search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    • பிரியாணி மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது.
    • குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள்.

    பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்பினால் கண்டிப்பாக டிபன்பாக்ஸ் காலியாக வரும் என்பது உறுது. காலை உணவு அல்லது இரவு உணவு சமைக்கும் பொழுது இப்படி ராகி சேமியாவில் ஒரு பிரியாணி செய்து கொடுத்தால் குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். வாருங்கள் ராகி சேமியா பிரியாணியை எப்படி என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ராகி சேமியா — 1 கப்

    பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1/2 கப்

    பச்சை பட்டாணி – 1/4 கப்

    பெரிய வெங்காயம் – 2

    தக்காளி – 1

    பட்டை – 1

    ஏலக்காய், கிராம்பு – 2

    கரம் மசாலா துாள் – 1/2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்

    மஞ்சள் துாள் – 1/4 தேக்கரண்டி

    மிளகாய் துாள் – 1/2 மேஜைக்கரண்டி

    எண்ணெய், கல் உப்பு, கொத்தமல்லி தழை,

    புதினா – தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில், எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள், தக்காளி, பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, புதினா, போட்டு வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு கப் நீர் ஊற்ற வேண்டும்.

    நீர் கொதித்தவுடன், ராகி சேமியாவைப் போட்டு கிளறி, அடுப்பை, `சிம்'மில் வைத்து, கொத்தமல்லி தழை துாவினால், ராகி சேமியா பிரியாணி தயார். சாப்பிட சுவையாக இருக்கும்; ராகி சேமியா சாப்பிடாத குழந்தைகள் இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவர்.

    • எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள்.
    • மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது.

    லிப் பாம் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன், எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த காரணத்துக்கேற்ற லிப்பாம் வாங்கி பயன்படுத்துவதுதான் சரியாகவும் இருக்கும்.

    சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டு காணப்படும். அவர்களுக்கு மாய்ஸ்ச்சரைசிங் தன்மை கொண்ட லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு உதடுகள் வெடித்துப் போகும் பிரச்சினை இருக்கும். அவர்கள் அதற்கான காரணத்தை சரும மருத்துவரை அணுகி, உதடுகள் வெடித்துப்போவதற்கான காரணம் அறிந்து அதற்கேற்ற லிப் பாம் பயன்படுத்தலாம்.

     இன்னும் சிலருக்கு உதடுகளின் இயல்பான நிறம் மாறி, கருமையாக இருக்கும். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், அலர்ஜி உள்ளவர்களுக்கும் இப்படி இருக்கலாம். இவர்கள் லிப் பாமில் மாய்ஸ்ச்சரைசர் மட்டுமன்றி, சன் ஸ்கிரீனும் உள்ளதுபோல தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

    சரும மருத்துவரை அணுகினால், உதடுகளின் கருமையைப் போக்கும்படியான லிப் லைட்டனிங் தன்மை கொண்ட லிப் பாமை பரிந்துரைப்பார். இப்படி எந்த தேவையும் இல்லை... வெறும் அழகுக்காக மட்டுமே லிப் பாம் உபயோகிக்கிறேன் என்பவர்கள், மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது. ஆனால், அதில் வாசனையோ, அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்களோ இல்லாதபடி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.

    • சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு.
    • மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் பாதுகாப்பானது.

    நம் ஊரைப் பொறுத்தவரையில் கல்யாணம் போன்ற குடும்ப விழாக்கள், குடும்பத்துடன் சேர்ந்து டூர் போவது, தவிர்க்க முடியாத கோயில் பயணங்கள் போன்ற காரணங்களுக்காக, சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு. இதற்காக அவர்கள் மாத்திரைகளைப் பயன்டுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

    அப்படி, மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் பாதுகாப்பானவை தானா...? அந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடலாமா...? எவற்றில் எல்லாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்...? எவற்றை எல்லாம் செய்யக் கூடாது?

    மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?

    சுயமருத்துவம் கூடாது

    "மாதவிடாயை, மாத்திரைகளின் உதவியோடு தள்ளிப்போடுவதை ஒரு மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் அது பாதுகாப்பான ஒன்று. ஆனால், மருத்துவரைப் பார்க்காமல் தாங்களாகவே மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிபயன்படுத்தக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில் பெண்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. குறிப்பாக தாங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை வாங்கிப் போடக்கூடாது.

