என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
யமஹா நிறுவனத்தின் 2020 போல்ட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 போல்ட் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 யமஹா போல்ட் மாடல் பாபர் ஸ்டைல் ரெட்ரோ தீம் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பில் புதிய 2020 யமஹா போல்ட் மாடலில் டியர்-டிராப் வடிவம் கொண்ட ஃபியூயல் டேன்க், மோட்டார்சைக்கிள் முழுக்க குறைந்த அளவு கிராஃபிக்ஸ் மற்றும் மிக எளிமையான பாடி பேனல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. யமஹா போல்ட் மாடலில் இருக்கை தரையில் இருந்து 690 எம்எம் அளவு உயரத்தில் இருக்கிறது.

இத்துடன் எல்இடி லைட்டிங், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரெட்ரோ ஸ்டைல் இன்டிகேட்டர்கள், பொசிஷன் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020 யமஹா போல்ட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு மற்றும் ஆர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இரு வேரியண்ட்களிலும் வீல்கள் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப் மட்டுமே வித்தியாசமாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆர் வேரியண்ட்டில் அலாய் ட்ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன. யமஹா போல்ட் ஆர் மாடலின் சஸ்பென்ஷனில் கோல்டு ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன.
2020 யமஹா போல்ட் ஸ்டான்டர்டு மற்றும் ஆர் வேரியண்ட்களிலும் 942சிசி வி ட்வின் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 53 பிஹெச்பி பவர், 80 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கார் இந்த பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய காம்பேக்ட் செடான் மாடல் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கோஷாக் எனும் பெயரில் உருவாகி வருவதாகவும், இது மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
கோஷ்வாக் எனும் பறவையின் பெயரை தழுவி கோஷாக் எனும் பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டாடா நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கு பறவைகளின் பெயரை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. முன்னதாக ஹேரியர் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களும் இதே வழக்கத்தை தொடர்ந்து பெயரிடப்பட்டன.

புதிய டாடா கோஷாக் மாடல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் என்றும் இது டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான டாடா அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே பிளாட்ஃபார்ம் டாடா நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யுவி மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வடிவமைப்பில் புதிய காம்பேக்ட் செடான் மாடல் ஹார்ன்பில், சியெரா இவி கான்செப்ட் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களை தழுவி உருவாக்கப்படும் என தெரிகிறது.
புதிய கார் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் இந்த கார் முற்றிலும் புதிய மாடலாக இருக்குமா அல்லது அடுத்த தலைமுறை டிகோர் மாடலாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ 350 டி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இ 350 டி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடலின் துவக்க விலை ரூ. 75.29 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய இ 350 டி மாடல் எலைட் வேரியண்ட்டில் கிடைக்கிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடல் இ சீரிஸ் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது. இதில் பிஎஸ்6 ரக டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் எஸ் 350 டி மற்றும் ஜி 350 டிமாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 282 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பிஎஸ்4 மாடலை போன்றே 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய என்ஜின் 20 பிஹெச்பி மற்றும் 20 என்எம் டார்க் அதிக செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொடிகளில் எட்டிவிடும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டராக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய என்ஜின் தவிர மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடலில் 18 அங்குல அளவில் பெரிய அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 360 டிகிரி கேமரா என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் பலமுறை இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 மாடலின் டீசர் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட என்ஜினுடன் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.

தற்போதைய பிஎஸ்4 மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 180 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 மாடலிலும் இதே என்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் சங்யொங் ரெக்ஸ்டன் மாடலுக்கு இணையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய அலாய் வீல் வடிவமைப்பு சோதனை செய்யப்பட்ட மாடல்களில் பலமுறை காணப்பட்டது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா 300 மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஜாவா 300 மோட்டார்சைக்கிள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. ஜாவா 300 மாடல் இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முதலில் ஜாவா மோட்டார்சைக்கிள் செக் குடியரசு நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜாவா 300 மாடலின் வெளிப்புறம் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இதன் என்ஜின் பாகங்கள் மட்டும் ஐரோப்பிய தரத்துக்கு ஏற்றவாரு மாற்றப்பட்டு இருக்கிறது. ஜாவா பிராண்டு மோட்டார்சைக்கிள்களை மஹிந்திரா நிறுவனம் மறுகட்டமைப்பு செய்து இந்தியாவில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இதுவரை ஜாவா 300 மற்றும் ஜாவா ஃபார்டி டூ என இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜாவா 300 மோட்டார்சைக்கிளில் 293 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் ஜாவா 300 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. மேலும் கிராஸ் போர்ட் தொழில்நுட்பம் கொண்ட முதல் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலக நாடுகளை மிக கடுமையாக பாதித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க மே 3 ஆம் தேதி வரை நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பென்ஸ் வாகனங்களை மட்டும் ஆன்லைனில் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அறிவிப்பின் படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவவர் சந்தோஷ் ஐயர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மெர்சிடிஸ் நிறுவனம் தனது 2020 சி கிளாஸ் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக புதிய பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை வழங்கியது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு 9ஜி டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கார் மாடலுக்கான பெயரை பயன்படுத்த இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் க்ளிக் எனும் பெயரை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறது. புதிய பெயர் எந்த மாடலுக்கு சூட்டப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா க்ளிக் பெயர் அந்நிறுவனத்தின் விஷன் ஐஎன் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு சூட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

