என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் பெரிய கலர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் பேண்ட் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் பேண்ட் 1.4 இன்ச் 167x320 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன், ப்ளூடூத் 5.1, 90-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்கள், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர், அலாரம் ரிமைண்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.
இத்துடன் ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்போர்ட்ஸ் மோட், 18 எம்.எம். ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார், 204 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

ரியல்மி பேண்ட் 2 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கியது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களின் விற்பனை இன்று துவங்கியது. இன்று காலை 8 மணிக்கு இந்திய சில்லறை விற்பனை மையங்களில் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியது.
சில்லறை விற்பனை மையங்கள் மட்டுமின்றி முன்னணி ஆன்லைன் வலைதளங்களிலும் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் 30-க்கும் அதிக நாடுகளில் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கி இருக்கிறது.

புதிய ஐபோன்கள் இந்திய விலை விவரம்
இந்தியாவில் ஐபோன் 13 128 ஜிபி விலை ரூ. 79,900 என துவங்குகிறது. இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடல்கள் விலை முறையே ரூ. 89,900 மற்றும் ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 13 ப்ரோ 128 ஜிபி விலை ரூ. 1,19,900, 256 ஜிபி விலை ரூ. 1,29,900, 512 ஜிபி ரூ. 1,49,900, 1 டிபி ரூ. 1,69,900 ஆகும்.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி விலை ரூ. 1,29,900, 256 ஜிபி ரூ. 1,39,900, 512 ஜிபி ரூ. 1,59,900 மற்றும் 1 டிபி விலை ரூ. 1,79,900 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி ரூ. 69,900, 256 ஜிபி ரூ. 79,900 மற்றும் 512 ஜிபி ரூ. 99,900 ஆகும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஜி20 டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி20 டேப்லெட் மாடலை செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் 8 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு, மெட்டல் டிசைன், டால்பி அட்மோஸ் மற்றும் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

இதன் அம்சங்கள் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவோ டேப் எம்8 மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 29 ஆம் தேதி அறிமுகமாகிறது.
வெளியீட்டு தேதியுடன் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று கேமரா சென்சார்கள், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது.

இத்துடன் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 12 5ஜி பேண்ட்களுக்கான சப்போர்ட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
டிசோ பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது லோ லேடென்சி கேமிங் மோட் கொண்டுள்ளது.
ரியல்மி டெக்லைப் நிறுவனத்தின் டிசோ பிராண்டு இந்தியாவில் டிசோ பட்ஸ் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும்.
இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5, 10 எம்.எம். டிரைவர்கள், 88 எம்.எஸ். லோ லேடென்சி கேமிங் மோட், இ.என்.சி. போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் கேஸ் நேச்சுரல் லைட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் மீது விழும் வெளிச்சம் பல்வேறு நிறங்களை வெளிப்படுத்தும்.

டிசோ பட்ஸ் இசட் ஐ.பி.எக்ஸ்.4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதன் இயர்பட்கள் 43 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், கேஸ் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் கொண்டிருக்கின்றன. இவை முறையே 4.5 மணி நேரம் மற்றும் 16 மணி நேர பிளேபேக் வழங்குகின்றன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளது.
டிசோ பட்ஸ் இசட் ஆனிக்ஸ், லீப் மற்றும் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும். எனினும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த இயர்பட் ரூ. 1299 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் இரண்டு 5.8 இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 8.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஆடியோ, என்.எப்.சி. போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அம்சங்கள்
- 5.8 இன்ச் 1344x1892 பிக்சல் அமோலெட் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 ஜி.பி.யு.
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11
- ஒரு இ-சிம், ஒரு நானோ சிம்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 12 எம்பி பிரைமரி கேமரா, ஓ.ஐ.எஸ். டூயல் எல்.இ.டி. பிளாஷ்
- 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓ.ஐ.எஸ்.
- 12 எம்பி செல்பி கேமரா
- யு.எஸ்.பி டைப் சி ஆடியோ
- 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ., 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
- 4449 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 23 வாட் பாஸ்ட் சார்ஜிங்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடல் கிளேசியர் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை 1499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,10,675 என்றும் 256 ஜிபி விலை 1599.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,18,050 என்றும் 512 ஜிபி விலை 1799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,32,810 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஐபோன் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஒட்டுமொத்த தோற்றத்தில் பெருமளவு மாற்றங்கள் இல்லை என்றபோதும், புதிய ஐபோன்களின் நாட்ச் முந்தைய மாடல்களில் இருப்பதை விட 20 சதவீதம் குறைவு ஆகும்.
அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்துள்ளார். இந்த டிஸ்ப்ளே ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்படலாம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் நாட்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இத்துடன் 48 எம்பி வைடு ஆங்கில் கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஐபோன் 13 மினி ஐபோன் சீரிசில் கடைசி மினி மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5ஜி ஐபோன் எஸ்.இ. அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது எப்19எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
இது ஏ.ஜி. ஷிம்மெரிங் சேண்ட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
Get ready to say goodbye to battery anxiety with the #OPPOF19s - A combination of the powerful 33W Flash Charge and a long-lasting 5000mAh battery.
— OPPO India (@OPPOIndia) September 22, 2021
Catch the launch event on 27th September at 3:30 pm.
Know more: https://t.co/ogCfEp6BE7pic.twitter.com/eiuspjVVds
அதன்படி ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் ஆமோலெட் ஸ்கிரீன், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது.
ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ். கொண்டிருக்கின்றன.
ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இரு மாடல்களிலும் முறையே ஹெச்டி மற்றும் எப்.ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் விவிட் பிக்சர் என்ஜின், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ்., பில்ட்-இன் குரோம்காஸ்ட், பிளே ஸ்டோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் பேட்ச்வால் 4 உள்ளது. இது 30-க்கும் அதிக ஓ.டி.டி. தளங்களில் சர்ச் வசதி, 75-க்கும் அதிக இலவச சேனல்களுடன் அப்கிரேடு செய்யப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டி.டி.எஸ். ஹெச்.டி., டால்பி அட்மோஸ் வழங்கப்பட்டுள்ளன. ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் ஹெச்.டி. மாடல் விலை ரூ. 15,999 என்றும் 43 இன்ச் எப்.ஹெச்.டி. மாடல் விலை ரூ. 25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் மாடல்களுக்கான புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 749 விலையில் புதிய ஜியோபோன் ஆல்-இன்-ஒன் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. முன்னதாக ஜியோபோன் ரூ. 39 மற்றும் ரூ. 69 விலை சலுகைகள் நீக்கப்பட்டு ரூ. 75 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது.
புதிய 336 நாட்கள் சலுகை 28 நாட்கள் என 12 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி இந்த சலுகையில் மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்பவர்களும் இந்த சலுகையை பெறலாம். மற்ற பலன்களுடன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான இலவச சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ஜியோபோனிற்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சலுகை ஆகும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து எட்ஜ் 20 ப்ரோ மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தது. அந்த வரிசையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 108 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