    பக்கவிளைவுகள்

    மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்து முடித்த பின்னர், மீண்டும் பீரியட்ஸ் வரும்போது சிலருக்கு பழையபடி நார்மலாக வரும். சிலருக்கு பீரியட்ஸ் தள்ளிப் போகும். 30 நாள்கள் சுழற்சி உள்ளவர்களுக்கு, சில சமயங்களில் 45 நாள்கள் கழித்தும்கூட வரலாம். சிலருக்கு உதிரப்போக்கு அதிகமாகலாம். மாதவிடாய் சமயத்தில் வயிறு இழுத்துப் பிடிக்கலாம்.

    இன்னும் சொல்லப்போனால், தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தும்போதே சிலருக்கு தசைப்பிடிப்பு உண்டாகலாம். இவைபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சிலருக்கு மிக நார்மலாகக்கூட பீரியட்ஸ் வரலாம். இவை அனைத்துமே ஆளுக்கு ஆள் மாறுபடும்.

    எனவே, மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்த பின்பு மீண்டும் பீரியட்ஸ் வரும்போது, உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தெரிந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உங்கள் மகப்பேறு மருத்துவரை உடனே சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது மிக அவசியம்.

    ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

    மாதவிடாயைத் தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்தால், அதனால் கருப்பையில் கட்டி வரும், குழந்தை பிறப்பதில் சிக்கல் வரும் என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு. ஆனால் அச்செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. அதேநேரத்தில், எதுவுமே குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப்போனால் அது நல்லதில்லை அல்லவா? எனவே, மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் ஹார்மோன்கள் தொந்தரவு அடைய வாய்ப்பிருக்கிறது.

    மாதவிடாய் வலி... மெஃப்தால் ஸ்பாஸ் மாத்திரை... உஷார் பெண்களே... உஷார்!

    மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள். எனவே, வெளியில் இருந்து திரும்பத்திரும்ப ஹார்மோன்களைக் கொடுக்கும்போது, அதனால், உடலில் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்களில் சமநிலையின்மை ஏற்பட்டுவிடும். எனவே, மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

    • உடலும் மனமும் அமைதியற்று, பலவீனமாக இருக்கும்.
    • பீரியட்சில் ரத்தப்போக்கு காரணமாக உடலும் மனமும் அமைதியற்று இருக்கும்.

    உங்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை மாதவிடாய் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை 4 நிலைகளாகப் பிரிக்கலாம். அதன்படி 1 முதல் 7 நாள்கள் வரை `மென்ஸ்டுரல் ஃபேஸ்', 8 முதல் 13 நாள்கள் வரை `ஃபாலிக்குலர் ஃபேஸ்', அடுத்த 14-21 நாள்கள்வரை `ஓவுலேட்டரி ஃபேஸ்'சும், அதற்கடுத்த நாட்களை, 22 முதல் 28 நாட்கள் வரை `லூட்டியல் ஃபேஸ்' என்றும் சொல்கிறோம்.

    மாதத்தின் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடுவது, ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்வது என்றிருக்காமல், மேற்குறிப்பிட்ட இந்த நான்கு நிலைகளுக்கேற்ப உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் மாற்றிக்கொண்டால், பீரியட்ஸ் சுழற்சியில் ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களால் உடல், மனநலனில் ஏற்படும் அசவுகர்யங்களை ஓரளவு சமாளிக்கலாம்.

    அதன்படி, 1 முதல் 7 நாட்கள் வரை, பீரியட்சின் போது ரத்தப்போக்கு காரணமாக உடலும் மனமும் அமைதியற்று, பலவீனமாக இருக்கும். இந்த நாள்களில் வெதுவெதுப்பான சூப், காய்கறி ஸ்டியூ, இரும்புச்சத்து அதிகமான கீரைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். உடலை வருத்தி செய்கிற உடற்பயிற்சிகளை தவிர்த்து வாக்கிங் போன்ற மிதமான பயிற்சிகளை செய்யலாம்.

    8 முதல் 13 நாள்கள் வரையிலான ஃபாலிக்குலர் ஃபேஸ் நடக்கும் போது, ஹார்மோன் அளவுகள் மெள்ள மெள்ள ஏறத்தொடங்கும். அதனால் உங்கள் எனர்ஜி லெவலும் அதிகரிக்கும். உற்சாகமாக உணர்வீர்கள். இந்த நாட்களில் காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை சாப்பிடலாம். கடினமான உடற்பயிற்சிகள், நடனம் போன்றவற்றைச் செய்யலாம்.

