என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இந்தியாவில் கடந்த வாரம் மெட்டா வெரிஃபைடு சேவை அறிவிக்கப்பட்டது.
    • மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என ஆறு நாடுகளில் கிடைக்கிறது.

    மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களுக்கு வெரிஃபிகேஷன் பேட்ஜ் வழங்கும் திட்டத்தை ஜூன் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் மெட்டா வெரிஃபைடு சேவையை கட்டண முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கட்டணம் செலுத்தி வெரிஃபைடு சேவையை பெறுவோருக்கு புளூ டிக் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி வருகிறது.

    இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிக்கான வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 599 விலையில் வெப் வெர்ஷனுக்கான வெரிஃபைடு சேவை வரும் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

    மெட்டா வெரிஃபைடு சேவை அரசு அடையாள சான்று மூலம் வழங்கப்படுகிறது. வெரிஃபைடு சேவையின் கீழ் அக்கவுன்ட் பாதுகாப்பு, நேரடி அக்கவுன்ட் சப்போர்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெரிஃபைடு பெறுவது எப்படி?

    ஆன்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.

    வெரிஃபைடு பெற வேண்டிய ப்ரோஃபைலை க்ளிக் செய்ய வேண்டும்.

    செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் சென்டர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை அம்சம் காணப்படவில்லை எனில், செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

    கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும்.

    அரசு அடையாள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனர்களின் அக்கவுன்டில் வெரிஃபைடு பேட்ஜ் வழங்கப்பட்டு விடும்.

    வெரிஃபைடு பெற தேவையானவை:

    இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு பெற நினைப்போரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் நிறுவனம் சார்பில் பயனர் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். இவற்றை தொடர்ந்து அரசு அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். இதில் அடையாள சான்றில் உள்ள புகைப்படம், பெயர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் அக்கவுன்ட் உடன் ஒற்றுப் போக வேண்டும்.

    பொது பிரபலங்கள், கிரியேட்டர்கள், பிரான்டுகள் அக்கவுன்ட் மற்றும் வெரிஃபைடு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு.
    • கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க்.

    உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர், விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதனை டுவிட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டுவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    "கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். மேலும் வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி டுவிட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து, கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி வருகிறது.

    • புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
    • இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. பிராஜக்ட் 92 பெயரில் உருவாகி வரும் புதிய செயலி பற்றிய முன்னோட்டம் அந்நிறுவன ஊழியர்களுக்கு சமீபத்தில் காட்டப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி எப்படி காட்சியளிக்கும் என்பதை கூறும் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    மேலும், புதிய செயலி த்ரெட்ஸ் (threads) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புகைப்படங்கள் காணப்படவில்லை.

    மெட்டா நிறுவனத்தின் மூத்த பிராடக்ட் அலுவலர் க்ரிஸ் கோக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, புதிய சமூக வலைதள செயலி ஆக்டிவிட்டிபப் சோஷியல் நெட்வொர்க்கிங் ப்ரோடோகாலை (ActivityPub social networking protocol) பயன்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை புதிய பிளாட்ஃபார்மிற்கும் கொண்டு செல்ல முடியும்.

    இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரோஃபைல் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தளத்தை பயன்படுத்துவதற்காக மெட்டா நிறுவனம் பல்வேறு பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    புதிய செயலியை உருவாக்குவதற்கான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: The Verge

    • மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது.
    • வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்படுகிறது.

    சமூக வலைதள நிறுவனமான மெட்டா, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற முன்னணி தளங்களை வைத்திருக்கிறது. டுவிட்டர் நிறுவனம் துவங்கி வைத்த கட்டண முறையிலான வெரிஃபைடு சேவையை தற்போது மெட்டாவும் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவை துவங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவையை பெற மொபைல் செயலிகளுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான வெரிஃபைடு சேவை மாதம் ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது.

    "மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது," என மெட்டா தெரிவித்துள்ளது.

    "முதற்கட்டமாக பல்வேறு உலக நாடுகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மெட்டா வெரிஃபைடு சோதனையை இந்தியாவுக்கும் நீட்டிக்கிறோம். மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வெரிஃபைடு பேட்ஜ்களை தொடர்ந்து வழங்குவோம்," என்று மெட்டா மேலும் தெரிவித்துள்ளது.

    • இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும்.
    • இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ சாட்பாட் உருவாக்கும் பணிகளில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன. ஸ்னாப்சாட் தளத்தில் 'மை ஏஐ' சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனமும் சொந்தமாக ஏஐ சாட்பாட் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏஐ சாட்பாட்கள் சாட்ஜிபிடி சேவைக்கு இணையானவை ஆகும்.

    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் உருவாக்கப்படுவதை ஆப் ஆய்வாளரான அலெசாண்ட்ரோ பலூசி கண்டறிந்தார். இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும் என தெரியவந்துள்ளது. பயனர்கள் கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பண்புகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

    பபயனர்கள் தங்களை பற்றி சிறப்பாக வெளிப்படுத்தவும், மெசேஜ்களை எழுத உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் நினைக்கிறது. இது பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி அறிவுறையாக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் இன்னமும், உருவாக்கும் பணிகளே நடைபெற்று வருகிறது. இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    இன்ஸ்டாகிராம் தளத்தில் இது எப்படி இயங்கும் என்பது பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்னாப்சாட் பயனர்கள் ஏஐ சாட்பாட் உடன் உரையாடல் நடத்தவும், கேள்விகளை கேட்கவும் முடியும். ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி கொண்டு தான் இந்த தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும்.
    • ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2023) துவங்கியது. ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் துவக்க உரையுடன் துவங்கிய WWDC 2023 நிகழ்வில் புதிய லேப்டாப், பிராசஸர், ஒஎஸ் வெர்ஷன்கள் என்று ஏராளமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. அந்த வகையில், 2023 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    15-இன்ச் மேக்புக் ஏர்: 11.5mm மெல்லியதாக இருக்கும் புதிய மேக்புக் ஏர், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய 15 இன்ச் லேப்டாப் மாடல் ஆகும். முழு சார்ஜ் செய்தால் இந்த லேப்டாப்பை அதிகபட்சம் 18 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதில் மொத்தம் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன.

    மேக் ஸ்டூடியோ: ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும். புதிய மேக் ஸ்டூடியோ மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் மற்றும் M2 அல்ட்ரா சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேக் ப்ரோ: யாரும் எதிர்பாராத நிலையில், ஆப்பிள் தனது மேக் ப்ரோ மாடல்களை சக்திவாய்ந்த சிலிகான் ரக பிராசஸர் மூலம் அப்டேட் செய்து இருக்கிறது. இத்துடன் மிகவும் சக்திவாய்ந்த M2 அல்ட்ரா சிப்செட்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஹார்டுவேரை தொடர்ந்து சாஃப்ட்வேர் அறிவிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷனில் ஏாளமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு, புதிதாக ஜர்னல் ஆப், ஸ்டாண்ட்-பை, ஆட்டோ கரெக்ட் போன்ற புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டணட்-ஐ ஹே சிரி என்று கூறுவதற்கு பதிலாக சிரி என்று மட்டுமே கூறலாம்.

    ஐஒஎஸ் வரிசையில், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ், மேக் ஒஎஸ் சோனோமா, ஏர்பாட்ஸ்-இல் புதிய அம்சங்கள் மற்றும் ஆப்பிள் டிவி சேவையில் புதிய ஆஃபர் வழங்கப்படுகிறது.

    விஷன்ப்ரோ ஹெட்செட்: இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும். இந்த சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இதன் அறிவிப்புடன், விலை மற்றும் விற்பனை விவரங்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. 

    • புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரியுடன் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ மாடலின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் WWDC 2023 நிகழ்வில் தனது மேக் ப்ரோ மாடலை முற்றிலும் புதிய M2 அல்ட்ரா சிப்செட் உடன் அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மேக் ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மூன்று மடங்கு அதிவேகமானது ஆகும். M2 அல்ட்ரா கொண்ட மேக் ப்ரோ மாடலில் 24-கோர் சிபியு மற்றும் 76-கோர் ஜிபியு, இருமடங்கு ரேம் மற்றும் எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் வாங்கிட முடியும். இத்துடன் அதிகபட்சம் ஏழு ஆஃப்டர்பர்னர் கார்டுகள் புதிய மேக் ப்ரோவில் வழங்கப்பட்டு உள்ளன. இது 8K ப்ரோ ரெஸ் தரம் கொண்ட 22 வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும். இதில் நான்கு தண்டர்போல்ட் 4 போர்ட்கள் உள்ளன.

