என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடை பயிற்சி"

    • வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது.
    • மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு.

    காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.

    இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை செல்வர்.

    வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது.

    நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை.

    கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செல்வார்கள். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.

    வேகநடை மூலம் குறைவான கலோரிகளே எரிக்கப்படும். வேக நடை பயிலும்போது கைகளை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி நடப்பது அதிக பலனைத் தரும். வேகநடை முதியோருக்கு ஏற்ற ஓர் சிறந்த கார்டியோ பயிற்சி. இதனை தினமும் செய்வதால் உடற்பருமனானவர்களின் உடற்தசைகளின் அடியில் உள்ள கொழுப்புப் படலம் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். வேக நடை பயில்வது மிக எளிய கார்டியோ உடற்பயிற்சிக்கு சமமானது. வேக நடை பயில்வது மெல்லோட்டம் அளவுக்கு விரைவில் பலனைத் தராது என்றபோதும், உடல் களைப்படையாமல் நீண்டநேரம் செய்ய ஏற்ற உடற்பயிற்சிகளுள் சிறந்தது.

    வேகநடை, மெல்லோட்டம் ஆகிய இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ள நிலையில் உங்கள் உடல் நிலைக்கேற்ப நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

    • அதிகாரிகளுடன், கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு
    • குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புத்தேரி குளத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அரவிந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குளத்தை தூர்வாரி அதை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுடன் ஆலோசனை நடத்தினார்.

    புத்தேரி குளத்தை தூர்வாரி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் வாக்கிங் செல்ல வசதியாக நடை பாதை அமைப்பது தொடர்பாகவும், அங்கு சைக்கிளிங் செல்ல வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோ சிக்கப்பட்டது.

    இதுபோல குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ரூ‌.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதல் கட்டமாக இதற்கு ரூ.1 கோடியே 6 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆய்வின்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.

    ×