என் மலர்
கணினி
இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதுமே இணைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உண்மையான இணையதளங்கள் போலவே உருவாக்கப்பட்ட போலி தளங்களுக்கு இணையவாசிகளை வரவைத்து அவர்களுடைய தகவல்களை திருடுவது ஃபிஷ்ஷிங் எனப்படும்.
உதாரணமாக வங்கியின் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி அதில் பயனர்களின் வங்கி விவரங்களை டைப் செய்ய வைத்து அந்த தகவல்களை திருடலாம்.
இந்த தாக்குதல் ஸ்ட்ரீமிங் சேவைகள், வரி கட்டும் இணையதளங்கள் என பல இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இத்தகைய தாக்குதல்கலை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை விண்டோஸ் 11 பயனர்களுக்கு வெளியிடவுள்ளது. இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த அம்சத்தை நாம் கணினியில் ஆன் செய்து வைத்தால், பிஷ்ஷிங் தாக்குதல்களை நடத்தும் இணையதளங்கள், புரோகிராம்கள் பயனர்களுக்கு காட்டப்படும். இதன்மூலம் ஆபத்தான இணையதளங்களை பயனர்கள் தவிர்த்துவிடலாம்.
அதேபோல மைக்ரோசாஃப்ட் புதிய தகவல் என்கிரிப்ஷன் அம்சத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் விண்டோஸ் பயனர்களின் சாதனங்கள் தொலைந்துபோனால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடி விடாமல் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புக் ப்ரைம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பில் 2கே Full Vision டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 11th Gen Intel Core i5-11320H பிராசஸர், Intel Iris Xe Graphics, டூயல் ஃபேன் லிக்விட் கூலிங் சிஸ்டம் ஆகியவை தரப்பட்டுள்ளன.
மேலும் இதில் பேக் லிட் கீபோர்ட் டச் பேட்டுடன் வழங்கப்படுகிறது. டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், WiFi 6, Thunderbolt fort 4 உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பின் 16ஜிபி+521 ஜிபி மாடல் ரூ.64,999-க்கு கிடைக்கிறது. வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப் அறிமுக விலையாக ரூ.57,999க்கு விற்பனையாகவுள்ளது. மேலும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7-inch full-HD+ Infinity-O Super AMOLED+ டிஸ்பிளே,800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இருக்கிறது. மேலும் இதில் octa-core Qualcomm Snapdragon 778G SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் (OIS சப்போர்ட்டுடன்), 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இரண்டு 5 மெகாபிக்ஸல் டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டால்பி சப்போர்ட்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த போனில் 8ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.41,999-ஆகவும், 8ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.44,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.6,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்கள் வெறும் ரூ.499-க்கு வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்பொனுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7-inch full-HD+ Infinity-O Super AMOLED+ டிஸ்பிளே,800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இருக்கிறது. மேலும் இதில் cta-core Qualcomm Snapdragon 778G SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் (OIS சப்போர்ட்டுடன்), 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 5 மெகாபிக்ஸல் டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டால்பி சப்போர்ட்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த போனில் 8ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.41,999-ஆகவும், 8ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.44,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஹெட்போனை முன்பதிவு செய்பவர்கள் ரூ.6,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்களை வெறும் ரூ.499-க்கு வாங்கிகொள்ளலாம்.
வரும் மார்ச் 31-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த மினி கணினியின் விலை குறித்து தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Apcsilmic நிறுவனம் உலகின் மிகச்சிரிய கணினியை அறிமுகம் செய்யவுள்ளது. பார்ப்பதற்கு வைஃபை ரவுட்டர் போல சிறிய அளவில் இருக்கும் இந்த கணினியில் Snapdragon 7c 8 core 2.4GHz பிராசஸர், விண்டோஸ் 11 ஓ.எஸ், 4ஜிபி+64ஜிபி, 6ஜிபி+128 ஜிபி, 8ஜிபி+256ஜிபி வேரியண்டில் மெமெரி, 2 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி 2.0 போர்ட்டுகள், 1 யூ.எஸ்.பி 3.0 போர்ட், 5வது ஜெனரேஷன் வைஃபை 4ஜி நெட்வொர்க் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ஹோம் தியேட்டர், கேமிங், அலுவலக வேலைகள், டிஜிட்டல் ஆர்ட் உள்ளிட்ட கிராஃபிக்ஸ் வேலைகளை இதில் எளிதாகவும், வேகமாகவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணினியில் 2கே ரெஷலியூஷன் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி.எம்.ஐ மூலம் 2 மானிட்டர்கள் இதில் இணைத்துகொள்ளலாம். அதிக மின்சாரத்தையும் இந்த கணினி பயன்படுத்தாது என்பதால் மின் தேவையும் குறையும் என கூறப்படுகிறது.
