என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மஸ்டாங் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் புதிய மஸ்டாங் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் விற்பனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் புதிய ஃபோர்டு மஸ்டாங் சிலகாலமாக விற்பனை செய்யப்படுகிறது.
முந்தைய மாடலை விட புதிய ஃபோர்டு மஸ்டாங் காரில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொனெட் சற்று கீழே இறக்கப்பட்டுள்ளது. இதில் ஏர் வென்ட்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் மேம்பட்ட கிரில், முந்தைய மாடலில் இருப்பதை விட மெல்லியதாக இருக்கிறது.

புதிய மஸ்டாங் காரின் முன்பறம் மற்றும் பின்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர் மற்றும் புதிய வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் 12 இன்ச் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், உள்புற அம்சங்கள் முழுக்க மென்மையான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்துடன் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. லைட்டிங், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட்டெட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 450 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவன்த்தின் 2020 சிட்டி கார் தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் மாடல் காரை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ஹோண்டா சிட்டி செடான் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2020 ஹோண்டா சிட்டி தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலை விட நீளமாக இருக்கிறது. காரின் முன்புறம் அதிகளவு தடிமனான குரோம் ஸ்ட்ரிப் கொண்டிருக்கிறது. இது ஹோண்டா சிவிக் மற்றும் அமேஸ் மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
குரோம் ஸ்ட்ரிப் கீழ் மெல்லிய கிரில், நடுவே ஹோண்டா லோகோ இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் கூர்மையான எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் ராப்-அரவுண்ட் ஸ்டைல், டி.ஆர்.எல்.கள் மேல்புறம் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா காரில் 15 இன்ச் வீல்கள், புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில் லேம்ப்கள் எல்.இ.டி. ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. டெயில் லேம்ப்களை தவிர காரின் பின்புறம் எளிமையான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
தற்சமயம் விற்பனையாகும் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஹோண்டா சிட்டி 100 எம்.எம். நீளமாகவும், 53 எம்.எம். அகலமாகவும் இருக்கிறது. இதன் உயரம் மற்றும் வீல்பேஸ் முறையே 28 எம்.எம். மற்றும் 11 எம்.எம். வரை குறைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் புதிய ஹோண்டா சிட்டி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 122 பி.ஹெச்.பி. பவர் 173 என்.எம். டார்க் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம்.
கே.டி.எம். நிறுவனத்தின் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 ரக மோட்டார்சைக்கிள் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விநியோகம் டிசம்பர் மாத மத்தியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கே.டி.எம். டியூக் 250, டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களுக்கு முதலில் பி.எஸ். 6 அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. டியூக் 200 பி.எஸ். 6 மாடல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய பி.எஸ். 6 அப்டேட் காரணமாக மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கே.டி.எம். டியூக் 250, டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலை ரூ. 15,000 வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டியூக் 125 மற்றும் டியூக் 200 மாடல்களின் பி.எஸ். 6 வேரியண்ட் ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரை அதிகரிக்கப்படலாம்.

சமீபத்தில் கே.டி.எம். நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இ.ஐ.சி.எம்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்தம மோட்டார்சைக்கிள் இந்திய பைக் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பைக் வாரம் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கிறது.
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. கேச.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 373.2 சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் 390 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 42.9 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் வெர்சிஸ் 300, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் பி.எம்.டபுள்யூ. ஜி310 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 சிட்டி மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களில் கார் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், காரின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
காரின் வெளிப்புற தோற்றம் அப்படியே காணப்பட்டாலும், அதன் அம்சங்கள் அதிகளவு ரக்கட் தோற்றம் பெற்றிருக்கிறது. இதுவரை வெளியான ஹோண்டா சிட்டி மாடல்களை விட புதிய மாடல் பெரியதாக இருக்கும் என தெரிகி்றது. இதில் உள்ள கோடுகளும் தற்போதைய மாடலில் இருப்பதை விட மேம்பட்டு இருக்கும்.

