என் மலர்tooltip icon

    கணினி

    சோனி நிறுவனம் உருவாக்கி வரும் புது வயர்லெஸ் பிரீமியம் ஹெட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    தலைசிறந்த நாய்ஸ் கேன்சலிங் வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களை வழங்குவதில் சோனி நிறுவனம் இன்று வரை தனிச்சிறப்பு மிக்க பிராண்டாக விளங்குகிறது. சோனி நிறுவனத்தின் WH-1000XM4 ஓவர்-இயர் ஹெட்போன் சீரிசுக்கு இன்று வரை குறிப்பிடத்தக்க போட்டியாளராக எந்த மாடலும் வெளியிடப்படவில்லை. 

     சோனி ஹெட்போன்

    இந்த நிலையில், சோனி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஓவர்-இயர் ஹெட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது சோனி WH-1000XM5 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதன் அம்சங்கள் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்றும் இதன் டிசைனில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. 

    முந்தைய சோனி ஹெட்போன் மாடல்களான WH-1000XM3 மற்றும் WH-1000XM4 வரிசையில் புதிய WH-1000XM5 மாடல் சோனி ஹெட்போன் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சீரிஸ் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் டாப் எண்ட் வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களாக இருக்கும்.
    மிவி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    மிவி நிறுவனம் இந்தியாவில் மிவி F60 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் மிவி நிறுவனம் மிவி போர்ட் S60 மற்றும் S100 சவுண்ட்பார் மாடல்ளை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. 

    புதிய மிவி டுயோபாட்ஸ் மாடலில் 13mm எலெக்ட்ரோ டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை ஸ்டூடியோ தர சவுண்ட் வெளிப்படுத்த வழி செய்கின்றன. இத்துடன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

    இதன் இயர்பட்ஸ் காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இயர்பட்களின் எடையும் குறைவு ஆகும். இதில் டூயல் மைக்ரோபோன்கள் உள்ளதால், வாய்ஸ் இன்புட் மற்றும் அவுட்புட் மிக தெளிவாக இருக்கும். பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், எளிமையாகவும் இருக்க செய்யும் வகையில், இந்த இயர்பட்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளான அலெக்சா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    மேலும் இயர்பட்களின் மீது லேசாக தொட்டாலே அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது மற்றும் வால்யூம் அடஜஸ்ட்மெண்ட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். 

    மிவி டுயோபாட்ஸ் F60


    புதிய மிவி டுயோபாட்ஸ் F60 மாடல் கிரீன், பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 999 விலையில் விற்Hனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மிவி வலைதளங்களில் நடைபெறுகிறது.
    முன்னணி ஆடியோ சாதனங்கள் விற்பனையாளரான நாய்ஸ், இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனம் நாய்ஸ். சில தினங்களுக்கு முன்பு நாய்ஸ்பிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் தற்போது புதிதாக கலர்பிட் அல்ட்ரா Buzz எனும் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. 

    புது ஸ்மார்ட்வாட்ச்-இல் ப்ளூடூத் காலிங், 1.75 இன்ச் ஃபுல் டச் எல்.சி.டி. டச் ஸ்கிரீன், நூற்றுக்கும் அதிக வாட்ச் பேஸ்கள், வாட்ச் பேஸ்களை பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரன்னிங், டிரெட்மில், வாக்கிங், ஸ்பின்னிங், சைக்ளிங், யோகா, ஹைக்கிங், பிட்னஸ். கிளைம்பிங் என நூறு ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.  

     நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங், ஸ்டாக்ஸ், வொர்ல்டு கிளாக், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND போன்ற சென்சார்கள் மற்றும் ரிமைண்டர் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz ஸ்மா்ர்ட்வாட்ச் சார்கோல் பிளாக், ஷேம்பெயின் கிரே மற்றும் ஆலிவ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 499 ஆகும். புதிய நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    போக்கோ நிறுவனம் விரைவில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    போக்கோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் M2131W1 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதோடு ரஷ்யா எலெக்டிரானிக் சான்றிதழை பெற்று இருக்கிறது. 