வரும் மார்ச் 31-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த மினி கணினியின் விலை குறித்து தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த லேப்டாப்பில் இன்டல் செலிரான் N4500 பிராசஸர், இன்டல் UHD இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி க்ரோம்புக் 2 360 லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சாதனம் என கூறப்படுகிறது.
இந்த லேப்டாப்பில் 360 டிகிரி கன்வெர்டபிள் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 12.4 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, 350 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த க்ரோம்புக்கில் வைஃபை 6, இன்டல் செலிரான் N4500 பிராசஸர், இன்டல் UHD இண்டகிரேட்டட் கிராபிக்ஸ், 4ஜிபி ரேமுடன் 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப்பில் 45.5Whr பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் வரையிலான பேட்டரி லைஃபை கொண்டுள்ளது. மேலும் 1 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 720p ரெக்கார்டிங் அம்சம், நேனோ செக்யூரிட்டி ஸ்லாட் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.35,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பிரிட்டனில் வெளியாகியுள்ள இந்த லேப்டாப்பின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த ரெட்மிபுக் ப்ரோ 2022 மூன்று வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது.
ஜியோமி நிறுவனம் ரெட்மிபுக் ப்ரோ 2022 ஃபிளாக்ஷிப் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த லேப்டாப் 15 இன்ச் ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 89 சதவீதம் ஸ்கீரின் டு பாடி ரேட்ஷியோ வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட்புக் ப்ரோவில் 12-வது ஜெனரேஷன் இன்டல் கோர் ஐ7 மற்றும் ஐ5 பிராசஸர்கள், RTX2050 GPU, 16ஜிபி LPDDR 5200MHz, 512ஜிபி PCIe 4.0 எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜுடன் தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் அலுமினியம் அலாய் கொண்ட யுனிபாடி டிசைனில் வந்துள்ளது. இதன்மூலம் எந்த தேய்மானத்தையும் தாங்கக்கூடியது. ஃபிங்கபிரிண்ட் செம்சார் பவர் பட்டனுடன் வைக்கப்பட்டுள்ளது. இதில் 1.3 கீ டிராவல் ஸ்பேஸ் உள்ள பெரிய டச்பேட் தரப்பட்டுள்ளது.
ரெட்மிபுக் ப்ரோ 2022 விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது. இதில் 72Wh பேட்டரி, 130W சார்ஜிங் வசதில், 2 தண்டர்போல்ட் போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி ஏ 3.2 போர்ட்டுகள், ஹெச்.டி.எம்.ஐ 2.0 கனெக்டர், ஆடியோ ஜாக், எஸ்.டி கார்ட் ரீடர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. ஐ5 இண்டகிரேட்டட் ஜிபியூ லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.67,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. i5+RTX2050 மாடல் இந்திய மதிப்பில் ரூ.81,300-ஆகவும், i7+RTX2050 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.89,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வரும் மார்ச் 24 முதல் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப் இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த மென்பொருளுடன் ஏராளமான ராயல்டி இல்லாத வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பலரும் ஸ்மார்ட்போன்களில் வீடியோக்களை எடுத்து யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுக்கின்றனர். அதன்மூலம் வருமானமும் ஈட்டுகின்றனர். இதனால் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது ஆகியவை இன்று அடிப்படியாக அனைவரும் பயன்படுத்தும் திறனாக இருக்கிறது.
