என் மலர்
புதுச்சேரி
- கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
- கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன.
இதே போல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் 2024-25-ம் ஆண்டு குத்தகை ஆண்டுக்கான சில்லரை விற்பனை உரிமத்துக்கான ஏலம் இணையதளத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை.
அதன் பிறகு சாராய கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சாராயக்கடைகளும், 35 கள்ளுக்கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஏலம்போகாத 72 சாராயக்கடைகள் மற்றும் 57 கள்ளுக்கடைகளுக்கு நேற்று மறு ஏலம் நடத்தப்பட்டது. இதில் புதுவை 29, காரைக்கால் 1 என ஒரே நாளில் 30 சாராயக்கடைகள் ஏலம் போயின. புதுவையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள சேதராப்பட்டு கடையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக திருக்கனூர் கடை ரூ.14,52,783-க்கும், கன்னியகோவில் கடை ரூ.13,03,877-க்கும், லிங்கா ரெட்டிப்பாளையம் கடை ரூ.9.35 லட்சத்துக்கும், குருவிநத்தம் கடை ரூ.6,92,435-க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக ஆரியபாளையம் கடை ரூ.1.54 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதேபோல், புதுவை 1, காரைக்கால் 1 என 2 கள்ளுக்கடைகள் ஏலம் போயின. அதிகபட்சமாக மணமேடு கடை ரூ.51,408-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக்கடைகளில் இதுவரை 68 கடைகளும். 92 கள்ளுக்கடைகளில் 37 கடைகளும் ஏலம் போயுள்ளன. இன்னும் ஏலம் போகாத 42 சாராயக்கடைகள், 55 கள்ளுக்கடைகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) கலால் துறை மூலம் மறு ஏலம் நடத்தப்படவுள்ளது.
- பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது.
புதுச்சேரி:
புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின் தொடர்ந்து கடும் வெயில் வாட்டி வருகிறது.
பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று காலையும் வழக்கம்போல வெயில் கொளுத்தியது. ஆனால் மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தி ருந்தது.
இதற்கு ஏற்றார்போல நேற்று இரவு 8 மணிக்கு மேல் பயங்கர வெளிச்சத்துடன் மின்னலும், பெரும் சத்தத்துடன் இடியும் புதுவை மக்களை மிரட்டியது.
இதன்பின் மழையும் கொட்டத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் நகர பகுதியில் பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோடியர் மில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் குளம்போல தண்ணீர் தேங்கியது.

இடி, மின்னல் காரணமாக புதுவை நகரம் மற்றும் ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் மர கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. சில இடங்களில் மின்கம்பங்கள் மீது மர கிளைகள் விழுந்தது.
இதேபோல நகரை ஒட்டியுள்ள புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது. சாய்ந்த மரங்களை புதுவை, கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.
வழக்கமாக இரவு நேரத்தில் புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். ஆனால் நேற்று கடுமையான இடி, மின்னல் இருந்ததால் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இன்று காலையில் 10 மணி வரையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. தற்காலிக பஸ்நிலையம் சேறும், சகதியுமாகியுள்ளது. அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது.
- தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.
தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்ற புதுவை பாஜக, ஆதரவு மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என கட்சி தலைவர் நட்டா, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர்.
ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.
அதே நேரத்தில் ஆட்சியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவை சேர்ந்த சபாநாயகர், அமைச்சர்கள், 2 நியமன எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கைகோர்க்கவில்லை. இதனால் புதுவை பா.ஜனதா பிளவுபட்டிருப்பது பகிரங்கமாகியுள்ளது.
இந்த நிலையில் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
பிரதமர் மோடி கொடுத்த பணியை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். பிரதமர் எந்த வேலை கொடுத்தாலும், சிறப்பாக செய்வோம். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றுள்ளது குறித்து கட்சித்தலைவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம்.
சிவப்பு ரேசன்கார்டுகள் நீக்கப்படாது. விநியோகம் செய்யப்பட்டுள்ள ரேசன்கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய முடிவெடுப்போம். தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார்.
- டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும், பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராகவும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் புரையோடியிருப்பதாகவும், புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதை கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். இதனால் பாஜக தலைவர்களை சந்திக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகிறார். இதனால் நேற்றைய தினம் மத்திய மந்திரியும், புதுவை பொருப்பாளருமான அர்ஜூன்ராம் மெக்வாலை மட்டும் சந்தித்து பேசினர்.
