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புது பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 37.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சென்னையில் இயங்கி வரும் பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ 220ஐ ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ 220ஐ ஸ்போர்ட்

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். 2021 பிஎம்டபிள்யூ 220ஐ ஸ்போர்ட் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பாரம்பரிய பிஎம்டபிள்யூ கிட்னி கிரில், எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் ஆல்பைன் வைட், பிளாட் சபைட், மெல்போன் ரெட் மற்றும் ஸ்டாம் பே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 5.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட் சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், பானரோமிக் சன்ரூப் உள்ளது.

    இத்துடன் லெதர்-ராப் செய்யப்பட்ட மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று டிரைவ் மோட்கள், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது கார் மாடல்கள் விவரங்களை போக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது.


    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் இந்த ஆண்டு மட்டும் நான்கு புது எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நான்கு புதிய மாடல்களில் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலான டைகுன் மிகப்பெரும் மாடலாக இருக்கும். 

    இந்த மாடலின் சரியான வெளியீட்டு விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுதவிர டி-ராக் மற்றும் டைகுன் ஆல்ஸ்பேஸ் போன்ற மாடல்கள் இந்தியாவில் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புது மாடல்கள் வரிசையில், ஐந்து பேர் பயணிக்கக்கூடிய டைகுன் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என தெரிகிறது.

     போக்ஸ்வேகன் கார்

    புதிய டைகுன் மாடல் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி மாடலில் சதுரங்க வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், 2-ஸ்லாட் குரோம் கிரில், சில்வர் பேஷ் பிளேட்கள், கேபின் பகுதியில் 2-டோன் பினிஷ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச்-ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    டி-ராக் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்கள் இந்தியாவில் எவ்வித மாற்றமும் இன்றி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு எஸ்யுவி மாடல்களும் கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலேயே இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் டி ராக் மாடல் இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்தது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிகிறது.

    ×