என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வலைதளத்தில் ரூ. 44,900-க்கு மேல் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த சலுகை ஜனவரி 21 ஆம் தேதி துவங்கி ஜனவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்த கேஷ்பேக் சலுகை HDFC வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இத்துடன் கேஷ்பேக் சலுகை ஆப்பிள் ஸ்டோர் எட்யூகேஷன் விலைக்கு பொருந்தாது. இதனால் கல்வி சலுகை விலையில் பொருட்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் சலுகை பொருந்தாது.

புதிய கேஷ்பேக் சலுகை பற்றிய தகவல் ஆப்பிள் ஸ்டோர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. வலைதள தகவல்களின் படி ரூ. 44,900 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவோர் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் மற்றும் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை வசதியை பெற முடியும்.
கேஷ்பேக் சலுகை ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் பொருந்தும். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை வாங்கி அதற்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் கோர முடியாது. இத்துடன் வாடிக்கையாளர் வழங்கும் கார்டு கேஷ்பேக் சலுகையை பெறுமா என்ற தகவல் பொருளை தேர்வு செய்த பின் தெரிவிக்கப்படும்.
பின் வாடிக்கையாளருக்கு பொருள் வினியோகம் செய்யப்பட்டும், இதைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் கேஷ்பேக் வழங்கப்பட்டு விடும். இதேபோன்ற விதிமுறைகள் வட்டியில்லா மாத தவணை முறை சலுகைக்கும் பொருந்தும்.
ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வைபை ரவுட்டர் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் வாடிக்கையாளர்களில் ரூ. 3999 சலுகையை தேர்வு செய்வோருக்கு நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கும் 4x4 வைபை ரவுட்டர் வழங்கப்படுகிறது. சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ரவுட்டர்கள் ஜிகாபிட் தர இணைய அனுபவத்தை வழங்குவதில்லை.
இதை கருத்தில் கொண்டு ஏர்டெல் தனது பைபர் சலுகையுடன் இலவச ரவுட்டர் வழங்குகிறது. ரூ. 3999 எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் சலுகையில் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் ரூ. 3999 சலுகையை தேர்வும் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 Gbps 4x4 வைபை ரவுட்டர் வழங்கப்படும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நொடிக்கு 1 ஜிபி இணைய வேகத்தை அனுபவிக்க முடியும். சீரான அதிவேக இணைய வசதி ஆன்லைன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும்.

இந்த சலுகையில் அன்லிமிடெட் இணைய வசதி மட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் வழங்கும் 550 தொலைகாட்சி சேனல்களை பார்க்கும் வசதி, ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் லைப்ரரியின் ஒடிடி தரவுகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் லைப்ரரியில் 10 ஆயிரத்திற்கும் அதிக திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இத்துடன் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் எடுத்த திடீர் முடிவு பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் அறிவிக்கப்பட்ட புது பிரைவசி பாலிசி மாற்றத்தை அமலாக்கும் நடவடிக்கையை பரிசீலனை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
“சமீபத்திய அப்டேட் குறித்து பலருக்கு குழப்பம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிய பிரைவசி பாலிசி பற்றி கவலை எழுப்பும் தவறான தகவல் பரவி வருகிறது. அனைவரும் எங்களின் கொள்கைகள் மற்றும் உண்மையை புரிந்து கொள்வதற்கு நாங்கள் உதவுகிறோம்.” என வாட்ஸ்அப் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