ஸ்கோடா விஷன் ஐஎன் மாடல் இந்தியாவுக்கென பிரத்யேகமான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் வாகனம் ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்கோடா விஷன் ஐஎன் காரில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 195 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா விஷன் ஐ.என். 4256 எம்.எம். அளவில் நீளம், 2671 எம்.எம். வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. ரக்கட் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரின் முன்புறம் மெல்லிய ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட கிரில், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
லெக்சஸ் நிறுவனத்தின் ஜிஎஸ் பிளாக் லைன் எடிஷன் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
லெக்சஸ் நிறுவனம் பிஎஸ் பிளாக் லைன் காரை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மொத்தம் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்படும் என லெக்சஸ் அறிவித்து இருக்கிறது. லெக்சஸ் ஜிஎஸ் லைன் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும் முன் வெளியாகும் கிடைசி எடிஷன் காராக இது இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஜிஎஸ் பிளாக் லைன் எடிஷன் லெக்சஸ் ஜிஎஸ்350எஃப் ஸ்போர்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ் லைன் பிளாக் எடிஷன் ரியர்-வீல் டிரைவ் கொண்டிருப்பதோடு வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. விங் மிரர் கேப்கள், கிரில் இன்சர்ட்கள் மற்றும் ஸ்பாயிலர் உள்ளிட்டவை கிளாஸ் வைட் நிறத்திலும் சக்கரங்கள் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கின்றன.

காரின் உள்புறம் பிளாக் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் கார்பன் ஃபைபர் ட்ரிம்களும், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஆம்ரெஸ்ட் உள்ளிட்டவை அல்கான்ட்ரா லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் காரின் உள்புறங்களில் அதிகளவு கஸ்டமைசேஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புதிய லெக்சஸ் ஜிஎஸ் பிளாக் எடிஷன் மாடலில் 3.5 லிட்டர் வி6 மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை இந்த ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது.
பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 59,802, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்6 பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மாடல் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. புதிய பிஎஸ்6 என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மாடலில் தற்சமயம் 115.45சிசி சிங்கிள் சிலிண்ட் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 9.81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிளாட்டினா மாடலில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் செயல்திறனை அதிகப்படுத்துகிறது.
மேம்பட்ட என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் பெரும்பாலான அம்சங்கள் மாற்றப்படவில்லை. பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மாடல் 2006 எம்எம் நீளமாகவும், 713 எம்எம் அகலம் மற்றும் 1100 எம்எம் உயரமாக இருக்கிறது. இந்த மோட்டாக்சைக்கிள் எடை 122 கிலோ ஆகும்.
புதிய பிஎஸ்6 பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் மாடலில் முந்தைய மாடலில் இருந்ததை போன்ற கிராஃபிக்ஸ், பிளாக்டு-அவுட் என்ஜின், எக்சாஸ்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல், ஹாலோஜென் ஹெட்லேம்ப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா நிறுவனம் பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மற்றும் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் டீசர்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது. அந்த வகையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் இரு மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிளில் எஃப் 900 எக்ஸ்ஆர் மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 895சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 105 பிஹெச்பி பவர், 92 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த இரு மாதங்களுக்குள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 11 லட்சம் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் டுகாட்டி மான்ஸ்டர் 821 மற்றும் கவாசகி இசட்900 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய ஆடி அ3 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய ஏ3 ஸ்போர்ட்பேக் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆடி ஏ3 செடான் மாடலின் இரண்டாம் தலைமுறை மாடல் ஆகும்.
புதிய ஆடி ஏ3 மாடல் முந்தைய வெர்ஷனை விட முற்றிலும் வித்தியாசமான ஒன்றாகும். புதிய ஏ3 மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை விட 40எம்எம் நீலம், 10 எம்எம் அகலம் மற்றும் 10 எம்எம் உயரமாக உருவாக்கப்பட்டடுள்ளது.

2021 ஆடி ஏ3 மாடலில் ஒற்றை மெஷ் கொண்ட ஹனிகொம்ப் கிரில் மற்றும் ஆடியின் புதிய ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மெயின் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் 15 எல்இடிக்கள் பொருத்தப்பட்டு இதனுடன் எல்இடி டிஆர்எல்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
காரின் உள்புறம் 10.1 அங்குல எம்எம்ஐ தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் அலெக்சா வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆடி பிரீ-சென்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் கார் ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எம்ஜி குலோஸ்டர் எஸ்யுவி மாடல் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட இருக்கிறது. இதனை எம்ஜி மோட்டார் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
புதிய எம்ஜி குளோஸ்டர் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எம்ஜி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. தற்சமயம் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய எஸ்யுவி திட்டமிட்டப்படி வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி குளோஸ்டர் மாடல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் நான்காவது வாகனம் ஆகும். முன்னதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டார், இசட்எஸ் இவி மற்றும் ஹெக்டார் பிளஸ் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டு இருக்கிறது. இவற்றில் ஹெக்டார் பிளஸ் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.
புதிய எம்.ஜி. குளோஸ்டர் கார் எம்.ஜி. நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது
எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 220 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.