புதிய ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மோட்டோ டேப் 8 மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளங்களுக்கு முக்கிய அப்டேட் வழங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 15, ஐபேட் ஓ.எஸ். 15 மற்றும் வாட்ச் ஓ.எஸ். 8 வெளியானது. புதிய ஓ.எஸ். இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இவை ஐபோன், ஐபேட் மற்றும் வாட்ச் போன்ற சாதனங்களுக்கான புதிய ஓ.எஸ். ஆகும்.
ஐ.ஓ.எஸ். 15:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுடன் கிடைக்கிறது. இவை தவிர ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11, ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6எஸ் சீரிஸ் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஐபோன் எஸ்.இ. 2021, 2020 வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய ஐ.ஓ.எஸ். 15 அளவில் 3 ஜிபியாக இருக்கிறது. புது ஓ.எஸ். அப்டேட் செய்ய பயனர்கள் ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாப்ட்வேர் அப்டேட் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். அப்டேட் செய்யும் முன் ஐபோன் அல்லது ஐபேட் குறைந்தபட்சம் 50 சதவீதம் சார்ஜ் செய்திருக்க வேண்டும்.

ஐபேட் ஓ.எஸ். 15:
புதிய ஐபேட் ஓ.எஸ். 15 ஐபேட் ப்ரோ 12.9 இன்ச், ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் மற்றும் ஐபேட் ப்ரோ 9.7 இன்ச் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இதே ஓ.எஸ். ஐபேட் 5, மினி 4, ஐபேட் 5 மற்றும் ஐபேட் 6-ம் தலைமுறை மாடல்கள் மற்றும் அதன்பின் வெளியான மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. புது ஐபேட் மினி ஐபேட் ஓ.எஸ். 15 உடன் வெளியிடப்படும். ஆப்பிள் ஐபேட் ஏர் 2-ம் தலைமுறை மாடல்களிலும் புது ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
வாட்ச் ஓ.எஸ். 8:
வாட்ச் ஓ.எஸ். 8 ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மற்றும் அதன்பின் வெளியான மாடல்களில் வழங்கப்படுகிறது. புதிய வாட்ச் சீரிஸ் 7 வாட்ச் ஓ.எஸ். 8 உடன் வெளியாகிறது. ஐபோன் 6எஸ், ஐ.ஓ.எஸ். 15 அல்லது அதன்பின் வெளியான ஐ.ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் வாட்ச் ஓ.எஸ். 8 பயன்படுத்தலாம்.

ஐ.ஓ.எஸ். 15 அம்சங்கள்:
புதிய ஐ.ஓ.எஸ். 15 பதிப்பில் பேஸ் டைம், ஸ்பேஷியல் ஆடியோ, ஷேர்பிளே, போர்டிரெயிட் மோட், புதிய க்ரிட் மோட் மற்றும் வாய்ஸ் ஐசோலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பேஸ் டைம் அழைப்புகளை ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் சார்ந்த பிரவுசர்களிலும் பேஸ் டைம் பயன்படுத்தலாம்.
இத்துடன் மெசேஜஸ் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் அறியாதவர்கள், பரிமாற்றங்கள் மற்றும் விளம்பர குறுந்தகவல்களுக்கான நோட்டிபிகேஷன்களை ஆன், ஆப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் பிரைவசி சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐ.ஓ.எஸ். 15 விரும்பாத பட்சத்தில் பயனர்கள் அதனை அன்-இன்ஸ்டால் செய்து ஐ.ஓ.எஸ். 14 தளத்தில் இருந்தபடி செக்யூரிட்டி அப்டேட்களை மட்டும் பெறும் வசதியை ஆப்பிள் வழங்குகிறது.