    இந்த மேக் ப்ரோ மாடல் ஆறு ப்ரோ டிஸ்ப்ளே XDR-க்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி ஏ போர்ட்கள், இரண்டு அதிக பேண்ட்வித் கொண்ட HDMI போர்ட்கள், இரண்டு 10GB ஈத்தர்நெட் போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ (டவர் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் மேக் ப்ரோ (ரேக் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை ஜூன் 13 ஆம் தேதி துவங்குகிறது.

    • புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். மற்றும் வி.ஆர். செயலிகளை சப்போர்ட் செய்கிறது.
    • குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் WWDC 2023 நிகழ்வில் வைத்து அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஹெட்செட் பற்றிய தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

    புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். எனப்படும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர். எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளை சப்போர்ட் செய்கிறது. தனித்துவம் மிக்க டிசைன் கொண்டிருக்கும் விஷன் ப்ரோ மாடலை கட்டுப்படுத்துவதற்கு பிரத்யேக கண்ட்ரோலர் போன்று எந்த சாதனமும் தேவையில்லை. இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் மற்றும் கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செய்கை மொழியிலேயே இதனை இயக்கி விட முடியும்.

    இதுதவிர ஆப்பிள் உருவாக்கி இருக்கும் ஐசைட் (Eyesight) எனும் அம்சம் வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் ஹெட்செட் உள்புறத்தில் இருக்கும் கேமராக்களை கொண்டு ஹெட்செட் பயன்படுத்துவோரின் உணர்வுகளை மற்றவர்களுக்கு காண்பிக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு பயனர்கள் எந்த அளவுக்கு மெய்நிகர் அனுபவத்தை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். இத்துடன் அனைவரின் தலையிலும் எளிதில் பொருந்தும் வகையில் பல்வேறு அளவுகளில் இந்த ஹெட்செட்-இன் ஹெட் பேண்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அணிபவருக்கு மென்மையாகவும், அதிக சவுகரியத்தை கொடுக்கும் வகையிலும், எளிதில் அட்ஜஸ்ட் செய்யும் வகையிலும் இருக்கிறது.

    விஷன் ப்ரோ மாடலின் ஹெட்பேண்ட்-இல் டூயல் டிரைவர் ஆடியோ பாட்கள் உள்ள. இவை பயனர்களுக்கு ஸ்பேஷியல் ஆடியோ தொழிநுட்பத்தை வழங்குகின்றன. ஹெட்செட் எடையை மேலும் குறைப்பதற்காக விஷன் ப்ரோ மாடலில் வெளிப்புற பேட்டரி யூனிட் உள்ளது. வயர் மூலம் பேட்டரி மற்றும் ஹெட்செட் இணைக்கப்பட்டு உள்ளது.

    கேமராவை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் மூன்று எலிமெண்ட் லென்ஸ்கள், ஹை-ரெஸ் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் இரண்டு IR கேமராக்கள், LED இலுமினேஷன்கள் உள்ளன. இந்த சாதனம் LiDAR மற்றும் வழக்கமான கேமரா சென்சார்களையும் பயன்படுத்துகிறது. இந்த ஹெட்செட் ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இது முற்றிலும் புதிய R1 சிப் மற்றும் M2 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

    சஃபாரி போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே, நிஜ உலகில் மனிதர்களுடன் உரையாட முடியும். வீட்டிற்குள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ சாலைகளிலும் பயன்படுத்த முடியும். விஷன் ப்ரோ ஹெட்செட்டில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிக கேம்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது.

    • பாதுகாப்பு ஆய்வாளரான க்ரிஸ் ப்ளூமர் ஜிமெயிலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடை கண்டறிந்துள்ளார்.
    • கூகுள் நிறுவனம் இந்த குறைபாடு பற்றி விரைந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்து இருக்கிறது.