இந்நிலையில் சாதாரண மக்கள் வீடியோ எடிட் செய்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது வீடியோ எடிட்டர் மென்பொருளான ‘clipchamp’-ஐ விண்டோஸ் 11 ஓஎஸ்ஸுடன் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. பழைய விண்டோஸ் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோருக்கு சென்று கிளிப்சேம்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த மென்பொருளுடன் ஏராளமான ராயல்டி இல்லாத வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் அஜூர் நிறுவனத்தின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட டெக்ஸ்ட் டூ ஸ்பீச் ஜெனரேட்டரும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் வாய்ஸ் ஓவர்கள் உருவாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் பாதுகாப்பான வெப் பிரவுசராக கருதப்படும் பயர்பாக்ஸ் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் முக்கிய பிரவுசர்களில் ஒன்றாக பயர்பாக்ஸ் இருக்கிறது. ஓப்பன்சோர்ஸ் புரோகிராம் பிரவுசரான இது தனிநபர் தரவுகளை சேகரிக்காததால் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில் ஜீரோ-டே வல்னபிரிட்டி வகையைச் சார்ந்த இரண்டு பக்ஸுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பக்ஸ்கள், பயனர்களின் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், அவற்றை நீக்குவதற்கு பயர்பாக்ஸ் புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
பயனர்களின் கணினி அந்த பக்ஸால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளேவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மேக் ஸ்டூடியோ எம்1 மேக்ஸ் சிப் மற்றும் புதிய எம்1 அல்ட்ரா சிப்செட் என்ற இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. இந்த எம்1 மேக்ஸ் சிப் கொண்டுள்ள புதிய மேக் ஸ்டூடியோ 16 கோர் ஜியோன் பவர்ட் மேக் ப்ரோவை விட 50 சதவீதம் வேகமாக வேலை செய்யக்கூடியது. மேலும் கோர் ஐ9 கொண்ட 27 இன்ச் ஐமேக்கை விடவும் 2.5 மடங்கு அதிவேகம் கொண்டது. எம்1 அல்ட்ரா கான்ஃபிகரேஷன் 27 இன்ச் ஐமேக்கை விட 3.8 மடங்கு வேகத்தையும், மேக் ப்ரோவை விட 60 சதவீதம் வேகத்தையும் கொண்டது.

இந்த மேக் ஸ்டூடியோவின் பின்பக்கத்தில் தண்டர்போல்ட் 4 போர்ட்ஸ், 10 ஜிபி எதர்நெட் போர்ட், 2 யூஎஸ்பி ஏ போர்ட்ஸ், ஹெச்.டி.எம்.ஐ, ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எம்1 மேக்ஸ் வேரியண்ட் யூ.எஸ்.பி டைப் சி போர்ட்ஸ் ஆகியவறை கொண்டுள்ளது.
எம்1 அல்ட்ரா வேரியண்டில் 2 தண்டர்போல்ட் 4 போர்ட்டுகளும், வைஃபை 6 மற்றும் ஃப்ளூடூத் 5 ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
எம்1 மேக்ஸ் வேரியண்ட் 32 ஜிபி யூனிஃபைட் மெமரி (ரேம்), 512 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1,89,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்1 அல்ட்ரா பேஸ் வேரியண்ட் 64 ஜிபி யூனிஃபைட் மெமரி, 1 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ்ஜுடன் வருகிறது. இதன் விலை ரூ.3,89,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேக் ஸ்டூடியோவுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்டூடியோ டிஸ்பிளேவையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்டூடியோ டிஸ்பிளே 27 இன்ச், 5கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 600 நிட்ஸ் வரை பிரைட்னஸையும், பி3 வைட் கலர் மேகட் சப்போர்ட்டையும், ட்ரூ டோன் ஃபீச்சரையும் கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் மேலே 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வீடியோ கான்ஃபரன்சிங்கிற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 மைக் அரே, 96W பாஸ்த்ரூ வரை சப்போர்ட் செய்யும் தண்டர்போல்ட் 4 போர்ட் தரப்பட்டுள்ளன.
இத்துடன் சக்திய்வாய்ந்த 6 ச்பீக்கர் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதில் 4 வூஃபர்கள், 2 ட்விடர்கள் உள்ளன. இந்த டிஸ்பிளேயில் ஏ13 சிப் இடம்பெற்றுள்ளது. மேலும் செண்டர் ஸ்டேஜ், ஸ்பேஷியல் ஸ்டூடியோ, ஹே சிரி வாய்ஸ் கமெண்ட்ஸ் ஆகியவையும் உள்ளன.
இதன் ஸ்டாண்டர்ட் கிளாஸ் வேரியண்டின் விலை ரூ.1,59,900-ஆகவும், நேனோ டெக்ஷர் கிளாஸ் வேரியண்டின் விலை ரூ.1,89,900-ஆகவும் உள்ளது.
இந்த மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கவும், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.
இன்றைய சூழலில் கல்வி, பணி இடங்கல் ஆகியவற்றில் லேப்டாப்களின் தேவை அதிகரித்துள்ளது. லேப்டாப்களை நாம் கவனமாக பயன்படுத்தாவிட்டால் நாளடைவில் பேட்டரி செயழிலக்க தொடங்கிவிடும். சராசரியாக 4-6 மணி நேரம் சார்ஜ் நிற்பதில் இருந்து குறைந்து, சார்ஜரை இணைத்தால் மட்டுமே லேப்டாப்பை பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு சென்று விடும்.