    புதிய போக்கோ வாட்ச் டிசைன், அம்சங்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இதுபற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போதைய ரெண்டர்களின் படி போக்கோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஐவரி, பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     போக்கோ வாட்ச்
    Photo Courtesy: Digit

    டிசைனை பொருத்தவரை சதுரங்க வடிவம் கொண்ட பாடி, வலது புறத்தில் நேவிகேஷன் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 360x320 பிக்சல் ரெசல்யூஷன், ஓரங்களில் சிறு வளைவுகள் காணப்படுகின்றன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை போன்றே போக்கோ வாட்ச் மாடலிலும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 டிராக்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் புதிய போக்கோ வாட்ச் 225mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இதில் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய போக்கோ வாட்ச் மட்டுமின்றி போக்கோ நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இன் இயர் ரக டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, 28 மணி நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
    சியோமி நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஸ்மார்ட் டி.வி. மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.


    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. 5A மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் சியோமி டி.வி. 4A மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சியோமி நிறுவனம் 2019 ஆண்டு வாக்கில் சியோமி டி.வி. 4A மாடலை அறிமுகம் செய்து இருந்தது. 

    இதை அடுத்து Mi டி.வி. 4A ஹாரிசான் எடிஷன் மாடல் 2020 ஆண்டிலும், இதே டிவி.யின் 40 இன்ச் மாடல் கடந்த ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தான் தற்போது சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி. 5A மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

     சியோமி ஸ்மார்ட் டி.வி. 5A

    புதிய ஸ்மார்ட் டி.வி. 5A வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. டீசர்களின் படி புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. 5A மாடலில் சக்திவாய்ந்த, தலைசிறந்த ஆடியோ அனுபவம், பிரீமியம், சீம்லெஸ் ஃபினிஷ் மற்றும் A55 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் டால்பி அட்மோஸ், DTS சப்போர்ட், பேட்ச்வால் தளத்தில் மேம்படுத்தப்பட்டு அசத்தலான விவிட் பிக்சர் என்ஜின் வழங்கப்படலாம். புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. 5A மாடல்கள் விலை மற்றும் வி்ற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும். 
    இந்திய நிறுவனமான ட்ரூக் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்திய சந்தையில் பிரபல ஆடியோ உற்பத்தியாளராக விளங்கும், ட்ரூக் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட S2 இயர்பட்ஸ் மாடலை சிறப்பு விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ட்ரூக் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ட்ரூக் பட்ஸ் S1 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    புதிய ட்ரூக் பட்ஸ் S2 மாடலில் பிரீமியம் ஸ்லைடிங் கேஸ், ஸ்லைடு-அண்ட்-ஷேர் தொழில்நுட்பம், 20 பிரீ-செட் EQ மோட் போன்ற அம்சங்கள் உள்ளன. இவற்றை ஸ்மார்ட் செயலி மூலம் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்கான பிளே டைம் கிடைக்கும்.

     ட்ரூக் பட்ஸ் S2

    மேலும் இதில் அழைப்புகளை மேற்கொள்ள சக்திவாய்ந்த நான்கு மைக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் சிறப்பான கேமிங் அனுபவம், 55ms வரையிலான அல்ட்ரா லோ லேடென்சி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் 5.1 அம்சம் இருமடங்கு வேகமாக இணைப்புகளை சாத்தியப்படுத்துவதோடு, சீரான இணைப்பையும் உறுதி செய்கிறது.

    ட்ரூக் பட்ஸ் S2 மாடல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை இந்திய சந்தையில் ரூ. 1499 எனும் சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. 

    ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது போஸ்ட்பெயிட் சலுகை பலன்களில் சத்தமின்றி மாற்றி அமைத்து இருக்கிறது.

    ஏர்டெல் நிறுவனம் தனது அமேசான் பிரைம் சந்தா வேலிடிட்டியை ஒரு வருடத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு குறைத்து விட்டது. எனினும், இந்த நடவடிக்கை ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகைகளில் வேலிடிட்டி தானாக குறைக்கப்பட்டு விட்டது. 