இன்று பிற்பகலுக்கு பிறகு புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதில் புதுவையில் இதே நிலையில் ஆட்சி நீடித்தால், பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்சித்தலைமை உரிய முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்க ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடைய பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார். அவரும் கட்சித் தலைவரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
- விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்.
- நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கால்நடைத் துறை சார்பில் மாடு வளர்ப்போருக்கு கறவை எந்திரம் வழங்கும் விழா காரைக்கால் மதகடி கிராமத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் திருமுருகன் பயனாளிகளுக்கு எந்திரத்தை வழங்கி பேசியதாவது:-
வறட்சி, கனமழை, புயல் போன்ற காலங்களில் பெருமளவில் பாதிக்கப்படுவது விவசாய பூமியான காரைக்கால்தான். விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்
காரைக்காலில் ஒரு மாதத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வெளி சந்தையில் இருந்து வாங்குகிறோம். காரைக்காலில் நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது. காரணம் இயற்கையாக கிடைக்க கூடிய புற்கள் கிடைப்பதில்லை.
மாடு வளர்க்காதவர்களுக்கு திட்டங்களை கொடுக்காதீர்கள். தகுதியானவர்களை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துங்கள்.

நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியாத இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வளர்த்து தரமான பால் கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பேசிய விவசாயி ஒருவர் தாய்ப் பாலுக்கு இணையானது மாட்டுப்பால். ஆனால் இதை பலரும் உணரவில்லை. மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. மாட்டை பிடித்து கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் ஓரமா போயா...? என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.
ஆனால் நாய் பிடித்து நடைபயிற்சி செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். நாய்க்கு கொடுக்கும் மரியாதை பால் தரும் மாட்டிற்கு இல்லை என கூறினார்.
விவசாயி பேச்சை விழாவில் கூடியிருந்தோர் கைத்தட்டி வரவேற்றனர்.
- வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.
- பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது.
புதுச்சேரி:
உலக மக்கள் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்ற மகான் ஸ்ரீ அரவிந்தரின் கனவை ஆரோவில் சர்வதேச நகரம் மூலம் நனவாக்கியவர் ஸ்ரீஅன்னை.
இங்கு பல வெளிநாட்டவர் ஆரோவில்வாசிகளாகவே மாறி அவர்களுக்கு தெரிந்த வேலைகளை செய்து வசித்து வருகின்றனர். அப்படி வசிக்கும் ரஷிய தம்பதிகள் செர்க்கே - தான்யா.
இவர்கள் பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது. நமது பாரம்பரிய ரிக்சாதான். ஆரோவில் ஆட்டோமொபைல் பணிமனையில் வேலை செய்யும் செர்க்கே வடிவமைத்த கூரை போட்ட ரிக்சாவில் தான் குடும்பமே பயணிக்கிறது.
அவரது மனைவி தான்யா ஒரு ஓவியர். இவர்களுக்கு 3 குழந்தைகள். ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு ரிக்சாவில் தான் வந்து செல்கின்றனர்.
வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.
எத்தனை கி.மீ. தூரமாக இருந்தாலும் செர்க்கே தானே ரிக்சாவை மிதித்து ஓட்டி செல்கிறார். இந்த வாகனம் நகர பகுதியில் செல்லும் போது பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.
- ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார்.
- இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.
புதுச்சேரி:
புதுவையில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற ஸ்கூபா டைவிங் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ.
ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இந்தியா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் வீரர்கள் சாதனை படைக்கும் போது அதனை தனது குழுவுடன் இணைந்து ஆழ்கடலில் வித்தியாசமான முறையில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

உலக கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.
இதனை கொண்டாடும் வகையிலும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த் தருண்ஸ்ரீ தனது குழுவினருடன் புதுச்சேரி அருகே கடலில் 50 அடி ஆழத்திற்கு சென்று சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியும், இந்திய தேசிய கொடியை ஆழ்கடலுக்குள் எடுத்து சென்று இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடினர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் சமீபத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் புதுவையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை செல்லும் பாதைகளை பொதுப்பணித் துறையினர் சுத்தம் செய்து புதிய 'மேன்ஹோல்'களை அமைத்தனர்.
இந்த நிலையில், ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதியில் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, நேற்று இரவு 7 மணிக்கு குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த பகுதிக்கு விரைந்தனர்.
