என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கின்றன.


    ரியல்மி GT 5ஜி மற்றும் ரயில்மி GT மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக ரியல்மி GT 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

     ரியல்மி GT

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 5ஜி மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ரியல்மி GT 5ஜி மாடலின் விலை ரூ. 30 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை ரூ. 31,400 துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    சமீபத்தில் வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் பயனர் ஒருவர் தனது மனைவியின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார். தனது பதிவில் வெடித்து சிதறியதால் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தெளிவாக தெரியும் படி புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார். பயனர் குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்துள்ளது.

     ஒன்பிளஸ்

    "வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனினை முழுமையாக ஆய்வு செய்தோம். அந்த மாடலில் எந்த விதமான உற்பத்தி கோளாறும் ஏற்படவில்லை. நார்டு 2 வெளிப்புற காரணிகளால் தான் வெடித்து சிதறியது என எங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது."

    "குற்றம்சாட்டிய பயனருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறோம். வாடிக்கையாளரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் ஒரே நோக்கம் ஆகும். பயனரின் குறைகளை தீர்ப்பது மற்றும் நன்னிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறந்த சேவையை வழங்கி இருக்கிறோம்," என தெரிவித்து இருக்கிறது.
    கூகுளின் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் கேமரா பம்ப் சதுரங்க வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒருவழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டு உள்ளது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரையும் கூகுள் அறிவித்துள்ளது. 

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ் டீசர்

    அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் டென்சார் சிப்செட் கொண்டு சக்தியூட்டப்படுகின்றன. முந்தைய தகவல்களில் இதே பிராசஸர் GS101 மாடல் நம்பர் மற்றும் வைட் சேப்பல் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி வருகிறது.

    இரு மாடல்களிலும் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. எனினினும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்பட இருக்கிறது. மேம்பட்ட சென்சார் மற்றும் லென்ஸ்கள் மிகவும் பெரிது என்பதால் வழக்கமான டிசைனுக்கு மாற்றாக புதிய கேமரா பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிக்சல் 6 ப்ரோ மாடலில் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. 
    டெக்னோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.


    டெக்னோ பிராண்டின் புதிய போவா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய போவா 2 மாடலில் 6.9 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. 

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஹை ஒஎஸ் கொண்டிருக்கும் டெக்னோ போவா 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ, ஏ.ஐ. லென்ஸ், குவாட் எல்.இ.டி. பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

     டெக்னோ போவா 2

    டெக்னோ போவா 2 அம்சங்கள்

    - 6.9 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+ டாட்-இன் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
    - 1000MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி 
    - 6 ஜிபி LPDDR4x  ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஹைஒஎஸ் 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
    - 2 எம்பி 4cm மேக்ரோ
    - 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்.பி. ஏ.ஐ. லென்ஸ், குவாட் எல்.இ.டி. பிளாஷ்
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. பிளாஷ்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 7000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    டெக்னோ போவா 2 மாடல் டேசில் பிளாக், போலார் சில்வர் மற்றும் எனர்ஜி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக ஆகஸ்ட் 5 முதல் குறுகிய காலக்கட்டத்திற்கு இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 10,499 மற்றும் ரூ. 12,499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. 

    இந்தியாவில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வைத்திருப்போர் உடனே இப்படி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சாதனங்களை பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய CERT-In கேட்டுக்கொண்டுள்ளது.

    இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    கோப்புப்படம்

    மெமரி கரப்ஷன் பிழையை கொண்டு ஹேக்கர் பயனரின் சாதனத்தை இயக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ்-இன் IOMobileFrameBuffer-இல் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், இந்திய பயனர்கள் உடனடியாக செக்யூரிட்டி பேட்ச் இன்ஸ்டால் செய்ய CERT-In அறிவுறுத்தி இருக்கிறது.
    ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது.


    ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

     ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்

    இந்த விண்ணப்ப படிவத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் இருந்த போது பூர்த்தி செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வாழ்நாளில் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ஆகும். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் விண்ணப்ப படிவம் 3.43 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ. 2,54,95,018.50 ஆகும். 

    ஸ்டீவ் ஜாப்ஸ் விண்னப்பத்திற்கான ஏலம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. வகையில் நடைபெற்றது. ப்ரின்ட் வடிவத்திற்கு டாலர்களிலும், என்.எப்.டி.க்கான ஏலம் எத்தெரியம் மூலமாகவும் நடைபெற்றது. என்.எப்.டி.-யை விட விண்ணப்பத்தின் ப்ரின்ட் வடிவத்திற்கு நான்கு மடங்கு அதிக தொகை வழங்கப்பட்டது. ப்ரின்ட் வடிவத்திற்கான அதிகபட்ச தொகை 3.43 லட்சம் டாலர்கள் வரை கேட்கப்பட்டது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனிற்கு பி.ஐ.எஸ். சான்று வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் SM-A037F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. 