    தற்போது ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்புகளில் அமேசான் பிரைம் சந்தா ரூ. 499, ரூ. 999, ரூ. 1, 199 மற்றும் ரூ. 1,599 போன்ற இணைப்புகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் இணைப்புகளுடனும் அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி வருகிறது. எனினும், இதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

     அமேசான் பிரைம்

    புதிய அறிவிப்பின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 999, ரூ. 1,199 மற்றும் ரூ. 1,599 போன்ற போஸ்ட்பெயிட் பிளான்களுடன் ஆறு மாதங்களுக்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் தேங்ஸ் பிளாட்டினம் ரிவார்ட்ஸ் பெயரில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகைகளுடன் ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி வந்தது. 

    இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்தது என ஏர்டெல் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயன்படுத்துவோர், இந்த சலுகைகளை பயன்படுத்தி வந்தால், ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா தொடர்ந்து வழங்கப்படும். 

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பிராண்டு ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதுபற்றிய விவரங்கள் ஒன்பிளஸ் வலைதளத்திலேயே இடம்பெற்று இருந்ததாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். நார்டு ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களோ, அதன் அம்சங்களோ இடம்பெறவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மட்டும் தெரியவந்துள்ளது.

    இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் நார்டு பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆகும். இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது உருவாகி இருக்கும் நார்டு பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 

     ஒன்பிளஸ் வாட்ச்

    தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவனத்தின் நார்டு சீரிஸ் சாதனங்கள் பட்டியலை குறைந்த விலை ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரியில் இருந்து ஸ்மார்ட்வாட்ச் வரை நீட்டித்து இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பட்ஸ் மாடலை உருவாக்கி இருப்பதாகவும், இது ஏப்ரல் 28 ஆம் தேதி ஒன்பிளஸ் 10R மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் விலை ரூ. 5 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 8 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    ஒன்பிளஸ் நார்டு வாட்ச் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்லீப் டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷன், மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 
    டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அப்டேட்டில் பல்வேறு புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.


    குறுந்தகவல் செயலிகளில் புதுமை டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் புது அப்டேட் வழங்கி வருகிறது. இந்த அப்டேட் செயலியின் நோட்டிபிகேஷன் டோன், கான்வெர்சேஷன் மியூட் செய்ய கஸ்டம் டைமிங், ஆட்டோ டெலிட் மெசேஜ், சிறப்பான ஃபார்வேர்டிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை வழங்கி இருக்கிறது. 

    கஸ்டம் நோட்டிபிகேஷன் சவுண்ட்:

    தற்போது டெலிகிராம் செயலியில் உங்களின் மியூசிக் கலெக்‌ஷனில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் சவுண்ட்களை அலெர்ட் டோனாக செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்ய செயலியின் செட்டிங்ஸ் -- நோட்டிபிகேஷன்ஸ் -- சவுண்ட்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். 

    இன்டிவிஜூவல் கான்வெர்சேஷன் அல்லது முழு குரூப்களை பெர்சனலைஸ் செய்ய புது டோன்கள் அல்லது சவுண்ட்களை செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது குரூப்பில் இருந்து மெசேஜ் வருவதை, நோட்டிபிகேஷன் சவுண்ட் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். 

    கஸ்டம் மியூட் டியுரேஷன்ஸ்:

    தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க, அவற்றை பாஸ் செய்ய முடியும். சிறுது நேர உறக்கம் அல்லது வேறு ஏதேனும் பணி சூழலில் ஈடுபடும் போது நோட்டிபிகேஷன்களால் வரும் தொந்தரவுகளை இந்த அம்சம் மூலம் தவிர்க்க முடியும். 

     டெலிகிராம்

    ஆட்டோ டெலிட் மெனு:

    ஆட்டோ டெலிட் அம்சத்தை ஏதேனும் ஒரு காண்டாக்டிற்கு ஆட் செய்ய முடியும். இந்த அம்சத்தை இரண்டு நாட்கள், மூன்று வாரங்கள், நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலக்கட்டம் வரை செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்வதும் மிக எளிமையானது தான். 
    மும்பை மெட்ரோ ஒன் நிறுவனம் இ டிக்கெட் சேவையை வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறது.


    மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி-கட்கோப்பர் வழியில் மெட்ரோ ரெயில் சேவையை இயக்கி வருகிறது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப் எனும் வசதியை அறிமுகம் செய்து உள்ளது.

    மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) சேவையில் வாட்ஸ்அப் செயலியில் இ டிக்கெட் வழங்கப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை ஆகும். தற்போது டிக்கெட் கவுண்ட்டர்களில் கிடைக்கும் பேப்பர் கியூ.ஆர். டிக்கெட் சேவையின் நீட்சி ஆகும். இந்த சேவையில் இணைய பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து `Hi' என எழுதி 9670008889 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

     மும்பை மெட்ரோ ஒன்

    இது மட்டும் இன்றி மும்பை மெட்ரோ ஆன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காம்போ கார்டுகள், மொபைல் கியூ.ஆர். டிக்கெட்கள் மற்றும் லாயல்டி ப்ரோகிராம் என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருவதாக தெரிவித்து உள்ளது. 

    முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த எண்ணிக்கை 40 மில்லியன் என கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதனை 100 மில்லியனாக அதிகப்படுத்திக் கொள்ள தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி உள்ளது.
    இந்த அம்சத்திற்கு மைக்ரோசாஃப்ட் பீக் என பெயரிட்டுள்ளது. மேக் ஓஎஸ்ஸில் உள்ள குயிக் லுக் போலவே இந்த அம்சம் செயல்படும் என கூறப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேக் ஓஎஸ்ஸில் இருப்பது போன்ற பிரிவீவ் அம்சத்தை விண்டோஸ் 11-ல் கொண்டு வரவுள்ளது.

    இதன்படி ஒரு ஃபைலை ஓபன் செய்து பார்க்காமலேயே நாம் அதன் பிரிவீவ்வை பார்க்க முடியும். இந்த அம்சத்திற்கு பீக் என பெயரிடப்பட்டுள்ளது.

    இதன்படி நாம் எந்த ஃபைலை பார்க்க விரும்பினாலும் Shift+Spacebar ஆகியவற்றை அழுத்தினால் போதும். அதன் பிரிவீவ் காட்டப்படும். இதில் சாதாரண ஃபைல்களை போல மீடியா ஃபைல்களையும் பிளே செய்யலாம் என கூறப்படுகிறது.

    மேக் ஓஎஸ்ஸில் உள்ள குயிக் லுக் அம்சத்தில் நாம் பிரீவிவ் செய்யும் ஃபைல்களை எடிட் செய்யவும் முடியும். ஜூம் செய்யவும் முடியும். இந்த அம்சங்கள் மைக்ரோசாஃப்ட் பிரீவ்வில் இப்போதைக்கு இடம்பெறாது என கூறப்படுகிறது.

    இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
    ஆண்ட்ராய்டு 9, 10,11 மற்றும் சமீபத்தில் வெளியான ஆண்ராய்டு 12-ல் இயங்கும் சாதனங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.
    சாம்சங் கேலக்ஸி ஆண்ட்ராய்டு சாதனங்கள் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9, 10,11 மற்றும் சமீபத்தில் வெளியான ஆண்ராய்டு 12-ல் இயங்கும் சாதனங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.

    இதன்மூலம் சாம்சங்போன் எந்த 3ம் நபர் செயலிகளுக்கும் கட்டளையிடுவதற்கு அனுமதி வழங்குவதாக கூறப்படுகிறது.

    அதாவது ஒரு மூன்றாவது நபர் செயலி பயனர்களின் அனுமதி இல்லாமலேயே ஃபேக்டரி ரீசெட், அழைப்புகள் உள்ளிட்ட செயல்களை செய்வதற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் அனுமதி அளிக்கிறது.

    இதன்மூலம் ஒரு ஹேக்கர் செயலியை உருவாக்கியிருந்தால் அவரால் சாம்சங் ஸ்மார்ட்போனை எளிதாக கட்டுப்படுத்த முடியும். நமது தகவல்களை டெலிட் செய்யமுடியும் என கூறப்படுகிறது.

    சாம்சங் எஸ் 21 அல்ட்ரா 5ஜி: ஆண்ட்ராய்டு 12
    சாம்சங் எஸ் 21 அல்ட்ரா 5ஜி: ஆண்ட்ராய்டு 11
    சாம்சங் எஸ்10+: ஆண்ட்ராய்டு 10, 
    சாம்சங் ஏ10இ: ஆண்டராய்டு 9 ஆகிய போன்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
    ×