search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mayilsami"

    • ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷா, முத்துபாண்டி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் தங்கையாக ஜெனிபர், ஓட்டேரி நரி கதாபாத்திரத்தில் தாமு உள்பட பலர் நடித்திருந்தனர்.

    படத்தில் இடம் பெற்ற 'அப்படிபோடு' பாடல் அரங்கையே அதிர வைத்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'கில்லி' படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கில்லி படம் வெளியான திரையரங்கங்கள் அனைத்தும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

    ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்தனர்.

    இதையடுத்து கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்த அத்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், டைரக்டர் தரணி ஆகியோர் தி. கோட் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டினர்.

    மேலும் விஜய்யிடம் சக்திவேலன் பேசுகையில், சினிமாவை விட்டு முழுவதும் விலக வேண்டாம். வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்கள். வியாபாரத்துக்காக சொல்லவில்லை. தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்கள் நான் உங்களின் ரசிகன்னாக கேட்கிறேன் என கோரிக்கை வைத்தார்.

    இதைக்கேட்ட விஜய் சிரித்தபடி தலையசைத்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி டிரெண்டிங்காகி வருகிறது.

    படம் பற்றி இயக்குனர் தரணி கூறியதாவது "கில்லி படத்தை இந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் பார்த்து விட்டு மகிழ்ந்து செல்வார்கள் என நினைத்தேன்.

    படத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் படம் பார்க்கும் போது உச்சரிக்கிறார்கள். ரசிகர்கள் அதிகம் பார்த்த விஜய் படம் கில்லி படம்தான். அனைவருக்கும் நான் ரொம்ப கடமைபட்டுள்ளேன்" என்று கூறினார்.

    படத்தில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபர் கில்லி படம் மீண்டும் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என் குழந்தை பருவத்தில் இருந்து நான் செய்ததை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் தளபதி" என பதிவிட்டுள்ளார். ஜெனிபர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது
    • ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்

    தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

    கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் ஒன்ஸ் மோர் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் ஆடிக் கொண்டு இருக்கும் வீடியோவை நாம் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பார்த்த வண்ணம் இருக்கிறோம்.

    2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    கில்லி ரீ ரிலிஸ் பற்றியும் மக்களின் கொண்டாடத்தை பற்றியும் திரிஷா அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

    அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரௌஷாவுக்கும் என் மன்மார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

    இந்நிலையில், கில்லி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டாளர் சக்திவேலன் நடிகர் விஜயை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "கில்லி திரைப்பட மறு வெளியீட்டில் ரசிகர்களோடு திரையரங்கில் அப்படத்தை பார்த்த பொழுது அவர்களின் கொண்டாட்டம் எனக்கு வியாபாரம் தாண்டி ஒரு திரைப்பட ரசிகனாக சிலிர்ப்பைத் தந்தது. தளபதி விஜய் அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்த பொழுது திரைத்துறை நலம் விரும்பியாக நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • .படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது
    • ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

    கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் ஒன்ஸ் மோர் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் ஆடிக் கொண்டு இருக்கும் வீடியோவை நாம் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பார்த்த வண்ணம் இருக்கிறோம்.

    2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    கில்லி ரீ ரிலிஸ் பற்றியும் மக்களின் கொண்டாடத்தை பற்றியும் திரிஷா அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

    அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரௌஷாவுக்கும் என் மன்மார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

    படம் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் வார தினங்களான இன்றும் பல திரையரங்குககளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது.
    • தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி.

    தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

    கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கில்லி படம் மறு வெளியீடு பற்றி நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-வாழ்க்கை மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது என பதிவிட்டுள்ளார்.

    படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் , விஜயின் ரசிகர்கள் பல கில்லி படத்தை இப்பொழுது தான் முதன்முறையாக தியேட்டரில் பார்க்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது.

    கடந்த சில மாதங்களாகவே பல படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எந்த படத்திற்கும் கில்லி படத்தின் அளவிற்கு வரவேற்பு இல்லை. படம் ரீரிலீஸ் செய்த முதல் நாள் வசூல் 10 கோடியை தாண்டியுள்ளது. தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளம், சிங்கபூர், ஃப்ரான்ஸ் மற்றும் பல நாடுகளில் படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது. படம் இன்னும் சில நாட்களில் வசூல் ரீதியாக பெருமளவு வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×