முன்னதாக பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் பயனர்கள் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்க வாட்ஸ்அப் கெடு விதித்து இருந்தது. தற்சமயம் இந்த காலக்கெடு மே 15 வரை நீட்டிக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
“உலகம் முழுக்க என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை பயனர்களுக்கு வழங்க வாட்ஸ்அப் உதவியது. தற்சமயம் இந்த பாதுகாப்பான தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கும் குறிக்கோள் கொண்டிருக்கிறோம். எங்களிடம் கருத்துக்களை எடுத்துரைத்த அனைவருக்கும் நன்றி.”
“எங்களால் முடிந்தவரை வாட்ஸ்அப் தளத்தினை சிறந்த தகவல் பரிமாற்ற சேவையாக உருவாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வோம்.” என வாட்ஸ்அப் தனது வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கி இருக்கும் புதிய செயலி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்த பின் இந்த செயலிக்கு மாற்றாக வேறு செயலியை பயன்படுத்த இருப்பதாக பலர் தெரிவித்து வந்தனர். வாட்ஸ்அப் பயனர்களில் பலர் சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.
எனினும், பலர் இந்தியாவில் உருவான குறுந்தகவல் செயலியை பயன்படுத்தலாமா என பரிசீலனை செய்கின்றனர். இவர்களின் தேடலுக்கு பதில் கொடுக்கும் வகையில், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அரட்டை செயலி உருவாகி இருக்கிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தை ஸ்ரீதர் வேம்பு என்பவர் துவங்கி இருக்கிறார். தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி டவுன்லோட்களில் 50 ஆயிரத்தை கடந்து இருப்பதோடு, 4.7 ரேட்டிங் பெற்று இருக்கிறது.
அரட்டை செயலி இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இதனால் அரட்டை செயலியில் குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெறவில்லை. எனினும், செயலி வெளியாகும் போது இந்த அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பயனர் அனுமதி இன்றி அவர்களின் தகவல் வெளியே செல்லாது என அரட்டை தெரிவித்து இருக்கிறது.
எனினும், சேவையை சீராக இயக்க சில தரவுகள் மட்டும் பகிரப்படலாம் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. இத்துடன் பயனரின் சில விவரங்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு அரசு நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நபர்களுடன் பகிரப்பட நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் குறுந்தகவல் செயலியை பயன்படுத்த 72 மணி நேரத்தில் 2.5 கோடி புது பயனர்கள் இன்ஸ்டால் செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரத்தால் சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெலிகிராம் செயலியை 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் இன்ஸ்டால் செய்துள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பேவல் டுரோவ் தெரிவித்தார்.
தற்சமயம் டெலிகிராம் செயலியின் மாதாந்திர பயனாளிகள் எண்ணிக்கை 50 கோடி என்றும் அவர் தெரிவித்தார். இது உலகளாவிய எண்ணிக்கை ஆகும். இதில் 38 சதவீத பயனர்கள் ஆசியாவில் இருந்தும், 27 சதவீதம் பேர் ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவில் இருந்து 21 சதவீதம் பேர், மத்திய கிழக்கு மற்றும் 8 சதவீதம் பேர் வட ஆப்ரிக்க பயனர்கள் ஆவர்.

2021, ஜனவரி 6 முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சிக்னல் செயலியை சுமார் 23 லட்சம் இந்தியர்கள் புதிதாக டவுன்லோட் செய்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே காலக்கட்டத்தில் டெலிகிராம் செயலியை 16 லட்சம் பேர் புதிதாக டவுன்லோட் செய்து இருக்கின்றனர்.
இரு செயலிகள் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கும் நிலையில், வாட்ஸ்அப் செயலியை டவுன்லோட் செய்வோர் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்5 முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது.
சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத்தீர்ந்தது. பிஎஸ்5 முன்பதிவு அமேசான் இந்தியா, க்ரோமா, ப்ளிப்கார்ட், கேம்ஸ் தி ஷாப், ரிலையன்ஸ் டிஜிட்டல், சோனி சென்டர் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட மையங்களில் நடைபெற்றது.
முன்பதிவு சரியாக 12 மணிக்கு துவங்கிய நிலையில், 12.10 மணிக்கே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக வெளிநாடுகளிலும் இதேபோன்று பிஎஸ்5 யூனிட்களுக்கு பெரும் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்5 மட்டுமின்றி, டூயல்சென்ஸ் கண்ட்ரோலர், மீடியா ரிமோட் உள்ளிட்டவைகளையும் முன்பதிவு செய்ய முடியும். இவற்றின் விலை முறையே ரூ. 5,990 மற்றும் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட், பிஎஸ் ஹெச்டி கேமரா மற்றும் டூயல்சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட அக்சஸரீகளின் முன்பதிவு இதுவரை துவங்கப்படாமல் உள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக அதேபோன்ற அம்சங்களை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் உலகின் பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. எனினும், சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் செயலி மீது பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய பிரைவசி பாலிசிக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் அந்த செயலிக்கு மாற்றாக அதே போன்ற அம்சங்கள் கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்..,

