என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ரெட்மி 12 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி 12 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதற்காக சியோமி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசரில், ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 01-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் முதல் டீசரில், அந்நிறுவன விளம்பர தூதர் திஷா படானி தனது கையில் மொபைல் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த பிளாக்ஷிப் டிசைன் அனைவருக்குமானது என்று சியோமி தெரிவித்து இருக்கிறது.

     

    டீசரில் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்திய சந்தையில் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அடுத்த மாத வெளியீட்டை தொடர்ந்து, ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்கள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • ரெனோ 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் உள்ளது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் ரெனோ 10, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் அடங்கும். இதில் ப்ரோ பிளஸ் மாடலில் 6.74 இன்ச் 1.5K 120Hz OLED வளைந்த ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 10 மற்றும் ரெனோ 10 ப்ரோ மாடல்களில் 120Hz FHD+ 120Hz AMOLED ஃபிலெக்சிபில் ஸ்கிரீன் உள்ளது.

    ரெனோ 10 மாடலில் டிமென்சிட்டி 7050 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸரும், ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் உள்ளது. புகைப்படங்களை எடுக்க ஒப்போ ரெனோ 10 சீரிசில் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

     

    இதன் ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ வெர்ஷன்களில் 32MP 2x டெலிபோட்டோ, சோனி IMX709 சென்சார், ப்ரோ பிளஸ் மாடலில் 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது. ப்ரோ மாடல்களில் 50MP பிரைமரி கேமரா, ரெனோ 10 மாடலில் 64MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது.

    பேட்டரியை பொருத்தவரை ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரெனோ 10 மற்றும் ரெனோ 10 ப்ரோ மாடல்களில் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங், ரெனோ 10 மாடலில் 67 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ ரெனோ 10 மாடல் சில்வரி கிரே, ஐஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ஜூலை 20-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் சில்வரி கிரே மற்றும் கிளாசி பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 54 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. விற்பனை ஜூலை 13-ம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற உள்ளன.

    • பயர் போல்ட் டெஸ்டினி மாடலில் அதிகபட்சமாக 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
    • ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் கொண்டு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

    இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரான்டு பயர் போல்ட் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை டெஸ்டினி எனும் பெயரில் அறிமுகம் செய்தது. புதிய பயர் போல்ட் டெஸ்டினி மாடலில் 1.39 இன்ச் டிஸ்ப்ளே, IP67 தர சான்று, ப்ளூடூத் காலிங் போன்ற வசதிகள் உள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்ட, வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்டிருக்கும் பயர் போல்ட் டெஸ்டினி மெட்டாலிக் ஸ்டிராப் உடன் வருகிறது.

    இந்த பிரேம் உறுதியான சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பட்டன் அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் கொண்டு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    இத்துடன் ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள், பத்துக்கும் மேற்பட்ட மெனு ஸ்டைல்கள் உள்ளன. இவை வாட்ச்-இன் தோற்றத்தை கஸ்டைமஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. மேலும் ஏராளமான உடல் நல டிராகிங் வசதிகள் இந்த வாட்ச்-இல் உள்ளது. இதை கொண்டு ஸ்லீப், SpO2 லெவல், ஹார்ட் ரேட் உள்ளிட்டவைகளை டிராக் செய்யலாம்.

    பயர் போல்ட் டெஸ்டினி மாடல் அதிகபட்சமாக 123 ஸ்போர்ட்ஸ் மோட்களை டிராக் செய்யும் என்று பயர் போல்ட் தெரிவித்து இருக்கிறது. புதிய வாட்ச் IP67 தர சான்று கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வானிலை விவரங்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதிகள் உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய பயர்போல்ட் டெஸ்டினி ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1999 என்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விற்பனை பயர் போல்ட் வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெய்க், பிளாக், பின்க் மற்றும் சில்வர் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    • தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
    • புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அம்சம் ஸ்டிக்கர் சஜெஷன் என்று அழைக்கப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    2018 ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கும் ஸ்டிக்கர்களை இம்போர்ட் செய்து பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாறு செய்து குறிப்பிட்ட எமோஜிக்களை பயனர்கள் பயன்படுத்த முடியும். தற்போது வாட்ஸ்அப்-இல் வழங்கப்படும் புதிய ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

     

    தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பீட்டா அப்டேட்-இல் புதிய ஸ்டிக்கர் டிரே கீபோர்டின் மேல்புறத்தில் காணப்படும். இந்த டிரே-இல் எமோஜியுடன் தொடர்புள்ள ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் பயனர்கள் சூழலுக்கு ஏற்ற சரியான ஸ்டிக்கர்-ஐ தேர்வு செய்து அனுப்ப முடியும்.

    இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பில்ட்-இன் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து கப்பி (Cuppy) ஸ்டிக்கர் பேக்-ஐ டவுன்லோடு செய்து, சாட் பாரில் எமோஜியை டைப் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.

    தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டிக்கர் சஜெஷன் மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம், தனது செயலியில் வழங்குவதற்கு பல்வேறு புதிய அம்சங்களை டெஸ்டிங் செய்து வருகிறது.

    • நத்திங் போன் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 2 வழங்கப்படுகிறது.
    • இந்தியாவில் நத்திங் போன் 2 முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    நத்திங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நத்திங் போன் 2 மாடலினை ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச வெளியீட்டின் போதே, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலுக்கான ஆஃப்லைன் ஆஃபர்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தேதி பற்றிய தகவல்களை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளியிட்டுள்ளார். நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ஜூலை 12-ம் தேதி துவங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும். விற்பனை ஜூலை 15-ம் தேதி மாலை துவங்குகிறது. முன்னதாக ரிடெயில் விற்பனையாளர்களுக்கு ஜூலை 13-ம் தேதியில் இருந்து யூனிட்கள் வழங்கப்படும்.

     

    நத்திங் போன் 2 மாடலை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி நத்திங் இயர் ஸ்டிக் மாடல் ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் கிடைக்கும். இத்துடன் பல்வேறு அக்சஸரீக்களுக்கு அசத்தல் தள்ளுபடியும், அடாப்டர் வாங்கும் போது 50 சதவீதம் தள்ளுபடி, கேஸ்-க்கு 40 சதவீதம் தள்ளுபடி, ஸ்கிரீன் கார்டுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், எந்தெந்த வங்கி கார்டுகளுக்கு இது பொருந்தும், அதிகபட்சம் எவ்வளவு சலுகை கிடைக்கும் என்பது பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ௩௩ வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 2, மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்டிக்கல் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    • சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.
    • கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா வேரியண்ட்கள் உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை ஜூலை 26-ம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z மடிக்கக்கூடிய சாதனங்கள், கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இந்த வரிசையில் தற்போது கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. இது ஐரோப்பிய சந்தைக்கான விலை ஆகும். கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா என மூன்று வேரியண்ட்கள் உள்ளன.

     

    விலை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி) 929 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1049 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 பிளஸ் ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1149 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1369 யூரோக்கள்

    இந்த விலை விவரங்கள் வைபை மாடலுக்கானது ஆகும். இவற்றில் வரிகள் சேர்க்கப்பட்டு விட்டன. சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், குவாட் ஸ்பீக்கர் செட்டப், ஆப்டிக்கல் கைரேகை சென்சார், AMOLED 2x WQVGA+ டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது. கேலக்ஸி டேப் S9, S9 பிளஸ் மற்றும் S9 அல்ட்ரா மாடல்களில் முறையே 8400, 10,090 மற்றும் 11,200 எம்ஏஹெச் பேட்டரி யூனிட்கள் வழங்கப்படுகிறது.

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அதன் முந்தைய ஐபோன் 14 ப்ரோ வெர்ஷனை போன்றே காட்சியளிக்கின்றன.
    • இதே நிறம் கொண்ட ஐபோன் மாடல் ரென்டர்களும் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய ஐபோன் வாங்க ஒவ்வொரு ஆண்டை போன்றே, இந்த வருடமும் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.

    புதிய ஐபோன் 15 சீரிஸ் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகிவிட்டன. இதில் புதிய ஐபோன் 15 சீரிஸ் அம்சங்கள், டிசைன் மற்றும் விலை விவரங்களும் அடங்கும். இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல் புதிய நிறத்தில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடல் டார்க் புளூ மற்றும் கிரே டோன் நிறம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

     

    இதுதவிர இதே நிறம் கொண்ட ஐபோன் மாடல் ரென்டர்களும் வெளியாகி உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மாடல் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும். இதே நிற வேரியண்ட் ப்ரோடோடைப் சாதனங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த நிற வேரியண்ட் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிசைனை பொருத்தவரை ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அதன் முந்தைய ஐபோன் 14 ப்ரோ வெர்ஷனை போன்றே காட்சியளிக்கின்றன. எனினும், சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் மியூட்-ஸ்விட்ச்-க்கு மாற்றாக மல்டி-ஃபன்ஷன் மியூட் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட இருக்கிறது.

    ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் பெரிஸ்கோப் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடல்களில் ஏ17 சிப்செட்கள் வழங்கப்படுகிறது. இவை மேம்பட்ட செயல்திறன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S21 FE புது வேரியண்ட் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தன.
    • புதிய வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகம்.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்டை சத்தமின்றி அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், கேலக்ஸி S21 FE புதிய வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. கேலக்ஸி S21 FE மாடல் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில், இந்த வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    எக்சைனோஸ் பிராசஸருக்கு மாற்றாக குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் கேலக்ஸி S21 FE மாடலின் மற்ற அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கேலக்ஸி S21 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED Full HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.9 மில்லிமீட்டர் தடிமனாக, 177 கிராம் எடை கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    • அமெரிக்க கருவூலத்துறை மந்திரி சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
    • OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது.

    கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான பணியை செய்வது இயங்குதளம் (Operating System). கம்ப்யூட்டர் பாகங்கள் உயிர்பெற்று இயங்குவதற்கு இயங்குதளம் அவசியமானது. இந்த தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் விண்டோஸ், மேக்ஓஎஸ் ஆகியவை ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

    இந்நிலையில், சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவுடனான போட்டி அதிகரித்துள்ள நேரத்தில், வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேனட் யெல்லன் சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த புதிய இயங்குதளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    ஓபன்கிளின் (OpenKylin) என்று அழைக்கப்படும் இந்த இயங்குதளம், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Windows மற்றும் MacOS அமைப்புகளுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகள் சில அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    Windows மற்றும் MacOS அமைப்புகளின் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போன்று அல்லாமல், OpenKylin பயனர்கள் மென்பொருளின் குறியீடுகளை பெற முடியும். அத்துடன், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது. இது பிரபலமான ஓபன் சோர்ஸ் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் 9-வது ஆண்டு விழா சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது.
    • சியோமி ஸ்மார்ட்போன், கேஜெட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை துவங்கி 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி வருகிறது. இதை ஒட்டி தனது ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் என ஏராளமான சாதனங்களுக்கு அதிகளவு விலை குறைப்பு, தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த சலுகைகளை அறிவித்து வருகிறது.

    அதன்படி சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சமாக ரூ. 21 ஆயிரம் வரையிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போதைய சிறப்பு விற்பனையின் கீழ் ரூ. 41 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

    விலை குறைப்பு விவரங்கள்:

    சியோமி 12 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 79 ஆயிரத்து 999-இல் இருந்து தற்போது ரூ. 41 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 38 ஆயிரம் குறைவு ஆகும்.

    சியோமி 12 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 84 ஆயிரத்து 999-இல் இருந்து தற்போது ரூ. 44 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 40 ஆயிரம் குறைவு ஆகும்.

    விலை குறைப்பு மட்டுமின்றி ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் போனஸ்-ஆக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    சியோமி 12 ப்ரோ அம்சங்கள்:

    - 6.73 3200x1440 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே, 120Hz ரிபெஷ் ரேட்

    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்

    - 8GB / 12GB LPPDDR5 6400Mbps ரேம்

    - 256GB UFS 3.1 1450MBps மெமரி

    - டூயல் சிம் ஸ்லாட்

    - ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13

    - 50MP பிரைமரி கேமரா, f/1.9

    - 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    - 50MP ப்ரோடிரெயிட் கேமரா

    - 32MP செல்ஃபி கேமரா

    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ. வைபை, ப்ளூடூத்

    - யுஎஸ்.பி. டைப் சி

    - 4600mAh பேட்டரி

    - 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    • பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
    • மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் அடிப்படையிலானது என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

    மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.

    தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தங்களின் தகவல் மற்றும் லிங்க் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவிடலாம். பிறரிடமிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்கலாம் அல்லது மறுபதிவு செய்யலாம்.

    திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இந்நிலையில், திரெட்ஸ் சேவை தொடர்பாக டுவிட்டர் தளத்திலும் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பயனர்களுடன் இணைந்து டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டிருக்கிறார். ஒரு டுவிட்டர் பயனர் திரெட்ஸ் செயலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் இந்த கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்த அந்த பயனர், கீபோர்டு போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் பட்டன்கள் மட்டுமே இருந்தன.

    இந்த பதிவை பார்த்த மஸ்க், சிரிக்கும் முகத்தின் எமோடிகானை பதிவிட்டு பதில் அளித்துள்ளார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டதன்மூலம், திரெட்ஸ் செயலியானது, டுவிட்டரின் பிரதி என்று கூறுவதுபோல் தெரிகிறது. 

    • அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும்.

    மெட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சமூக வலைதள சேவையில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் என்று மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சேவை துவங்கிய ஏழு மணி நேரங்களில் இத்தனை பேர் இணைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய டுவிட்டர் தளத்திற்கு நட்பு ரீதியிலான போட்டியாளர் திரெட்ஸ் என்று மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

     

    திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும். இத்துடன் பல்வேறு அம்சங்கள் டுவிட்டர் தளத்தில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நபர்களை பின் தொடர்வதற்காக இன்ஸ்டாகிராம் அல்காரிதம் பயன்படுத்தி குறிப்பிட்ட பதிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

    இத்துடன் பாலோவர்-ஒன்லி ஃபீட் அம்சத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது பயனர்கள் பின்தொடர்வோரின் பதிவுகளை மட்டுமே காண்பிக்கும். திரெட் சேவையில் பயனர்களை ஃபாலோ மற்றும் அன்-ஃபாலோ செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்றே இந்த தளமும், ப்ரோபைலை பிரைவேட் ஆக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. 

    ×