என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அந்த தேதியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ இந்தியா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில், போக்கோவை போக்கோ மட்டும்தான் வெல்ல முடியும் எனும் தகவலை #PROformance எனும் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அந்த வகையில் புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்ஸ் சீரிசுக்கு மாற்றாக இருக்கும் என போக்கோ தெரிவித்து உள்ளது. தற்போதைய தகவல்களின் படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்திய சந்தையில் புது போக்கோ எப் சீரிஸ் மாடலாக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக M2012K11AG எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியானது. அதில் புது ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 5200 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் இந்த மாடல் விலை 250 யூரோக்கள் ஆகும். இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை மெல்ல இந்தியாவுக்கு மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உற்பத்தி இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் 12 சீரிசில் - ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஐபோன் 12 உற்பத்தி தமிழ் நாட்டில் இயங்கி வரும் பாக்ஸ்கான் ஆலையில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு ஆலைகளில் இருந்து 10 சதவீத உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவர ஆப்பிள் முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் 12 உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிகிறது. தற்சமயம் இதே ஆலையில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 8 சீரிஸ் மாடல்கள் இந்த தேதியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரியல்மி 8 சீரிசில் ரியல்மி 8 4ஜி, ரியல்மி 8 ப்ரோ 4ஜி மற்றும் ரியல்மி 8 ப்ரோ 5ஜி உள்ளிட்ட மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ 5ஜி மாடலில் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிரைமரி கேமரா மட்டுமின்றி மூன்று இதர சென்சார்கள் வழங்கப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ கேமரா, 3எக்ஸ் மோட் கொண்ட சூப்பர் ஜூம் வசதி கொண்டுள்ளது.

இதன் விசேஷ அம்சம் புகைப்படங்களை 12 எம்பி தரத்தில் மிக தெளிவாக கொடுக்கும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. 12 எம்பி தரத்தில் எடுக்கப்படும் போது புகைப்படம் வழக்கத்தை விட அதிக சிறப்பானதாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்து உள்ளது.
ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று தலைசிறந்த பில்ட்டர்கள், நியோன் போர்டிரெயிட், டைனமிக் பொக்கே போர்டிரெயிட் மற்றும் ஏஐ கலர் போர்டிரெயிட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவை சேர்ந்த ஆளுமை மிக்க பெண் தலைவர்களாக விளங்குவோர் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
உலகின் மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆண்களின் ஆதிக்கம் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த காலங்களில், பல்வேறு துறைகளில் பெண்கள் கால்பதிக்க துவங்கிவிட்டனர். சமீபத்தில் பலதுறைகளில் சாதனை புரிவதை பெண்கள் வாடிக்கையான நிகழ்வாக மாற்றி வருகின்றனர்.
இதுபோன்ற சூழலுக்கு பலர் வித்திட்டுள்ளனர். அவ்வாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய பெண்கள் ஆளுமைகளாக மாறி இஸ்ரோ மற்றும் இதர முன்னணி நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருந்தபடி சத்தமின்றி பெரும் சாதனைகளை புரிந்து இருக்கின்றனர்.
டெஸ்ஸி தாமஸ்:
இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண் எனும் பெருமைக்குரியவர் டெஸ்ஸி தாமஸ். இவர் இந்தியாவில் ஏவுகணை திட்டம் ஒன்றின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவார். இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் அக்னி 4 ஏவுகணையின் திட்ட இயக்குனராக இருந்தார். இதுதவிர அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்களை இவர் வடிவமைத்து இருக்கிறார்.

முத்தையா வனிதா:
இஸ்ரோவில் விண் கோள்களுக்கிடையிலான திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற முதல் பெண் முத்தையா வனிதா. சென்னையை சேர்ந்த இவர் சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனர் ஆவார். மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இவர் இஸ்ரோவில் பணியாற்றி இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் சிறந்த பெண் ஆராய்ச்சியாளர் விருதை வென்றார்.
ரித்து கரிதால்:
சந்திராயன் 2 திட்டத்தில் பணியாற்றிய ரித்து கரிதால் விண்வெளியில் செயற்கைக்கோள் சீராக இயங்க செய்யம் பணிகளில் ஈடுபட்டார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த ரித்து கரிதால் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி இஸ்ரோவின் மங்கல்யான் திட்டத்திலும் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவின் இளம் ஆராய்ச்சியாளர் விருதை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