டெலிகிராம்
டெலிகிராம் ஆப் பல ஆண்டுகளாக இருந்து வரும் அசத்தலான ஒன்று ஆகும். இது வாட்ஸ்அப் செயலிக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. வாட்ஸ்அப் செயலி தற்சமயம் வழங்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த செயலியிலும் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.
சிக்னல்
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் மற்றொரு சிறந்த செயலி சிக்னல். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் சேவையை வழங்குவது சிக்னல் பவுன்டேஷன் நிறுவனம் தான். இதன் சொந்த படைப்பான சிக்னல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. சிக்னல் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது.

டிஸ்கார்டு
கேமிங் மட்டுமின்றி டிஸ்கார்டு தளத்தில் சாட் அம்சமும் கிடைக்கிறது. இதை கொண்டு தனிப்பட்ட குறுந்தகவல், ஜிப் பைல்கள், புகைப்படங்கள் மற்றும் டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப் போன்றே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.
வைபர்
குறுந்தகவல் செயலிகளில் பிரபலமான ஒன்றாக வைபர் விளங்குகிறது. இந்த செயலியும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை கொண்டிருக்கிறது. மேலும் வைபர் பயனர்கள் சர்வதேச அழைப்புகளை வைபர் செயலியை பயன்படுத்தாவர்களுக்கும் மேற்கொள்ளும் வசதி இதில் வழங்கப்படுகிறது.
பிரிட்ஜிபை
ஆப்லைனிலும் இயங்கும் குறுந்தகவல் செயலியாக பிரிட்ஜிபை (Bridgefy) இருக்கிறது. இணைய வசதி இல்லாத நேரத்திலும் சாட் செய்யும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. இது ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க் மற்றும் வைபை டைரக்ட் சார்ந்த நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் எஸ்இ மற்றும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஜப்பான் நாட்டு வலைதளம் ஒன்றில் இருந்து வெளியாகி இருக்கிறது.
இம்முறை வெளியீடு தவிர இரு சாதனங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இரு சாதனங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ 2020 மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக 2019 அக்டோபர் மாதத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்போனினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. 2020 ஐபோன் எஸ்இ மாடல் தோற்றத்தில் ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கிறது.
இதன் அம்சங்கள் ஐபோன் 11 மாடலில் இருந்ததை போன்றே இருக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ வெளியானது முதல் இதற்கான பிளஸ் வேரியண்ட் ஐபோன் 8 பிளஸ் தோற்றத்தில் வெளியாகும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இதுவரை 2021 ஐபோன் எஸ்இ மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் பற்றி ஆப்பிள் சார்பில் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதகரிப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.
அதிகப்படியான டவுன்லோட்களில் சிக்னல் செயலியின் சர்வெர்கள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சைன்-இன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவலை சிக்னல் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது.
எலான் மஸ்க் மட்டுமின்றி ஆய்வாளரான எட்வர்ட் ஸ்னோடனும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். மேலும் தான் சிக்னல் செயலியை பயன்படுத்தி வருவதாக தெகிவித்தார்.
வாட்ஸ்அப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி பற்றி முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. செயலியில் தனியுரிமை கொள்கை மாற்றப்படுவதை பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் மூலம் வாட்ஸ்அப் தெரிவித்தது. இதனை பலர் படிக்காமலேயே புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளிக்க Agree ஆப்ஷனை தேர்வு செய்து இருக்கின்றனர்.
முந்தைய அப்டேட்கள் போன்று இல்லாமல், புது அப்டேட் பயனர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இதில் வாட்ஸ்அப் அதன் பயனாளிகள் தகவல்களை எப்படி கையாள்கிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொழில் நிறுவனங்கள் எப்படி பேஸ்புக் சேவைகளின் டேட்டாவை சேமிப்பது, பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் வாட்ஸ்அப் எப்படி ஒருங்கிணைந்து செயல்படும் என்ற விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
புதிய கொள்கை முறை பற்றி வாட்ஸ்அப் தனது வலைதள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படி முக்கிய மாற்றங்களில் ஒன்றாக மீடியா தரவுகள் எப்படி சர்வெர்களில் சேமிக்கப்படுகிறது என்ற விவரம் இடம்பெற்று உள்ளது. புதிய முறையில் தகவல் பார்வேர்டு செய்யப்படும்போது அதை எளிதில் வாட்ஸ்அப் சேமித்து கொள்ளும்.

