என் மலர்
கணினி
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் செயலியில் அடிக்கடி ஸ்டோரி பதிவிடுவோர் இனி, அவற்றின் பின்னணியில் இசையை சேர்க்க முடியும். இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த வசதியை தெரிவித்து இருக்கிறது. புதிய அம்சம் மூலம் ஸ்டோரிக்களில் சரியான பின்னணி இசையை சேர்த்து, இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பயனர்களை கவர முடியும்.
முன்னதாக இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க மொபைலில் உள்ள பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனி பயனர்கள் மிக எளிமையாக தங்களுக்கு விருப்பமான இசையை ஸ்டோரியில் சேர்த்துக் கொள்ள முடியும். ஸ்டோரியில் ஸ்டிக்கர், போட்டோ அல்லது வீடியோவை சேர்க்க கோரும் ஐகானை அடுத்த இடத்தில் மியூசிக் ஐகான் காணப்படுகிறது.
இன்ஸ்டாவில் உள்ள புதிய மியூசிக் ஐகானை க்ளிக் செய்தால் ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய லைப்ரரி திறக்கும். இங்கு உங்களுக்கு விருப்பமான பாடல், மனநிலைக்கு ஏற்றதை பிரவுஸ் செய்தோ அல்லது இன்ஸ்டா சார்பில் பரிந்துரைக்கப்படும் பிரபல இசை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

விரும்பிய பாடல் அல்லது இசையை தேர்வு செய்ததும் அவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு அல்லது ரீவைன்ட் செய்து, உங்களின் ஸ்டோரிக்கு ஏற்றவாரு அதனை செட் செய்து கொள்ள முடியும். மேலும் ஸ்டோரியில் இசையை சேர்த்தபின் அதனை நேரடியாக போஸ்ட் செய்யும் முன் பிரீவியூ செய்ய முடியும்.
இன்ஸ்டாவில் வீடியோவை பதிவு செய்யும் முன் பாடல் அல்லது இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யவும் முடியும். எனினும் இந்த வசதி தற்சமயம் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்டோரியை பார்க்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள இசையை கேட்க முடியும். இத்துடன் பாடலின் தலைப்பு மற்றும் பெயரை குறிப்பிடும் ஸ்டிக்கரும் தெரியும்.
ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஆயிரக்கணக்கான இசையை வழங்கியுள்ள நிலையில், தினமும் புதிய பாடல்களை சேர்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு தளங்களில் தற்சமயம் மியூசிக் ஸ்டிக்கர் 51 நாடுகளில் கிடைக்கிறது. தினசரி அடிப்படையில் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை 'ஓவர்டேக்' செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்ப்பதில் விவோ தனது வழக்கமாக்கி வருகிறது.
விவோ சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், பாப்-அப் கேமரா போன்ற அம்சங்களை வழங்கியுள்ளது.
ஷாங்காய் நகரில் துவங்கியிருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ் ஐடி போன்று வேலை செய்யும் புதிய அம்சம் ஐபோன் X-ஐ விட சிறப்பாகவும், மிக துல்லியமாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விவோ அறிமுகம் செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள 3D டெப்த் சென்சிங் சிஸ்டம் 3,00,000 சென்சார் பாயின்ட்களை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் உள்ள டைம் ஆஃப் ஃப்ளைட்' (Tof) அம்சத்தை பயன்படுத்தி இந்த அம்சம் வேலை செய்கிறது.
தி வெர்ஜ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விவோவின் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் இருந்து முகம் 3 மீட்டர் தொலைவில் இருந்தாலும் சீராக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் ஆஃப் ஃப்ளைட் 3D சென்சிங் தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைத்து, எதிர்காலத்தில் புதிய அம்சங்களை கண்டறிவதாக விவோ தெரிவித்துள்ளது.
எதிர்கால ஸ்மார்ட்போன்களில் ஜெஸ்ட்யூர் மற்றும் மோஷன் ரெகஃனீஷன்களில் புதிய சென்சார் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் கான்செப்ட் கிடையாது என்றும் இதனை அதிகளவு தயாரிக்க தயார் நிலையில் இருப்பதாக விவோ தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டெஸ்க்டாப் இயங்குதளமான மேக் ஓ.எஸ். மோஜேவ் முதல் பப்ளிக் பீட்டா வெளியிடப்பட்டுள்ளது.
மேக் ஓஎஸ் மோஜேவ் இயங்குதளத்துக்கான முதல் பப்ளிக் பீட்டாவை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எவ்வித பிழைகளும் இன்றி புதிய இயங்குதளத்தை பயன்படுத்த விரும்புவோர் மேக் ஓஎஸ் மோஜேவ் பப்ளிக் பீட்டாவை இன்ஸ்டால் செய்து, புதிய அம்சங்களை முயற்சிக்கலாம்.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய மேக் ஓஎஸ் மோஜேவ் தளத்தில் டார்க் மோட், மேம்படுத்தப்பட்ட மேக் ஆப் ஸ்டோர் கொண்டிருக்கிறது. புதிய மேக் ஆப் ஸ்டோரில் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர், நான்கு புதிய செயலிகள் மற்றும் டெஸ்க்டாப்-ஐ முழுமையாக சுத்தம் செய்யும் புதிய ஆப்ஷன் சேர்க்கப்படுகிறது. இந்த ஆப்ஷன் மூலம் ஒரு க்ளிக் செய்தால் டெஸ்க்டாப் சுத்தம் செய்யப்பட்டு விடும்.
மற்ற அம்சங்களை பொருத்த வரை ஃபைன்டருக்கு புதிய வியூ மோட் வழங்கப்படுகிறது, இது முற்றிலும் மாற்றப்பட்டு ஐடியூன்ஸ்-இல் ஆல்பம் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய மேக் ஓஎஸ் மோஜேவ் மற்றும் இதர பப்ளிக் பீட்டா பதிப்புகளில் இருக்கும் பொதுவான அம்சம், இந்த இயங்குதளங்களினுள் முழுமை பெறாத ஆப்ஷன்கள் இருக்கும்.