    14 முதல் 22 நாள்கள் வரையிலான ஓவுலேட்டரி ஃபேஸ் நடக்கும்போது, முட்டை விடுவிக்கப்படும் அண்டவிடுப்பு நிகழும். அது சினைக்குழாய் வழியே பயணம் செய்து, உயிரணுவை சந்தித்தால் கருத்தரிக்கும். ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாகும். கற்பனை சக்தியும் அதிகரிக்கும். இந்த நாட்களில் மெக்னீசியம் அதிகமுள்ள டார்க் சாக்லேட், கீரை, முட்டை, காலிஃப்ளவர், ப்ரொக்கோலி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். கடினமான பயிற்சிகளைக்கூட செய்ய உடல் தயாராக இருக்கும்.

    23 முதல் 28 நாள்கள் வரை லூட்டியல் ஃபேஸ் எனப்படும் நிலையில், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். எனர்ஜி குறையும். வெளியே செல்ல விருப்பமின்றி, வீட்டிலேயே இருக்கத்தோன்றும். இந்த நாள்களில், ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.

    • சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.
    • பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை.

    ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்க நல்ல மருந்து. பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை. ஆவாரம்பூ உடல் சூடு தணிக்கும், நாவறட்சி நீக்கும், கண் எரிச்சல் தீர்க்கும். மூலநோய் குணமாக உதவும். சருமப் பொலிவுக்கு உதவும். உடலை பலப்படுத்தும். சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ஆவாரம்பூ - ஒரு கைப்பிடி

    தேங்காய்த்துருவல்-ஒரு கப்

    காய்ந்த மிளகாய் -2

    புளி, உப்பு - சிறிது

    பூண்டு - 2 பல்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்க வேண்டும். அதில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பூண்டு, ஆவாரம்பூ, புளி, உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு, கருகிவிடாமல் வதக்க வேண்டும்.

    ஆறிய பிறகு, மிக்சியில் அரைத்தெடுக்க வேண்டும். தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.

    குறிப்பு:

    ஃப்ரெஷ் ஆவாரம்பூ கிடைக்கவில்லை என்றால், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற உலரவைத்த பூவையும் பயன்படுத்தலாம்.

    • சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும்.
    • சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள். அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். சமையல் ருசியாக இருக்க கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக...

    சமையலில் செய்யக்கூடாவதவை

    * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

    * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

    * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

    * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

    * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

    * சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

    * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

    * ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.

    * பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

    * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

    * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

    * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

    செய்ய வேண்டியவை..!

    * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

    * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

    * ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

    * போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

    *குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

    * பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

    * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

    * வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.

    * கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.

    * வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

    • நூல்கோல் காய்கறியில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
    • நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு.

    நூல்கோல் காய்கறியில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் இதனை உணவில் அதிகமாக யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இதில் தான் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் உள்ளது. இதில் இருக்கக்கூடிய வேர் மற்றும் இலை இரண்டையும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதனை பல பேர் உணவில் ஒதுக்கி வைக்கிறார்கள். இதில் உள்ள நன்மைகள் தெரிந்தால் இனிமேல் யாரும் ஒதுக்கி வைக்கமாட்டீர்கள். இந்த நூல்கோல் காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் என்னென்ன நோய்களை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    நூல்கோல் மண்ணுக்குள் விளையும் காய் வகையாகும். நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு. ஆனால் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம்.

    நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. நூல்கோல் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாகவும் பயன்படும்.

    செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது. பருவ கால மாற்றங்கள் ஏற்படும் போது முதலில் நம்மை பாதிப்பது மூச்சு தொடர்பான பிரச்னைகள்தான்.

    குறிப்பாக, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் பனிக் காலத்தில் கூடுதலாக ஏற்படும். நுரையீரலில் தேங்கும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு நூல்கோல் மிக நல்ல தீர்வைக் கொடுக்கும். நூல்கோலின் மேல் உள்ள தண்டும் அதன் மேல் உள்ள கீரையிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகின்றது.