ஸ்பை படங்களில் அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், 2020 ஹோண்டா சிட்டி மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் டேஷ்போர்டு மற்றும் இருக்கைகளில் கூடுதல் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் இந்த காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்படலாம்.
புதிய மாடலில் ஹோண்டா 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை வழங்கலாம். இவை பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும். இதுதவிர 2020 ஹோண்டா சிட்டி மைல்டு-ஹைப்ரிட் வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: ElectricVehicleWeb
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் H2X மாடல் கார் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் H2X கான்செப்ட் மாடலை ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த மாடல் உற்பத்திக்கு தயாரான வடிவம் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய H2X மாடல் கார் டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வீல்பேஸ் நீண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கான்செப்ட் வடிவம் இந்த ஆண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
டாடா H2X கான்செப்ட் காரில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பு, பெரிய அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்கள், பானரோமிக் சன்ரூஃப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதன் உண்மை வடிவில் இவை வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

புதிய காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் தற்சமயம் விற்பனை செய்யப்படும் டாடா டியாகோ மாடலில் பி.எஸ். 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் டாடா H2X காரின் விலை ரூ. 4.75 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மாருதி சுசுகியின் இக்னிஸ், மஹிந்திரா கே.யு.வி.100 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
டெஸ்லா நிறுவனத்தின் சைபர்-டிரக் அறிமுகமான சில நாட்களில், அதனை வாங்க சுமார் 1.46 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தின் சைர் டிரக் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான சில நாட்களிலேயே இதனை வாங்க 1,46,000 பேர் சைபர்-டிரக் வாகனத்தை வாங்க முன்பதிவு செய்து இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
புதிய டெஸ்லா சைபர்-டிரக் மாடல்களில் 42 சதவிகிதம் பேர் டூயல் மோட்டார் வேரியண்ட்டையும், 17 சதவிகிதம் பேர் ஒற்றை மோட்டார் வேரியண்ட்டை முன்பதிவு செய்துள்ளனர் என எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
முன்பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் டெஸ்லா நிறுவனம் சுமார் 1.46 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 104 கோடி) முன்பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் மொத்கம் மூன்று வெர்ஷன்கள்: 250 மைல், 300 மைல் மற்றும் 500 மைல் செல்லும் திறன்களில் கிடைக்கிறது.
புதிய டெஸ்லா சைபர்-டிரக் ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.

இதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.
இதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.
இந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் ஃபிளாட் டிராக்கர் மோட்டார்சைக்கிள் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய வேரியண்ட் பார்க்க ஃபிளாட் டிராக்கர் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.
புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதுடன், பிக்ராக் டர்ட்பார்க் உடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் ஃபிளாட் டிராக்கிங் பள்ளியை துவங்கி இருக்கிறது. இதற்கு ராயல் என்ஃபீல்டு ஸ்லைடு ஸ்கூல் என பெயரிடப்பட்டுள்ளது.
ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை ஃபிளாட் டிராக்கிற்கு தயார்படுத்தும் வகையில், மோட்டார்சைக்கிளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் தோற்றம் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. ஹெட்லேம்ப் பகுதியில் எண் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
எக்சாஸ்ட் உயர்த்தப்பட்டு, டெயில் பகுதியின் அருகே பொருத்தப்பட்டுள்ளது. கஸ்டம் ஹிமாலயன் மாடலின் முன்புறம் பிரேக் நீக்கப்பட்டுள்ளது. ஃபிளாட் டிராக்கர் மாடல்களில் எப்போதும் முன்புற பிரேக் வழங்கப்படாது. மாற்றியமைக்கப்பட்ட ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் எடை 164 கிலோ ஆகும்.
கார்பன் ஃபைபர் சீட் மற்றும் சிறிய எஸ்&எஸ் சைக்கிள்ஸ் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதை எடை குறைவிற்கு காரணம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளில் 18 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்புற டையர் வித்தியாதமாக இருக்கிறது. பின்புற டையர் அகலமாக இருக்கிறது. இவை தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
டெஸ்லா நிறுவனத்தின் புதிய சைபர் டிரக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டெஸ்லா நிறுவனத்தின் புதிய சைபர்-டிரக் வாகனத்தை எலான் மஸ்க் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தார். இது முழுமையான எலெக்ட்ரிக் டிரக் ஆகும். ஆஃப் ரோடிங் வசதி கொண்ட சைபர் டிரக் ஆறு பேர் பயணிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 800 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
புதிய டெஸ்லா சைபர் டிரக் மொத்தம் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.
இதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.
இந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டெஸ்லா சைபர் டிரக் மொத்தம் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.
இதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.
இந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரோஸ் கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அல்ட்ரோஸ் காரை இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.
எனினும், டாடா நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் காரை நேரடியாக பி.எஸ். 6 விதகளுக்கு பொருந்தும் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அல்ட்ரோஸ் காரின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.

இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.
டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெல்ஃபயர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது வெல்ஃபயர் மாடல் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 6 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு மாடல் காரை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த கார் முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக (சி.பி.யு.) இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் ‘அல்பார்டு’ என்ற பெயரிலான காரை அறிமுகம் செய்திருந்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு ‘வெல்ஃபயர்’ என்ற பெயரில் அறிமுகமானது. இந்த ஆல்பார்டு மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இது சில மாற்றங்களுடன் இந்தியாவில் வெல்ஃபயர் என்ற பெயரில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன உள்ளன. பனியில் ஒளி வீசும் பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடலாகும். 150 ஹெச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது.

இத்துடன் 143 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைந்து 145 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியவை. இதில் இரண்டு மேற்கூரை உள்ளன. இதனால் பின் வரிசையில் அமர்ந்திருப்போரும் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.
இதன் பக்கவாட்டில் சாத்தக் கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவுல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகச் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.
அதேபோல பின் இருக்கை பயணிகள் பொழுதைக் கழிக்க வசதியாக 10.2 அங்குல டி.வி.க்கள் உள்ளன. தொடக்கத்தில் 200 கார்களை இறக்குமதி செய்து இங்கு அறிமுகம் செய்து, சந்தை நிலவரத்துக்கேற்ப படிப்படியாக இறக்குமதி செய்வது அல்லது இங்கேயே தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
டிரையம்ப் நிறுவனத்தின் 2020 ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டிரையம்ப் நிறுவனம் 2020 ராக்கெட் 3 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகமான பின் இந்த மோட்டார்சைக்கிள் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
புதிய டிரையம்ப் ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ராக்கெட் 3 மோட்டார்சைக்கிளில் 2500 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு உற்பத்தியாகும் மோட்டார்சைக்கிளில் இத்தனை பெரிய திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த என்ஜின் 167 ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம். மற்றும் 221 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

என்ஜினில் புதிய கிரான்க் கேஸ் அசெம்ப்ளி, லூப்ரிகேஷன் சிஸ்டம் மற்றும் பேலென்சர் ஷேஃப்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளதால் இதன் எடை 18 கிலோ வரை குறைந்துள்ளது. முந்தைய ராக்கெட் சீரிஸ் மாடலை விட புதிய ராக்கெட் 3 எடை 40 கிலோ வரை குறைவாக இருக்கிறது.
முழுமையான அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கும் புதிய ராக்கெட் 3 மாடலின் சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 47 மில்லிமீட்டர், கம்ப்ரெஷன் மற்றும் ரீபவுன்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் மற்றும் ஷோவா பிகிபேக், ரிமோட் அட்ஜஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை 320 எம்.எம். டிஸ்க், பின்புறம் 300 எம்.எம். டிஸ்க் பிரெம்போ எம்4.32, நான்கு பிஸ்டன் கேலிப்பர்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்பை படங்களின் படி டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப் மற்றும் அகலமான சென்ட்ரல் ஏர் டேம் வழங்கப்படுகிறது. இந்த காரில் பகலில் எரியும் எல்.இ.டி. மின்விளக்குகள் காணப்படவில்லை.
எனினும், உற்பத்தி செய்யப்படும் போது இவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் பின்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது.

புதிய காரில் தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினின் பி.எஸ். 6 வெர்ஷன் செயல்திறன் அளிவில் மாற்றம் இருக்காது.
இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும். புதிய ஹேட்ச்பேக் மாடலிலும் இதே டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கலாம்.
தற்சமயம் விற்பனையாகும் டாடா டியாகோ காரின் விலை ரூ. 4.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: GaadiWaadi






