என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • பெரிய அளவிலான ஃபைல்களை அனுப்பும்போது வைஃபையைப் பயன்படுத்துமாறு வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
    • சிறு வணிகங்கள் மற்றும் பள்ளிக் குழுக்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாட்ஸ்அப் பயனர்கள் 2ஜிபி வரையிலான மீடியா ஃபைல்களை ஷேர் செய்யும் அசத்தலான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பல கட்டங்களாக இந்த அம்சத்தை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது, வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜிபி மீடியா ஃபைல்ஸ் ஷேரிங் அம்சம் தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. பீட்டா வெர்ஷன் மூலம் நடத்தப்பட்ட விரிவான சோதனைக்குப் பிறகு, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு இந்த அசத்தல் அம்சத்தை வெளியிடுகிறது.


    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 2ஜிபி அளவு வரையிலான ஃபைல்களை அனுப்பலாம், இது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது முந்தைய வரம்பான 100MB-இல் இருந்து அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது சிறு வணிகங்கள் மற்றும் பள்ளிக் குழுக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

    பெரிய அளவிலான ஃபைல்களை அனுப்பும்போது வைஃபையைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். உங்கள் பரிமாற்றம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க, பதிவேற்றும் போது அல்லது பதிவிறக்கம் செய்யும் போது கவுண்டரைக் காண்பிப்போம்" என்று வாட்ஸ்அப் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

    • டீபாட் எனும் ட்ரோஜான் தான் இதில் 410 செயலிகளை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்ததாக எக்ஸ்பாட் எனும் ட்ரோஜான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • 1 பில்லியன் முறைக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.

    கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் கேமிங் செயலிகள் சில பயனர்களின் வங்கிச் சான்றுகளைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்டவை என பிளீப்பிங் கம்ப்யூட்டர் எனும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியில் மறைந்திருக்கும் மொபைல் பேங்கிங் ட்ரோஜான்கள், நீங்கள் முறையான வங்கி அல்லது நிதிப் பயன்பாட்டைத் தொடங்கும்போது செயல்பட தொடங்குமாம்.

    உண்மையான லாகின் பக்கங்களுக்கு பதில் போலியான்வற்றை காண்பித்து பயனர்களின் அக்கவுண்ட் விவரங்களை திருடி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனவாம். இதில் மிகவும் அபாயகரமான டாப் 10 ட்ரோஜான்கள், 1 பில்லியன் முறைக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.


    இதில் அமெரிக்காவை சேர்ந்த பயனர்களுக்கு தான் ஆபத்து அதிகமாம். நான்கில் மூன்று பயனர்கள் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி தினசரி தங்களது பண பரிவர்தனைகளை செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் அதிகபட்சமாக அமெரிக்கர்கள் பயன்படுத்தும் 121 செயலிகளும், இங்கிலாந்தைச் சேர்ந்த 55 செயலிகளும், இத்தாலியின் 43 செயலிகளும், டர்க்கியின் 34 செயலிகளும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 செயலிகளும், பிரான்ஸை சேர்ந்த 31 செயலிகளும் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதேபோல் இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட போன்பே எனும் பேமண்ட் செயலியும் இத்தகைய ஆபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. டீபாட் எனும் ட்ரோஜான் தான் இதில் 410 செயலிகளை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்ததாக எக்ஸ்பாட் எனும் ட்ரோஜான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு லைட் போனின் விலை தற்போதைய மடிக்கக்கூடிய மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு மாடலை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலும் வெளியிடப்பட்டது.

    அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மாடலின் லைட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக தகவல் வெளியானது. பின் அது வதந்தியாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் அறிமுகப்படுத்தும் பணியில் அந்நிறுவனம் மும்முரமாக இறங்கி உள்ளது.


    கேலக்ஸி ஃபோல்டு லைட் இசட் சீரிஸ் மாடலாக இருக்காது என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என்றும், இதில் 7 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மிக மெல்லிய கிளாஸ் இடம்பெற்றிருக்குமாம்.

    இதன் விலை சாம்சங்கின் தற்போதைய மடிக்கக்கூடிய மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் மடிக்கக்கூடிய போன்களுக்கு அதிக மவுசு உள்ளதால், தற்போது அதனை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
    டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிடம் இருந்து, அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்ப்ட்டிருந்தது. அதில் “டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும்" என்றும், "நீங்கள் வரவில்லை என்றால், நீங்கள் ராஜினாமா செய்துவிட்டீர்கள் என்று கருதுவோம்" என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய திட்ட மேலாண்மை மென்பொருள் தயாரிப்பாளரான அட்லாசியன் கம்பெனியில் இணை நிறுவனரான, ஸ்காட் ஃபார்குஹார், எலான் மஸ்க்கின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த உத்தரவு "1950 களில் இருந்ததைப் போன்றது" என்று கேலி செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    elon musk

    எங்கிருந்தும் வேலை செய்யலாம் என்கிற கொள்கை அமெரிக்காவை சேர்ந்த கம்பெனிகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அட்லாசியன் கம்பெனியின் வளர்ச்சிக்காக 2026ம் ஆண்டுக்குள் 25 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், டெஸ்லா ஊழியர்கள் யாரேனும் ஆர்வமாக உள்ளீர்களா? எனவும் ஸ்காட் ஃபார்குஹார் கேள்வி எழுப்பி உள்ளார்.
    டிக்டாக் நிறுவனம் சமீபத்தில் அதன் வீடியோ நீளத்தை 3 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக மாற்றி இருந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் தற்போது வீடியோவின் நீளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்றவற்றின் வலர்ச்சியைத் தடுக்கவே அந்நிறுவனம் இதனை செய்து வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் மேலும் சில புதிய அம்சங்களை வழங்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது, குறிப்பாக அதன் ரீல்ஸில் மாற்றங்களை செய்துள்ளது.