மேலும் பயனர் வாட்ஸ்அப் சேவையை எப்படி பயன்படுத்துகின்றனர், எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றார், எந்த மாதிரி சேவைகளை பயன்படுத்துகின்றனர், ஆன்லைனில் எந்தெந்த நேரத்தில் இருக்கிறார் என பல்வேறு தகவல்களை பட்டியலிட்டு இருக்கிறது.
இத்துடன் வாட்ஸ்அப் பேமண்ட் சேவையை இயக்கும் போது பரிமாற்ற விவரங்களான- பேமண்ட் அக்கவுண்ட், பேமண்ட் முறை, வினியோக விவரம், பரிமாற்றம் செய்யப்படும் தொகை உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கும். பின் இவை பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் பகிரப்பட இருக்கிறது.
புதிய கொள்கைகளுக்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் பயனர்கள், பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். வாட்ஸ்அப் செயலி மாற்றங்களுக்கு பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை ஏற்பட்டு உள்ளது.
பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்த போவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் வழக்கத்தை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி வைத்தது. எனினும், இந்த ஆண்டு இருமடங்கு டேட்டா பலன் வழங்கும் ஒற்றை நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகைகளில் தேர்வு செய்யப்பட்ட மூன்று சலுகைகளுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது வி ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த மூன்று சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் புது சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தினமும் 4 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். கூடுதல் டேட்டா தவிர மூன்று சலுகை பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
வி ரூ. 299 சலுகை பலன்களை பொருத்தவரை தினமும் 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி ஆப் பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 449 சலுகையில் இதே பலன்கள் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 699 வி சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனம் அந்த விஷயத்தில் மீண்டும் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வாய்ஸ் கால் சேவையில் அதிக தரமாக வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன் ஐடியா 2020 டிசம்பர் மாதத்திலும் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த தகவலினை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு உள்ளது.
டிராய் வலைதளத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து விதமாக நெட்வொர்க்குகளில் பயனர் வழங்கிய விவரங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்படுகிறது. மேலும் டிராயின் `மைகால்' டேஷ்போர்டில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது.

அந்த வகையில் 2020 டிசம்பர் மாதத்திலும் வோடபோன் ஐடியா இணைந்து ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி அதிக தரமுள்ள வாய்ஸ் கால் சேவையை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறது.
தரமான கால் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஐடியா 5-க்கு 4.9 புள்ளிகள், வோடபோன் 5-க்கு 4.3 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ 5-க்கு 3.9 புள்ளிகள் பெற்று இருக்கின்றன. ஏர்டெல் நிறுவனம் 5-க்கு 3.1 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 86.84 சதவீத பயனர்கள் திருப்திகரமான சேவையை பெற்றதாகவும், 8.39 சதவீதம் பேர் மோசமான சேவையை பெற்றதாகவும், 4.77 சதவீதம் பேர் கால் டிராப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.






