என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
- திரைப்படம் வருகிற மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- தம்பி ராமையா மற்றும் பால சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான்தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. சில நாட்களுக்கு முன் படத்தின் கேரக்டர் ரிவீலிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெயிலர் ஆரம்பத்தில் நடிகர் விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து வரும் வசனங்கள் நகைச்சுவையாக அமைந்து இருக்கிறது.
நீண்ட நாட்கள் கல்யாணம் ஆகாத சந்தானத்துக்கு ஒரு ஜமீன் குடும்பத்து பெண்ணுடன் கல்யாணம் நடக்கிறது. அதன் பிறகு சந்தானம் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் போல டிரெயிலர் காட்சிகள் அமைந்துள்ளது. தம்பி ராமையா மற்றும் பால சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகிற மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2021 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தின் போஸ்டரில் அணிந்த உடைப் போலவே இந்த படத்தின் போஸ்டரிலும் அணிந்து இருக்கிறார்.
வடக்குப்பட்டி ராமசாமியின் வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றிப் பெற வேண்டுமென ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
- ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.
இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்
இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-
மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.
மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
- இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த ”எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த "எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு 2016-ஆம் ஆண்டு நாகசைதன்யாவுடன் நடந்த திருமணத்தின் போது அணிந்திருந்த கவுனை அணிந்து வந்தார். அந்த கவுனில் என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். அந்த கல்யாண கவுனை மீண்டும் ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் சமந்தா.
இதுக்குறித்து ஆடைவடிவமைப்பாளர் கிரேஷா பஜாஜ் எப்படி சமந்தாவின் கல்யாண கவுன் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் எப்போதும் புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும். நடக்க எப்போதும் புதிய பாதைகள் உள்ளன. எப்பொழுதும் புதிய கதைகள் சொல்ல இருக்கிறது. சமந்தாவுடன் இணைந்து ஒரு புதிய நினைவை உருவாக்கவும், மற்றொரு கதையைச் சொல்லவும் நாங்கள் விரும்பினோம். அழகு எப்பொழுதும் நிரந்தரம் அது ஒவ்வொரு நாளும் புதிய வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. என்ரு பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். இது பற்றி அவரது ஆடை வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் விரும்பினோம். அவருக்கு புதிய நினைவை ஏற்படுத்தவும் உதவினோம். அது அவரது திருமண கவுன்போன்று உருவாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.
- அட்லீ இயக்கிய ஜவான் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் 'ஐயா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
சமீபத்தில் ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்துக்கு பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்குகிறார்கள் ஹீரோயின்கள். அப்படி, விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார் நயன்தாரா.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "சமூகத்தில் பெண்கள் மீது உள்ள பல கட்டுப்பாடுகளை உடைத்து வருவது மிகப்பெரிய விஷயம். அதை செய்பவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதையும் தாண்டி குரல் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் சேர்த்தே தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருப்பு உடை புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் 2020 ஆம் ஆண்டு இணைந்து நடித்து வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது
- இப்படத்தில் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடிக்கிறார்.
அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடிபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து மலையாள பிரபல நடிகரான பிஜு மேனன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் 2020 ஆம் ஆண்டு இணைந்து நடித்து வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது . இதற்கு முன் பிஜு மேனன் தமிழ் படங்களான மஜா, தம்பி, பழனி, போர்களம் மற்றும் அரசாங்கம் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மூலம் பிஜு மேனன் 14 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க போகிறார். இதுக்குறித்தான அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தில் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார்.
- இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில், இவர் இயக்கிய படம் ஜெயிலர்.
இதில், ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
நான் லியோ படத்தை இயக்கி இருந்தால் விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டை தேர்ந்தெடுத்திருப்பேன். இவ்வாறு கூறினார். பின் யாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிரது என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறேன் என்ரு பதிலளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
- ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம்.