இந்நிலையில் லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கவும், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்:-
கன்ட்ரோல் பேனலுக்கு சென்று ’பவர் சேவர்’ மோட் பயன்படுத்துவது நம் சார்ஜ் நீண்ட நேரம் நீடித்து நிற்க உதவும். இதன்மூலம் லேப்டாப் பயன்பாட்டில் இருக்கும்போது குறைந்த பவரையே எடுத்துகொள்ளும்.
பேட்டரி ஆரோக்கியத்தை ஆய்வு செய்யும் செயலிகளை பயன்படுத்தலாம். இதன்மூலம் எப்போதெல்லாம் அதிகம் சார்ஜ் பயன்படுத்தபடுகிறது என்பதை தெரிந்துகொண்டு கட்டுப்படுத்தலாம்.
மவுஸ், எக்ஸ்டர்னல் வைஃபை, எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஆகியவை அதிகம் சார்ஜை குறைக்கும். இவற்றை பயன்படுத்தாதபோது ஆஃப் செய்வது நல்லது.
திரையின் பிரைட்னஸ் அளவை குறைப்பது நல்லது. நம் கண்களுக்கு பாதிப்பு இல்லாத அளவுக்கு பிரைட்னஸை கையாள வேண்டும்.
லேப்டாப் சார்ஜ் முழுதாக தீர்ந்துபோவதும் பேட்டரியை பாதிப்படையவைக்கும். அதனால் சார்ஜ் குறைந்து இருக்கும்போதே மீண்டும் சார்ஜ் செய்துகொள்வது நல்லது.
லேப்டாப்பை பயன்படுத்தாதபோது அணைத்துவிடவும். இல்லையென்றால் ஸ்லீப் மோடிற்கு பதில் ஹைபர்நெட் மோட்டில் லேப்டாப்பை வைத்துக்கொள்ளவும்.

அதிக வெப்பமும் லேப்டாப் பேட்டரியை பாதிப்படைய செய்யும். குளிர்ந்த, காற்றோட்டமான இடத்தில் லேப்டாப்பை வைத்துகொள்ளவும். முடிந்தவரை லேப் டெஸ்க் வைத்து பயன்படுத்தவும்.
ஒரே நேரத்தில் பல மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குறிப்பாக எக்ஸல் ஷீட்டுகள், பவர் பாய்ண்ட், போட்டோஷாப் ஆகியவற்றை செய்யும்போது அதிகம் சார்ஜ் செலவாகும். அதேபோன்று கிராஃபிக்ஸ் அதிகம் இருக்கும் மென்பொருட்களும் பேட்டரியை வேகமாக குறைக்கும். அதிகபட்சம் 2 புரோகிராம்களுக்கு மேல் வேண்டாம்.
நாம் பிளக்பாயிண்ட்டுக்கு பக்கத்தில் இருந்தால் பேட்டரியை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். சராசரியாக ஒரு லேப்டாப் பேட்டரி 500 முதல் 700 முறை வரை முழுமையாக சார்ஜ் ஏற்றப்படும் வரை ஆரோக்கியமாக இருக்கும். அதன்பின் அதன் ஆற்றல் குறையத்தொடங்கும். இதனால் பிளக்பாயிண்ட் பக்கத்தில் பேட்டரியை கழற்றி விடுவது நல்லது.
ஸ்கிரீன் சேவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதேபோன்று ஆட்டோமேட்டிக்காக செயல்படும் அப்ளிகேஷன்களை அணைத்து வைக்கவும்.
இந்த மேக்புக் ஏர் எம்1 லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப நிலை லேப்டாப்பான மேக் ஏர் எம்1 லேப்டாப்பிற்கு சிறப்பு தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ.92,900 விலை மதிப்புள்ள இந்த லேப்டாபிற்கு ரூ.8000 தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த லேப்டாப் ரூ.84,990-க்கு கிடைக்கிறது.
மேலும் இந்த லேப்டாப்பிற்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.23,100 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதையும் சேர்த்தால் ரூ.61,890-க்கு இந்த மேக் புக் ஏர்-ஐ வாங்கலாம்.

இத்துடன் ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கார்ட் பயன்படுத்துபவர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக்கும் உண்டு.
இந்த மேக்புக் ஏர் எம்1 லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.






