என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அறிந்து கொள்ளுங்கள்
வாட்ஸ்அப்பில் 3 ரூபாய் அனுப்பினால் 105 ரூபாய் கேஷ்பேக் பெறலாம்... இந்த சலுகையை பெறுவது எப்படி?
- பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது.
- இந்த சலுகை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் யுபிஐ பேமண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அந்நிறுவனம் அவ்வபோது சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.105 வரை கேஷ்பேக் பெறும் வண்ணம் புதிய சலுகை ஒன்றை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அசத்தலான கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்த சலுகை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் பணம் அனுப்பும் ஸ்கிரீனில் கிஃப்ட் ஐகான் இருந்தால் நீங்கள் இந்த சலுகையை பெறமுடியும். இல்லாவிட்டால் இந்த சலுகையை பெறும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட வில்லை என்று அர்த்தம்.
* முதலில் உங்கள் போனில் புது வெர்ஷன் வாட்ஸ்அப் செயலி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அது இருந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியுமாம்.
* செயலியை குறைந்தபட்சம் 30 நாட்களாவது பயன்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்.
* பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது.
* வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள பேமண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி, பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்ய வேண்டும்.
* பின்னர் அதில் உங்களது வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
* அது நிறைவடைந்த உடன் குறைந்தபட்சம் 1 ரூபாயை உங்களது வாட்ஸ்அப்பில் உள்ள மூன்று காண்டாக்ட்டுகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களும் பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திவிட்டு பணம் அனுப்பவும்.
* அப்படி அவர்கள் பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்யவில்லை என்றால், அதனை செய்த பின்னரே உங்களால் பணம் அனுப்ப முடியும்.
* மூன்று பேருக்கும் பணம் அனுப்பிய பின்னர், ஒவ்வொரு பரிவர்தனைக்கும் 35 ரூபாய் வரையிலான கேஷ்பேக் கிடைக்கும். இதன்மூலம் ரூ.105 வரை பெற முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்