    ஜிமெயில் பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சமாக விளங்கும் வகையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் புளூ வெரிஃபைடு (verified) செக்மார்க் வழங்கியது. இந்த அம்சத்தின் மூலம் ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோர், உண்மையான மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இமெயில்களிடையே வித்தியாசத்தை உணர முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    எத்தகைய பாதுகாப்பிலும், சிறு ஓட்டை இருக்கத் தான் செய்யும் என்ற வகையில் தற்போது ஜிமெயிலின் புதிய அம்சத்திற்கும் ஏமாற்றும் பேர்வழிகள் குறைபாட்டை உருவாக்கியுள்ளனர். க்ரிஸ் ப்ளூமர் என்ற பாதுகாப்பு ஆய்வாளர் ஜிமெயில் சேவையில் ஏற்பட்டு இருக்கும் பாதுகாப்பு குறைபாடை கண்டறிந்து, தகவல் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த குறைபாடு கூகுளின் அதிகாரப்பூர்வ வெரிஃபிகேஷனில் மாதிரியை உருவாக்கி, பயனர்களை குறிப்பிட்ட இமெயில் நம்பகத்தன்மை கொண்டது என்று நம்ப வைப்பதாக க்ரிஸ் ப்ளூமர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதே தகவலை க்ரிஸ் ப்ளூமர் கூகுள் நிறுவனத்திற்கும் தெரிவித்து இருந்தார். எனினும், இது வேண்டுமென்றே கூறப்படும் குற்றச்சாட்டு என்ற பதில் அளித்த கூகுள், இது பற்றி விசாரிக்க போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறது.

    பிறகு, இதுபற்றிய தகவல்களை க்ரிஸ் ப்ளூமர் டுவிட்டர் பதிவில் வெளியிட்டார். இவரது டுவிட்டர் பதிவு வேகமாக பரவியதை அடுத்து, கூகுள் நிறுவனம் இந்த குறைபாடு பற்றி விசாரணை நடத்துவதாக தெரிவித்து இருக்கிறது. இது குறித்து கூகுள் செக்யுரிட்டி குழு கூறியதாவது..,

    "கூர்ந்து கவனித்ததில் இந்த குறைபாடு வழக்கமான SPF பாதிப்பாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்டோம். இதன் காரணமாக இந்த குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது."

    "குழப்பத்திற்காக நாங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களது முந்தைய பதில் உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று புரிந்து கொள்கிறோம். என்ற போதிலும், இந்த விவகாரத்தில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இது பற்றிய ஆய்வு மற்றும் எதிர்கால அப்டேட் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிவிப்போம்," என்று குறிப்பிட்டு இருக்கிறது.

    • சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் உள்ளது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் மற்றும் சோனி நிறுவன கேமரா சென்சார்கள் உள்ளன.

    கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டின் ஒரு யூனிட் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் விலை தெரியவந்துள்ளது.

    ஆய்வு நிறுவன தகவல்களின் படி கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் உபகரணங்கள் விலை 469 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரத்து 650 வரை செலவாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் அதிக தொகை பிராசஸர், டிஸ்ப்ளே மற்றும் கேமரா சப்-சிஸ்டம் உள்ளிட்டவைகளுக்கு செலவாகிறது. ஒட்டுமொத்த செலவீனங்களில் 34 சதவீத தொகையை பிராசஸர் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் TSMC-யின் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. குவால்காம் நிறுவனம் கைரேகை சென்சார் ஐசி, பவர் மேனேஜ்மெண்ட் ஐசி, ஆடியோ கோடெக், ஆர்.எஃப். பவர் ஆம்ப்லிஃபயர்கள், வைபை+ ப்ளூடூத், ஜிபிஎஸ், சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் டிரான்ஸ்-ரிசீவர் உள்ளிட்டவைகளை டிசைன் செய்துள்ளது.

    கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கான 256 ஜிபி NAND ஃபிளாஷ், 6.8 இன்ச் குவாட் HD+ 120Hz டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, LTPO தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை சாம்சங் நிறுவனமே வழங்குகிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் மற்றும் சோனி நிறுவன கேமரா சென்சார்கள் உள்ளன.

