என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோடி"
- தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
- அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது.
ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார்.
நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது. இந்தக் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்
இந்நிலையில் நேற்று ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும் காகித குறிப்பு ஏதுமின்றி சொல்ல முடியுமா" என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சவால் விடுத்தார்.
நினைவுத்திறன் தொடர்பாக சவால் விடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனடியாக தனது எக்ஸ் தள பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்களே, "தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?" "ஜூன் 10ம் தேதி எதுவும் நடக்காது. அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது. ஜகந்நாதரின் ஆசியுடனும், ஒடிசா மக்களின் அன்புடனும் பிஜேடி ஆட்சி அமைக்கும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
Wow! Odhisa CM @Naveen_Odisha released a 3 minute video where he attacks PM Modi in first 150 secs. But Pro-BJP Propaganda News Agency run by @smitaprakash has removed that the crucial part (first 150 secs) and have shared only the last 30 sec video. Hope all the Opposition… https://t.co/5yuqQNgMb8 pic.twitter.com/fqSrIInwdz
— Mohammed Zubair (@zoo_bear) May 11, 2024
- 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
- மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.
இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பான வீடியோவை பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார் என நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. மீண்டும் சொல்கிறேன் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
- பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
- இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு தொடர்பாக, சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து, சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கச்சத்தீவு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து, தகவல் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவான கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தனது எக்ஸ் தளபதிவில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்
அதில் கூறியிருப்பதாவது,
கச்சத்தீவு விவகாரம் புனையப்பட்டது. எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட RTI தகவல் தற்போது உண்மையில்லை என நிருபணமாகியுள்ளது.
1976ல் எந்த பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை என 2015ல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு RTI தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதைத் தவிர, அரசாங்கப் பதிவேடுகளைத் திருத்துதல் மற்றும் பொய்யாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை ஈர்க்கவில்லையா?
இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.
2024 பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் நாட்டின் பிரதமரால் கச்சத்தீவு பற்றி கண்டுபிடிக்க முடியும்? இது தேர்தல் பாசாங்குதனம் இல்லையா? 2024 ஜனவரியில் இருந்து மட்டும் எப்படி தமிழகத்தை நினைவு கூர்ந்தார்களோ அதேபோல் தான் கச்சத்தீவு விவகாரத்திலும் நுழைந்து இருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்பத்தில் பா.ஜ.க. அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் 2014 முதல் 2024 வரை ஏன் ஒரு சிறு விரலை கூட அசைக்கவில்லை? என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.
- உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
- காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள்.
போபால்:
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
உங்கள் ஒரு வாக்கு இந்தியாவை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
ஆதிவாசி மகளை ஜனாதிபதியாக்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியது. இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது.
இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தியது. வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கியது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்தது. உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.
குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்கி றார்கள்.
வரலாற்றின் திருப்பு முனையில் இந்தியா உள்ளது, வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள். ராமர் கோவிலுக்கு சென்றதற்காக தான் மிகவும் துன்புறுத்தப் பட்டதாகவும், அதனால் காங்கிரசை விட்டு வெளியேறியதாகவும் ஒரு பெண் கூறினார்.
காங்கிரசை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் அபகரித்துள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். இன்னொருவர் கூறும் போது, ஷா பானோ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவரது தந்தை மாற்றியது போல் ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்டமாக காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர், நமது ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் அப்பாவி என்றும் கூறினார்.
மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப் பையும் காங்கிரஸ் காட்டுகிறது. இது ஏன் என்று காங்கிரசை கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது
- காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்
அண்மையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி,"இந்தியாவில் ஆட்சி அமைக்க விரும்பினால், குறைந்தது 272 இடங்கள் தேவை. பாஜகவைத் தவிர, நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சியும் 272 இடங்களில் போட்டியிடவில்லை, பின்னர் அவர்கள் (காங்கிரஸ்) எப்படி ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்.
மோடி அவர்களே... உங்களது கணித திறமை அபாரமானது. நீங்கள் முழு கணிதவியல் பாடத்திற்கான டிகிரி வைத்திருக்கிறீர்களா. உத்தரபிரதேசத்தில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக உங்களை அடுத்த மாதமே நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
The Congress Party has so far declared 326 seats.
— Pawan Khera ?? (@Pawankhera) May 1, 2024
Do you also have a degree in entire mathematics, Mr @PMOIndia ? https://t.co/VHueKKpaun
- இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
- தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.
பெங்களூரு:
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலமாக மாறியுள்ளது. இதை நினைத்து அனைவரும் பெருமைபடுவார்கள். ஆனால் இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.
நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி செய்தது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் உதவி பெற்றுள்ளது.