ஏப்ரல் 5 ஆம் தேதி பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் "தி ஃபேமிலி ஸ்டார்". இத்திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 29 ஆம் தேதி மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொனலகட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்து வெளியாகியது 'டில்லு ஸ்கொயர்' திரைப்படம். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தை போலவே இத்திரைப்படமும் வெற்றியடைந்தது. படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாஸ்கல் வெடிமுத்து இயக்கத்தில் திரவ் , எம்.எஸ் பாஸ்கர் மற்றும் இஸ்மத் பானு நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான் திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. கிராமத்து பின்னணியில் ஒரு குழந்தையின்மை தம்பதிகள் படும் கஷ்டத்தை கூறும் கதையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி, பாவ்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியது 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம். குறட்டை விடும் மனைவியும் அதனால் கஷ்டப்படும் கணவனின் பற்றிய கதையாகும். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
- மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இன்று 2-ம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.
- அடுத்த மாதம் 10-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படுகிறது
சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் 2004-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் பெரிய திரையில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பலப்படங்களில் காமெடியில் கலக்கினார் சந்தானம். 2012-ஆம் ஆண்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2013-ல் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் ஆனார் சந்தானம்.
2014-ம் ஆண்டு ஸ்ரீநாத் இயக்கத்தில் வெளிவந்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் மூலம் முழுநேர கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து ஹீரோவாகவே சந்தானம் நடித்து வருகிறார்.
சில படங்கள் வெற்றி பெற்றாலும், பல படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவில் வசூல் செய்யவில்லை. இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கினார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
கோபுரம் பிலிம் புரொடக்ஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் இதில் நடித்து உள்ளனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்கை' கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்ட நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
- இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு ’சல்யூட்டிங் மேஜர் முகுந்த்’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள் அந்த வீடியோ சமூக வலைத்தளங்கள்ளில் வைரலானது.
தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்திய நாட்டுக்காக சிறப்பான சேவையை செய்து நாட்டுக்காக உயிர் தாகம் செய்தார். இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு 'சல்யூட்டிங் மேஜர் முகுந்த்' என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் அவரது நினைவு இடத்திற்கு சென்று சல்யூட் அடித்த படி ஒரு புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " காற்று அசைவதால் நமது தேசிய கொடி பறப்பதில்லை, அதை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் கடைசி மூச்சில் தான் தேசியக் கொடி பறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
- விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.
அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.
ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.
ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.
அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷா, முத்துபாண்டி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் தங்கையாக ஜெனிபர், ஓட்டேரி நரி கதாபாத்திரத்தில் தாமு உள்பட பலர் நடித்திருந்தனர்.
படத்தில் இடம் பெற்ற 'அப்படிபோடு' பாடல் அரங்கையே அதிர வைத்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'கில்லி' படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கில்லி படம் வெளியான திரையரங்கங்கள் அனைத்தும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்த அத்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், டைரக்டர் தரணி ஆகியோர் தி. கோட் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டினர்.
மேலும் விஜய்யிடம் சக்திவேலன் பேசுகையில், சினிமாவை விட்டு முழுவதும் விலக வேண்டாம். வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்கள். வியாபாரத்துக்காக சொல்லவில்லை. தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்கள் நான் உங்களின் ரசிகன்னாக கேட்கிறேன் என கோரிக்கை வைத்தார்.
இதைக்கேட்ட விஜய் சிரித்தபடி தலையசைத்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி டிரெண்டிங்காகி வருகிறது.
படம் பற்றி இயக்குனர் தரணி கூறியதாவது "கில்லி படத்தை இந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் பார்த்து விட்டு மகிழ்ந்து செல்வார்கள் என நினைத்தேன்.
படத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் படம் பார்க்கும் போது உச்சரிக்கிறார்கள். ரசிகர்கள் அதிகம் பார்த்த விஜய் படம் கில்லி படம்தான். அனைவருக்கும் நான் ரொம்ப கடமைபட்டுள்ளேன்" என்று கூறினார்.
படத்தில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபர் கில்லி படம் மீண்டும் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என் குழந்தை பருவத்தில் இருந்து நான் செய்ததை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் தளபதி" என பதிவிட்டுள்ளார். ஜெனிபர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்