     கேலக்ஸி A03s

    வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A03s மாடலில் 6.5 இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டு 2 எம்பி சென்சார்கள், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப் சி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி A03s இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
    போக்கோ நிறுவனம் X3 ஸ்மார்ட்போனினை ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் உடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.


    போக்கோ X3 ஸ்மார்ட்போன் 2020 இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் உடன் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனிற்கு எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், போக்கோ X3 தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்று வருகிறது.

    சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் போக்கோ X3 NFC மாடலுக்கு மார்ச் மாத வாக்கில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது. இந்தியாவில் விற்பனையாகும் போக்கோ X3 சற்றே வித்தியாசமானது என்பதால், ஆண்ட்ராய்டு 11 அப்டேட் தற்போது வழங்கப்படுகிறது.

     போக்கோ X3

    போக்கோ X3 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.0.2.0.RJGINXM எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. இந்த அப்டேட் ஸ்டேபில் பீட்டா முறையில் வழங்கப்படுகிறது. இதனால் அனைருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும். 

    புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டை தொடர்ந்து எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ X3 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 13 அப்டேட்களை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.
    எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோலின் 20 வது ஆண்டு விழா முற்றிலும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது.


    அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டு செயல்பட்டு வரும் க்ரிஸ்பி கிரீம் உணவக குழுமம் எக்ஸ்பாக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் லிமிடெட் எடிஷன் டோநட் அறிமுகமாகிறது. லிமிடெட் எடிஷன் டோநட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 22 வரை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

     எக்ஸ்பாக்ஸ் டோநட்

    புது கூட்டணி குறித்த விவரங்களை க்ரிஸ்பி கிரீம் விளம்பர வீடியோ வடிவில் அறிவித்தது. க்ரிஸ்பி கிரீம் நிறுவனம் முதல் முறையாக வியாபார ரீதியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் எக்ஸ்பாக்ஸ் ஏற்கனவே இதுபோன்ற கூட்டணி அமைத்து இருக்கிறது.


    இம்முறை எக்ஸ்பாக்ஸ் வெளியாகி 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு லிமிடெட் எடிஷன் டோநட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. லிமிடெட் எடிஷன் டோநட் மீது எக்ஸ்பாக்ஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
    மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் கைகளில் இருந்து நழுவாத வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் 2பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் 610 பிராசஸர், மாலி ஜி52 GPU, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் உள்ளது.

     மைக்ரோமேக்ஸ் இன் 2பி

    மைக்ரோமேக்ஸ் இன் 2பி அம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் UNISOC T610 பிராசஸர்
    - மாலி-G52 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி eMMC 5.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - பின்புறம் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா வலைதளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் 5ஏ ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் உருவாகி இருக்கிறது.


    இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேக ஜியோ சலுகைகளுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ. 550 வரையிலான கேஷ்பேக் பெறலாம்.

    புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ மாடலில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் ஸ்கிரீன், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், குயிட்சல் சியான் மற்றும் மிட்நைட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

     இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ

    இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜியோ சலுகையை பொருத்தவரை ரூ. 550 கேஷ்பேக் தொகையை வாடிக்கையாளர்கள் இருவழிகளில் பெற முடியும். 

    - ஜியோ POS அதிகாரப்பூர்வ விற்பனையாளரிடம் வாங்கும் போது, வாடிக்கையாளரின் சாதனத்தில் ஜியோ சிம் லாக் செய்யப்பட்டு, உடனடியாக ரூ. 550 தள்ளுபடி பெறலாம்.

    - ப்ளிப்கார்ட் அல்லது இதர தளங்களில் ஜியோ சலுகை பற்றி அறிந்துகொள்ளாமல் ஸ்மார்ட்போனினை வாங்கி இருந்தால், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட மைஜியோ செயலி மூலம் 15 நாட்களுக்குள் கேஷ்பேக் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

    - சாதனத்தை வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்களின் UPI விவரங்களை கொடுத்து ரூ. 550 தொகையை வங்கி கணக்கிற்கு நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும். 

    - இந்த சலுகையை முழுமையாக பெற வாடிக்கையாளர்கள் சாதனத்தில் ஜியோ சிம் கார்டினை பிரைமரி சிம் ஆக குறைந்தபட்சம் 30 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும். 

    போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு குறித்து அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.


    போக்கோ நிறுவனம் சமீபத்தில் தனது X3 GT ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,855 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    'இந்தியாவுக்கென பெரிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எனினும், போக்கோ X3 GT இதில் இடம்பெறவில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை,' என அனுஜ் ஷர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 

     போக்கோ X3 GT

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ X3 GT மாடலில் 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    ×