நமது ராஜா, மகாராஜாக்களை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) அவமதிக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஆளுமைகளை அவமதித்துள்ளார். நாம் அனைவரும் பெருமைபடும் மைசூர் அரச குடும்பத்தினர் பங்களிப்பு அவருக்கு தெரியாதா?
ஆனால் நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாதுஷாக்கள் செய்த அட்டூழியங்களை பற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள் காங்கிரசுக்கு நினைவில்லை. அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசும் கட்சியுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி அமைக்கலாம்.
நமது புனித தலங்களை அழித்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், மக்களை கொன்றவர்கள், பசுக்களை கொன்றவர்கள் பற்றி எல்லாம் அவர்கள் பேசுவதில்லை.
மக்களின் சொத்துக்களை 55 சதவீதம் பறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஹூப்ளியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் சமாதானத்துக்கு முன்னுரிமை அளித்தது. நேஹா போன்ற எங்கள் மகள்களின் உயிருக்கு மதிப்பில்லை. அவர்களுக்கு கவலை எல்லாம் அவர்களின் வாக்கு வங்கி மட்டுமே.
பா.ஜனதா அரசு குற்றவியல் நிதி அமைப்பின் காலனித்துவ சட்டங்களை நீக்கியது. பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை தொடர்ந்து உத்தரகன்னடா, தாவன கெரே, பாகல் கோட்டை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதி களில் 14 இடங்களுக்கு கடந்த 26-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு மே மாதம் 7-ந் தேதி நடக்கிறது.
- ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது.
- ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது.
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-
பா. ஜனதாவின் 400 இடங்களுக்கு மேல் என்ற இலக்கின் காரணம், அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற விரும்புவதற்காகத்தான். அதன் மூலம் அவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கவும், இடஒதுக்கீடு இல்லாம இந்தியாவை உருவாக்கவும் விரும்புகிறார்கள்.
பிரதமர் மோடி, அமித் ஷா நாட்டின் பூர்வீகக்காரர்களாகிய தலித்கள், எஸ்டி-கள் மற்றும் ஓபிசிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் செய்கிறார்கள். இந்த தேர்தலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கான களமாக மாற்ற அவர்கள் (பாஜக) முடிவு செய்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது. ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-க்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்க பாஜக முயற்சிக்கிறது.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
- பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:-
ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். மோடி, அமித் ஷா ஆகிய இருவரும விற்பனையாளர்கள். அப்படி என்றால் வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இரண்டு வாங்குபவர்கள். இப்படித்தான் நாடு வளர்ச்சி அடையும்?.
அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயை கோடீஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்துள்ளனர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
- ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது
தற்போது கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.
கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.
உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது
"ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ்தான் மாற்றியது என மோடி கூறியது அப்பட்டமான பொய் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மோடி அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேவ கவுடா தான், 1995ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை ஓபிசி பட்டியலில் இணைத்தார். ஆனால், அதனை காங்கிரஸ் தான் செய்தது என மோடி தெரிவித்திருக்கிறார்.
முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று ஒரு காலத்தில் தம்பட்டம் அடித்த தேவகவுடா இன்னும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா? அல்லது நரேந்திர மோடியிடம் சரணடைந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா? என்பதை கர்நாடக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.
1995 ஆம் ஆண்டில், தேவகவுடா அரசாங்கம் கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டை ஓபிசி ஒதுக்கீட்டிற்குள் 2பி என்ற தனித்துவமான வகைப்பாட்டின் கீழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்து, முஸ்லிம்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் சேர்த்தது.
ஆனால் பாஜக அரசின் இந்த முடிவை அமல்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மீண்டும் ஓபிசி பட்டியலில் முஸ்லிம்களை காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.
- கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது
- மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது
கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு-1ல் 17 முஸ்லிம் சமூகங்களும், பிரிவு-2ல் 19 முஸ்லிம் சமூகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.
உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது
மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு எதிரானவர். ஆனால் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்ற ஆபத்தான தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற பல்வேறு யுக்திகளை கையாள்கிறது.
கர்நாடகாவில், காங்கிரஸ் சட்டவிரோதமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. முஸ்லிம்களின் அனைத்து சாதியினரும் ஓபிசி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஓபிசியினருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, மதத்தின் அடிப்படையில் அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறையை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.
"ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் மத்தியப் பிரதேசம் பின்தங்கிய மாநிலமாக அறியப்பட்டது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இங்கு வளர்ச்சி தொடங்கியது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
- 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
- இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்
பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,
"இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,
16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.
10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.
மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. "காங்கிரஸ் கட்சி பொது மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோ கம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது" என அப்பட்ட மான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார்.
நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3ஏ) இன் கீழ் குற்றமாகும்.
இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்