பப்ளிக் பீட்டா மற்றும் பீட்டா பதிப்பு மென்பொருள்களில் பொதுவாக பல்வேறு பிழைகள் மற்றும் பிரச்சனைகள் இருக்கும், இவற்றை முடிந்தவரை சரி செய்யவோ அல்லது, பீட்டா பதிப்புகளில் இருக்கும் பிழைகளை முடிந்தவரை குறைக்க பல்வேறு நிறுவனங்களும் முயற்சிக்கின்றன.
உண்மையில் இயங்குதளங்களின் பீட்டா பதிப்புகள் பல்வேறு பயனர்கள் புதிய மென்பொருளை பயன்படுத்தி, அவற்றில் உள்ள பிழை மற்றும் பரிந்துரைகளை டெவலப்பர்களுக்கு தெரிவிக்கவே வழங்கப்படுகிறது. இதனால் வீண் பிழைகள் மற்றும் பிரச்சனைகளை தவிர்க்க விரும்புவோர் தற்போதைய இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.
இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் மேக் ஓஎஸ் மோஜேவ் இறுதி வடிவம் பெற்ற இயங்குதளம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய இயங்குதளத்தின் முழுமையாக பயன்படுத்த நினைப்போர் மேலும் இரண்டு - மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.
புதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும்.
“ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.

கூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.
மேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.
ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.
புகைப்படம்: நன்றி @wongmjane
வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிலையில், கொள்கை மற்றும் விதிமுறைகளை அந்நிறுவனம் மாற்றியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.
வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் பீட்டா பதிப்பில் பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்ட விவரங்களும் அடங்கும்.

வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்ற வசதி வழங்குவதற்கான சரியான தேதி இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், கொள்கை மற்றும் விதிமுறை மேம்படுத்தப்பட்டு இருப்பது, வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
பேடிஎம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வாலெட் சேவைகளுக்கு போட்டியாக பார்க்கப்படும் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை கடந்த சில மாதங்களாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாய் லேப்டாப் அல்லது கணினி வாங்குவோருக்கு 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகள அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகையில் அந்நிறுவனம் 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி இலவச இணைப்பு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சமீபத்தில் அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி திட்டம் வழங்கப்படுகிறது.
இந்த சலுகை 20Mbps வேகத்தில் பி.எஸ்.என்.எல். அறிவித்த பல்வேறு சலுகைகளுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 சலுகையின் கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிதாய் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் வாங்குவோருக்கு பி.எஸ்.என்.எல். சலுகை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி சலுகையில் ரூ.99 விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் இன்டர்நெட் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையுடன் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 150 ஜிபி சலுகையில் ரூ.199, பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 300 ஜிபி சலுகை ரூ.299 மற்றும் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 600ஜிபி டேட்டா ரூ.399 விலையில் மூன்று சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா, 10 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.
ஃபோர் ரன்னர் 645 மியூசிக் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கார்மின் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கார்மின் நிறுவனம் தனது ஃபோர் ரன்னர் 645 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் ஆஃப்லைன் மியூசிக் ஸ்டோர் செய்யும் வசதி கொண்ட கார்மின் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆக அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்சம் 500 பாடல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம் என்H வகையில், பாடல்களை ப்ளூடூத் ஹெட்செட் மூலம் கேட்க முடியும்.
இதனால் ஸ்மார்ட்போன் உதவியின்றி ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பாடல்களை கேட்க முடியும். உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது ஸ்மார்ட்போன் எடுத்து செல்ல முடியாத இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கார்மின் ஃபோர் ரன்னர் 646 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச்-இல் 24/7 இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி, ஓட்ட பயிற்சி சார்ந்த விவரங்களை மிக துல்லியமாக வழங்குகிறது. இதே போன்று பல்வேறு உடல் அசைவுகளை மிக நுனுக்கமாக டிராக் செய்கிறது. மெட்டல் பெசல்கள், அதிக உறுதியான கிளாஸ், பேன்ட்களை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியை கண்காணித்து, தானாகவே மதிப்பீடு செய்யும். இந்த தகவல்களை கொண்டு உடற்பயிற்சியை சிறப்பாக செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

கார்மின் ஃபோர் ரன்னர் 645 மியூசிக் அம்சங்கள்:
- 1.2 இன்ச் 240x240 பிக்சல் சன்லைட்-விசிபில், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி இன் பிக்சல்
- ப்ளூடூத் ஸ்மார்ட் மற்றும் ANT+
- ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் சப்போர்ட்
- 500 பாடல்களை சேமிக்கும் வசதி
- ப்ளூடூத் ஹெட்போன் சப்போர்ட்
- ஆஃப்லைன் ஸ்ட்ரீமிங் வசதி
- மேம்படுத்தப்பட்ட ஃபிட்னஸ் அம்சங்கள்
- ரிஸ்ட்-சார்ந்த இதய துடிப்பு சென்சார்
- 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்
- ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப்
- ஜிபிஎஸ் மோட் மற்றும் மியூசிக் வசதியுடன் 5 மணி நேர பேக்கப்
கார்மின் ஃபோர் ரன்னர் 645 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் அல்லது செர்ஸி பேன்ட் விலை ரூ.39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசான், கார்மின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பேடிஎம் மால் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தன் ஐஜிடிவி ஆப் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும்.
வழக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் ஓடும் வீடியோக்கள் சிறிய திரையில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு புதிய செயலி முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும். ஐஜிடிவி செயலியில் வீடியோக்கள் செங்குத்தாகவும், திரை முழுக்க ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐஜிடிவி செயலியை திறந்ததும் பெரிய வீடியோக்களை பார்க்க முடியும், இதனால் இன்ஸ்டாவில் நீங்கள் பின்தொடர்வோரின் வீடியோக்களை பார்க்க பிரத்யேகமாக தேட வேண்டிய அவசியம் கிடையாது. இதே திரையில் இருந்த படி மேல்புறமாக ஸ்வைப் செய்தால் மேலும் புதிய தரவு வழங்குவோரின் வீடியோக்களை பார்க்க முடியும்.