ககன்தீப் காங்:
இந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானியாக விளங்கியவர் தான் ககன்தீப் காங். பெலோ ஆப் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண்மணி ககன்தீப் காங். இந்திய மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் ஆவார். இவர் மத்திய அறிவில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் Translational Health Sciences and Technology Institute (THSTI) அமைப்பின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
மங்களா மணி:
அண்டார்ட்டிக்காவில் 403 நாட்கள் செலவழித்த முதல் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் மங்களா மணி. இந்த பணிக்கு தேர்வாகும் முன் இதுபோன்ற பனிச்சூழலுக்கு இவர் பரிச்சயமற்றவர் ஆவார். அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொள்ள 2016-ம் ஆண்டு தேர்வான 23 பேர் அடங்கிய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய சமூக வலைதளம் பிரத்யேகமாக துவங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா முகேஷ் அம்பானி பெண்களுக்கென பிரத்யேகமாக Her Circle எனும் சமூக வலைதளத்தை வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய வலைதளம் துவங்கப்பட்டு இருக்கிறது. இது பெண்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில் துவங்கப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக இந்த தளம் இந்திய பயனர்களை குறிவைத்து துவங்கப்பட்டு உள்ளது. எனினும், இதனை பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் பவுன்டேஷன் தெரிவித்து உள்ளது. புதிய Her Circle வலைதளம் அனைத்து வகையான பின்னணியில் இருந்துவரும் பெண்களுக்கு அவர்களின் கனவு, லட்சியம் மற்றும் சிக்கல் நிறைந்த சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

இது வலைதளம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஜியோ ஆப் ஸ்டோர்களில் செயலி வடிவிலும் கிடைக்கிறது. தற்போது இந்த சேவை ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கவில்லை. இந்த தளம் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் அனைத்தையும் அனைவரும் பார்க்க முடியும். எனினும், இந்த தளத்தின் சமூக வலைதள பிரிவு பெண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
புதிய Her Circle தளத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆரோக்கியம், வர்த்தகம், பணி, சமூக சேவை, அழகு, பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றன. இதில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களும் பங்கேற்க முடியும்.
ஆப்பிள் நிறுவனம் OLED ரக டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. OLED கொண்ட புதிய சாதனங்களின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய மாடல்கள் ஆப்பிள் அறிமுகம் செய்ய இருக்கும் மினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் மாடல்களுடன் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. முதலில் 10.9 இன்ச் ஐபேட், அதன்பின் ஐபேட் ஏர் மாடல்களில் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இரு சாதனங்களை தொடர்ந்து 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கின்றன. முன்னதாக வெளியான தகவல்களில் மேக்புக் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களுக்கு ஆப்பிள் மினி எல்இடி டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு விதமான டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை வெவ்வேறு விலைகளில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் OLED பேனல்களை பயன்படுத்தி வருகிறது.
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எப்3 சீரிஸ் வெளியீட்டை அதன் தலைமை செய்தி தொடர்பாளர் சூசகமாக தெரிவித்தார்.
போக்கோ எப்3 மற்றும் போக்கோ எப்3 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. போக்கோ நிறுவனத்தின் சர்வதேச செய்தி தொடர்பாளர் அங்குஸ் கை ஹோ ஜி தனது ட்விட்டரில் மார்ச் எனும் வார்த்தை பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து புது போக்கோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 மற்றும் கே40 ப்ரோ மாடல்கள் ரி-பிராண்டு செய்யப்பட்டு போக்கோ எப்3 மற்றும் எப்3 ப்ரோ பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

இரண்டு புதிய போக்கோ ஸ்மார்ட்போன்களும் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் 2018 ஆம் ஆண்டு மிக குறைந்த விலையில் அறிமுகமாகி, சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இம்முறையும் போக்கோ பிராண்டு இரு மாடல்களின் விலையை சந்தையில் பெரும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யலாம். போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 மாடலின் அம்சங்களையும், எப்3 ப்ரோ மாடல் ரெட்மி கே40 ப்ரோ அம்சங்களையும் கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. நார்டு ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு 2 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 168 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் மீடியாடெக் 1000எல் 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை தொடர்ந்து நார்டு என்10 5ஜி மற்றும் என்100 மாடல்களில் ஸ்னாப்டிராகன் 690 மற்றும் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மீடியாடெக் பிராசஸருடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக நார்டு 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் இந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடல்கள் போர்ட்லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இவை 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படவில்லை. புது தகவல்களின் படி அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஐபோன் சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