கம்பன் நகர், 3-வது குறுக்கு தெரு முதல், 7-வது குறுக்கு தெரு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை செல்லும் மேன்ஹோல்களை திறந்து, வாயுக்களை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறியதாவது:-
வீடுகளில் சமையல் கியாஸ் போன்ற வித்தியாசமான வாசனை வருவதாக தகவல் வந்தது. ஆய்வு செய்தபோது, மீத்தேன் வாயுவின் வாசனை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.
அதனால், உயிருக்கு எந்த பாதிப்பும் வராது. இந்த வாயு குப்பைகள் மற்றும் சாக்கடைகள் மூலமும் வரக்கூடும். பொதுவாக ஹைட்ரஜன் சல்பேட், கார்பன் மோனக்சைடு வாயுவால் மட்டும் பாதிப்பு வரும். இப்போது குடியிருப்பு பகுதிகளில் அந்த வாயுக்கள் வெளிவரவில்லை.
இது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
- மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 59 போ் உயிாிழந்தனா்.
இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் (வயது 39) என்பவா் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். இதனால் இச்சம்பவத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 60 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கள்ளக்குறிச்சி மெத்தனால் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விசாரித்து வருகிறது.
- முழு விசாரணைக்கு பின் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தெரிவிக்கப்படும்.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு காரணமான மெத்தனால், புதுச்சேரியில் இருந்து வரப்பட்டதாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இக்குற்றச்சாட்டை தொடர்ந்து, புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை தடுக்க கலால் சாவடிகள் அமைக்கப்படுமா? என உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மெத்தனால் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விசாரித்து வருகிறது.
இதில் மாறுபட்ட கருத்துகளும் புது தகவல்களும் வந்து கொண்டுள்ளது. முழு விசாரணைக்கு பின் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தெரிவிக்கப்படும்.
இந்த வழக்கில் மாதேஷ் புதுச்சேரியில் பிடிபட்டுள்ளார். அவருக்கு பல இடங்களில் முகவரி சான்று உள்ளது. அவரை புதுச்சேரியில் பிடித்ததால் இங்கிருந்து வந்ததாக கூறுகின்றனர்.
தற்போது மரக்காணத்தில் ஒருவரை பிடித்துள்ளனர். கலால், போலீஸ் மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி அரசே மதுக்கடைகளை ஏலம் விட்டு முறைப்படி நடத்துவதால், இங்கு கள்ளச்சாராயத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் தான் கள்ளச்சாராயம் உள்ளது. புதுச்சேரியில் கலால் சாவடிகள் அமைக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும்.
- மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் சாவுக்கு காரணமான தமிழக தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசிலை அருகில் இன்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
தமிழகம் முழுவதும் கள்ளசாராய விற்பனை அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிந்தே விற்பனை செய்யப்படுகிறது. ஆளும் திமுக அரசின் ஆதரவோடு விற்பனை செய்யப்படுவதால் பல இடங்களில் காவல்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு தமிழக தி.மு.க. முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும். ஆனால் அதை விடுத்து தமிழக முதலமைச்சர், இந்த சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், ஆந்திராவில் இருந்து தொழில்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்ட மெத்தனால் என்றும் சட்டமன்றத்தில் உண்மையை மூடி மறைக்கும் விதத்தில் ஆதராமற்ற குற்றச்சாட்டை கூறினார்.
இந்த சம்பவத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறுவது உண்மை என்றால் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். மனதை உலுக்கும் இந்த சட்டவிரோத சம்பவத்தை தமிழக சி.பி.சி.ஐ.டி.யே விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்..?
அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர்களும், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் வாய் திறக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கி தி.மு.க. அரசுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.
- நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது.
- குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளை கண்டித்தும் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது. பீகாரில் நீட் தேர்வு கேள்வி தாள்களை கசியவிட்டு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனர். குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர். இப்படி நீட் தேர்வில் பலதரப்பட்ட ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு முகமை தான் இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணம்.
நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வு முறைகேடு சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில் எந்த தேர்வும் முறையாக நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சம்பந்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிறது. மோடி ஆட்சியில், ஒட்டுமொத்தமாக அரசு நடத்தும் தேர்வுகள் மோசமாக கையாளப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்தது இல்லை. மோடி ஆட்சியில் சர்வசாதாரணமாக முறைகேடுகள் நடக்கிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இது சகஜமாக நடக்கிறது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.