    இதில் சோனி 12MP அல்ட்ரா வைடு (IMX564), 10MP டெலிபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ IMX574, சாம்சங் 200MP வைடு ஆங்கில் S5KHP2 மற்றும் 12MP செல்ஃபி கேமரா உள்ளிட்ட சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் உபகரணங்கள் கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைத்து விடுகிறது.

    எனினும், இந்த கட்டணம் அதன் விற்பனை விலையை விட பலமடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி பரவலாக எழும். ஸ்மார்ட்போனின் உபகரண கட்டணங்கள் தவிர அசெம்பில், விளம்பரம், டிசைனிங், வாடிக்கையாளர் சேவை என பல்வேறு விஷயங்களுக்கான செலவீனங்கள் உள்ளன. இவற்றை பெரும்பாலும் நிறுவன அதிகாரிகள் தவிர பொது மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்புகள் குறைவு தான்.

    இதுவே ஸ்மார்ட்போனின் உபகரணங்கள் விலை மற்றும் விற்பனை விலை இடையே பெருமளவு வித்தியாசம் இருப்பதற்கான காரணம் ஆகும்.

    • சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC23) நிகழ்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் நடத்தப்படுகிறது.
    • இந்தியாவில் இருந்து தேர்வாகி இருக்கும் ஆஸ்மி ஜெயின், மற்ற டெவலப்பர்களுக்கு உதவேகமாக திகழ்கிறார்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சின் வெற்றியாளர்களை அறிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் WWDC23 நிகழ்வு துவங்க இருக்கும் நிலையில், இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை WWDC23 ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேல்ஞ்சில் இந்திய மாணவர் ஆஸ்மி ஜெயின் தேர்வாகி இருக்கிறார்.

    மார்டா மிஷெல் கலிண்டோ மற்றும் யெமி அகெசின் உடன் ஆஸ்மி ஜெயின் இந்த ஆண்டுக்கான ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சில் வெற்றி பெற்று இருக்கிறார். சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC23) நிகழ்வுக்காக ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சை நடத்தி வருகிறது. இந்தியாவில் இருந்து தேர்வாகி இருக்கும் ஆஸ்மி ஜெயின், நாட்டின் மற்ற டெவலப்பர்களுக்கு உதவேகமாக திகழ்கிறார்.

    இந்த திட்டம் இளம் டெவலப்பர்கள் தங்களின் கோடிங் திறன் மற்றும் வித்தியாசமாக திட்டங்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் டெவலப்பர்கள் இன்டராக்டிவ் பிளேகிரவுண்ட், செயலி அல்லது இதர மென்பொருள்களை ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரோகிராமிங் லாங்குவேஜ்- ஆன ஸ்விஃப்டில் உருவாக்க வழி செய்கிறது.

    ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் வெற்றியாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் WWDC நிகழ்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை கொண்டு டெவலப்பர்கள் தொழில்நுட்ப துறை தலைவர்களை சந்தித்தல், கலந்துரையாடல் அமர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் டெவலப்பர் சந்தா, பிரத்யேக WWDC ஜாக்கெட் மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களை பெறலாம்.

    • புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்யலாம்.
    • இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    வாட்ஸ்அப் செயலியில் கம்பேனியன் மோடு (companion mode) பெயரில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.10.76 வெர்ஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.

    புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலி இரண்டாவது சாதனத்திலும் இயங்க செய்ய, வலதுபுறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து லின்க் டிவைஸ் (link device) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி கியூஆர் கோடு திரையில் தோன்றும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பிரைமரி சாதனத்தில், செட்டிங்ஸ் மற்றும் லின்க்டு டிவைசஸ் (linked devices) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்காக ஐபோனில் கேமராவை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு செய்த பின் இரண்டு சாதனங்களிலும் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டு விடும். பிரைமரி சாதனத்தில் இண்டர்நெட் இணைப்பு இல்லாத சமயத்திலும், இரண்டாவது சாதனத்தில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இரண்டாவது ஐபோனில் வாட்ஸ்அப் வீடியோ / ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மற்ற அம்சங்களை இயக்கலாம்.

    சில சாட்கள் முழுமையாக லோடு ஆகாமலோ அல்லது, கால் லாக்ஸ் சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போதிலும், அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது.

    ×