இதில் ஃபார் யூ, ஃபாலோவிங், பாப்புலர் மற்றும் கன்டியூ வாட்சிங் (“For You,” “Following,” “Popular” மற்றும் “Continue Watching”) போன்ற ஆப்ஷன்களை பார்க்க முடியும். இத்துடன் லைக், கமென்ட் செய்வதுடன் வீடியோக்களை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பவும் முடியும். ஐஜிடிவி செயலியில் அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.
ஐஜிடிவியில் சேனல்களும் இருப்பதால், கிரியேட்டர்களே சேனல்களாக செயல்படுகின்றனர். இன்ஸ்டாகிராமில் கிரியேட்டர் ஒருவரை பின்தொடரும் போது, அவரது ஐஜிடிவி சேனல் உங்களுது திரையில் பார்க்க முடியும். அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை யார் வேண்டுமானாலும் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய முடியும்.
உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐஜிடிவி ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.
கார்மின் நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் 5எஸ் சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச் மாடல்கள் - 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் மாடல்கள் அறிமுகம்.
கார்மின் நிறுவனம் ஃபீனிக்ஸ் 5 சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்களில் பில்ட்-இன் ரூட் செய்யக்கூடிய டோபோகிராஃபிக்கல் மேப்ஸ், மியூசிக் பிளேலிஸ்ட்களுக்கான ஸ்டோரேஜ், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி, ரிஸ்ட் சார்ந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. 42 மில்லிமீட்டர் முதல் 51 மில்லிமீட்டர் அளவுகளில் கிடைக்கும் ரக்கட் ஸ்மார்ட்வாட்ச்களை நேரடி சூரிய வெளிச்சத்திலும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.
முந்தைய ஃபினிக்ஸ் 5 மாடல்களை போன்று புதிய ஸ்மார்ட்வாட்ச்களிலும் ரிஸ்ட்-சார்ந்த ஹார்ட் ரேட், மல்டிஸ்போர்ட் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேப்களை கொண்டு ரவுன்ட்-ட்ரிப் கோர்ஸ் க்ரியேட்டர் எனும் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு மேப்களில் வழங்கப்பட்டு இருக்கும் வழித்தடங்களில் ஓட்டப்பயிற்சி அல்லது சைக்கிள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை டிராக் செய்து அவற்றை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிரெயினிங் ஸ்டேட்டஸ்-களை தானாக மதிப்பீடு செய்து, சில சமயங்களில் அதீத பயிற்சி செய்யும் போது, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும். கனெக்ட் ஐகியூ கொண்டிருப்பதால், பயனர்கள் தங்களது வாட்ச்-இன் விட்ஜெட்கள், டேட்டா ஃபீல்டுகள், வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஆப்ஸ்களை கஸ்டமைஸ் செய்ய முடியும்.
ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டால், பயனர்கள் அழைப்பு, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன்களை தங்களது வாட்ச்-இல் பெற முடியும். இவை மல்டி-நெட்வொர்க் சாட்டிலைட் வசதியை கொண்டிருப்பதால், ஜிபிஎஸ் இல்லாத இடங்களிலும் சிறப்பான சேவையை இது வழங்குகிறது.

கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 1.2 இன்ச் 240x240 பிக்சல் சன்லைட்-விசிபிள், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி-இன்-பிக்சல் டிஸ்ப்ளே
- சிறிய மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச், இதயதுடிப்பு தொழில்நுட்பம்
- ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல், பட்டன்கள் மற்றும் ரியர் கேஸ்
- வாட்ச்-இல் 500 பாடல்களை சேமிக்கும் வசதி
- ப்ளூடூத் ஹெட்போன்களுடன் இணைக்கும் வசதி
- கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி
- நேவிகேஷன் சென்சார்கள்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- ரிஸ்ட்-சார்ந்த ஆக்சிமீட்டர்
- ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப் வழங்கும் பேட்டரி
பிவிடி-கோட்டிங் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் கொண்டிருக்கும் ஃபீனிக்ஸ் 5 பிளஸ் சீரிஸ் வாட்களில் சிலிகான் வாட்ச் பேன்ட் மற்றும் டைட்டானியம் பிரேஸ்லெட் வெர்ஷனில் டைட்டானியம் பெசல் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் விலை 699.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.47,735) முதல் துவங்கி 1149.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.78,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜாப்ரா நிறுவனத்தின் எலைட் 45இ வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாப்ரா நிறுவனம் இந்தியாவில் சாஃப்ட் நெக்பேன்ட் ஹெட்செட் அறிமுகம் செய்துள்ளது. ஜாப்ரா எலைட் 45இ என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்செட் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவைகளான அமேசான் அலெக்சா, சிரி மற்றும் கூகுள் நௌ உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்கிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் ஜாப்ரா எலைட் 45இ மியூசிக்-ஐ கஸ்டமைஸ் செய்யக்கூடிய EQ செட்டிங்ஸ் மூலம் இயக்க வழி செய்கிறது. இத்துடன் IP54 சான்று பெற்ற வடிவமைப்பு, இரண்டு ஆண்டுகள் தண்ணீர் மற்றும் தூசு மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கான வாரன்டி வழங்கப்படுகிறது.
ஜாப்ரா எலைட் 45இ ஹெட்செட் மூலம் அழைப்புகளின் போது மிக துல்லியமான ஆடியோவை பயனர்கள் அனுபவிக்க முடியும். இந்த ஹெட்செட்-இல் வழங்கப்பட்டுள்ள ஜாப்ரா தொழில்நுட்பம் வெளிப்புற சத்தங்களை குறைத்து சீரான ஒலியை வழங்குகிறது. ஜாப்ரா சவுன்ட் பிளஸ் ஆப் ஈக்வலைசர் ப்ரோஃபைல்கள் மற்றும் செட்டிங்களை பயனர் விருப்பப்படி மாற்றியமைக்க வழி செய்கிறது.

முன்னணி நிறுவனங்களின் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவைகளை சப்போர்ட் செய்யும் ஜாப்ரா எலைட் 45இ வாய்ஸ் கமான்டு மூலம் வானிலை விவரங்கள், அருகாமையில் நடைபெறும் நிகழ்வுகள், உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை படிக்கச் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள பயன்படுத்த முடியும்.
டைட்டானியம் பிளாக், காப்பர் பிளாக் மற்றும் கோல்டு பெய்க் என மூன்று நிறங்களில் கிடைக்கும் ஜாப்ரா எலைட் 45இ இந்தியாவில் ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் ஜாப்ரா எலைட் 45இ ஹெட்செட்-ஐ அமேசான் வலைத்தளத்தில் வாங்கிட முடியும்.
விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
இத்துடன் இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வாட்ஸ்அப் வெப் செயலியாகவே இருக்கிறது.
வாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
இத்துடன் இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வாட்ஸ்அப் வெப் செயலியாகவே இருக்கிறது.
வாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன்கள் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் செயிலியின் ஹோம் திரையில் இருக்கும் க்விக் அக்சஸ் பட்டனை ஒரு முறை க்ளிக் செய்து நேவிகேட் செய்ய முடியும்.
முன்னதாக அடிக்கடி பயணிக்கும் முகவரிகளை செட் செய்து, பின் சர்ச் பாரில் ஒற்றை க்ளிக் மூலம் செட் செய்த முகவரிகளை நேவிகேட் செய்யும் வசதி வழங்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளுக்கு பின் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதுதவிர கூகுள் அசிஸ்டன்ட் கொண்டும் வீடு அல்லது அலுவலகத்துக்கான நேவிகேஷன்களை பெற முடியும்.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த அம்சம் கொண்டு வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்று வர எளிமையானதாக மாற்றும்.

இந்த அம்சத்தை பயன்படுத்திய பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதில் சர்ச் பாரில் வீடு மற்றும் அலுவலகத்துக்கான ஷார்ட்கட் இருப்பது மட்டுமின்றி கூகுள் மேப்ஸ் ஹோம் ஸ்கிரீனில் க்விக் ஆக்ஷன் பட்டன்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய ஷார்ட்கட்களுக்கு மாற்றாக புதிய பட்டன்கள் வழங்கப்படுமா அல்லது இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. பல்வேறு ஆன்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் மேப்ஸ் புதிய அம்சம் வழங்கப்படாத நிலையில் விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம்: நன்றி PIXABAY | TWITTER / TotalSecurily






