என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் சிக்கினார்"
- இவர் ஒரு இளம்பெ ண்ணை காதலித்து வந்தார்.
- தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் அவர், வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் மஞ்சுநாதன் (வயது24). பட்டதாரியான இவர், போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.
இவர் ஒரு இளம்பெ ண்ணை காதலித்து வந்தார். அந்த இளம்பெண்ணும் அவரை காதலித்ததாக கூறப்ப டுகிறது. இந்தநிலையில் அவர்களிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் மஞ்சுநாதனிடம் பேசுவதை யும், பழகுவதையும் தவிர்க்க தொடங்கினார்.
இதுகுறித்து மஞ்சுநாதன், அந்த இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். மேலும் தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் அவர், வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த இளம்பெண் காதலை தொடர முடியாது என்று மறுப்பு ெதரிவித்துள்ளார். இதனால் மஞ்சுநாதனுக்கு அந்த இளம்பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. காதலை தொடர மறுத்த அந்த இளம்பெண்ணை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதனை சமூக வலைதலங்களில் மஞ்சுநாதன் வெளியிட்டார்.
இதுபற்றி அந்த இளம்பெண்ணுக்கு தகவல் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தருமபுரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மஞ்சுநாதனை நேற்று கைது செய்தனர்.
- ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு சம்பத் நகரில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு திருடி கொண்டு சென்று விட்டார்.
மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனதை கண்ட உரிமையாளர் உடனடியாக இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மோட்டார்சைக்கிள் வாகன எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.
அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை சவிதா சிக்னலில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது ரோந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பவானி குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த சேட் (36) என்பதும் சம்பத் நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.
இவர் இதே போல் அம்மாபேட்டையில் ஒரு மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்