    முன்னதாக ஸ்டோரிஸில் பல்வேறு ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வசதியை வைத்திருந்த அந்நிறுவனம் தற்போது ரீல்ஸிலும் ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வண்ணம் அப்டேட் செய்துள்ளது. இது பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    reels

    அதேபோல் டிக்டாக் நிறுவனம் சமீபத்தில் அதன் வீடியோ நீளத்தை 3 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக மாற்றி இருந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் தற்போது வீடியோவின் நீளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இதற்கு முன்னர் 60 நொடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை பதிவிட முடியும். ஆனால் தற்போது அதன் நீளத்தை 90 நொடிகளாக அதிகரித்து உள்ளனர்.

    அதேபோல் டெம்பிளேட்டில் சில மாற்றங்களை மெட்டா நிறுவனம், செய்துள்ளது. இந்த மாற்றம் பயனர்கள் ஈஸியாக வீடியோ மற்றும் ஆடியோக்களை சிங்க் செய்ய உதவும் என கூறப்படுகிறது. 
    தொழிற்சங்க முயற்சிகளின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்வதால் ஆப்பிள் தனது மணிநேர அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது.
    தொழிற்சங்கமயமாக்கலை நோக்கிய உந்துதலுக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் சில்லறை ஊழியர்களுக்கான பணி அட்டவணையை மாற்றி உள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று ஊழியர்களிடம் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஷிப்டுகளுக்கு இடையிலான குறைந்தபட்ச நேரத்தை 10 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக நீட்டிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம், ஐபோன் தயாரிப்பாளர் ராய்ட்டர்ஸிடம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 22 டாலர். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,700 அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவதாகத் தெரிவித்திருந்தது.
    apple

    தொழிற்சங்க முயற்சிகளின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்வதால் ஆப்பிள் தனது மணிநேர அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் மணிநேர ஊழியர்களுக்கான ஆரம்ப ஊதியம் 22 டாலர் ஆக (தோராயமாக ரூ. 1,700) உயரும் என கூறப்படுகிறது. இது 2018 இல் இருந்ததை விட 45 சதவீதம் அதிகமாகும் என்று ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    விரைவில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை ஒன்பிளஸ் வெளியிடும் என கூறப்பட்டு வந்தது. ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

    அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் கேமராக்களைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் LDRR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் வரலாம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.

     ஆப்பிள் வாட்ச்

    முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் திறனை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம்.


    வாட்ஸ்அப் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. அத்தகைய வாட்ஸ்அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் புது அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     வாட்ஸ்அப்
    Photo Courtesy: WABetaInfo

    வாட்ஸ்அப்பில் நாம் பதிவிடும் ஸ்டேட்டஸ்-க்கு பதில் வரும் போது அதனை பொதுவான மெசேஜ் போல் இன்றி தனியாக பிரித்துக் காட்டும் அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதாகவும், பீட்டா சோதனையாளர்களுக்குக் கூட இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

    இருப்பினும் இது எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ். மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் வசதியினை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம். 
    ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது. இதனுடன் 17 ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனம் மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

    புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றுடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ரூ. 1099 சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ, ரூ. 1599 சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

     ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை

    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களை ஒற்றை சாதனம் மற்றும் ரிமோட்டில் வழங்குகிறது. இந்த பாக்ஸ்-க்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதல் மாதத்திற்கான வாடகையை மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக வழங்குகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.

    சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போன்ற காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    இந்த ஆண்டு மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு உற்பத்தி 35 சதவீதம் சரிவடையும் என ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் புது வழிமுறைகளை கொண்டு அபகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
     

    வாட்ஸ்அப் செயலியில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களின் பல்வேகறு புதுப்புது யுக்திகளில் ஏமாறும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வரிசையில் ஹேக்கர்கள் கையாளும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர். அதன்படி ஒற்றை போன் கால் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சைபர் அச்சறுத்துல்கள் பற்றி கணிப்புகளை வெளியிட்டு வரும் கிளவுட்செக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் வாட்ஸ்அப் செயலியில் வரும் புது அச்சுறுத்தல் பற்றி தெரிவித்து இருக்கிறார். அதன்படி ஹேக்கர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசுவோர் 67 அல்லது 405 என துவங்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, அவர்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி, ஹேக்கர்கள் வசம் சென்று விடும். 

    முதலில் ஹேக்கரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதன் பின் 67 அல்லது 405 என துவங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள ஹேக்கர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி விடும். 

     கோப்புப்படம்

    ஹேக்கர் தரப்பில் பயனர்களுக்கு வழங்கப்படும் மொபைல் எண் ஏர்டெல் மற்றும் ஜியோ சேவையில் கால் பார்வேர்டிங் செய்வதற்கான எண் ஆகும். இன் மூலம் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் தாங்கள் வழங்கும் மற்றொரு மொபைல் எண்ணிற்கே வரும். வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்யும் போது, ஓ.டி.பி. ஆப்ஷன் கேட்கப்படும். உங்களின் போன் என்கேஜ்டில் இருந்தால் ஓ.டி.பி. ஹேக்கர்களின் மாற்று மொபைல் எண்ணிற்கே அனுப்பப்படும். இதன் மூலம் தான் ஹேக்கர்கள் பயனர் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை  பறித்துக் கொள்கின்றனர்.

    பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் இதே போன்ற எண்களையே வைத்து இருப்பதால், இந்த வழிமுறை சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கான ஆபத்து அதிகம் தான். இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே நல்லது.
    ×