என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஜியோ சலுகைகளுடன் வெளியாகும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்30 July 2021 4:28 AM GMT (Updated: 30 July 2021 4:28 AM GMT)
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் 5ஏ ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் உருவாகி இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேக ஜியோ சலுகைகளுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ. 550 வரையிலான கேஷ்பேக் பெறலாம்.
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ மாடலில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் ஸ்கிரீன், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், குயிட்சல் சியான் மற்றும் மிட்நைட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜியோ சலுகையை பொருத்தவரை ரூ. 550 கேஷ்பேக் தொகையை வாடிக்கையாளர்கள் இருவழிகளில் பெற முடியும்.
- ஜியோ POS அதிகாரப்பூர்வ விற்பனையாளரிடம் வாங்கும் போது, வாடிக்கையாளரின் சாதனத்தில் ஜியோ சிம் லாக் செய்யப்பட்டு, உடனடியாக ரூ. 550 தள்ளுபடி பெறலாம்.
- ப்ளிப்கார்ட் அல்லது இதர தளங்களில் ஜியோ சலுகை பற்றி அறிந்துகொள்ளாமல் ஸ்மார்ட்போனினை வாங்கி இருந்தால், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட மைஜியோ செயலி மூலம் 15 நாட்களுக்குள் கேஷ்பேக் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
- சாதனத்தை வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்களின் UPI விவரங்களை கொடுத்து ரூ. 550 தொகையை வங்கி கணக்கிற்கு நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும்.
- இந்த சலுகையை முழுமையாக பெற வாடிக்கையாளர்கள் சாதனத்தில் ஜியோ சிம் கார்டினை பிரைமரி சிம் ஆக குறைந்தபட்சம் 30 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X