search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஞ்சிநாதன்"

    • வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் 112-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், செங்கோட்டையில் உள்ள வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சயில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், செங்கோட்டை வருவாய் தாசில்தார் முருகுசெல்வி, செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் வெங்கடேசன், நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, வடகரை சேர்மன் சேக்தாவூது, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகேசன், நூலகர் ராமசாமி, வாஞ்சிநாதனின் உறவினர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரஹீம், கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வக்கீர் ஆபத்துக்காத்தான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதபோல் செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • தமிழக மக்களிடம் பேசும் போதெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    • கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கி பாத் உரையில் பேசியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்று தருணத்தை காண போகிறோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

    சுதந்திர போராட்டத்தில் இந்திய ரெயில்வே பங்களிப்பை அறிய வேண்டும். சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது.

    தமிழக மக்களிடம் பேசும் போதெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையத்திற்கு தமிழர் விடுதலை போராட்ட வீரர் வாஞ்சி நாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதே இடத்தில் தான் 25 வயது வாஞ்சி என்ற இளைஞன் ஆங்கிலேய கலெக்டரின் செயலுக்கு தண்டனை கொடுத்தான்.

    கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

    இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    ×