    நூல்கோலில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று. இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையை குறைக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த நூல்கோல் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    சருமத்தில் உள்ள தோல் பகுதிகள், சுருக்கம், கோடுகள் இருப்பவர்கள் உணவில் அதிகமாக நூல்கோலை சேர்க்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் சம்பந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நூல்கோலை உணவில் அடிக்கடி சேர்த்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    நூல்கோலின் இலையில் அதிக அளவில் ஃபோலேட் சத்தும் உள்ளதால் இதயத்தை பாதுகாக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள வீக்கங்கள், வலிகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    பொட்டாசியம் சத்து நூல்கோலில் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் அளவுடன் எடுத்துக்கொண்டால் நல்லது.

    • புளிச்சக்கீரைக்கு காசினிக்கீரை என்ற பெயரும் உண்டு.
    • ஆந்திரா பகுதியில் `கோங்குரா’ என்ற பெயரில் பிரசித்தி பெற்றது.

    புளிச்சக்கீரை... புளிப்புச்சுவை நிறைந்தது என்பதால், இந்த கீரை புளிச்சக்கீரையானது. புளிச்சக்கீரைக்கு காசினிக்கீரை என்ற பெயரும் உண்டு. இது ஆந்திரா பகுதியில் `கோங்குரா' என்ற பெயரில் பிரசித்தி பெற்றது. கோங்குரா சட்னி, கோங்குரா துவையல், கோங்குரா தொக்கு போன்றவை சுவைக்கு பெயர் பெற்றவை.

    இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த இந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை பெறுவதோடு மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உடல் குளிர்ச்சி பெறுவதோடு மந்தம் நீங்கி விந்து கெட்டிப்படும். பொதுவாக புளிச்சக்கீரையுடன் மிளகாய் சேர்த்து வேக வைத்து உப்பு சேர்த்து துவையலாகச் செய்து சாப்பிடுவார்கள்.

    நினைத்தாலே நாவில் நீரூற வைக்கும் புளிப்பு சுவை கொண்ட இயற்கையின் அருட்கொடையான புளிச்சக்கீரை ரத்த சோகை நோயைத் தடுப்பதுடன், உடல் நலனுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. புளிச்சக்கீரையின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.

    புளிச்சக்கீரையை ஹிந்தியில் கொங்குரா, பிட்வா என்றும், ஆங்கிலத்தில் கெனாஃப் அல்லது ரோசெல்லே என்றும் சொல்வார்கள். புளிச்சக்கீரையில் பச்சை தண்டு வகை, சிவப்பு தண்டு வகை என இரு வகைகள் உண்டு.

    பெரும்பாலும் நாம் பச்சைத்தண்டு வகையையே பயன்படுத்துகிறோம். நீளமான தண்டுடன் மூன்று இதழ்களைக் கொண்டு வளரும் இதன் இலைகளை மட்டுமே நாம் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இதன் தண்டுகளை அப்படியே மண்ணில் நட்டாலும் மீண்டும் துளிர்த்து வளரும் என்பது சிறப்பு.

    புளிச்சக்கீரையில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுடன் பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், ரிபோஃப்ளோவின் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் உள்ளன. இந்தக் கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

    இதனால் இது இருதய வாஸ்குலர் பாதிப்புகளைத் தடுக்கிறது. புளிச்சக்கீரையில் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

    இந்த கீரையின் இரண்டு நிற வகைகளிலும் அற்புதமான ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சருமம் மற்றும் முடியின் பாதிப்புக்கு முக்கியக் காரணமான ஃப்ரீரேடிக்கல்களைத் தடுக்கிறது.

    பெண்களை அதிகம் தாக்கும் ஒரு உடல் நலப் பிரச்னை இரத்த சோகை. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் ரத்த சோகையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்தக் கீரை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

    புளிச்சக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இரத்த சோகை பிரச்னையை எளிதில் தீர்க்கலாம். அது மட்டுமின்றி, இரத்த சோகையின் விளைவுகளான முடி உதிர்தல், சோர்வு, பலவீனம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளையும் இது தடுக்கிறது.

    புளிச்சக்கீரையில் குறைந்த கலோரிகள் உள்ளன. 100 கிராம் புளிச்சக்கீரையில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி உணர்வைக் குறைத்து நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் பல செரிமானப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமான மலச்சிக்கலைத் தடுக்க முடியும். புளிச்சக்கீரையில் உள்ள பாலிபினால்கள் உடல் பருமன் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிவாரணம் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இதன் சாறு ட்ரைகிளிசரைடு மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. புளிச்சக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுவதற்கு முக்கியக் காரணமான ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

     வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்துவிடும். இதேபோல், மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரை சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில்  புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.