யுஎஸ்பி சி போர்ட்-ஐ விட லைட்னிங் போர்ட் சிறப்பான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதனால் அடுத்த இரு ஐபோன் சீரிசில் போர்ட்லெஸ் வடிவமைப்பு வழங்கப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான். இத்துடன் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் பெரிய பேட்டரிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 13 ப்ரோ மாடலில் லோ-பவர் LTPO டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஐடெல் நிறுவனம் மேக் இன் இந்தியா ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஐடெல் நிறுனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டும் ஐடெல் ஆண்ட்ராய்டு டிவிக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில் இந்த ஆண்டும் புது டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஐடெல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆண்ட்ராய்டு டிவிக்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

சமீபத்திய ஆய்வுகளில் நம்பத்தகுந்த பிராண்டுகள் பட்டியலில் ரூ 5 முதல் 7 ஆயிரம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஐடெல் இடம்பெற்று இருக்கிறது. டிவிக்களை பொருத்தவரை புது ஐடெல் மாடல்களில் பிரேம்லெஸ் பிரீமியம் ஐடி டிசைன், அல்ட்ரா-பிரைட் டிஸ்ப்ளே, தரமான ஆடியோ அனுபவம் மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கலாம்.
புதிய டிவி மாடல்கள் 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் அதிக அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இந்தியாவில் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ஐடெல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் எம்ஐ, ரியல்மி மற்றும் டிசிஎல் பிராண்டு டிவிக்களுக்கு போட்டியாக அமைகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோ போன் 2021 சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் 2021 சலுகை இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், 24 மாதங்களுக்கு டேட்டா உள்ளிட்டவைகளை ரூ. 1999 விலையில் வழங்குகிறது. இத்துடன் இதே சலுகைகளை 12 மாதங்களுக்கு ரூ. 1,499 விலையிலும் வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க தற்சமயம் 10 கோடிக்கும் அதிகமானோர் ஜியோ போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி நாடு முழுக்க 30 கோடி பயனர்களை அடைய ரிலையன்ஸ் ஜியோ புதிய 2021 சலுகையை அறிவித்து இருக்கிறது.
ஜியோ போன் 2021 சலுகையை ரூ. 1999 விலையில் பெறும் வாடிக்கையாளர்கள் ஜியோ போன், 24 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். மேலும் இதில் மாதம் 2 ஜிபி டேட்டா 24 மாதங்களுக்கும் வழங்கப்படுகிறது. மாதாந்திர 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps என குறைக்கப்படுகிறது.

24 மாதங்களுக்கான சலுகை வேண்டாம் எனில், வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கான சலுகையை ரூ. 1,499 விலையில் அதே பலன்களுடன் பெற முடியும். ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்போர் 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா (மாதம் 2 ஜிபி டேட்டா) உள்ளிட்டவைகளை ரூ. 749 விலையில் பெற முடியும்.
புதிய ஜியோ போன் 2021 சலுகை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக 2017 ஜூலை மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவின் முதல் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் பீச்சர் போன் மாடலாக ஜியோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. கை ஒஎஸ், 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி பிரைமரி கேமரா, 0.3 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை ஜியோ போனின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் மூன்று புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை மோட்டோ வாட்ச், மோட்டோ வாட்ச் ஒன் மற்றும் மோட்டோ ஜி வாட்ச் பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
புதிய மோட்டோரோலா வாட்ச் மாடல்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் இவற்றின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய மோட்டோ வாட்ச் சதுரங்க டையலுடன் ஆப்பிள் வாட்ச் தோற்றம் கொண்டிருக்கும். மோட்டோ வாட்ச் ஒன் வட்ட வடிவ டையல் கொண்டிருக்கிறது.

மோட்டோ ஜி வாட்ச் மாடலும் வட்ட வடிவ டையல் மற்றும் மெட்டாலிக் பினிஷ் கொண்டிருக்கும் என தெரிகிறது. மற்ற இரு மாடல்களும் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஜி சீரிசில் வெளியாகும் என்பதால், இது பட்ஜெட் பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மோட்டோ ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். மோட்டோ வாட்ச் மற்றும் மோட்டோ வாட்ச் ஒன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் மோட்டோ ஜி வாட்ச் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய மோட்டோரோலா வாட்ச்களை ப்ளிப்கார்ட் உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. முன்னதாக மோட்டோ பிராண்டு ஸ்மார்ட் டிவிக்களை ப்ளிப்கார்ட் உற்பத்தி செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.