    புளிச்சக்கீரையை காய வைத்து அதனுடன் சம அளவு பாசிப்பருப்பு (பச்சைப்பருப்பு), ஜாதிக்காய், சுக்கு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், இந்துப்பு சேர்த்து பொடி செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான குழந்தையின்மை குறைபாடு விலகும். இந்த பொடியை காலை மற்றும் மதிய உணவில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடு சரியாகும். பெண்களும் இதை சாப்பிடுவதால் தாம்பத்திய உறவு பலப்படும்.

    இத்தனை மருத்துவ குணங்கள் இருந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். ஏற்கெனவே உடல் நலக் கோளாறுகள், ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இதை உணவில் சேர்த்துகொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது.

    • எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
    • புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

    பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...

     கீரை

    கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

     பருப்பு

    பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.

     ஓட்ஸ்

    ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.

     பால்

    பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.

     ப்ரோக்கோலி

    பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.

     பீட்ரூட்

    பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.

     பாதாம்

    பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

    • நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
    • நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும்.

    நண்டு சப்பிடுவதால், வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண்பார்வை மேம்படவும், கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது. இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும். நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.

    காயங்கள் விரைந்து குணமாகவும், நண்டு உணவுகள் கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்றவை எரித்ரோசைடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்வை என்றும், இது புதிய திசுக்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. நண்டு உணவில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 1

    இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    கரம்மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்

    மைதா மாவு- ஒரு ஸ்பூன்

    பிரெட் தூள்- தேவையான அளவு

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை, எண்ணெய்- தேவையான அளவு,

    உப்பு- தேவையான அளவு.

    செய்முறை

    முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் நண்டுகளை போட்டு வேக வைக்க வேண்டும்.

    நண்டு நன்றாக வெந்ததும், ஆறவைத்து ஓடுகளை உடைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கரம்மசாலாதூள், மஞ்சள்தூள், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ வைக்கலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் தூள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், ஒரு லாலிபாப்பை எடுத்து, முட்டையில் முக்கி எடுத்து பின்னர் பிரெட் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான நண்டு லாலிபாப் தயார்.

    • ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • குளியலறை, சமையலறை பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம்.

    50 கிராம் அளவு பாமாயிலை கடாயில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 15 கொத்து வேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது வேப்பிலை நன்கு வெடிக்க ஆரம்பிக்கும். சற்று தூரமாக நிற்பது நல்லது. இல்லையென்றால் மூடி வைத்து விடலாம். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து வேப்ப இலைகளை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

    வீட்டில், இந்த எண்ணெயை சிறு சிறு ஸ்பான்ச் துண்டுகளின் மீது சிறிதளவு ஊற்றினால் ஸ்பான்ச் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். இந்த ஸ்பான்ச் துண்டுகளை, கழிவறை, குளியலறை, சமையலறை, உள்ளிட்ட பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்தால் பல்லி வரவே வராது.

     டாய்லெட்டில் துர்நாற்றம் நீங்க

    ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு ஏதாவது டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் போடக்கூடிய பவுடர் இரண்டு டீஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதை மிக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். நாம் எடுத்துக்கொண்ட அளவுக்கு 4 முதல் 5 உருண்டைகள் கிடைக்கும். இதை 1 மணி நேரம் காய வைக்க வேண்டும்.

    வீட்டின் குளியலரை, டாய்லெட் உள்ளிட்ட இடங்களில் இந்த உருண்டையை போட்டு வைத்தால் நறுமணமாக இருக்கும். மேலும் டாய்லெட்டின் ப்ளஷ் டேங்கில் இதில் இரண்டு மூன்று உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம், இது ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும் போதும் தண்ணீரில் சிறிது சிறிதாக கரைந்து வரும். இதனால் கறை படியாமல் இருக்கும்.

    • சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    வளர்பருவம்:

    இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

    ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

     வைட்டமின் சி:

    குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

     இரும்புச்சத்து:

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.

    வைட்டமின் டி:

    குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

     புரதம்:

    வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.

    ஆரோக்கியமான கொழுப்பு:

    சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

    ×